Category: அவசியம் படிக்க

அவசியம் படிக்க

  • thirupathy-kathiruppu-araaikalil-arivippu-palagaigal

    திருப்பதி கோவிலில் உள்ள வைகுண்டம் காத்திருப்பு அறைகள் உள்ளிட்ட இடங்களில் ரூ.2 கோடி செலவில் அறிவிப்புப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

    திருப்பதியில் சாமி தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் வைகுண்டம் காத்திருப்பு அறைகள் வழியாக தரிசன வரிசையில் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். தரிசன வரிசைகள் நிரம்பியுள்ள நேரத்தில் அவர்கள் தரிசனத்திற்காக வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் காத்திருக்க அனுமதிக்கப்படுகின்றனர்.

    அவர்கள் காத்திருக்கும்போது அவர்களை தரிசனத்திற்கு அனுமதிக்கும் நேரம், அவர்களுக்கு அன்னதானம், நீராகாரம், சிற்றுண்டி வழங்கும் நேரம், வாடகை அறைகள் பெறக் காத்திருக்க வேண்டிய நேரம், உடமைகள் பெறுதல், கைபேசி பெறுதல், உணவு கவுன்ட்டர்கள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் உள்ள இடங்கள் உள்ளிட்டவை குறித்த தகவல்கள் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் தெரிவிக்கப்படும்.

    அதற்கான அறிவிப்புப் பலகைகள் கோவில் வளாகத்தில் உள்ள முக்கிய சந்திப்புகள், கருடாத்திரி நகர் சோதனைச் சாவடி, அலிபிரி சோதனைச் சாவடி உள்ளிட்ட இடங்களில் நிறுவப்பட்டுள்ளன. இதற்காக தேவஸ்தானம் ரூ.2 கோடி செலவிட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

     

  • muruga-ennum-thirunamam

    முருகனே முதல்வன்!

    பிரணவ சொரூபியான முருகப்பெருமானிடத்தில் மும்மூர்த்திகளின்
    அம்சமும் ஒருங்கே நிறைந்துள்ளது.

    காக்கும்கடவுளான முகுந்தன்,

    அழிக்கும் மூர்த்தியான ருத்ரன்,

    படைக்கும் கடவுளான கமலோற்பவன்

    ஆகிய மும்மூர்த்தி திருநாமங்களின் முதல் மூன்று எழுத்துகள்
    ஒன்றிணைந்ததே “முருகா’ என்னும் திருநாமம்.

    1.இருள் படைத்த உலகம் ஒளி நிறைந்து விளங்க, ஒளி தருகிறது ஒரு
    திருமுகம். இத் திருமுகம் நமது அஞ்ஞானத்தைப் போக்கும் ஞானக்கதிராக
    விளங்குகிறது.

    2.அன்பர்களுக்கு இனிய தோற்றமளித்து, அன்புடையோர்க்கு வரம் தந்து
    அருளுகிறது வேலவனின் இரண்டாவது முகம்.

    3.வேத மந்திர விதிகளுக்கு ஏற்ப வேள்விகளைக் காப்பது கந்தனின் கருணை
    மிகுந்த மூன்றாவது திருமுகம்.

    4.நம் அறிவுக்கு எட்டாத விஷயங்களை விளக்கி அருள்புரிந்து ஞானம்
    பொழிவது ஞான பண்டிதனின் நான்காவது திருமுகம்.

    5.துஷ்டசம்ஹார சிஷ்ட பரிபாலகராக வீரத்தை விளங்கச் செய்வது ஐயனின்
    ஐந்தாவது திருமுகம்.

    6.தெய்வயானை, வள்ளியம்மை என்னும் கிரியா சக்தி, இச்சா சக்திகளைக்
    கொஞ்சிமகிழ, கோடி சூரிய ஒளி காட்டும் அழகு முகம் ஆறாவது திருமுகம்.

    இவ்வாறு ஆறு திருமுகங்களைப் பெற்ற கந்தப் பெருமான் பன்னிரண்டு
    திருக்கரங் களோடு நீலமயில்மீது எழுந்தருளி நமக்கு அருள்பாலிக்கிறார்.

    நீலமயில் ஓங்கார சொரூபம். ஓங்காரமே பிரம்மம். அகர, உகர, மகார ஒலிகள்
    கூடியது தான் ஓங்காரம். இந்த தத்துவம்தான் முருகன். முருகா என்று
    மனமுருகிச் சொன்னாலே முருகனின் திருவருள் நம்மை நாடி வரும்.

    “சரவணபவ’ என்னும் சடாக்ஷர மந்திரத்தை மனதில் நினைத்து, “குகாய நம
    ஓம்’ என்று ஜபித்தவுடன் அவன் ஓடோடி வந்து அருள் புரிவான்.

    முருகனின் ஆறுபடை வீடுகளை நினைத்தாலே மனம்ஆறும். நமது உடலில்
    ஆறு விதமான ஆதாரங்கள்உண்டு.

    முருகப்பெருமான்இந்த ஆறுபடை
    வீடுகளிலும் இந்த ஆதாரத்தைக் கொண்டுதான் எழுந்தருளி உள்ளார்.
    திருப்பரங்குன்றம்- மூலாதாரம்.
    திருச்செந்தூர்- சுவாதிஷ்டானம்.
    பழனி- மணிபூரகம்.
    சுவாமிமலை- அநாகதம்.
    திருத்தணி- விசுத்தி.
    பழமுதிர்சோலை- ஆக்ஞை.

    “முருகா முருகா’ என்று மனமுருகி வணங்கி னால், நிலையான இன்பம்
    அளித்து நம்மைக் காப்பான் வேலவன்.

    ⚜முருகா சரணம்⚜

  • thiruporur-kandha-sasti-vizha-erpadugal-theeviram

    சென்னையை அடுத்த திருப்போரூரில் புகழ்பெற்ற கந்தசுவாமி கோயில் கந்தசஷ்டி விழா வரும் 8 ஆம் தேதி தொங்க உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டு வருகிறது.

    முருகப்பெருமான், அசுரர்களுடன் கடலில் போர் புரிந்த தலம் திருச்செந்தூர். விண்ணில் போர் புரிந்த தலம் திருப்பரங்குன்றம். மண்ணில் போர் புரிந்த தலம் திருப்போரூர் என்பது ஐதீகம். ஆண்டு தோறும் ஐப்பசி மாதத்தில் 6 நாள் கந்தசஷ்டி விழா சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு கந்தசஷ்டி விழா நவம்பர் மாதம் 8ம் தேதி காலை 9 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    அன்று மாலை கிளி வாகனத்திலும், மறுநாள் நவம்பர் 9ம் தேதி ஆட்டுக்கிடா வாகனத்திலும், 10ம் தேதி சனிக்கிழமை புருஷா மிருக வாகனத்திலும் முருகப்பெருமான் வீதி உலா நடைபெறுகிறது. நான்காவது நாளான ஞாயிற்றுக்கிழமை நவம்பர் 11ம் தேதி காலையில் பல்லக்கு உற்சவமும் பூத வாகனத்தில் வீதி உலாவும், 12ம் தேதி திங்கட்கிழமை வெள்ளி அன்ன வாகனத்தில் வீதி உலாவும் நடைபெற உள்ளது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நவம்பர் 13ம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் முருகப்பெருமான் தங்கவேல் கொண்டு சூரபத்மனை வதம் செய்யும் நிகழ்ச்சி நபெறுகிறது. இதைத்தொடர்ந்து இரவு தங்கமயில் வாகனத்தில் முருகப் பெருமான் வீதி உலாவும், மறுநாள் 14ம் தேதி காலை 6 மணிக்கு முருகன் திருக்கல்யாண உற்சவமும், யானை வாகனத்தில் வீதி உலாவும் நடைபெற உள்ளது. கந்தசஷ்டி விழாவையொட்டி 6 நாட்களும் லட்சார்ச்சனை நடைபெற உள்ளது. இதற்கு கட்டணமாக 300 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

  • thiruvanika-koil-kudamuzhukku-palalayam

    திருவானைக்கா அருள்மிகு சம்புகேஸ்வரர் சமேத அகிலாண்டேஸ்வரி திருக்கோயிலில் குடமுழுக்குக்கான பாலாலய விழா வெகுவிமர்சையாக நடைபெற்றுள்ளது.

    பஞ்சபூத திருத்தலங்களில் நீர்த்தலமான திருவானைக்கா கோயிலில் குடமுழுக்கு நடந்து 16 ஆண்டுகளுக்கு மேலானதால் பக்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க இந்து சமய அறநிலையத் துறை சார்பில் சுமார் ரூ. 5 கோடியில் திருப்பணி நடத்த முடிவாகி, கடந்த ஓராண்டுக்கும் மேலாக திருப்பணிகள் நடந்தன. 95 சதவிகித திருப்பணிகள் முடிந்த நிலையில் அறநிலையத்துறை ஒப்புதலின்பேரில் 2 கட்டமாக குடமுழுக்கு நடத்த முடிவானது.

    அதன்படி முதற்கட்டமாக பரிவார தேவதைகளுக்கு டிச. 9 ம் தேதியும், சுவாமி அம்மன் சன்னதிக்கு 12 தேதியும் குடமுழுக்கு நடைபெறுகிறது. முதற்கட்ட குடமுழுக்கு பாலாலய விழாவையொட்டி சனிக்கிழமை மாலை முதல்கால யாக பூஜைகள் தொடங்கி, ஞாயிற்றுக்கிழமை காலை 6.30 மணி முதல் 7.30 மணி வரை 2 ஆம் கால பூஜைகள் நடந்து பூர்ணாஹூதியுடன் நிறைவடைந்தது.

  • indru-enndh-rasikku-adristam

    அக்டோபர் 29
    விளம்பி வருடம் – ஐப்பசி 12
    29-அக்-2018 திங்கள்
    நல்ல நேரம் : 6.00 – 7.30
    ராகு : 7.30 – 9.00
    குளிகை : 1.30 – 3.00
    எமகண்டம் : 10.30 – 12.00
    திதி : பஞ்சமி
    திதி நேரம் : பஞ்சமி மா 4.39
    நட்சத்திரம் : மிருகசீரிடம் கா 8.22
    யோகம் : அமிர்த-சித்த யோகம்
    சந்திராஷ்டமம் : கேட்டை
    சூலம் : கிழக்கு
    பரிகாரம் : தயிர்

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – செலவு
    ரிஷபம் – முயற்சி
    மிதுனம் – இன்சொல்
    கடனம் – பொறுமை
    சிம்மம் – பாசம்
    கன்னி – பெருமை
    துலாம் – ஓய்வு
    விருச்சிகம் – கீர்த்தி
    தனுசு – மகிழ்ச்சி
    மகரம் – பயம்
    கும்பம் – நற்செயல்
    மீனம் – சுகம்

  • theertha-kinarugal-idamatram

    ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் உயர்நீதிமன்ற உத்தரவின்படி 6 தீர்த்தக் கிணறுகள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளன.

    கோயில் தீர்த்தங்களில் புனித நீராட வரும் பக்தர்களிடம் பாரபட்சம் காட்டப்படுவதாகவும் கோயிலுக்குள் உள்ள 22 தீர்த்தங்களிலும் முறையாக நீராட முடியவில்லை என்றும் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கில், அனைத்து பக்தர்களும் பாரபட்சமின்றி நீராட உரிய வசதிகளை கோயில் நிர்வாகம் செய்ய வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

    இதையடுத்து, கூட்ட நெரிசல் அதிகம் உள்ள மகாலட்சுமி, சரஸ்வதி, சாவித்திரி, காயத்திரி, சங்கு, சக்கரம் என 6 தீர்த்தங்களை கோயிலின் வடக்கு பகுதிக்கு மாற்ற கோயில் நிர்வாகம் திட்டமிட்டது. அதன்படி ரூ. 12 லட்சத்தில் புதிதாக 6 தீர்த்தக் கிணறுகள் அமைக்கப்பட்டன. மேலும் ரூ. 18 லட்சத்தில் வழுக்காத நடைபாதையும் அமைக்கப்பட்டது.

    இந்நிலையில், புதிய தீர்த்தக் கிணறுகளை பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான பூஜைகள் சனிக்கிழமை தொடங்கின.
    பழைய திருக்கல்யாண மண்டபத்தில் காலையில் கணபதி ஹோமம், ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்பாளுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.

    மாலையில், முதல் கால யாக சாலை பூஜை தொடங்கியது. இதில், கோயில் இணை ஆணையர் கோ.செ.மங்கையர்கரசி உள்ளிட்ட அலுவலர்கள் கலந்துகொண்டனர். ஞாயிற்றுகிழமை காலை இரண்டாம் கால யாக சாலை பூஜைக்கு பின்பு 6 கலசங்களில் 6 தீர்த்தங்கள் எடுத்துச் செல்லப்பட்டு, புதிதாக அமைக்கப்பட்டுள்ள 6 தீர்த்தங்களிலும் ஊற்றி தீர்த்த சமஜோஜசனம் செய்யப்பட்டது.
    புனித நீராடும் பக்தர்கள் வடக்கு ராஜகோபுர வாசல் வழியாக சென்று மீண்டும் அதே வாசல் வழியாக வரும் வகையில் புதிய தீர்த்தக் கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. கிழக்கு வாசல் வழியாக இனிமேல் பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு மட்டுமே செல்ல முடியும்.

  • thirumal-vasikum-thiruthalangal

    நவ திருப்பதி தலங்கள் ஒன்பதும், 30 கிலோமீட்டர் சுற்றளவிற்குள், அழகாகத் தொடுக்கப்பட்ட மாலையைப் போல் தாமிரபரணி கரையிலேயே அமைந்துள்ளன. தாமிரபரணி நதியின் வட கரையில் 6 தலங்களும், தென் கரையில் தென்திருப்பேரை, திருக்கோளூர், ஆழ்வார் திருநகரி ஆகிய மூன்று திருத்தலங்களும் அமைந்து அணி செய்கின்றன. நவ திருப்பதியின் அனைத்து பெருமாள் தலங்களிலும் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு தரிசனம் செய்வது சிறப்பானது.

    என்றாலும் ஆழ்வார் திருநகரி, ஸ்ரீவைகுண்டம், தென்திருப்பேரை ஆகிய 3 தலங்களில் மட்டுமே சொர்க்க வாசல் திறப்பு நடைபெறுகிறது. ஆழ்வார் திருநகரியில் நள்ளிரவு 12 மணிக்கும், ஸ்ரீவைகுண்டத்தில் இரவு 7 மணிக்கும், தென்திருப்பேரையில் வைகுண்ட துவாதசி அன்று மாலை 4 மணிக்கும் சொர்க்கவாசல் திறப்பு நடைபெறுகிறது, அதே போல் இந்த 3 திருக்கோவில்களிலும் பாஞ்சராத்திர ஆகமமும், மற்ற ஆறு தலங்களிலும் வைகானச ஆகமமும் பின்பற்றப்படுகிறது.

    திருப்புளிங்குடி மற்றும் திருக்கோளூர் ஆகிய தலங்களில் கிடந்த திருக்கோலத்திலும், வரகுணமங்கை, தென் திருப்பேரை மற்றும் இரட்டைத் திருப்பதி அரவிந்தலோசனப் பெருமாள் ஆகிய திருத்தலங்களில் அமர்ந்த கோலத்திலும், ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார் திருநகரி, பெருங்குளம் மற்றும் இரட்டை திருப்பதி தேவர்பிரான் ஆலயம் ஆகிய தலங்களில் நின்ற கோலத்திலும் பெருமாள் சேவை சாதிக்கிறார். இதனை நம்மாழ்வார் ‘புளிங்குடிக் கிடந்து, வரகுணமங்கையில் இருந்து, வைகுந்தத்துள் நின்று’ என்று மங்களாசாசனம் செய்கிறார்.

    பெருமாள் நடந்தால் குடையாகவும், இருந்தால் ஆசனமாகவும், கிடந்தால் அணையாகவும் இருப்பதாக ஆதிசேஷனை குறிப்பிடுவது வழக்கம். நவதிருப்பதியில் இருக்கும் பெருமாள்களின் திருக்கோலங்கள் இதனை உறுதிப்படுத்தும் வகையில் ஆதிசேஷனுடன் தொடர்புள்ள சன்னிதிகளாக அமைந்துள்ளன. அதேபோல் பாண்டிய நாட்டு திவ்ய தேசங்களில் கருடாழ்வாருக்கு முக்கியத்துவம் உள்ள வரலாறு உண்டு. பட்சிராஜன் வழிபாடு என்ற முறையில் அவருக்கு கடப்பன், தங்க போத்தி, காய்சின வேந்தன் போன்ற பெயர்கள் உள்ளன. தென் திருப்பேரையில் சன்னிதிக்கு நேராக இருக்கும் கருடாழ்வாரை, பெருமாள் ஒதுங்கி இருக்கச் சொன்ன வரலாறும் உண்டு. வைகாசி விசாகத்தில் நவ திருப்பதி பெருமாள்களும் கருட வாகனத்தில் வந்து சேவை சாதிக்கும் வழக்கம் இருந்து வருகிறது.

  • thirumal-vasikum-thiruthalangal

    நவ திருப்பதி தலங்கள் ஒன்பதும், 30 கிலோமீட்டர் சுற்றளவிற்குள், அழகாகத் தொடுக்கப்பட்ட மாலையைப் போல் தாமிரபரணி கரையிலேயே அமைந்துள்ளன. தாமிரபரணி நதியின் வட கரையில் 6 தலங்களும், தென் கரையில் தென்திருப்பேரை, திருக்கோளூர், ஆழ்வார் திருநகரி ஆகிய மூன்று திருத்தலங்களும் அமைந்து அணி செய்கின்றன. நவ திருப்பதியின் அனைத்து பெருமாள் தலங்களிலும் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு தரிசனம் செய்வது சிறப்பானது.

    என்றாலும் ஆழ்வார் திருநகரி, ஸ்ரீவைகுண்டம், தென்திருப்பேரை ஆகிய 3 தலங்களில் மட்டுமே சொர்க்க வாசல் திறப்பு நடைபெறுகிறது. ஆழ்வார் திருநகரியில் நள்ளிரவு 12 மணிக்கும், ஸ்ரீவைகுண்டத்தில் இரவு 7 மணிக்கும், தென்திருப்பேரையில் வைகுண்ட துவாதசி அன்று மாலை 4 மணிக்கும் சொர்க்கவாசல் திறப்பு நடைபெறுகிறது, அதே போல் இந்த 3 திருக்கோவில்களிலும் பாஞ்சராத்திர ஆகமமும், மற்ற ஆறு தலங்களிலும் வைகானச ஆகமமும் பின்பற்றப்படுகிறது.

    திருப்புளிங்குடி மற்றும் திருக்கோளூர் ஆகிய தலங்களில் கிடந்த திருக்கோலத்திலும், வரகுணமங்கை, தென் திருப்பேரை மற்றும் இரட்டைத் திருப்பதி அரவிந்தலோசனப் பெருமாள் ஆகிய திருத்தலங்களில் அமர்ந்த கோலத்திலும், ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார் திருநகரி, பெருங்குளம் மற்றும் இரட்டை திருப்பதி தேவர்பிரான் ஆலயம் ஆகிய தலங்களில் நின்ற கோலத்திலும் பெருமாள் சேவை சாதிக்கிறார். இதனை நம்மாழ்வார் ‘புளிங்குடிக் கிடந்து, வரகுணமங்கையில் இருந்து, வைகுந்தத்துள் நின்று’ என்று மங்களாசாசனம் செய்கிறார்.

    பெருமாள் நடந்தால் குடையாகவும், இருந்தால் ஆசனமாகவும், கிடந்தால் அணையாகவும் இருப்பதாக ஆதிசேஷனை குறிப்பிடுவது வழக்கம். நவதிருப்பதியில் இருக்கும் பெருமாள்களின் திருக்கோலங்கள் இதனை உறுதிப்படுத்தும் வகையில் ஆதிசேஷனுடன் தொடர்புள்ள சன்னிதிகளாக அமைந்துள்ளன. அதேபோல் பாண்டிய நாட்டு திவ்ய தேசங்களில் கருடாழ்வாருக்கு முக்கியத்துவம் உள்ள வரலாறு உண்டு. பட்சிராஜன் வழிபாடு என்ற முறையில் அவருக்கு கடப்பன், தங்க போத்தி, காய்சின வேந்தன் போன்ற பெயர்கள் உள்ளன. தென் திருப்பேரையில் சன்னிதிக்கு நேராக இருக்கும் கருடாழ்வாரை, பெருமாள் ஒதுங்கி இருக்கச் சொன்ன வரலாறும் உண்டு. வைகாசி விசாகத்தில் நவ திருப்பதி பெருமாள்களும் கருட வாகனத்தில் வந்து சேவை சாதிக்கும் வழக்கம் இருந்து வருகிறது.

  • sothu-prachinayai-theerkum-boominath-swamy

    மண்ணைக் கொண்டு வந்து சிவலிங்கத்தின் மீது வைத்து பூஜிப்பதா…? என்று ஆச்சரியப் படுகிறீர்களா? அத்தகைய அதிசயமான மண் வழிபாடு நடைபெறுவது, திருச்சி, மண்ணச்சநல்லூர் அருள்மிகு தர்மசம்வர்த்தினி உடனுறை பூமிநாத சுவாமி திருக்கோயிலில் தான்!

    கி.பி. 17ஆம் நூற்றாண்டில் சோழ மன்னனால் கட்டப்பட்ட இத்தலம், மண் அரக்கனால் வழிபடப்பட்டது என்பதாக ஆலய வரலாறு தெரிவிக்கிறது. அதன் காரணமாகவே மண் அரக்கநல்லூர் என்பது பின்நாளில் மருவி, மண்ணச்ச நல்லூர் ஆனது.

    கருவறையில் வீற்றிருக்கும் ஸ்ரீ பூமிநாத சுவாமி சுயம்பு மூர்த்தி. உளிபடாத, சற்றுச் சாய்ந்த லிங்கத் திருமேனியை உடையவர். ஆண்டுதோறும் பங்குனி மாதம் 9, 10, 11 தேதிகளில் சூரிய பகவான் தனது ஒளிக்கீற்றுகளைக் கொண்டு இறைவனின் திருமேனியில் படரவிட்டு வழிபடுவது தனிச்சிறப்பான ஒன்றாகும். இவ்வாலயத்தில் வன்னி மற்றும் வில்வ மரங்கள் தல விருட்சங்களாக உள்ளன.

    கட்டடத்தொழில், ரியல்எஸ்டேட், விவசாயம் செழிக்க, போர்வெல் அமைக்க என்று பூமி சம்பந்தமான அனைத்து தொழில் செய்பவர்கள், தங்களுக்கென்று நிலம் வாங்குபவர்கள், விற்பவர்கள் என அனைவருமே இந்தக் கோயிலுக்கு வந்து வழிபட்டுச் செல்கின்றனர்.

    இந்த வழிபாடு வித்தியாசமானது; எங்கும் கேட்டறியாதது என்றே சொல்ல வேண்டும். அதாவது, நாம் வாங்கிய அல்லது விற்க நினைக்கும் நிலத்தின் மண்ணை சுப தினத்தில், புதன் ஹோரையில், வடகிழக்கு மூலையில் எடுக்க வேண்டும். கொஞ்சமாக மண்ணை எடுத்து, மஞ்சள் நிறத் துணியில் கட்டி கோயிலுக்கு எடுத்து வரவேண்டும்.

    முதலில், கொடி மரத்து விநாயகருக்கு ஒரு விளக்கேற்றி வழிபட்ட பின்னர், அம்பாள் தர்மசம்வர்த்தினிக்கு இரண்டு தீபங்கள் ஏற்றி வணங்க வேண்டும். அடுத்ததாக, மூலவர் அருள்மிகு பூமிநாத சுவாமிக்கு இரண்டு தீபங்கள் ஏற்றி, பக்தர்கள் தாங்கள் கொண்டு வந்திருக்கும் மண்ணை பூமிநாத சுவாமி மீது வைத்து அர்ச்சனை செய்து பெற்றுக்கொள்ள வேண்டும். தொடர்ந்து கோயிலை ஒருமுறை வலம் வந்து அந்த மண்ணை வில்வ மரத்தடியில் போடவேண்டும்.

    கோயிலை இரண்டாவது முறை வலம் வரும்போது, வன்னி மரத்தடியில் இருந்து மூன்று கைப்பிடி மண்ணை எடுத்து அதை மஞ்சள் துணியில் கட்டிக் கொள்ள வேண்டும்.

    ஏனென்றால், வன்னி மரம் நீரோட்டமுள்ள ஈசான்ய மூலையில் அமைந்துள்ளது என்பதுடன், இங்கு வருடந்தோறும் மார்கழி மாதம், ஞாயிற்றுக் கிழமைகளில் ருத்ர அபிஷேகம், ருத்ர ஹோமம் செய்யப்பட்ட மணல் வன்னி மரத்தின் அடியில் போடப்பட்டு வருகிறது. அந்த மண்ணை பரிகார மண்ணாக பக்தர்கள் எடுத்துச் செல்வதால், அவர்களின் பிரார்த்தனைகள் நிறைவேறுகின்றன. மூன்றாவது முறை கோயிலையும், நவகிரகங்களையும் சுற்றி வந்து வணங்க வேண்டும்.

    அடுத்தநாள் காலையில், புதன் ஹோரை நேரத்தில், நம் நிலத்தில் நாம் எற்கெனவே மண் எடுத்த ஈசான்யத்தில் கோயிலில் இருந்து கொண்டு வந்த மண்ணைக் கொட்டி, கற்பூரம் ஏற்றி வணங்க வேண்டும். மண் எடுத்து வந்த மஞ்சள் துணியில் ஐந்து ரூபாய் நாணயத்தை முடிந்து, வீட்டின் பூஜை அறையில் வைக்க வேண்டும். நமது பிரார்த்தனை நிறைவேறியதும், அருள்மிகு பூமிநாத சுவாமிக்கும் அம்பாளுக்கும் அபிஷேகம் செய்ய வேண்டும். நாம் எற்கெனவே முடிந்து வைத்த ஐந்து ரூபாய் நாணயத்தை பூமிநாத சுவாமிக்கு சமர்பிக்க வேண்டும்.

    வீடு வாங்குதல், வாஸ்து தோஷம், சொத்து பாகப் பிரச்னைகள், தென்-வட மூலை உயரம், ஜென்ம சாபம், பாப தோஷம், பூமி குற்றம், பில்லி சூன்யம், ஏவல், எந்திரம், மந்திர தோஷங்கள் உட்பட 16 வகையான பூமி பிரச்னைகளுக்கு, இத்தலத்து இறைவனை வழிபடுவதால் நற்பயன் விளைகிறது. அருள்மிகு பூமிநாத சுவாமி கோயிலுக்கு வந்து வணங்கினாலே அனைத்து தோஷங்களும் நீங்கிவிடும் என்று அகத்தியர் நாடியில் கூறப்பட்டுள்ளது.

  • nendram-vazhikum-thirumalukum-ulla-thodarbu

    கேரளப் பகுதியில் அதிக அளவில் விளையும் சுவை மிகுந்த நேந்திரம் வாழைக்கும் திருமாலுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளதாக கூறப்படுகிறது.

    திருகாட்கரை பகுதியைச் சேர்ந்த பக்தர் ஒருவர் தனது விளைநிலத்தில் வாழை மரங்கள் பயிரிட்டு இருந்தார். ஆனால் அவை வளர்ந்தும் எந்த பலனும் தராமல் அழிந்து போனது. இவ்வாறு பலமுறை நிகழ்ந்ததால் அவர் மனவேதனை அடைந்தார்.

    பின்னர் அந்த பக்தர், தங்கத்தால் செய்யப்பட்ட வாழைக் குலை ஒன்றை கேரள மாநிலத்தில் உள்ள திருக்காட்கரை என்ற இடத்தில், வாமன அம்சமாக எழுந்தருளியுள்ள திருமாலுக்கு சமர்ப்பித்து தனது குறையை முறையிட, பக்தரின் வேண்டுகோளை ஏற்று இறைவன் தனது அருட்பார்வையை வாழை மரங்களின் மீது செலுத்தினார். இதையடுத்து உயர்ந்து வளர்ந்திருந்த வாழை மரங்களில் குலைகள் காய்த்துத்தள்ளின.

    பெருமாலின் நேத்திரங்களின் (கண்களின்) அருட்பார்வை பெற்று செழித்து வளர்ந்த வாழைக் குலைகள், அன்றிலிருந்து ‘நேத்திரம் வாழை’ என பெயர் வந்து, அது மருவி நேந்திரம் என பெயர் பெற்றுள்ளது.
    பெருமாளை நேர்ந்து கொண்டு இந்த வாழைப் பழங்கள் உருவானதால் நேந்திரம் வாழை என்ற பெயர் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.