Category: அவசியம் படிக்க

அவசியம் படிக்க

  • Kumari tpty Kumbabishegam

    குமரியில் கட்டப்பட்டு இருக்கும் திருமலை திருப்பதி வெங்கடாசலபதி கோயிலில் மகா சம்ப்ரோக்ஷணம் வெகு விமர்சையாக நடைபெற்று இருக்கிறது. 

    விவேகானந்த கேந்திர கடற்கரை வளாகத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் வெங்கடாசலபதி கோயில் கட்டப்பட்டுள்ளது.  5.25 ஏக்கர் நிலத்தில்  ரூ. 22.50 கோடி மதிப்பில் கோயில் கட்டப்பட்டுள்ளது.

    இக்கோயிலில் மகா சம்ப்ரோக்ஷணம் இன்று நடைபெற்றுள்ளது. அதிகாலை 4 முதல் காலை 7 மணி வரை சுப்ரபாதம், அதனை தொடர்ந்து காலை 7  முதல் 7.30 மணி வரை உற்சவ மூர்த்திகள் வீதியுலா நடைபெற்றுள்ளது. அன்பிறகு காலை 7.30 மணிக்குத் தொடங்கி 9 மணிக்குள் மகா சம்ப்ரோட்ஷணம் நடைபெறுகிறது. 

    இதனை தொடர்ந்து பிற்பகல் 12.30 மணி முதல் தரிசனத்துக்காக பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். . இக்கோயிலுக்கு கன்னியாகுமரி விவேகானந்தபுரம் சந்திப்பில் இருந்து ஒற்றையால்விளை வழியாக செல்லலாம். மேலும், பக்தர்கள் வசதிக்காக அதிகாலை 5 மணி முதல் மாலை வரை நாகர்கோவில் வடசேரி, களியக்காவிளை, தக்கலை, வள்ளியூர் போன்ற இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

  • Selvam tharum Sangu Poojai

    தினம் தோறும் சங்கு பூஜை செய்தால் செல்வம் சேரும். பிணிகள் விலகும். சங்கை நீரில் மூழ்கி எடுத்து துடைத்து சந்தனம், குங்குமம், புஷ்பம் சாற்றி சங்கில் தூய நீர் விட்டு இறைவனை பூஜித்து வழிபட வேண்டும். 

    இந்த வழிபாடு முடிந்த பின் சிறிது நீரை தலையில் தெளித்துக் கொண்டு, மறு நாள் அந்தச் சங்கு நீரை குடித்துவிட வேண்டும். இந்த சங்கு தீர்த்தம் அருந்துவதால் உங்கள் புகழ் ஓங்கும். சங்கு தீர்த்தத்தால் செய்யப்படும் ஆராதனையானது, பூமா தேவிக்கு மிகுந்த அமைதியை அளிப்பதாக விளங்குகிறது.

    இயற்கை சீற்றங்களைக் கூட மாற்றுகிற ஆற்றால் சங்கு ஒலிக்கு உண்டு என்கிறது புராணம். கல்வியும்,செல்வமும், சகல ஐஸ்வர்யமும் பொங்கும், சங்கில் கலைமகளின் கடாட்சியமும், நிறைந்திருக்கிறது. நான் முகனும், கலைமகளும் தம்பதி சகிதமாக அருள் வழங்குகிறார். சங்கிற்கு அருகில் இருக்கும் பொருட்களுக்கு ஈர்ப்பு சக்தி அதிகம், பேனா , பென்சில் போன்றவற்றை  வைத்து கல்விக்காவும் தொழிலுக்காகவும் பயன்படுத்தினால் எடுக்கும் முயற்சியில் இனிதே வெற்றி கிடைக்கும்.

  • January 27 – Rasi Palangal

    ஜனவரி 27 
    விளம்பி வருடம் – தை 13
    27-ஜன-2019 ஞாயிறு  
    சுபமுகூர்த்த நாள் (காலை 7.30 – 9.00)
    நல்ல நேரம்    :    7.30 – 9.00    
    ராகு    :    4.30 – 6.00    
    குளிகை    :    3.00 – 4.30
    எமகண்டம்    :    12.00 – 1.30                          
    திதி    :    சப்தமி          
    திதி நேரம்    :    சப்தமி    இ    9.33
    நட்சத்திரம்    :    சித்திரை    இ    8.36
    யோகம்    :    சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    உத்திரட்டாதி,ரேவதி
    சூலம்    :    மேற்கு
    பரிகாரம்    :    வெல்லம்

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் –   நற்செயல்
    ரிஷபம் – பாராட்டு
    மிதுனம் – வரவு
    கடனம் –  பிரிவு
    சிம்மம் – ஆதாயம்  
    கன்னி – பக்தி
    துலாம் –  தனம் 
    விருச்சிகம் – பேராசை 
    தனுசு – முயற்சி
    மகரம் – அமைதி
    கும்பம் – விவேகம்  
    மீனம் – ஊக்கம் 

  • sooriyanar Vazhipatta Thalam

    சூரிய பகவான் வழிபட்ட தலங்களை  பஞ்ச பாஸ்கரத் தலங்கள் என வகைப்படுத்தியுள்ளனர். திருவாரூர் – தலைஞாயிறு, நீடாமங்கலம் – திருப்பரிதி நியமம், ஆடுதுறை – திருமங்கலக்குடி, நன்னிலம் – திருச்சிறுகுடி மற்றும் சென்னைக்கு அருகில் உள்ள ஞாயிறு ஆகியவை தான் அவை.  சாபம் நீங்க சிவனாரை வழிப்பட்ட தலங்கள் தான் இவை.

    ஒருமுறை பிரம்மாவின் சாபத்தால் தொழுநோய் கண்டு சூரிய பகவான் அவதிப் பட்டார். அப்போது சாப விமோசனம் பெறுவதற்கு சிவ பெருமானை எண்ணி சூரிய பகவான் தவம் செய்தார். 

    அப்போது 'தாமரை மலர்கள் பூத்திருக்கும் தடாகத்தில் நீராடி, அங்கே தாமரைப் பூவில் சுயம்பு மூர்த்தமாக எழுந்தருளும் சிவனாரை வழிபட சாபம் நீங்கும் என்று அசரீரி ஒலித்தது. 

    அசரீரி ஒலியை கேட்டு மகிழ்ச்சி அடைந்த சூரியனார், அசரீரி சொல்லியபடி, ஞாயிறு தலத்துக்கு வந்து தடாகத்தில் நீராடி, சிவ பூஜை செய்தார். அப்போது, தாமரையில் இருந்து தோன்றிய சிவனார், இவருடைய சாபத்தை நீக்கி அருளினார்.

    சென்னையை அடுத்துள்ள திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகில் உள்ளது இந்த ஞாயிறு திருத்தலம். சூரிய பகவான் வழிபட்ட தலம் என்பதால் இந்த ஊருக்கு ஞாயிறு என்றும், மலரில் வெளிப்பட்டவர் ஆதலால் இறைவனுக்கு ஸ்ரீபுஷ்பரதேஸ்வரர் என்றும் திருப்பெயர் அமைந்ததாகச் தல புராணம் சொல்கிறது! 

    சோழ மன்னன் ஒருவன், ஒருமுறை இந்த வழியே வந்த போது, அருகில் உள்ள பகுதியில் சிலகாலம் தங்கினானாம் . அருகில் உள்ள வனத்துக்கு வந்த மன்னன், தாமரை தடாகத்தைக் கண்டு பரவசம் அடைந்தான். சிவ பூஜைக்காக பூக்களைப் பறித்தான். அப்போது ஒரு பூ மட்டும் விலகி விலகிச் சென்றதாம்! பல முறை முயன்றும் அந்தப் பூவைத் தொடக்கூட முடியாததால் ஆத்திரம் கொண்ட மன்னன், கத்தியை எடுத்து மலரை வெட்டினான். அந்தப் பூவில் இருந்து ரத்தம் பீறிட்டது; தடாகம் முழுவதும் ரத்தம் பரவியது. அதிர்ந்த மன்னன், மயங்கிச் சரிந்தான். 

    பிறகு மயக்கம் தெளிந்த போது, தனது கண்கள் பார்வையை இழந்து விட்டதை அறிந்து கதறி அழுதான்! தனது தவறை எண்ணி வருந்தியவன், சிவபெருமானிடம் மன்னிப்பு வேண்ட… அந்த நிமிடமே அவன் முன்னே காட்சி தந்த சிவ பெருமான், 'இங்கே… இந்தத் தலத்தில், சூரியன் வந்து வழிபடும் வகையில் ஆலயம் ஒன்றை எழுப்பு!' என்று அருளினார்.

    அதன்படி, சிவாலயம் ஒன்றை எழுப்பிய மன்னன், ஸ்வாமிக்கு ஸ்ரீபுஷ்பரதேஸ்வரர் எனும் திருநாமம் சூட்டி, வணங்கினான். அம்பாளின் திருநாமம் – ஸ்ரீசொர்ணாம்பிகை; சுவாமியின் வலது புறத்தில் சந்நிதி கொண்டிருக்கிறாள். ஆகவே திருமண பாக்கியம் அருளும் தலம் என்கின்றனர்!

    வருடந்தோறும், சித்திரை மாதம் 1-ஆம் தேதி முதல் 6-ஆம் தேதி வரை, சூரியனின் ஒளிக் கதிர்கள், சிவனார் மற்றும் அம்பாள் சந்நிதியில் விழுகின்றன. இந்த நாளில், இறைவனை தரிசிப்பது பெரும்பலன் தரும் என்பது ஐதீகம். 

  • Thriuchendur Uthra varushabishegam

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தை உத்தர வருஷாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றுள்ளது. தை உத்திரம் ஸ்ரீபலி மூலவர் பிரதிஷ்டாதின வருஷாபிஷேகத்தை முன்னிட்டு மூர்த்திகளுக்கும், விமானங்களுக்கும் கலசாபிஷேகம் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்துள்ளனர். 

    வருஷாபிஷேகத்தை ஒட்டி காலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து  3.30 மணிக்கு விஸ்வரூபம் தீபாராதனையும், 5 மணிக்கு அபிஷேகமும், 5.30 மணிக்கு உதயமார்த்தாண்ட தீபாராதனையும் நடைபெற்றுள்ளது.  

    தொடர்ந்து காலை 7 மணிக்கு மகாமண்டபத்தில் தங்ககுடம் கும்ப பூஜை நடந்தது. 8.35 மணிக்கு கோயில் மேல்தளத்தில் உள்ள மூலவர், சண்முகர், வெங்கடாசலபதி மற்றும் வள்ளி, தெய்வானை சன்னதி விமான கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு வருஷாபிஷேகம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
     

  • Dhoshangalai Nivrthi Seyum Perumal

    விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில்.  108 திவ்ய தேசங்களில் 53வது தலமாக உள்ளது இந்த கோயில். 

    நடுநாட்டு திருப்பதிகளில் 2வது தலமாகவும், பஞ்ச கிருஷ்ணாரண்ய ஷேத்திரத்தில் 4வது தலமாகவும், தமிழ்வேதம் எனப்படும் நாலாயிர திவ்யபிரபந்தம் அவதரித்த தலமாகவும் விளங்குகிறது உலகளந்த பெருமாள் கோவில். 

    சுமார் 2ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த கோவில் பல்லவர்கள், விஜயநகரபேரரசு, இரண்டாவது நரசிம்மவர்மன், பாண்டியர்கள், திருமலைநாயக்கர், திருமங்கை மன்னன், மலையமான் சக்கரவர்த்தி ஆகியோர் படிப்படியாக இக்கோவிலை நிறுவினார்கள். 

    இந்த திருக்கோயிலில் திருக்கோலத்தில் வலது கை யில் சங்கும், இடது கையில் சக்கரத்தையும் பிடித்தபடி வலது காலை ஆகாயம் நோக்கி தூக்கி நின்று திருவிக்கிரம அவதாரத்தில் பெருமாள் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். 

    வலது காலின் மேல்புறம் லட்சுமி உள்ளார், கீழே இடது காலில் நமச்சு முனிவர், மகாபலி சக்கரவர்த்தி, சுக்கிராச்சாரியார். ஆண்டாள், கருடன் ஆகியோர் பூஜை செய்கின்றனர். முதலாழ்வார்களான பேயாழ்வார், பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகியோர் பாடல் பாடுகின்றனர். கோவிலில் கருவறையில் இந்த காட்சிகளை பக்தர்கள் தரிசிக்க முடியும். 

    உலகளந்த பெருமாள் கோவிலில் உற்சவர் தேகளீச பெருமாள் ஆவார். ஒரு காலத்தில் வேணுகோபால சன்னதியாக இருந்து படிப்படியாக உலகளந்த பெருமாள் கோவிலாக மாற்றம் கண்டது. திருவிக்ரமசுவாமி சன்னதிக்கு பின்புறம் வாமனருக்கு தனி சன்னதி உண்டு. 

    இங்குள்ள வாமனர் கையில் குடையுடன் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். கேரளாவிற்கு அடுத்த படியாக வாமனருக்கு இங்கு தான் சன்னதி உள்ளது. ஆண்டுதோறும் பங்குனி பிரம்மேற்சவமும், வேணுகோபாலஜெயந்தி உற்சவமும் நடைபெறுகிறது. உற்சவர்கள் புஷ்பவள்ளி தாயார் மற்றும் தேகளீச பெருமாள் ஆவர். சன்னதிக்கு செல்வதற்கு முன்பு கொடிமரத்தில் இருந்து இடதுபுறத்தில் உள்ளது பூங்கோவல் நாச்சியார் சன்னதி உள்ளது. 

    தென்பெண்ணை ஆற்றின் வலதுபுறத்தில் உள்ள இந்த தலத்திற்கு அடிக்கடி பேருந்து வசதியும், விழுப்புரம்-காட்பாடி ரயில் மார்க்கத்தில் திருக்கோவிலூர் ரயில்நிலையத்தில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது. ஊரே கோவிலுக்குள் அடங்கி இருப்பதால் திருக்கோவிலூர் என்று அழைக்கப்பட்டது. 
     

  • January 26 – Rasi Palangal

    ஜனவரி 26
    விளம்பி வருடம் – தை 12
    குடியரசு தினம்
    26-ஜன-2019 சனி  
    வாஸ்து நாள்(காலை 10.41 – 11.17)
    நல்ல நேரம்    :    7.30 – 9.00    
    ராகு    :    9.00 – 10.30    
    குளிகை    :    6.00 – 7.30
    எமகண்டம்    :    1.30 – 3.00                          
    திதி    :    சஷ்டி          
    திதி நேரம்    :    சஷ்டி    இ    10.56
    நட்சத்திரம்    :    அஸ்தம்    இ    9.20
    யோகம்    :    மரண யோகம்
    சந்திராஷ்டமம்    :    பூரட்டாதி,உத்திரட்டாதி
    சூலம்    :    கிழக்கு
    பரிகாரம்    :    தயிர்

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் –   பாராட்டு 
    ரிஷபம் – புகழ்
    மிதுனம் – ஜெயம் 
    கடனம் –  அசதி
    சிம்மம் – தனம்  
    கன்னி – அமைதி
    துலாம் –  ஆதரவு 
    விருச்சிகம் – சோதனை 
    தனுசு – ஓய்வு
    மகரம் – தொல்லை 
    கும்பம் – முயற்சி 
    மீனம் – ஊக்கம் 

  • Palani theppa Ther Thiruvizha

    பழனி தைப்பூச திருவிழா நிறைவாக தெப்பத்தேர் விழா வெகு விமர்சையாக நடைபெற்றுள்ளது. இரவு தெப்பத்தேரில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 

    தெப்பத்திருவிழாவை முன்னிட்டு பெரிய நாயகி அம்மன் கோவிலில் இருந்து அருகில் உள்ள தெப்பக்குளத்தில் அலங்கரிக்கப்பட்ட மண்டபத்திற்கு முத்துக்குமார சுவாமி, வள்ளி-தெய் வானையை அழைத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. 

    6 கலசங்கள் வைத்து சிறப்பு பூஜைகளும், அதை தொடர்ந்து, 16 வகை அபிஷேகமும் சிறப்பு அலங்காரமும் செய்யப்பட்டு 16 வகை தீபாராதனையும், உபசாரங்களும் நடைபெற்றது. 

    அதன் பின்னர் முத்துக்குமாரசுவாமி வள்ளி-தெய்வானையுடன் தெப்பத்தேரில் எழுந்தருளினார். தெப்பத்தேர் 3 முறை குளத்தில் வலம் வந்தது. பின்னர் முத்துக்குமாரசுவாமி வள்ளி-தெய்வானை தோளுக்கினியாள் வாகனத்தில் வந்து பெரியநாயகி அம்மன் கோவிலில் எழுந்தருளினார். விழாவையொட்டி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பழனியில் குவிந்தனர். 

  • Theertha Kalasa Oorvalam

    சேலம் மாநகர் பிரசித்தி பெற்ற  பள்ளப்பட்டி  மாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி தீர்த்த கலச ஊர்வலம் வெகு விமர்சையாக நடைபெற்றுள்ளமு. இதில் ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டு அம்மனுக்கு தீர்த்தக்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தி உள்ளனர். 

     சேலம் மாநகர்  பள்ளப்பட்டியில் உள்ள பிரசித்திப்பெற்ற   அருள்மிகு மாரியம்மன் கோயில் தற்போது புதிதாக புனரமைக்கப்பட்டுள்ளது. இந்த கோவில் வளாகத்தில் புதியதாக அருள்மிகு அண்ணாமலையார், உண்ணாமலையம்மாள்  சன்னதிகள்  அமைக்கப்பட்டு அதற்கான பூஜைகளும் நடத்தப்பட்டு வருகிறது.

     புதிதாக  அமைக்கப்பட்டுள்ள கோவில்களுக்கு  தீந்தமிழ் திருக்குட புனித நன்னீராட்டு விழா,  வருகின்ற ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. இந்நிலையில் அதற்கான தீர்த்தக்குடம் மற்றும் முளைப்பாரி எடுத்து வரும்  ஊர்வலம் நடைப்பெற்றது. பள்ளப்பட்டி மூன்று ரோடு  பகுதியிலிருந்து துவங்கிய இந்த ஊர்வலத்தில்  கடுமையான  விரதம் மேற்கொண்டு  மூவாயிரத்திற்கும் மேற்பட்ட   பெண்கள் தீர்த்தக்குடம் மற்றும் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக வந்தனர்.

     தாரை, தப்பட்டைமற்றும் வாணவேடிக்கையுடன் நடைபெற்ற இந்த ஊர்வலத்தின் முன்பாக 50-பெண்கள்  கோவிலின்  மேல்புறத்தில் அமைக்கப்படும் கலசங்களை ஊர்வலமாக எடுத்து வந்தனர் .
    இதில்  பெண்கள் மஞ்சள் ஆடை அணிந்து முளைப்பாரி எடுத்து வந்து  அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    தொடர்ந்து ஊர்வலத்தில் எடுத்து வரப்பட்ட தீர்த்த கலசங்கள் அனைத்தும் யாகசாலையில்  வைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்ற பின்னர்,   இரண்டாம் மற்றும் மூன்றாம் கால  பூஜைகள் செய்யப்பட்டதும் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை அனைத்து கோபுர கலசங்களுக்கு புனித நன்னீராட்டு விழா நடைபெற உள்ளது. இதற்காக  கோவில் வளாகத்தில் பிரமாண்ட யாகசாலை அமைக்கப்பட்டு தினந்தோறும் சிறப்பு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது.
     இன்று நடைபெற்ற தீர்த்த கலசம் மற்றும் முளைப்பாரி  ஊர்வலத்திற்கு  ஏற்பாட்டினை விழாக்குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.

  • January 25 – Rasi Palangal

    ஜனவரி 25
    விளம்பி வருடம் – தை 11
    25-ஜன-2019 வெள்ளி  
    கரிநாள்
    நல்ல நேரம்    :    9.00 – 10.30    
    ராகு    :    10.30 – 12.00    
    குளிகை    :    7.30 -9.00
    எமகண்டம்    :    3.00 – 4.30                          
    திதி    :    பஞ்சமி          
    திதி நேரம்    :    பஞ்சமி    இ    12.36
    நட்சத்திரம்    :    உத்திரம்    இ    10.24
    யோகம்    :    சித்த-அமிர்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    சதயம்,பூரட்டாதி
    சூலம்    :    மேற்கு
    பரிகாரம்    :    வெல்லம்

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் –   நன்மை 
    ரிஷபம் – அமைதி
    மிதுனம் – களிப்பு 
    கடனம் –  சிக்கல் 
    சிம்மம் – பயம்  
    கன்னி – பாராட்டு
    துலாம் –  ஜெயம் 
    விருச்சிகம் – பரிசு 
    தனுசு – பிரீதி
    மகரம் – நலம் 
    கும்பம் – வெற்றி 
    மீனம் – ஆக்கம்