Category: அவசியம் படிக்க

அவசியம் படிக்க

  • Chadurthi Viradham Thondriya Kadhai

    கயிலாயத்திற்கு ஒருமுறை  வந்த பிரம்மனை பார்த்து, சந்திரன் ஏளனமாக சிரித்தார். இதைப் பார்த்த விநாயகர். சந்திரனே, உன் பிரகாசம் உலகில் எங்கும் இல்லாமல் போகட்டும், உன் பிரகாசம் யார் கண்களுக்கும் புலப்படாமல் மறைந்து போகட்டும் என்று சாபமிட்டார். 

    விநாயகர் சாபம் கொடுத்த அந்த நொடியே சந்திரன்  வானத்தில் இருந்து காணாமல் போனார். நலவு வானத்தில் காணாமல் போனதை கண்டு தேவர்களும், இந்திரனும், அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து சந்திரனுக்கு சாப விமோசனம் அளிக்குமாறு விநாயகரை வேண்டிக்கொண்டனர். 

    தேவர்களின் வேண்டுகோளை ஏற்று ஆண்டுக்கு ஒருநாள் ஆவணி மாத சதுர்த்தியன்று சந்திரனை பார்ப்பவர்கள் துன்பப்படுவார்கள் என்று கூறி சந்திரனுக்கு கொடுக்கப்பட்ட சாபத்தை கொஞ்சம் குறைத்தார் விநாயகர். ஒவ்வொரு மாதமும் பவுர்ணமிக்கு அடுத்து வரும் சதுர்த்தியன்று விரதம் இருந்து தம்மை வழிபடுபவர்களின் சங்கடங்களை எல்லாம் நான் நிவர்த்தி செய்வேன் என்று கூறினார். 

    இதைக்கேட்ட சந்திரன் தன் தவறை உணர்ந்து விநாயகரை குறித்து கடும் தவம் இருந்தான். அவனது தவத்துக்கு மனம் மகிழ்ந்த விநாயகர் அவனுக்கு அருள்புரிந்து வளரும் வரத்தை கொடுத்தார். இப்படி சந்திரன் வரம் பெற்ற நாள் தேய்பிறை சதுர்த்தி தினமாகும். ஆகவே சதுர்த்தி திதி விநாயகருக்கு உகந்த திதியானது. சந்திரனின் அகந்தையை அழித்த தினம் இது. 
     

  • Sangadangali Theerkum Sangadahara Chadurthi

    சங்கடஹர சதுர்த்தி அன்று விரதம் இருந்தால் சங்கடங்கள் தீரும் என்பது ஐதீகம். முழுமுதற்கடவுளான விநாயகப் பெருமானை சங்கடஹர சதுர்த்தி நன்னாளில், மனமுருகப் பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும். அப்படி செய்தால், உங்களின் வாழ்வில் உள்ள சங்கடங்களையெல்லாம் தீர்த்து சந்தோஷக் கடலில் நீந்தச் செய்வார் விநாயக பெருமான். 

    எந்த ஒரு செயலை தொடங்கும் போதும் விநாயகர் பூஜை செய்து தொடங்குவதால், நினைத்த காரியம், செயல் என்று எதுவாயினும் எளிதில் முடியும். இப்படி இருக்க மகா சங்கடஹர சதுர்த்தி நாளில் செயலை தொடங்குவது இன்றும் சிறந்தது.

     ஒவ்வொரு மாதமும் பவுர்ணமிக்கு அடுத்து வரும் நான்காம் நாள் சங்கடஹர சதுர்த்தி நாள் ஆகும்.  நமக்கு வரும் துன்பங்களை, தடைகளை, கஷ்டங்களை அழிப்பதற்காக ஏற்பட்ட ஒரு சிறப்பு மிக்க விரதம் இது. மனிதருக்கு மட்டும் அல்ல. தெய்வங்களுக்கும், தேவர்களுக்கும் கூட கஷ்டங்கள் வந்த போது, அவர்கள் கணபதியை வணங்கி நலம் பெற்றுள்ளனர். 'மகாசங்கடஹர சதுர்த்தி' அன்று வழிபாடு செய்தால் வருடம் முழுவதும் சதுர்த்தி விரதம் இருந்த பலன் கிடைக்கும்.
     

  • January 24 – Rasi Palangal

    ஜனவரி 24 
    விளம்பி வருடம் – தை 10
    24-ஜன-2019 வியாழன்  
    கரிநாள்
    நல்ல நேரம்    :    10.30 – 12.00    
    ராகு    :    1.30 – 3.00    
    குளிகை    :    9.00 – 10.30
    எமகண்டம்    :    6.00 – 7.30                          
    திதி    :    சதுர்த்தி          
    திதி நேரம்    :    சதுர்த்தி    இ    2.34
    நட்சத்திரம்    :    பூரம்    இ    11.42
    யோகம்    :    சித்த-மரண யோகம்
    சந்திராஷ்டமம்    :    அவிட்டம்,சதயம்
    சூலம்    :    தெற்கு
    பரிகாரம்    :    தைலம்

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் –   கீர்த்தி 
    ரிஷபம் – நன்மை 
    மிதுனம் – சிரமம் 
    கடனம் –  நஷ்டம் 
    சிம்மம் – கவலை 
    கன்னி – பக்தி 
    துலாம் –  நட்பு
    விருச்சிகம் – பாசம் 
    தனுசு – வெற்றி 
    மகரம் – ஓய்வு
    கும்பம் – அமைதி
    மீனம் – மகிழ்ச்சி

  • Thirupathyil Radha Sapdhami

    திருப்பதி திருமலையில் பிப்ரவரி 12 அம் தேதி ரதசப்தமி விழா நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. திருப்பதியில் ஆண்டுதோறும் ரதசப்தமி எனப்படும் சூரிய ஜெயந்தி உற்சவம் மிக சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. 

    ரதசப்தமி அன்று ஒரே நாளில்  7 வாகன சேவைகளில் திருப்பதி ஏழுமலையான் மாட வீதிகளில் பவனி வருகிறார்.  ரதசப்தமியை தரிசிக்க திருப்பதிக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். எனவே ரதசப்தமி விழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ரதசப்தமி அன்று நடைபெறவுள்ள வாகன சேவைகளின் பட்டியலை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது. 

    அதன் விவரம் வருமாறு:-

    காலை 5.30 மணி முதல் 8 மணி வரை சூரிய பிரபை வாகனம். காலை 9 மணி முதல் 10 மணி வரை சின்னசே‌ஷ வாகனம். காலை 11 மணி முதல் 12 மணி வரை கருட வாகனம். மதியம் 1 மணி முதல் 2 மணி வரை அனுமந்த வாகனம். மதியம் 2 மணி முதல் 3 மணி வரை தீர்த்தவாரி. மாலை 4 மணி முதல் 5 மணி வரை கல்பவிருட்ச வாகனம். மாலை 6 மணி முதல் 7 மணி வரை சர்வபூபால வாகனம். இரவு 8 மணி முதல் 9 மணி வரை சந்திரபிரபை வாகனம் போன்ற வாகன சேவைகள் நடைபெறுகிறது.
     

  • Vishnu Gayathri Manthiram

    விஷ்ணு காயத்ரி மந்திரம் :

    ஓம் நாராயணாய வித்மஹே

    வாசுதேவாய தீமஹி

    தன்னோ விஷ்ணு ப்ரசோதயாத்

    ஆபத்துகளில் இருந்து விடுபட தினமும் விஷ்ணு காயத்ரி மந்திரத்தை சொல்லி வர வேண்டும். ஆபத்துகள் மட்டும் அல்ல பாவங்களும் உங்களை விட்டு அகலும். அதுமட்டுமல்ல நல்ல குணமும், அழகும் கொண்ட சந்ததிகள் உருவாகுவார்கள். 
     

  • Kadavulidam Varam Peruvadhu Eppadi

    ஆழ்ந்த பக்தியுடையவர்கள் படைத்த கடவுளையும் கட்டிப்போடலாம். வரம் கேட்கலாம். அந்த வரங்களைக் கேட்குமுன் எவற்றையெல்லாம் சிந்தித்து கேட்கவேண்டும் என்பதை மகாபாரதம் விளக்குகிறது.

    மகாபாரதத்தில் கௌரவர்களுடன் விளையாடிய சூதாட்டத்தில் தோற்றதால் பாண்டவர்கள் 12 வருடங்கள் வனவாசமும், ஓராண்டு விராட நாட்டில் அஞ்ஞாத வாசமும் கழிக்க நேர்ந்தது.

    இது முடிந்த பின்பு, சூதாட்ட நிபந்தனைப்படி தாங்கள் இழந்த ராஜ்ஜியத்தையும், அரசு உரிமையையும் பாண்டவர்கள் திரும்பப்பெற விரும்பினார்கள். ஆனால் அதைத் தருவதற்கு துரியோதனன் விரும்பவில்லை. இதனால் பஞ்ச பாண்டவர்களில் பீமனும் அர்ஜுனனும் கடும் கோபம் கொண்டனர். கௌரவர்களிடம் போரிட விரும்பினர்.

    ஆனால் உறவையும் நட்பையும் அமைதியையும் பெரிதும் விரும்பியவன் தர்மன். தங்களது கோரிக்கைகளை துரியோதனனுக்கு எடுத்துச் சொல்லி தங்களுக்குச் சேரவேண்டிய ராஜ்ஜிய பாகத்தைப் பெறுவதற்கு பொறுப்பும் திறமையும் மிக்க ஒருவரை தூதுவனாக அனுப்ப விரும்பினான்.  அப்போது அவன் மனக்கண்ணில் தோன்றியவர் பகவான் ஸ்ரீ கிருஷ்ணன். எனவே, ஸ்ரீ கிருஷ்ணனை அழைத்து இப்படிச் சொன்னான்: 

    ''தம்பிமார்கள் கோபமாக இருக்கின்றனர். பட்ட துயரங்களுக்கெல்லாம் காரணமானவர்களைப் பழிவாங்கத் துடிக்கிறார்கள். எப்படியாவது போர் தொடுத்து, கௌரவர்களை அழித்து, தர்ம ராஜ்ஜியம் ஸ்தாபிக்க வேண்டும் என்று பீமனும் அர்ஜுனனும் உறுதியாக இருக்கிறார்கள். ஆனால் நானோ, அமைதியையும் சமாதானத்தையுமே விரும்புகிறேன். துரியோதனனிடம் பாண்டவர் தூதுவனாக நீ செல். நிபந்தனைப்படி எங்களுக்குச் சேர வேண்டிய ராஜ்ஜியத்தைக் கேள். பாதி ராஜ்ஜியம் தர மறுத்தால், நமக்கென ஐந்து சிறிய நாடுகள் கேள். அதுவும் இல்லையென்றால், ஐந்து ஊர்களைக் கேள். அதையும் அவர்கள் தர மறுத்தால், ஐந்து இல்லங்களையாவது கேள். எப்படியும் அதையாவது கேட்டு வாங்கி போர் வராமல் தடுத்து தர்மத்தை நிலைநாட்டு'' என்றான் தர்மன்.

    ''தர்மா! நிச்சயம் தர்மத்தை நிலைநாட்ட என்னால் ஆனதைச் செய்கிறேன். உங்களுக்காகத் தூது போய், நீங்கள் கூறியபடி, ஐந்து வீடுகளாவது யாசகம் கேட்டுப் பார்க்கிறேன். எதற்கும் தம்பிகளிடமும் திரௌபதியிடமும் கலந்தாலோசித்து, அவர்கள் அபிப்ராயங்களையும் கேட்டுத் தெரிந்துகொண்டு விடைபெற்றுச் செல்கிறேன்'' என்று கூறி புறப்பட்டான் கண்ணன்.

    பீமனை கண்ணன் சந்தித்து இதுபற்றி பேசியபோது, "ராஜ்ஜியத்தை யாசகம் கேட்டுப் பெறுவதை விரும்பவில்லை. சூதாட்ட மண்டபத்தில் நான் செய்த சபதம் நிறைவேற போர் வந்தே ஆக வேண்டும்" என அவன் கர்ஜித்தான். அதேகருத்தை கண்ணனிடம் அடக்கமாகத் தெரிவித்தான் அர்ஜுனன். அதன்பின் திரௌபதியையும் நகுலனையும் சந்தித்தான் கண்ணன்.

    ''அண்ணா, நீ தூது போவது தர்மமா? அதுவும் ஐந்து வீடுகள் யாசகமாகக் கேட்கப் போகிறாயாமே! அதை அவர்கள் தர சம்மதித்துவிட்டால், அவிழ்ந்த என் கூந்தல் முடிவது எப்போது? உன் மீது ஆணையாக நாங்கள் செய்த சபதங்கள் என்னாவது?'' எனக் கண்ணீர் வடித்தாள் திரௌபதி. நகுலனும் தர்மனின் எண்ணத்துக்கு உடன்படவில்லை.

    ''பாஞ்சாலி, நீங்கள் அனைவரும் என் மீது ஆணையிட்டுத்தான் சபதங்கள் செய்திருக்கிறீர்கள். அதை நிறைவேற்றுவதில் உங்களைவிட என் பொறுப்புதான் அதிகம். அவை நிச்சயம் நிறைவேறும். எப்படி என்று மட்டும் இப்போது கேட்காதே! நம்பிக்கையோடு பொறுத்திரு. நான் சகாதேவனைக் கண்டுவிட்டு, நாளை ஹஸ்தினாபுரம் செல்கிறேன்'' என்றுவிட்டு கண்ணன் கிளம்பினான்.

    சகாதேவன் குடில் நோக்கிப் புறப்பட்டான் கண்ணன். அங்கே, அமைதியாக ஜோதிடச் சுவடிகளை ஆராய்ந்து கொண்டிருந்த சகாதேவன், கண்ணனைக் கண்டதும் பணிந்து வரவேற்றான்.

    ''சகாதேவா, இந்த உலகில் அமைதியை நிலைநாட்டுவதற்காக, நான் நாளை ஹஸ்தினாபுரம் செல்கிறேன். நீ சாஸ்திர வல்லுநன்; சிறந்த அறிவாளி. அமைதியை விரும்புபவன். போரைத் தடுக்க ஏதாவது வழியிருக்கிறதா, சொல்… அதையும் முயன்று பார்க்கிறேன்'' என்றான் கண்ணன். 

    தர்மத்தை நிலைநாட்ட ஒரு குருக்ஷேத்திரப் போரை உருவாக்கவே, கண்ணன் தூது செல்கிறான் என்பதை, அவனது ஆரூட சாஸ்திர அறிவால் ஊகிக்க முடிந்தது. அதனால், அவன் வேடிக்கையான வழி ஒன்றைச் சொன்னான்.

    ''கண்ணா, கேள்… பீமன் கையில் உள்ள கதையை முறித்து, அர்ஜுனன் வில்லை ஒடித்து, பாஞ்சாலி கூந்தலை அறுத்துவிட்டு, கர்ணனுக்கு முடிசூட்டிவிட்டு, எல்லாவற்றுக்கும் மேலாக, நீ அஸ்தினாபுரத்துக்கு தூது போக முடியாமல் நான் உன்னைக் கட்டிப்போட்டால், போரை நிச்சயம் தடுக்கலாம்'' என்றான் சகாதேவன்.
     

  • January 23 – Rasi Palangal

    ஜனவரி 23 
    விளம்பி வருடம் – தை 9
    23-ஜன-2019 புதன்  
    சுபமுகூர்த்த நாள்(காலை 9.00 – 10.30)
    நல்ல நேரம்    :    9.00 – 10.30    
    ராகு    :    12.00 – 1.30    
    குளிகை    :    10.30 – 12.00
    எமகண்டம்    :    7.30 – 9.00                          
    திதி    :    திரிதியை          
    திதி நேரம்    :    துவிதியை    கா    7.06
    நட்சத்திரம்    :    மகம்    இ    1.15
    யோகம்    :    சித்த-அமிர்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    திருவோணம்,அவிட்டம்
    சூலம்    :    வடக்கு
    பரிகாரம்    :    பால்

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் –   முயற்சி 
    ரிஷபம் – நன்மை 
    மிதுனம் – பக்தி   
    கடனம் –  ஆரோக்கியம் 
    சிம்மம் – கோபம் 
    கன்னி – சிக்கல் 
    துலாம் –  பணிவு 
    விருச்சிகம் – நலம் 
    தனுசு – நட்பு
    மகரம் – கவலை
    கும்பம் – தெளிவு 
    மீனம் – உற்சாகம் 

  • Subramaniya Swamy Veedhi Ula

    திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய ஸ்வாமி திருக்கோயிலில் ஆண்டு ஒரு முறை. வீதி ஊர்வலம் வலம் வரும் இரண்டு உற்சவ முர்த்திகள்.

    ஆறு படை வீடுeளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய ஸ்வாமி திருக்கோயிலில் தைப்பூச திருநாளான இன்று திருக்கோயிலின் உபகோயிலான பழனியாண்டவர் திருக்கோயிலில் இன்று காலை சிறப்பு அபிஷேகம் அலங்காரத்துடன் தீபாராதனை நடைபெற்றது.

    இதனை தொடர்ந்து தைபூச சிறப்பு நிகழ்வாக பழனியாண்டவர் சன்னதி உற்சவர் முருகன் தெய்வானையுடனும், திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய ஸ்வாமி உற்சவர் சுப்பிரமணியர் – தெய்வானை ஆகிய இரு உற்சவர்களும் இணைந்து கோயிலில் இருந்து முக்கிய வீதிகளில் ஸ்வாமி வீதி உலா வருவது மிகவும் சிறப்பான நிகழ்வாகும் அதுவும் ஆண்டுக்கு  ஒரு முறை இரு உற்சவர்.  வீதி உலா நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
     

  • Palani Thai poosa therottam

    பழனியில் தைப்பூச தேரோட்டம், நிகழ்ச்சி விமர்சையாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில்  பக்தர்கள் பல்லாயிரக்கணக்கில் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். இந்நிகழ்ச்சியில் கோவில் ஆணையாளர் மற்றும் இணை ஆணையாளர் மற்றும் காவல்துறையினர் சிறப்பான முறையில் செயல்பட்டனர்.

  • January 22 – Rasi Palangal

    ஜனவரி 22
    விளம்பி வருடம் – தை 8
    22-ஜன-2019 செவ்வாய் 
    நல்ல நேரம்    :    7.30 – 9.00    
    ராகு    :    3.00 – 4.30    
    குளிகை    :    12.00 – 1.30
    எமகண்டம்    :    9.00 – 10.30                          
    திதி    :    துவிதியை          
    திதி நேரம்    :    பிரதமை    கா    9.27
    நட்சத்திரம்    :    ஆயில்யம்    இ    2.52
    யோகம்    :    சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    திருவோணம்
    சூலம்    :    வடக்கு
    பரிகாரம்    :    பால்

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் –   கவலை 
    ரிஷபம் – பயம் 
    மிதுனம் – கவனம்  
    கடனம் –  நற்செயல் 
    சிம்மம் – உயர்வு 
    கன்னி – அச்சம் 
    துலாம் –  போட்டி  
    விருச்சிகம் – அனுகூலம்  
    தனுசு – பக்தி
    மகரம் – குழப்பம்  
    கும்பம் – செலவு
    மீனம் – பாராட்டு