Category: அவசியம் படிக்க

அவசியம் படிக்க

  • Vallalar thayar illathil

    தை பூசத்தையோட்டி சின்னகாவனம் கிராமத்தில் வசித்த வள்ளலார் தாயார் இல்லத்தில் வள்ளலார் வருவிக்க திருவிழா பக்தர்கள் சார்பில் சிறப்பு பிராத்தனைகளுடன் பொது மக்களுக்கு பசியாற்றுவித்தார் நிகழ்ச்சி நடைபெற்றது 

    திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த சின்னகாவனம் கிராமத்தில் திரு அருட்பிரகாச வள்ளலாரை பெற்றுஎடுத்த தாயார் சின்னம்மையார் பிறந்த கிராமமாகும். 
    வள்ளலார் தனது தாயாருடன் குழந்தை பருவத்தில் 1824முதல் 1827 வரை தாயாருடன் வளர்ந்து வந்தார் வள்ளலாரின் தாயார் வசித்த இடத்தில் பக்தர்கள் சார்பில் வள்ளலார் தாயார் சின்னம்மையார்நினைவு இல்லம் அமைக்கப்பட்டு நாள்தோரும் அன்னதானம் நடைபெற்று வருகின்றன.
    இங்கு ஆண்டு  தை பூச திருநாளில் திரு அருட்பிரகாச வள்ளலார்  அவதரித்தநாளை  பக்தர்கள் சார்பில் வள்ளலார் வருவிக்க திருவிழா கடைபிடிக்க பட்டு அங்குள்ள அமைக்கப்பட்டுள்ள அணைய வள்ளலார்ஜோதி விளக்கு முன்பு திருவருட்பா ஓதுதலுடன்  சிறப்பு வள்ளலார் ஜீவகாருணிய ஒழுக்க பிராத்தனைகளுடன்  பொது மக்கள் அனைவருக்கும்  பசியாற்றுவித்தல்  அன்னதான நிகழ்ச்சியுடன்  தை பூச வள்ளலார் வருவிக்க திருவிழா சிறப்பாக  நடைபெற்றது இவ்விழாவில் சென்னை ,காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்டங்களை சேர்ந்த வள்ளலார் மெய் அன்பர்களும் பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்

  • Sabari Malai Nadai Adaippu

    மகர விளக்கு பூஜைகளுக்கு பிறகு சபரிமலை நடை அடைக்கப்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகர விளக்கு பூஜை  பிரசித்தி பெற்றது. மகரவிளக்கு பூஜை கடந்த 14ம் தேதி நடந்தது. பொன்னம்பலமேட்டில் தோன்றிய மகர ஜோதியை லட்சக்கணக்கான பக்தர்கள் கண்டு ரசித்துள்ளனர். ஜனவரி 20ஆம் தேதி மண்டல, மகர விளக்கு காலம் நிறைவடைந்தது. இதனை அடுத்து சபரி மலையில் நடை அடைக்கப்பட்டுள்ளது. 

  • Thiruthani Murugan Thai Poosam

    திருத்தணி முருகன் கோயிலில் நடைபெற்ற தைப்பூச விழாவில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் முருகப்பெருமானை வழிபட்டனர்.

    ஆறுபடை வீடுகளில் 5 ஆம் படைவீடாக திகழும் திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி முருகன் கோயில் ஆண்டுதோறும் தைப்பூச விழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. விழாவை முன்னிட்டு காலை 5 மணிக்கும் மூலவருக்கு பால், பன்னீர், விபூதி, தேன் மற்றும் அபிஷேக பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மூலவருக்கு தங்கவேல், தங்க கிரீடம், மாணிக்க கல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

    காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, ஆந்திர, கர்நாடக மாநிலங்களில் இருந்து பல ஆயிரக்கணக்கான மேற்பட்ட பக்தர்கள் விழாவில் கலந்துகொண்டு முருகப்பெருமானை வழிபட்டனர்.

     விழாவை முன்னிட்டு வெளியூர்கள் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து பஸ், கார்கள் மலைக்கோயிலில் வந்து குவிந்து போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பின்னர் தைப்பூச விழாவையொட்டி 50 ரூபாய், 100 ரூபாய் சிறப்பு கவுன்டர்களிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    அதுபோல் பொதுவழியிலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் 4 மணி நேரம் காத்திருந்து முருகப்பெருமானை வழிபட்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் மற்றும் கோயில் அலுவலர்கள் செய்திருந்தனர்.

  • Mayilam Thee Middhi Thiruvizha

    திண்டிவனம் அருகே மயிலம் சுப்பிரமணியசுவாமி கோவிலில் தைப்பூசத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் உடம்பில் வேல் குத்தியடி காவடி எடுத்துவந்து கோவிலில் வழிபாடு செய்தனர். கோவிலில் அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் இறங்கி பக்தி பரவசத்துடன் தீ மிதித்து வழிபாடு செய்தனர்.

  • Sruttapalli Pallikondeswarar Yaga Salai Poojaigal

    தமிழக ஆந்திர எல்லையில் உள்ள சுருட்டப்பள்ளி பள்ளிக்கொண்டேஸ்வரர் ஆலயத்தின் மகா கும்பாபிஷேக விழா  வரும் 23 ஆம் தேதி நடைபெறவுள்ளதால் 100 க்கும் மேற்பட்ட சிவாச்சாரியர்கள்  மூலம் யாகசாலைகள் பூஜைகள்  நடைபெற்று வருகின்றன.

    திருவள்ளூர் மாவட்டம் ஊத்துகோட்டை அடுத்த ஆந்திர மாநிலம்  சுருட்டப்பள்ளியில் உள்ளது பள்ளிக்கொண்டேஸ்வர் ஆலயம்.வரலாற்று சிறப்புமிக்க இந்த ஆலயத்தில் சிவன் லிங்கமாக இல்லாமல் வேறெங்கும் காண முடியாத வகையில் முழுஉருவமாக  பள்ளிகொண்டு காட்சி அளிப்பதால் புண்ணிய ஸ்தலமாக பக்தர்களால் பார்க்க படுகிறது.தற்போது இந்த ஆலயத்தில்  ஸ்ரீ மரகதாம்பிகா ஸ்மேத வால்மிகிஸ்வரர் மற்றும் மங்களாம்பிகா ஸ்மேத பள்ளிக்கொண்டேஸ்வரர் ஆகியோருக்கு வரும் 23ம் தேதி மஹா கும்பாபிஷேக விழாவானது பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறவுள்ளது.

    இதையொட்டி  ஆலயத்திற்கு எழில்மிகு வண்ணம் தீட்டப்பட்டு அதற்கான திருப்பணிகள் நடந்து முடிந்துள்ளன.கும்பாபிஷேக விழாவினை காஞ்சி காமக்கோடி விஜேந்திர சரஸ்வதி சாமிகள் நடத்த உள்ளனர்.இதற்காக நூற்றுக்கும் மேற்ப்பட்ட  சிவாச்சாரியார்கள் ஆலயத்தில் முகாமிட்டு யாக சாலை பூஜைகள் துவக்கியுள்ளனர்.பிரசித்திபெற்ற இந்த ஆலய கும்பாபிஷேக விழாவில் தமிழக மற்றும் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான   பக்தர்கள் வருவார்கள் என எதிர்பாக்கப்படுகிறது.எனவே ஆலய நிர்வாகம் மற்றும் ஆந்திரா இந்து சமய அறநிலைய துறை சார்பாக பக்தர்கள் வசதிக்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

  • January 21 – Rasi Palangal

    ஜனவரி 21
    விளம்பி வருடம் – தை 7
    தைப்பூசம்
    மருதமலை முருகன் தேர்
    21-ஜன-2019 திங்கள் 
    நல்ல நேரம்    :    6.00 – 7.30    
    ராகு    :    7.30 – 9.00    
    குளிகை    :    1.30 – 3.00
    எமகண்டம்    :    10.30 – 12.00                          
    திதி    :    பிரதமை          
    திதி நேரம்    :    பவுர்ணமி    கா    11.41
    நட்சத்திரம்    :    பூசம்    அ.கா    4.32
    யோகம்    :    சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    உத்திராடம்
    சூலம்    :    கிழக்கு
    பரிகாரம்    :    தயிர்

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் –   இன்பம் 
    ரிஷபம் – இறக்கம் 
    மிதுனம் – உயர்வு 
    கடனம் –  நட்பு 
    சிம்மம் – ஆதரவு
    கன்னி – அலைச்சல்
    துலாம் –  நஷ்டம் 
    விருச்சிகம் – லாபம் 
    தனுசு – நற்செயல்
    மகரம் – களிப்பு 
    கும்பம் – சுகம்  
    மீனம் – நலம் 

  • Kandhanukku Ettanai Kavadigal

    தை மாதம் பூச நட்சத்திரம் பௌர்ணமி நாளில் பார்வதி முருகப் பெருமானுக்கு வேல் தந்து அருளிய நாளையே தைப்பூசத் திருவிழாவாகக் கொண்டாடுகிறோம். பழநியில், தைப்பூசம் பத்து நாட்கள் திருவிழாவாக பல்வேறு சமூகத்தவரும் கலந்து கொண்டாடும், சமத்துவத் திருவிழாவாக நடத்தப்பட்டு வருகிறது. பழநிக்கு பாதயாத்திரையாக காவடி சுமந்து முருக பக்தர்கள் பல்வேறு நேர்த்தி கடன்களுடன் லட்சக்கணக்கில் குவிவது வழக்கம். பழநிக்கும் காவடிக்கும் நெருங்கின சொந்தம் உண்டு. இங்கே, பழநியில் மலைக்கோயில், இடும்பன் கோயில் என இரு மலைகளுமே காவடிகளாகவே காட்சியளிக்கின்றன. 

    முருகப் பெருமானுக்கு மிகவும் பிடித்ததே காவடிதான். இதில்தான் எத்தனை வகை! பால்காவடி, பழக்காவடி, பூக்காவடி, மயில் காவடி, இளநீர் காவடி, கரும்பு, தீர்த்த காவடி என எத்தனையோ! மலைக்கோயில் நவபாஷாண சிலை வடிவான முருகனுக்கு அபிஷேகம் செய்ய நீர், பால், எண்ணெய், தேன், பழம், விபூதி, சந்தனம், பூ என அனைத்தும் காவடி உருவில்தான் மலைக்குச் செல்கின்றன. 
     
    பக்தர்கள் பரவசத்துடன் காவடி எடுத்து ஆடுவதைக் கண்டால் உடல் சிலிர்த்துப் போகும். வணிகத்தில் வருமானம் ஈட்டிய நகரத்தார் தம் பொருளை பெரும் தானமாக பழநி முருகனுக்கு வழங்கிடவே தைப்பூசத்தில் பாதயாத்திரையாக காவடி சுமந்து வர ஆரம்பித்தனர். இதுவே மிகப் பிரபலமாகி தைப்பூச பாத யாத்திரையாக பலராலும் பின்பற்றப்பட்டு வருகிறது. வீட்டிற்கொரு மயில் தீர்த்தக் காவடி என கடும் விரதமிருந்து, சுமந்து நடைப்பயணமாக பழநி நோக்கி செல்கிறார்கள். வரும் வழியெல்லாம் அன்னதானம், தர்மமென அவர்களுக்கு பண்போடு பக்தி தொண்டு செய்கின்றனர் அந்தந்த ஊர்க்காரர்கள். 

    திரும்பவும் ஊர்சேரும் வரை காவடிகளுக்கு அவர்கள்  காட்டும் பாதுகாப்பு மிகத் தெய்வீகமானது. கொங்கு மண்ணின் மக்கள் காவிரி தீர்த்த காவடியை கடும் வெயிலையும் பாராமல் சுமந்து வந்து அபிஷேகம் செய்கின்றனர். தங்கள் மண்ணில் விளையும் பொருட்கள் எல்லாம் எங்கள் குலதெய்வம் மேற்கு நோக்கிய பகவான் முருகனுக்கே என கேரள மக்களும் காவடி பிரார்த்தனையை நிறைவேற்றுகின்றனர். காவடி தூக்கி வரும் பாலர் முதல் முதியோர் வரை படியேறி மலைக்கோயில் செல்வது பார்க்க அழகாக இருக்கும். 

    பழநியில் ஒவ்வொரு திருவிழாவின் போதும் லட்சக்கணக்கில் படைக்கப்படும் காவடிகள் குவிந்துவிடும். இன்றும் முருக பக்தர்கள் இல்லத்திலும் பரம்பரை சொத்தாக  பழம்பெரும் காவடிகள் பத்திரமாக இருப்பதைக் காணலாம். எடப்பாடி பருவத ராஜகுல சமூகத்தினர் முருகப் பெருமானை தம் குலச் செல்வி வள்ளியை மணமுடித்ததால் மாப்பிள்ளை என்ற குடும்பப் பாசத் துடன் குமரனின் பாதணியை தம் தலையில் இரு முடியாக சுமந்து 300 கி.மீ. தூரம் நடந்தே பழநிக்கு சென்று வருகின்றனர்.

     

  • Kavaadi Eduppadhu En

    தைப்பூசம் தினத்தன்று முருகன் தலங்களில் எந்த பக்கம் திரும்பினாலும் காவடிகளாக இருக்கும். அதற்கு காரணம், தமிழ்க் கடவுளான முருகனுக்குச் செய்யப்படும் வேண்டுதல் பிரார்த்தனைகளில் முக்கியமானது காவடி எடுப்பதுதான். இந்தக் காவடி எடுப்பதன் காரணம் தெரியுமா?

    அகத்திய முனிவர் ஒரு தடவை தன் சீடர்களில் ஒருவரான இடும்பனை அழைத்து, தனது வழிபாட்டிற்காக கயிலை சென்று அங்கு மலையிலுள்ள சிவசக்தி சொரூபமான சிவகிரி, சக்திகிரி என்னும் இரு சிகரங்களையும் கொண்டு வரும்படி கூறினார்.

     
    அகத்திரியின் கட்டளைக்கிணங்க இடும்பனும் கயிலை சென்று இவ்விரு மலைகளையும் இருபுறமும் தொங்க, காவடியா கக்கட்டி எடுத்துக் கொண்டு வந்தான். 
    பழனி தலம் வந்த போது இடும்பன் காவடியை இறக்கி வைத்து ஓய்வெடுத்தான். பிறகு புறப்படும்போது காவடியைத் தூக்க முடியாமல் திண்டாடினான். ஏன் இப்படி காவடியைத் தூக்க முடியாமல் போனது என்று சுற்றிப் பார்க்கும்போது சிவகிரியின் மேல் ஒரு சிறுவன் கோவணான்டி யாய் கையில் தண்டுடன் நிற்பதைக் கண்டான். இடும்பன் சிறுவனை மலையிலிருந்து கீழே இறங்கும்படி வேண்டினான்.

    ஆனால் அந்த சிறுவன் இந்த மலை ‘தனக்கே சொந்தம்’ என்று உரிமை கொண்டாடினான். கோபமுற்ற இடும்பன் அச்சிறுவனைத் தாக்க முயன்றான். அப்போது இடும்பன் வேரற்ற மரம்போல் கீழே சரிந்து விழுந்தான்.

    இதைக்கண்ட அகத்தியர் மற்றும் இடும்பன் மனைவியுடன் சென்று வேண்ட, முருகன் இடும்பனுக்கு அருளாசி புரிந்ததுடன் இடும்பனைத் தனது காவல் தெய்வமாகவும் நியமித்தார். அப்போது முருகன், இடும்பன்போல் காவடியேந்தி, சந்தனம், பால், மலர் போன்ற அபிஷேகப் பொருட்களை தன் சன்னதிக்கு எடுத்து வருபவர்களுக்கு அருள் பாலிப்பதாக வாக்களித்தார்.

    அப்போது முதல் முருகனுக்கு காவடி எடுக்கும் பழக்கம் வழக்கமாகி விட்டது என்று ஆன்மீக வாதிகள் சொல்கிறார்கள்.

  • Thai poosam pada vendiya padalgal

    தைப்பூசத்தன்று முருகப்பெருமானைப் புகழ்ந்து, இந்தப் பாடல்களைப் பக்தியுடன் பாடினால் துன்பங்கள் நீங்கி வளமான வாழ்வை பெறலாம்.

    தைப்பூசம் அன்று பாடவேண்டிய முருகன் பாடல்
    அஞ்சுமுகம் தோன்றில் ஆறுமுகம் தோன்றும்
    வெஞ்சமரில் அஞ்சேல் என வேல்தோன்றும்- நெஞ்சில் 
    ஒருகால் நினைக்கில் இருகாலும் தோன்றும்

     முருகாஎன்று ஓதுவார் முன்.

    வீரவேல் தாரைவேல் விண்ணோர் சிறைமீட்ட
    தீரவேல் செவ்வேள் திருக்கை வேல்- வாரி
    குளித்த வேல் கொற்றவேல் சூர்மார்பும் குன்றும்
    தொளைத்த வேலுண்டே துணை.

    விழிக்குத் துணைதிரு மென்மலர்ப் பாதங்கள் மெய்ம்மை குன்றா
    மொழிக்குத் துணை முருகா எனும் நாமங்கள் முன்பு செய்த
    பழிக்குத் துணை அவன் பன்னிரு தோளும் பயந்த தனி
    வழிக்குத் துணை வடிவேலும் செங்கோடன் மயூரமுமே.

    சேந்தனைக் கந்தனைச் செங்கோட்டு வெற்பனைச் செஞ்சுடர்வேல்
    வேந்தனைச் செந்தமிழ் நூல் விரித்தோனை விளங்கு வள்ளி
    காந்தனைக் கந்தக் கடம்பனைக் கார்மயில் வாகனனை
    சாந்துணைப் போதும் மறவாதவர்க்கு ஒரு தாழ்வில்லையே.

    திருவடியும் தண்டையும் சிலம்பும் சிலம்பூருவப்
    பொருவடி வேலும் கடம்பும் தடம்புயம் ஆறிரண்டும்
    மருவடி வான வதனங்கள் ஆறும் மலர்க்கண்களும்
    குரு வடிவாய் வந்து என் உள்ளம் குளிரக் குடிகொண்டவே.

    கொள்ளித் தலையில் எறும்பது போலக் குலையுமென்றன்
    உள்ளத் துயரை ஒழித்தருளாய் ஒருகோடி முத்தம்
    தெள்ளிக் கொழிக்கும் கடற்செந்தில் மேவிய சேவகனே
    வள்ளிக்கு வாய்த்தவனே மயிலேறிய மாணிக்கமே.

    மொய்தார் அணிகுழல் வள்ளியை வேட்டவன் முத்தமிழால்
    வைதா ரையுமங்கு வாழ வைப்போன் வெய்ய வாரணம் போல்
    கைதான் இருபது உடையான் தலைப்பத்தும் கத்தரிக்க 
    எய்தான் மருகன் உமையாள் பயந்த இலஞ்சியமே.

    காளைக் குமரேசன் எனக் கருதித்
    தாளைப் பணியத் தவம் எய்தியவா
    பாளைக் குழல் வள்ளி பதம் பணியும்
    வேளைச் சுர பூபதி மேருவையே.

    ஆறிரு தடந்தோள் வாழ்க! அறுமுகம் வாழ்க! வெற்பைக்
    கூறுசெய் தனிவேல் வாழ்க! குக்குடம் வாழ்க! செவ்வேல்
    ஏறிய மஞ்ஞை வாழ்க! யானை தன் அணங்கும் வாழ்க!
    மாறிலா வள்ளி வாழ்க! வாழ்க சீர் அடியாரெல்லாம்!

  • Poosa Natchatiram Kavanikka vendiyadhu

    பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், தங்கள் நட்சத்திர தினம் மற்றும் திரிதியை திதி நாட்களில் சனி பகவானுக்கு அபிஷேகம் செய்து, எட்டு முறை சுற்றி வந்து வழிபட்டால் தீராத பிரச்சினைகள் எல்லாம் தீரும்.

    தேவர்களில் குருவாகிய பிரகஸ்பதியின் நட்சத்திரம் பூசம் என்பதால் தைப்பூசத்தன்று குரு வழிபாடு செய்வது மிகுந்த பலனைத் தரும் என்பர். 

    பூசம் நட்சத்திரக்காரர்கள் சாஸ்தா வழிபாடு நடத்தினால் சகல செல்வங்களையும் பெறலாம். 

    பூச நட்சத்திரக்காரர்கள் அய்யப்பனின் மூல மந்திரமாகிய சுவாமி சரணம் என்பதை ஓதிக்கொண்டே இருங்கள். காரிய தடை நீங்கி சகல யோகங்கள் பெறலாம்.