Category: அவசியம் படிக்க

அவசியம் படிக்க

  • Shakthi Peedangal thondriya varalaru

    சிவ பெருமான் சக்தியின் உடலை தூக்கி நடனம் ஆடி உடலை 51 பாகங்களாக துண்டுகளாக அகண்ட பாரதத்தில் வீழ்ந்த இடங்களே சக்தி பீடங்கள்!
    பிரம்ம புத்திரனான தட்சன் ஆயிரம் ஆண்டுகள் கடும் தவம் புரிந்து, சிவபெருமானிடம் 'பிரஜாபதி பட்டத்துடன், ஈரேழு உலகங்களை ஆளும் வல்லமையையும்' வரமாகப் பெற்றான்'. மேலும் ஜகன் மாதாவான அம்பிகையைப் புதல்வியாக அடையும் வரத்தையும் வேண்டிப் பெற்றான்.

    இப்படி எண்ணற்ற ஆண்டுகள் அனைத்து உலகங்களையும் ஆட்சி செலுத்திய மமதையால் அகங்காரம் மேலிட, தானே ஈஸ்வரன் என்று எண்ணத் துவங்கினான். தர்ம நெறிகளில் இருந்து முற்றிலும் விலகி செயல்படவும் துவங்கினான். வரமளித்த இறைவனிடமே குரோதம் கொண்டு, சிவபெருமானை அவமதிக்கும் பொருட்டு ஒரு யாகமும் தொடங்கினான்.

     

    ஹரித்வாரில் அமைந்துள்ள 'கனகல்' என்னும் தலத்தில் யாகம் தொடங்கப் பட்டது. அன்னை சதி தேவி தட்சனுக்கு அறிவு புகட்ட எண்ணி…. யாக சாலையில் தோன்றி அருள, தட்சனோ தேவியை அவமதித்ததோடு நில்லாமல் ஈசனையும் நிந்தித்துப் பேசினான். சிவ நிந்தனை பொறுக்காத அன்னை, ஹோம குண்டத்தில், யோகத் தீயினால் உடலை மாய்த்துக் கொண்டார்.
    இந்நிகழ்வுக்குப் பின், சிவபெருமானின் கோபத்தால் தட்சனும், அவன் யாக சாலையும், சர்வ நாசத்துக்கு உள்ளானதை சிவபுராணம் விரிவாகப் கூறுகிறது.

    சிவபெருமான், சதி தேவியின் திருவுடலைச் சுமந்த படி உக்கிர தாண்டவம் ஆடத் துவங்க, மகா பிரளயம் உருவாகும் அபாயம் தோன்றியது. ஸ்ரீமகா விஷ்ணு, சர்வேஸ்வரரை அமைதியுறச் செய்யும் பொருட்டு, தன் சுதர்சன சக்கிரத்தால் தேவியின் திருவுடலை பல்வேறு துண்டுகளாக அகண்ட இப்புவியில் சிதறும் வண்ணம் செய்தருள, அவை 51 சக்தி பீடங்களாக உருப்பெற்றன.
    இதோ 51 சக்தி பீடங்கள்.
    1 மூகாம்பிகை-கொல்லூர்-(அர்த்தநாரி பீடம்), கர்நாடகா
    2. காமாட்சி-காஞ்சிபுரம்-(காமகோடி பீடம்), தமிழ்நாடு
    3. மீனாட்சி-மதுரை-(மந்திரிணி பீடம்), தமிழ்நாடு
    4. விசாலாட்சி-காசி- (மணிகர்ணிகா பீடம்), உ.பி.
    5. சங்கரி-மகாகாளம்- (மகோத்பலா பீடம்), ம.பி.
    6. பர்வதவர்த்தினி-ராமேஸ்வரம்(சேது பீடம்), தமிழ்நாடு
    7. அகிலாண்டேஸ்வரி-திருவானைக்கா(ஞானபீடம்), தமிழ்நாடு
    8. அபீதகுஜாம்பாள்-திருவண்ணாமலை(அருணை பீடம்), தமிழ்நாடு
    9. கமலாம்பாள்-திருவாரூர்(கமலை பீடம்), தமிழ்நாடு
    10. பகவதி-கன்னியாகுமரி(குமரி பீடம்), தமிழ்நாடு
    11. மகாகாளி-உஜ்ஜையினி-(ருத்ராணி பீடம்), ம.பி.
    12. மங்களாம்பிகை-கும்பகோணம்-(விஷ்ணு சக்தி பீடம்), தமிழ்நாடு
    13. வைஷ்ணவி-ஜம்மு-(வைஷ்ணவி பீடம்), காஷ்மீர்
    14. நந்தா தேவி-விந்தியாசலம்- (விந்தியா பீடம்), மிர்ஜாப்பூர்
    15. பிரம்மராம்பாள்-ஸ்ரீ சைலம்-(சைல பீடம்), ஆந்திரா
    16. மார்க்கதாயினி-ருத்ரகோடி-(ருத்ரசக்தி பீடம்), இமாசலபிரதேஷ்.
    17. ஞானாம்பிகை-காளஹஸ்தி-(ஞான பீடம்), ஆந்திரா
    18. காமாக்யா-கவுகாத்தி-(காமகிரி பீடம்) அஸ்ஸாம்
    19. சம்புநாதேஸ்வரி-ஸ்ரீநகர்- (ஜ்வாலாமுகி பீடம்) காஷ்மீர்
    20. அபிராமி-திருக்கடையூர்-(கால பீடம்), தமிழ்நாடு
    21. பகவதி-கொடுங்கலூர்-(மகாசக்தி பீடம்), கேரளா
    22. மகாலட்சுமி-கோலாப்பூர்-(கரவீரபீடம்) மகாராஷ்டிரம்
    23. ஸ்தாணுபிரியை-குரு÷க்ஷத்ரம்-(உபதேசபீடம்)ஹரியானா
    24. மகாகாளி-திருவாலங்காடு-(காளி பீடம்) தமிழ்நாடு
    25. பிரதான காளி-கொல்கத்தா-(உத்ர சக்தி பீடம்) மேற்கு வங்காளம்
    26. பைரவி-பூரி- (பைரவி பீடம்) ஒரிசா
    27. மாணிக்காம்பாள்-திராக்ஷõராமா-(மாணிக்க பீடம்) ஆந்திரா
    28. அம்பாஜி-துவாரகை-, பத்ரகாளி- (சக்தி பீடம்) குஜராத்
    29. பராசக்தி-திருக்குற்றாலம்-(பராசக்தி பீடம்), தமிழ்நாடு
    30. முக்தி நாயகி-ஹஸ்தினாபுரம்(ஜெயந்தி பீடம்) ஹரியானா
    31. லலிதா-ஈங்கோய் மலை,குளித்தலை(சாயா பீடம்) தமிழ்நாடு
    32. காயத்ரி-ஆஜ்மீர் அருகில் புஷ்கரம்-(காயத்ரிபீடம்) ராஜஸ்தான்
    33. சந்திரபாகா-சோமநாதம்-(பிரபாஸா பீடம்) குஜராத்
    34. விமலை, உலகநாயகி-பாபநாசம்(விமலை பீடம்), தமிழ்நாடு
    35. காந்திமதி-திருநெல்வேலி-(காந்தி பீடம்), தமிழ்நாடு
    36. பிரம்மவித்யா-திருவெண்காடு-(பிரணவ பீடம்), தமிழ்நாடு
    37. தர்மசம்வர்த்தினி-திருவையாறு-(தர்ம பீடம்), தமிழ்நாடு
    38. திரிபுரசுந்தரி-திருவொற்றியூர்-(இஷீபீடம்), தமிழ்நாடு
    39. மகிஷமர்த்தினி-தேவிபட்டினம்-(வீரசக்தி பீடம்), தமிழ்நாடு
    40. நாகுலேஸ்வரி-நாகுலம் -(உட்டியாணபீடம்) இமாசல பிரதேசம்
    41. திரிபுர மாலினி-கூர்ஜரம் அருகில் ஜாலந்திரம் (ஜாலந்திர பீடம்) பஞ்சாப்
    42. திரியம்பக தேவி-திரியம்பகம்- (திரிகோணபீடம்) மகாராஷ்டிரம்
    43. சாமுண்டீஸ்வரி-மைசூர்-(சம்பப்பிரத பீடம்) கர்நாடகா
    44. ஸ்ரீலலிதா-பிரயாகை-(பிரயாகை பீடம்) இமாசலப்பிரதேசம்
    45. நீலாம்பிகை-சிம்லா-(சியாமள பீடம்) இமாசலப்பிரதேசம்
    46. பவானி-துளஜாபுரம்-(உத்பலா பீடம்) மகாராஷ்டிரா
    47. பவானி பசுபதி-காட்மாண்ட்-(சக்தி பீடம்) நேபாளம்
    48. மந்த்ரிணி-கயை- (திரிவேணிபீடம்) பீகார்
    49. பத்ரகர்ணி-கோகர்ணம்- (கர்ணபீடம்) கர்நாடகா
    50. விரஜை ஸ்தம்பேஸ்வரி-ஹஜ்uபூர்- (விரஜாபீடம்) உ.பி.
    51. தாட்சாயிணி-மானஸரோவர்-(தியாகபீடம்) திபெத்.
     

  • Ettram Tharum Egadasi Viradham

    அமாவாசை விரதம், பௌர்ணமி விரதம், சஷ்டி விரதம், சனிக்கிழமை விரதம், வெள்ளிக்கிழமை விரதம் என்று பல வகையான விரதங்கள் இருந்தாலும்,  ஏகாதசி விரதத்துக்கு தனித்துவமான மகத்துவம் உண்டு. ஏற்றம் தரும் ஏகாதசி விரதம்…எப்படி கடைப்பிடிப்பது?அதன் பலன்கள் என்ன என்பது பற்றி திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் பட்டாச்சார்யார் பார்த்தசாரதியிடம் பேசினோம்.

    ஏகாதசி

    ''எத்தனை விரதங்கள் இருந்தாலும், அத்தனை விரதங்களும் ஏகாதசி விரதத்துக்கு நிகராகாது. மிகவும் சிறப்பு வாய்ந்த இந்த விரதத்தை இன்று பலரும் மேற்கொள்வதில்லை.  ஏகாதசி விரதத்தின் மகிமையை முதலில் அறிந்துகொள்வோம். 

    திருப்பாற்கடலைக் கடைந்து அமுதம் எடுக்க, தேவர்களும் அசுரர்களும் அயராது பாடுபட்டனர். அப்போது ஏகாதசித் திருநாளில் அமிர்தம் வெளிப்பட்டது. அந்த அமிர்தத்தை மறுநாள் துவாதசியன்று தேவர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டது. 

    எனவே, ஏகாதசியன்று விரதம் அனுஷ்டிப்பது மிகவும் உத்தமமானது. அன்று முழுவதும் உண்ணாமல் விரதம் இருக்கவேண்டும். இரவிலும் உறங்காமல் விழித்திருந்து, பகவான் மகா விஷ்ணுவின் திருநாமங்களை ஜபித்தபடி பகவானை வழிபடவேண்டும். இந்த விரதத்தை அனுஷ்டித்தால், இந்தப் பிறவியில் நோயற்ற வாழ்க்கை, குறைவற்ற செல்வம், அன்பான பிள்ளைகள் மற்றும் நீடித்த புகழ் அனைத்தையும் இறைவன் அருள்புரிவார். மறுமையில் வைகுண்ட வாசத்தையும் இறைவன் அருள்கிறார்.

    ஏகாதசி விரதம்:

    ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பதால், மனித மனத்தின் மும்மலங்களான கோபம், குரோதம், மாச்சர்யங்கள் விலகி எண்ணங்கள் தூய்மை அடையும். இப்பிறவியில் நாம் செய்த பாவங்கள் விலகி, ஏற்றம் தரும் வகையிலான  இனிய வாழ்க்கை அமையும். மனதை ஒருநிலைப்படுத்தி முழுநாளும் உபவாசமிருப்பது மிகவும் விசேஷமானது. 'ஏகாந்தத்தில் பேச்சின்றி ஏகாதசியில் வசி; ஏகாம்பர அருளமுதம் புசி' என்பது ஆன்றோர்களின் அருள்வாக்கு.

    ஏகாதசி உபவாசம் இருப்பது, இந்த ஜன்மாவை நமக்குக் கொடுத்த பரம்பொருளுக்கு, நாம் செலுத்தும் நன்றிக் காணிக்கை என்றே தர்மசாஸ்திரம் உரைக்கிறது. எனவே இந்த நாளில், விருந்து, கேளிக்கை போன்றவற்றில் கலந்து கொள்ளாமல் இருப்பது நல்லது. ஒவ்வொரு மாதமும் இரண்டு ஏகாதசிகள் வருகின்றன. ஓராண்டில் மொத்தம் 25 ஏகாதசிகள் வரும். 

    விரதத்தை எப்படி அனுசரிப்பது?

    ஏகாதசி  திருநாளில்  அதிகாலையில் எழுந்து குளித்து,  தினந்தோறும் செய்யும் பூஜைகள் மற்றும் அனுஷ்டானங்களை நிறைவேற்றிவிட்டு, மகாவிஷ்ணுவை மனதில் இருத்தி வழிபட வேண்டும். அன்று முழுவதும் உண்ணாநோன்பு இருப்பது நல்லது.  பார்த்தசாரதி பட்டாச்சார்யார்அவ்வப்போது தாகசாந்திக்காக தண்ணீர் குடிக்கலாம்.

    உடல் நலம் குறைவாக இருப்பவர்கள், சுவாமிக்கு நிவேதனம் செய்யப்பட்ட பழங்களை மட்டும் சாப்பிடலாம்.  விரதத்தை அனுஷ்டிக்கும்போது குளிர்ந்த நீர் குடிக்கத் தடையில்லை.  மழை மாதங்கள், குளிர்மிக்க மாதங்களில் ஏழு முறை துளசி இலை சாப்பிடலாம். உடலுக்கு வெப்பம் கிடைக்க துளசி உதவியாக இருக்கும். விரதமிருப்பதால்,  ஜீரண உறுப்புகளுக்கு ஓய்வு கிடைக்கிறது. குளிர்ந்த நீர் வயிற்றைச் சுத்தமாக்குகிறது.

    பகலிலும் சரி, இரவிலும் சரி தூங்காமல் கண் விழித்து இறைச் சிந்தனையுடன் இருக்க வேண்டும். அப்போது எம்பெருமானைக் குறித்த கதைகள், பாடல்கள் ஆகியவற்றைப் படிக்கலாம், பாடலாம், மற்றவர்கள் சொல்லக் கேட்கலாம். 

    மறுநாள் துவாதசியன்று  காலையில்  பூஜைகளை முடித்து விட்டு,  விருந்தினருக்கு அன்னம் ஏழைகளுக்கு அன்னதானம் அளித்து, அகத்திக் கீரை, நெல்லிக்கனி, சுண்டைக்காய் ஆகியவற்றுடன்  உணவருந்த வேண்டும். அன்றும் ஒருவேளை மட்டுமே உணவருந்த வேண்டும். இரவு பழங்கள் அல்லது டிபன் சாப்பிட்டு விரதம் முடிக்கலாம்'
     

  • Pazhani Murugan Koil Therottam

    பழநி கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் கொண்டாடப்படும் முக்கிய திருவிழாக்களில் ஒன்று தைப்பூசம். 10 நாட்கள் நடைபெறும் இத்திருவிழா நேற்று காலை 10.30 மணிக்கு மணிக்கு மீன லக்னத்தில் கிழக்கு ரத வீதியில் உள்ள பெரியநாயகி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் துவங்கியது. 

    கொடியேற்றத்தையொட்டி விநாயகர், வள்ளி-தெய்வானை சமேதரரான முத்துக்குமாரசுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடந்தது. கொடிக்கம்பம் முன்பு மத்தளம் போன்ற வாத்திய தெய்வங்களுக்கு சிறப்பு பூஜை நடந்தது. வளர்பிறை நிலவு, சூரியன், சேவல், மயில், வேல் மற்றும் பூஜை பொருட்கள் பொறிக்கப்பட்ட மஞ்சள் நிறத்திலான கொடிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. கோயில் உட்பிரகாரத்தில் கொடி சுற்றி வரப்பட்டது. 

    இதனைத்தொடர்ந்து பக்தர்களின் அரோகரா கோஷம் முழங்க கொடியேற்றப்பட்டது.  திருவிழா நடைபெறும் 10 நாட்களும் வள்ளி-தெய்வானை சமேதரராய் முத்துக்குமாரசுவாமி தந்தப்பல்லக்கு, வெள்ளி ஆட்டுக்கிடா, வெள்ளிக்காமதேனு, வெள்ளி யானை, தங்கக்குதிரை உள்ளிட்ட வாகனங்களில் ரதவீதிகளில் உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 

    முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் வரும் 20ம் தேதி இரவு 7.45 மணிக்கு மேல் சிம்ம லக்னத்தில் நடக்க உள்ளது. தைப்பூச தேரோட்டம் 21ம் தேதி நடக்க உள்ளது. தைப்பூச திருவிழா காரணமாக 19ம் தேதி முதல் 23ம் தேதி வரை மலைக்கோயிலில் தங்கரத புறப்பாடு நிறுத்தப்பட்டுள்ளது. 24ம் தேதி வழக்கம்போல் தங்கரத புறப்பாடு நடைபெறுகிறது.

  • Kumbakonnam Sarangapani koil vedio

    கும்பகோணம் சாரங்கபாணி கோவில் 108 திவ்ய தேசங்களில் திருவரங்கம் திருப்பதி அடுத்து மூன்றாவது தலமாக போற்றப்படுகிறது. இத்தகைய பெருமை பெற்ற சாரங்கபாணிசுவாமி கோயிலில் ஆண்டுதோறும் சங்கரமண பிரம்மோற்சவம் பத்து நாட்களுக்கு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். விழாவின் முக்கிய நிகழ்வான தட்சிணாயவாயில் மூடப்பட்டு, உத்ராயணவாயில் திறக்கப்படும் அற்புதமான காட்சிகள்…. 

  • January 17 – Rasi Palangal

    ஜனவரி 17
    விளம்பி வருடம் – தை 3
    உழவர் நாள்
    17-ஜன-2019 வியாழன் 
    கரிநாள்
    நல்ல நேரம்    :    10.30 – 12.00    
    ராகு    :    1.30 – 3.00    
    குளிகை    :    9.00 – 10.30
    எமகண்டம்    :    6.00 – 7.30                          
    திதி    :    ஏகாதசி          
    திதி நேரம்    :    ஏகாதசி    மா    6.55
    நட்சத்திரம்    :    கார்த்திகை    கா    10.17
    யோகம்    :    மரண யோகம்
    சந்திராஷ்டமம்    :    அனுஷம்
    சூலம்    :    தெற்கு
    பரிகாரம்    :    தைலம்

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் –   அமைதி 
    ரிஷபம் – நன்மை 
    மிதுனம் – மேன்மை    
    கடனம் –  வெற்றி 
    சிம்மம் – புகழ் 
    கன்னி – செலவு 
    துலாம் –  உயர்வு 
    விருச்சிகம் – போட்டி 
    தனுசு – இன்பம் 
    மகரம் – நட்பு 
    கும்பம் – உழைப்பு 
    மீனம் – ஜெயம் 

  • Vinayakarai Vazhi padum pothu

    விநாயகரை விழிபடும் போது தலையில் குட்டிக்கொள்வது ஏன் என்பது தெரியுமா?

    அகத்தியர் வடநாட்டில் இருந்து தென்இந்திய நாட்டிற்கு வந்து கொண்டிருந்த போது அவர் கமண்டலத்தில் கொண்டு வந்த கங்கை நதி நீரை காகம் வடிவில் வந்து விநாயகர் கவிழ்த்தார்.

    பின்னர் அந்தணச் சிறுவன் வடிவில் விநாயகர் அகத்தியர் முன் வந்து நின்றார். கோபம் கொண்ட அகத்தியர் விநாயகரின் தலையில் குட்டினார்.

    அப்போது விநாயகர் சுயரூபம் எடுத்து உலக நன்மை காக்க காவிரியை உருவாக்க அப்படி செய்ததாகக் கூறினார்.

    தன் தவறுக்கு வருந்திய அகத்தியர் தன் தலையிலேயே குட்டிக் கொண்டார். அன்று முதல் விநாயகர் வழிப்பாட்டில் தலையில் குட்டிக்கொள்ளும் வழக்கம் வந்தது.

    நெற்றியின் இரு பொட்டுகளிலும் குட்டிக்கொள்வதால் மூளையில் உள்ள பிட்யூட்டரி சுரப்பி நன்கு சுரக்கும்.
     

  • Money Money Money

    இந்த உலகில் யாருக்குத்தான் பணம் தேவையில்லை. பணம் என்றால் பிணம் கூட வாயைப் பிழைக்கும் என்பார்கள். ஆனால் அப்படியெல்லாம் பேராசை இல்லை. இருந்தாலும் என்ன செய்தாலும் கையில் பணம் மிஞ்சவில்லை. ஓடி ஓடி உழைத்தாலும் தேடிய பணம் சிக்கவில்லை. எதிர்பாராமல் ஏகப்பட்ட பணம் கிடைக்காதா என்ற ஏக்கம் எல்லாருக்குமே இருக்கிறது.

    அப்படிப்பட்டவர்களுக்கு பணம் வந்து குவிவதற்கு ஒரு மந்திரம் உள்ளது. இந்த மந்திரத்தைச் சொன்னால் நீண்டநாள் வராமல் உள்ள பணம்கூட எளிதில் வந்துவிட வாய்ப்புள்ளது.

    செவ்வாய் வெறும்வாய் என்ற சொலவடை உண்டு. ஆனால் இந்த சூட்சும மந்திரத்தை செவ்வாய்க்கிழமை மதியம் 3.30- 4.30க்குள் ஜெபிக்க வேண்டும். அதுவும் வடக்கு திசைப்பக்கமாக அமர்ந்து சொல்ல வேண்டும்.

    மந்திரம்:

    ஓம் ரீங் வசி வசி
    தனம் பணம் தினம் தினம்
    இதை ஜெபிக்கும்போது நேரே நிமிர்ந்து அமர்ந்திருக்க வேண்டும். முதுகுத்தண்டு நேராக இருக்க வேண்டும். கண்களை மூடிக்கொண்டு மனதார ஆழ்ந்து நம்பிக்கையுடன் ஜெபிக்க வேண்டும்.

    நிச்சயமாக உங்களை வந்தடைய வேண்டிய பணம் வரும். செல்வம் கைகூடும். உங்கள் காரியம் சித்தியடைய வேண்டும் என்றால் இந்த மந்திரத்தை ஓதிய பிறகு பெரிய நெல்லிக்காய் ஒன்றை கடித்துச் சாப்பிடவேண்டும். அதன் சுவையில் அறுசுவையும் கலந்திருப்பதால் அனைத்து வளங்களும் உங்களை வந்தடையும்.
     

  • Devaram Padal Petra Sivalayangal

    274 பாடல் பெற்ற சிவாலங்களை இங்கு காணலாம்… எந்த மாவட்டத்தில் எந்த சிவன் கோயில் பாடல் பெற்றது என விவரமாக தரப்பட்டுள்ளது..

    சென்னை மாவட்டம்….
    வடதிருமுல்லைவாயில் மாசிலாமணீஸ்வரர் திருக்கோயில், சென்னை
    பாடி, திருவலிதாயம் திருவல்லீஸ்வரர் திருக்கோயில், சென்னை
    மயிலாப்பூர் கபாலீஸ்வரர் திருக்கோயில், சென்னை
    திருவான்மியூர் மருந்தீஸ்வரர் திருக்கோயில், சென்னை
    கடலூர் மாவட்டம்:
    சிதம்பரம் சிதம்பரம் தில்லை நடராஜர் திருக்கோயில், கடலூர்
    திருவேட்களம் பாசுபதேஸ்வரர் திருக்கோயில், கடலூர்
    சிவபுரி உச்சிநாதர் திருக்கோயில், கடலூர்
    திருக்கழிப்பாலை பால்வண்ணநாதர் திருக்கோயில், கடலூர்
    ஓமாம்புலியூர் பிரணவ வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயில், கடலூர்
    கானாட்டம்புலியூர் பதஞ்சலீஸ்வரர் திருக்கோயில், கடலூர்
    திருநாரையூர் சவுந்தர்யேஸ்வரர் திருக்கோயில், கடலூர்
    மேலக்கடம்பூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில், கடலூர்
    விருத்தாச்சலம் விருத்தகிரீஸ்வரர் திருக்கோயில், கடலூர்
    திருவட்டத்துறை தீர்த்தபுரீஸ்வரர் திருக்கோயில், கடலூர்
    பெண்ணாடம் பிரளயகாலேஸ்வரர் திருக்கோயில், கடலூர்
    திருக்கூடலையாற்றூர். வல்லபேஸ்வரர் திருக்கோயில், கடலூர்
    இராஜேந்திர பட்டினம் சுவேதாரண்யேஸ்வரர் திருக்கோயில், கடலூர்
    தீர்த்தனகிரி சிவக்கொழுந்தீஸ்வரர் திருக்கோயில், கடலூர்
    திருச்சோபுரம் மங்களபுரீஸ்வரர் திருக்கோயில், கடலூர்
    திருவதிகை வீரட்டானேஸ்வரர் திருக்கோயில், கடலூர்
    திருத்தளூர் சிஷ்டகுருநாதேஸ்வரர் திருக்கோயில், கடலூர்
    திருமாணிக்குழி வாமனபுரீஸ்வரர் திருக்கோயில், கடலூர்
    திருப்பாதிரிபுலியூர் பாடலீஸ்வரர் திருக்கோயில், கடலூர்
    நாகப்பட்டினம் மாவட்டம்:
    ஆச்சாள்புரம் சிவலோகத்தியாகர் திருக்கோயில், நாகப்பட்டினம்
    மகேந்திரப் பள்ளி திருமேனியழகர் திருக்கோயில், நாகப்பட்டினம்
    திருமுல்லைவாசல் முல்லைவன நாதர் திருக்கோயில், நாகப்பட்டினம்
    அன்னப்பன்பேட்டை சுந்தரேஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்
    சாயாவனம் சாயாவனேஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்
    பூம்புகார் பல்லவனேஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்
    திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்
    திருக்காட்டுப்பள்ளி ஆரண்யேஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்
    திருக்குருகாவூர் வெள்ளடைநாதர் திருக்கோயில், நாகப்பட்டினம்
    சீர்காழி சட்டைநாதர் திருக்கோயில், நாகப்பட்டினம்
    திருக்கோலக்கா சப்தபுரீஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்
    வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதர் திருக்கோயில், நாகப்பட்டினம்
    குறுமாணக்குடி கண்ணாயிரமுடையார் திருக்கோயில், நாகப்பட்டினம்
    கீழையூர் கடைமுடிநாதர் திருக்கோயில், நாகப்பட்டினம்
    திருநின்றியூர் மகாலட்சுமீஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்
    திருப்புன்கூர் சிவலோகநாதர் திருக்கோயில், நாகப்பட்டினம்
    நீடூர் சோமநாதர் திருக்கோயில், நாகப்பட்டினம்
    பொன்னூர் ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்
    திருவேள்விக்குடி கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்
    மேலத்திருமணஞ்சேரி ஐராவதேஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்
    திருமணஞ்சேரி உத்வாகநாதர் சுவாமி திருக்கோயில், நாகப்பட்டினம்
    கொருக்கை வீரட்டேஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்
    தலைஞாயிறு குற்றம் பொறுத்த நாதர் திருக்கோயில், நாகப்பட்டினம்
    திருக்குரக்கா குந்தளேஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்
    திருவாளப்புத்தூர் மாணிக்கவண்ணர் திருக்கோயில், நாகப்பட்டினம்
    இலுப்பைபட்டு நீலகண்டேஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்
    மயிலாடுதுறை மாயூரநாதர் திருக்கோயில், நாகப்பட்டினம்
    திருவிளநகர் உச்சிரவனேஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்
    கீழப்பரசலூர் வீரட்டேஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்
    செம்பொனார்கோவில் சுவர்ணபுரீஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்
    புஞ்சை நற்றுணையப்பர் திருக்கோயில், நாகப்பட்டினம்
    மேலப்பெரும்பள்ளம் வலம்புரநாதர் திருக்கோயில், நாகப்பட்டினம்
    தலைச்சங்காடு சங்காரண்யேஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்
    ஆக்கூர் தான்தோன்றீஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்
    திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்
    திருமயானம் பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்
    திருவைகல் வைகல்நாதர் திருக்கோயில், நாகப்பட்டினம்
    கோனேரிராஜபுரம் உமாமகேஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்
    திருவாவடுதுறை கோமுக்தீஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்
    தேரழுந்தூர் வேதபுரீஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்
    குத்தாலம் உத்தவேதீஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்
    திருப்பயத்தங்குடி திருப்பயற்றுநாதர் திருக்கோயில், நாகப்பட்டினம்
    திருமருகல் ரத்தினகிரீஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்
    சீயாத்தமங்கை அயவந்தீஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்
    நாகப்பட்டினம் காயாரோகணேஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்
    சிக்கல் நவநீதேஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்
    திருப்புகலூர் அக்னிபுரீஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்
    வலிவலம் மனத்துணைநாதர் திருக்கோயில், நாகப்பட்டினம்
    திருக்குவளை பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்
    திருவாய்மூர் வாய்மூர்நாதர் திருக்கோயில், நாகப்பட்டினம்
    வேதாரண்யம் திருமறைக்காடர் திருக்கோயில், நாகப்பட்டினம்
    அகஸ்தியன் பள்ளி அகத்தீஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்
    கோடியக்காடு கோடிக்குழகர் திருக்கோயில், நாகப்பட்டினம்
    தஞ்சாவூர் மாவட்டம்:
    பந்தநல்லூர் பசுபதீஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
    கஞ்சனூர் அக்னீஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
    திருக்கோடிக்காவல் கோடீஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
    திருமங்கலக்குடி பிராணநாதேஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
    திருப்பனந்தாள் அருணஜடேசுவரர் திருக்கோயில், தஞ்சாவூர்
    திருவாய்பாடி பாலுகந்தநாதர் திருக்கோயில், தஞ்சாவூர்
    சேங்கனூர் சத்தியகிரீஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
    திருந்துதேவன்குடி கற்கடேஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
    திருவிசநல்லூர் யோகநந்தீஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
    கொட்டையூர் கோடீஸ்வரர், கைலாசநாதர் திருக்கோயில், தஞ்சாவூர்
    இன்னம்பூர் எழுத்தறிநாதர் திருக்கோயில், தஞ்சாவூர்
    திருப்புறம்பியம் சாட்சிநாதேஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
    திருவிஜயமங்கை விஜயநாதேஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
    திருவைகாவூர் வில்வவனேசுவரர் திருக்கோயில், தஞ்சாவூர்
    வடகுரங்காடுதுறை தயாநிதீஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
    திருப்பழனம் ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
    திருவையாறு ஐயாறப்பன் திருக்கோயில், தஞ்சாவூர்
    தில்லைஸ்தானம் நெய்யாடியப்பர் திருக்கோயில், தஞ்சாவூர்
    திருப்பெரும்புலியூர் வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
    திருக்கானூர் செம்மேனிநாதர் திருக்கோயில், தஞ்சாவூர்
    திருக்காட்டுப்பள்ளி அக்னீஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
    திருவாலம் பொழில் ஆத்மநாதேஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
    மேலைத்திருப்பூந்துருத்தி புஷ்பவனேஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
    கண்டியூர், பிரம்மசிரகண்டீஸ்வர் திருக்கோயில், தஞ்சாவூர்
    திருச்சோற்றுத்துறை சோற்றுத்துறை நாதர் திருக்கோயில், தஞ்சாவூர்
    திருவேதிகுடி வேதபுரீஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
    தென்குடித்திட்டை வசிஷ்டேஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
    பசுபதிகோயில் பசுபதீஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
    சக்கரப்பள்ளி சக்கரவாகேஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
    திருக்கருகாவூர் முல்லைவனநாதர் திருக்கோயில், தஞ்சாவூர்
    பாபநாசம் பாலைவனேஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
    நல்லூர் பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
    ஆவூர் (கோவந்தகுடி) பசுபதீஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
    திருச்சத்தி முற்றம் சிவக்கொழுந்தீசர் திருக்கோயில், தஞ்சாவூர்
    பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
    கீழபழையாறை வடதளி சோமேசர் திருக்கோயில், தஞ்சாவூர்
    திருவலஞ்சுழி திருவலஞ்சுழிநாதர் திருக்கோயில், தஞ்சாவூர்
    கும்பகோணம் கும்பேஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
    கும்பகோணம் நாகேஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
    கும்பகோணம் சோமேஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
    திருநாகேஸ்வரம் நாகேஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
    திருவிடைமருதூர் மகாலிங்கம் திருக்கோயில், தஞ்சாவூர்
    ஆடுதுறை ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
    திருநீலக்குடி நீலகண்டேஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
    திருக்கோழம்பியம் கோகிலேஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
    திருப்பந்துறை சிவானந்தேஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
    திருநறையூர் சித்தநாதேஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
    அழகாபுத்தூர் படிக்காசுநாதர் திருக்கோயில், தஞ்சாவூர்
    சிவபுரம் சிவகுருநாதர் திருக்கோயில், தஞ்சாவூர்
    சாக்கோட்டை அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
    கருக்குடி சற்குணலிங்கேஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
    பரிதியப்பர்கோவில் பாஸ்கரேஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
    ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
    திருச்சேறை சாரபரமேஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
    திருமெய்ஞானம் ஞானபரமேஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
    அரியலூர் மாவட்டம்:
    திருமழபாடி வைத்தியநாதர் திருக்கோயில், அரியலூர்
    கீழப்பழுவூர் ஆலந்துறையார் திருக்கோயில், அரியலூர்
    திருச்சிராப்பள்ளி மாவட்டம்:
    அன்பில் சத்தியவாகீஸ்வரர் திருக்கோயில், திருச்சி
    மாந்துறை ஆம்ரவனேஸ்வரர் திருக்கோயில், திருச்சி
    திருப்பாற்றுறை ஆதிமூலேஸ்வரர் திருக்கோயில், திருச்சி
    திருவானைக்கா ஜம்புகேஸ்வரர் திருக்கோயில், திருச்சி
    திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேஸ்வரர் திருக்கோயில், திருச்சி
    திருவாசி மாற்றுரைவரதீஸ்வரர் திருக்கோயில், திருச்சி
    ஈங்கோய்மலை மரகதாசலேஸ்வரர் திருக்கோயில், திருச்சி
    திருப்பராய்த்துறை பராய்த்துறைநாதர் திருக்கோயில், திருச்சி
    உய்யக்கொண்டான் மலை உஜ்ஜீவநாதர் திருக்கோயில், திருச்சி
    உறையூர் பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோயில், திருச்சி
    திருச்சி தாயுமானவர் திருக்கோயில், திருச்சி
    திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் திருக்கோயில், திருச்சி
    திருநெடுங்குளம் நெடுங்களநாதர் திருக்கோயில், திருச்சி
    கரூர் மாவட்டம்:
    அய்யர் மலை ரத்தினகிரீஸ்வரர் திருக்கோயில், கரூர்
    குளித்தலை கடம்பவனேஸ்வரர் திருக்கோயில், கரூர்
    கரூர் கல்யாணபசுபதீஸ்வரர் திருக்கோயில், கரூர்
    வெஞ்சமாங்கூடலூர் கல்யாண விகிர்தீஸ்வரர் திருக்கோயில், கரூர்
    திருவாரூர் மாவட்டம்:
    திருக்கொட்டாரம் ஐராவதீஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்
    அம்பர், அம்பல் பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்
    திருமாகாளம் மகாகாளநாதர் திருக்கோயில், திருவாரூர்
    திருமீயச்சூர் மேகநாதர் திருக்கோயில், திருவாரூர்
    திருமீயச்சூர் இளங்கோயில் சகலபுவனேஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்
    சிதலப்பதி முக்தீஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்
    திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்
    செருகுடி சூஷ்மபுரீஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்
    திருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்
    அன்னியூர் அக்னிபுரீஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்
    கருவேலி சற்குணேஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்
    ஸ்ரீ வாஞ்சியம் வாஞ்சிநாதர் திருக்கோயில், திருவாரூர்
    நன்னிலம் மதுவனேஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்
    திருக்கொண்டீஸ்வரம் பசுபதீஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்
    திருப்பனையூர் சவுந்தரேஸ்வர் திருக்கோயில், திருவாரூர்
    திருவிற்குடி வீரட்டானேஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்
    திருப்புகலூர் வர்த்தமானீஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்
    திருக்கண்ணபுரம் ராமநாதர் திருக்கோயில், திருவாரூர்
    திருச்செங்காட்டங்குடி உத்திராபசுபதீஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்
    கீழ்வேளூர் கேடிலியப்பர் திருக்கோயில், திருவாரூர்
    தேவூர் தேவபுரீஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்
    திருப்பள்ளி முக்கூடல் திருநேத்திரநாதர் திருக்கோயில், திருவாரூர்
    திருவாரூர் தியாகராஜர் திருக்கோயில், திருவாரூர்
    ஆருர் அரநெறி அசலேஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்
    தூவாநாயனார் கோயில் தூவாய் நாதர் திருக்கோயில், திருவாரூர்
    விளமல் பதஞ்சலி மனோகரர் திருக்கோயில், திருவாரூர்
    கரைவீரம் கரவீரநாதர் (பிரம்மபுரீஸ்வரர்) திருக்கோயில், திருவாரூர்
    மணக்கால்ஐயம்பேட்டை அபிமுக்தீஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்
    திருத்தலையாலங்காடு நர்த்தனபுரீஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்
    குடவாசல் கோணேஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்
    ஆண்டான்கோவில் சொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்
    அரித்துவாரமங்கலம் பாதாளேஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்
    அவளிவணல்லூர் சாட்சிநாதர் திருக்கோயில், திருவாரூர்
    கோயில்வெண்ணி வெண்ணிகரும்பேஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்
    பூவனூர் சதுரங்க வல்லபநாதர் திருக்கோயில், திருவாரூர்
    பாமணி நாகநாதர் திருக்கோயில், திருவாரூர்
    திருக்களர் பாரிஜாதவனேஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்
    சித்தாய்மூர் பொன்வைத்தநாதர் திருக்கோயில், திருவாரூர்
    கோவிலூர் மந்திரபுரீஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்
    இடும்பாவனம் சற்குணநாதர் திருக்கோயில், திருவாரூர்
    கற்பகநாதர்குளம் கற்பகநாதர் திருக்கோயில், திருவாரூர்
    தண்டலச்சேரி நீள்நெறிநாதர் திருக்கோயில், திருவாரூர்
    கோட்டூர் கொழுந்தீஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்
    திருவண்டுதுறை வண்டுறைநாதர் திருக்கோயில், திருவாரூர்
    திருக்கொள்ளம்புதூர் வில்வாரண்யேஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்
    ஓகைப்பேரையூர் ஜகதீஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்
    திருக்கொள்ளிக்காடு அக்னீஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்
    திருத்தங்கூர் வெள்ளிமலைநாதர் திருக்கோயில், திருவாரூர்
    திருநெல்லிக்கா நெல்லிவனநாதர் திருக்கோயில், திருவாரூர்
    திருநாட்டியத்தான்குடி ரத்தினபுரீஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்
    திருக்காரவாசல் கண்ணாயிரநாதர் திருக்கோயில், திருவாரூர்
    கோயில் கண்ணாப்பூர் நடுதறியப்பர் திருக்கோயில், திருவாரூர்
    கச்சனம் கைச்சின்னேஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்
    திருவிடைவாசல் புண்ணியகோடியப்பர் திருக்கோயில், திருவாரூர்
    மதுரை மாவட்டம்:
    மதுரை சுந்தரேஸ்வரர் (மீனாட்சி) திருக்கோயில், மதுரை
    செல்லூர், மதுரை திருவாப்புடையார் திருக்கோயில், மதுரை
    திருப்பரங்குன்றம் சத்தியகிரீஸ்வரர் திருக்கோயில், மதுரை
    திருவேடகம் ஏடகநாதர் திருக்கோயில், மதுரை
    சிவகங்கை மாவட்டம்:
    பிரான்மலை கொடுங்குன்றநாதர் திருக்கோயில், சிவகங்கை
    திருப்புத்தூர் திருத்தளிநாதர் திருக்கோயில், சிவகங்கை
    திருப்புவனம் புஷ்பவனேஸ்வரர் திருக்கோயில், சிவகங்கை
    காளையார் கோவில் சொர்ணகாளீஸ்வரர் திருக்கோயில், சிவகங்கை
    புதுக்கோட்டை மாவட்டம்:
    திருப்புனவாசல் விருத்தபுரீஸ்வரர் திருக்கோயில், புதுக்கோட்டை
    ராமநாதபுரம் மாவட்டம்:
    ராமேஸ்வரம் ராமநாதர் திருக்கோயில், ராமநாதபுரம்
    திருவாடானை ஆதிரத்தினேஸ்வரர் திருக்கோயில், ராமநாதபுரம்
    விருதுநகர் மாவட்டம்:
    திருச்சுழி திருமேனிநாதர் திருக்கோயில், விருதுநகர்
    திருநெல்வேலி மாவட்டம்:
    குற்றாலம் குற்றாலநாதர் திருக்கோயில், திருநெல்வேலி
    திருநெல்வேலி நெல்லையப்பர் திருக்கோயில், திருநெல்வேலி
    திருப்பூர் மாவட்டம்:
    அவிநாசி அவிநாசியப்பர் திருக்கோயில், திருப்பூர்
    திருமுருகன்பூண்டி திருமுருகநாதர் திருக்கோயில், திருப்பூர்
    ஈரோடு மாவட்டம்:
    பவானி சங்கமேஸ்வரர் திருக்கோயில், ஈரோடு
    கொடுமுடி மகுடேஸ்வரர் திருக்கோயில், ஈரோடு
    நாமக்கல் மாவட்டம்:
    திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில், நாமக்கல்
    விழுப்புரம் மாவட்டம்:
    நெய்வணை சொர்ணகடேஸ்வரர் திருக்கோயில், விழுப்புரம்
    திருக்கோவிலூர் வீரட்டேஸ்வரர் திருக்கோயில், விழுப்புரம்
    அறகண்டநல்லூர் அதுல்யநாதேஸ்வரர் திருக்கோயில், விழுப்புரம்
    டி. இடையாறு மருந்தீசர் திருக்கோயில், விழுப்புரம்
    திருவெண்ணெய்நல்லூர் கிருபாபுரீஸ்வரர் திருக்கோயில், விழுப்புரம்
    கிராமம் சிவலோகநாதர் திருக்கோயில், விழுப்புரம்
    பனையபுரம் பனங்காட்டீஸ்வரர் திருக்கோயில், விழுப்புரம்
    திருவாமத்தூர் அபிராமேஸ்வரர் திருக்கோயில், விழுப்புரம்
    திருவக்கரை சந்திரமவுலீஸ்வரர் திருக்கோயில், விழுப்புரம்
    ஒழிந்தியாம்பட்டு அரசலீஸ்வரர் திருக்கோயில், விழுப்புரம்
    இரும்பை மகாகாளேஸ்வரர் திருக்கோயில், விழுப்புரம்
    கிளியனூர் அகஸ்தீஸ்வரர் திருக்கோயில், விழுப்புரம்
    திருநாவலூர் பக்தஜனேஸ்வரர் திருக்கோயில், விழுப்புரம்
    திருவண்ணாமலை மாவட்டம்:
    திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில், திருவண்ணாமலை
    செய்யாறு வேதபுரீஸ்வரர் திருக்கோயில், திருவண்ணாமலை
    திருப்பனங்காடு தாளபுரீஸ்வரர் திருக்கோயில், திருவண்ணாமலை
    குரங்கணில்முட்டம் வாலீஸ்வரர் திருக்கோயில், திருவண்ணாமலை
    காஞ்சிபுரம் மாவட்டம்:
    காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோயில், காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் திருமேற்றளீஸ்வரர் திருக்கோயில், காஞ்சிபுரம்
    ஓணகாந்தன்தளி ஓணகாந்தேஸ்வரர் திருக்கோயில், காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் கச்சிஅனேகதங்காவதேஸ்வரர் திருக்கோயில், காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் சத்யநாதர் திருக்கோயில், காஞ்சிபுரம்
    திருமாகறல் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில், காஞ்சிபுரம்
    எலுமியன்கோட்டூர் தெய்வநாயகேஸ்வரர் திருக்கோயில், காஞ்சிபுரம்
    திருவேற்காடு வேதபுரீஸ்வரர் திருக்கோயில், காஞ்சிபுரம்
    திருக்கச்சூர் கச்சபேஸ்வரர், மருந்தீஸ்வரர், திருக்கோயில், காஞ்சிபுரம்
    திருவடிசூலம் ஞானபுரீஸ்வரர் திருக்கோயில், காஞ்சிபுரம்
    திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரர் திருக்கோயில், காஞ்சிபுரம்
    அச்சிறுபாக்கம் ஆட்சீஸ்வரர் திருக்கோயில், காஞ்சிபுரம்
    வேலூர் மாவட்டம்:
    திருவல்லம் வில்வநாதேஸ்வரர் திருக்கோயில், வேலூர்
    திருமால்பூர் மணிகண்டீஸ்வரர் திருக்கோயில், வேலூர்
    தக்கோலம் ஜலநாதீஸ்வரர் திருக்கோயில், வேலூர்
    திருவள்ளூர் மாவட்டம்:
    கூவம் திரிபுராந்தகர் திருக்கோயில், திருவள்ளூர்
    திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் திருக்கோயில், திருவள்ளூர்
    திருப்பாசூர் வாசீஸ்வரர் திருக்கோயில்,
    பூண்டி ஊன்றீஸ்வரர் திருக்கோயில், திருவள்ளூர்
    திருக்கண்டலம் சிவாநந்தீஸ்வரர் திருக்கோயில், திருவள்ளூர்
    திருவொற்றியூர் படம்பக்கநாதர் திருக்கோயில், திருவள்ளூர்
    மற்ற மாநிலங்கள் கோயில்கள்:
    திருவஞ்சிக்குளம் மகாதேவர் திருக்கோயில், திருச்சூர்
    திருக்கோகர்ணம் மகாபலேஸ்வரர் திருக்கோயில், உத்தர் கன்னடா
    ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுனர் திருக்கோயில், கர்நூல்
    திருவேட்டக்குடி சுந்தரேஸ்வரர் திருக்கோயில், புதுச்சேரி
    திருத்தெளிச்சேரி பார்வதீஸ்வரர் திருக்கோயில், புதுச்சேரி
    தருமபுரம் யாழ்மூரிநாதர் திருக்கோயில், புதுச்சேரி
    திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் திருக்கோயில், காரைக்கால்
    காளஹஸ்தி காளத்தியப்பர் திருக்கோயில், சித்தூர்
    திருவண்டார்கோயில் பஞ்சனதீஸ்வரர் திருக்கோயில், புதுச்சேரி

  • Komadha Poojai Palangal

    வீட்டில் நெல்லி மரம் இருந்தால் லக்ஷ்மி கடாக்ஷம் பெருகும். விஷ்ணுவின் அம்சமாக நெல்லிமரம் திகழ்வதால் நெல்லி மரத்தில் மகாலக்ஷ்மி வாசம் செய்கிறாள். நெல்லிமரம் இருக்கும் வீட்டில் தெய்வீக அருள் நிறைந்திருக்கும். எவ்வித தீய சக்திகளும் அணுகமுடியாது.

    சுமங்கலிகள், பூரண கும்பம், மஞ்சள், குங்குமம், திருமண், சூர்ணம், கோலம், சந்தனம், வாழை, மாவிலைத் தோரணம், வெற்றிலை,  திருவிளக்கு, யானை, பசு, கண்ணாடி, உள்ளங்கை, தீபம் இவை அனைத்தும் லக்ஷ்மிக்கு மிகவும் பிடித்தவை.
     
    பசுக்களுக்கு ஒரு பழம் வாங்கிக் கொடுத்தாலே கோடி புண்ணியம் தேடி வரும் எனும்போது அவற்றுக்கு தீவனங்கள் வாங்கி தந்து போஷித்தால்? பசுக்களிடம் குபேரன் குடிகொண்டிருக்கிறான். கோமாதா பூஜை குபேர பூஜைக்கு சமம்.
     
    தினசரி விளக்கேற்றுவது சிறப்பு. செவ்வாய் மற்றும் வெள்ளிகளில் 5 முகம் கொண்ட விளக்கேற்றுவது இன்னும் சிறப்பு. 

    வீட்டில் சண்டை, சச்சரவு இருக்கக்கூடாது. அமங்கல சொற்கள் பேசவே கூடாது. மாலை ஆறுமணிக்கே திருவிளக்கு ஏற்றிவிடவேண்டும். ஊனமுற்றவர்களுக்கோ, ஏழை மாணவர்களுக்கோ முடிந்த தர்மத்தை செய்யுங்கள.
     
    வீட்டுக்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கு குங்குமமும், தண்ணீரும் வழங்க வேண்டும். அவர்களுக்கு மஞ்சள் கிழங்கு கொடுப்பதால் பல  ஜென்மங்களில் செய்த பாவங்கள் விலகி பாக்கியங்களும், பொருளும், சந்தோஷமும் பெருகும்.
     
    அன்னம், உப்பு, நெய் இவைகளைக் கையால் பரிமாறக் கூடாது. கரண்டியால் மட்டுமே பரிமாறவேண்டும். கையால் பரிமாறப்பட்ட அன்னம்,  உப்பு, நெய் இவை கோ மாமிசத்துக்கு சமம்.
     
    பெண்கள் வளையல் அணியாமல் எதையும் பரிமாறக் கூடாது.அமாவாசை யன்று எண்ணெய் தேய்த்துக் குளிக்கக் கூடாதுவெள்ளிக்கிழமை உப்பு வாங்கினால் நன்மை உண்டாகும்.இரவில் வீட்டை பெருக்கினால் குப்பையை வெளியே கொட்டக் கூடாது.வீட்டில் தூசி, ஒட்டடை, சேரவிடாது  அடைசல்கள் இன்றி சுத்தமாக இருப்பது அவசியம்.
     
    கோலம் இட்ட வீட்டில் திருமகள் தங்குவாள். வீட்டு வாசலில் கோலம் இடுவது அவசியம். பிளாட்களில் வசிப்பவர்கள் தங்கள் மெயின் டோர் வாசலில் கோலம் வரையலாம்.
     

  • January 16 Rasi Palangal

    ஜனவரி 16
    விளம்பி வருடம் – தை 2
     கார்த்திகை 
    மாட்டுப் பொங்கல், திருவள்ளுவர் தினம்
    16-ஜன-2019 புதன்  
    கரிநாள்
    நல்ல நேரம்    :    9.00 – 10.30    
    ராகு    :    12.00 – 1.30    
    குளிகை    :    10.30 – 12.00
    எமகண்டம்    :    7.30 – 9.00                          
    திதி    :    தசமி          
    திதி நேரம்    :    தசமி    இ    7.52
    நட்சத்திரம்    :    பரணி    கா    10.26
    யோகம்    :    சித்த-அமிர்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    விசாகம்
    சூலம்    :    வடக்கு
    பரிகாரம்    :    பால்

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் –   ஏமாற்றம் 
    ரிஷபம் – வெற்றி 
    மிதுனம் – கவலை   
    கடனம் –  லாபம் 
    சிம்மம் – நட்பு 
    கன்னி – தடங்கல் 
    துலாம் –  மகிழ்ச்சி 
    விருச்சிகம் – தாமதம் 
    தனுசு – சுகம் 
    மகரம் – வரவு 
    கும்பம் – சிக்கல் 
    மீனம் – அசதி