Category: அவசியம் படிக்க

அவசியம் படிக்க

  • Feb month predictions – Midhunam

    மிதுனம் (மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதம்)

    இந்த மாதம் வாழ்க்கையில் நல்ல திருப்பம் ஏற்படும். பயணங்கள் மூலம் லாபம் கிடைக்க செய்யும். மனதில் மகிழ்ச்சி ஏற்படும்படியான காரியங்கள் நடக்கும். ஆன்மிகத்தில் நாட்டம் உண்டாகும். மனோ தைரியம் அதிகரிக்கும். புத்தி தெளிவு உண்டாகும். தொழில் வியாபாரம் திருப்திகரமாக நடக்கும். தொழில் தொடர்பான விஷயங்கள் அனுகூலமாக நடக்கும்.

    உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். சிலருக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். குடும்பத்தில்  கணவன், மனைவிக்கிடையே  இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பிள்ளைகள் மனம் மகிழும்படி தேவையான பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள். விருப்பங்கள் கைகூடும். அக்கம் பக்கத்தினருடன் அனுசரித்து செல்வது நன்மை தரும்.

    பெண்கள் எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை.

    அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும். தொகுதி மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வது அவசியம். கட்சித் தலைமையின் அன்புக்கு பாத்திரமாவீர்கள். கலைத்துறையினர் புதுமையான சில படைப்புகளை வெளியிட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பர். படைப்புகளை வெளியிட சில போராட்டங்களை சந்திக்க வேண்டி இருக்கும். மாணவர்களுக்கு  கல்வி பற்றிய கவலை குறையும். அதிக மதிப்பெண் எடுக்க ஆர்வமாக படிப்பீர்கள். 

    பரிகாரம்: பானகம் அர்ப்பணித்து பெருமாளை வணங்க முன் ஜென்ம பாவம் நீங்கும். குடும்பம் சுபிட்சமடையும்.
    சந்திராஷ்டம தினங்கள்: 4, 5

    – பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் MCA., MBA., MA
    Mobile/WhatsApp: +91 7845119542

     

  • Feb month predictions – Rishabam

    ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதம், ரோகிணி, மிருகசிரீஷம் 1, 2, பாதம்)

    இந்த மாதம் வீடு – மனை – வாகனம் சம்பந்தமான காரியங்களில் எதிர்பார்த்த பலன்கள் கிட்டும். சனி சஞ்சாரத்தால் காரிய தடை தாமதம் ஏற்படும். எதிர்பார்த்தபடி எதுவும் நடக்காமல் இழுபறியாக இருக்கும். ஆனாலும் சனியின் சார சஞ்சாரத்தால் மனமகிழும்படியாக எல்லாம் நடந்து முடியும்.

    தொழில் வியாபாரம் நன்றாக இருக்கும். பழைய பாக்கிகள் வசூலாவதில் வேகம் இருக்கும். கொடுக்கல், வாங்கலில் இருந்த சுணக்க நிலை மாறும். பணவரத்து இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலகம் தொடர்பான பயணம் செல்ல வேண்டி இருக்கலாம். உங்களுக்கு நற்பெயர் கிடைப்பதில் எந்த இடையூறும் இருக்காது.

    குடும்பத்தில் இருந்து வந்த மனம் நோகும் படியான சூழ்நிலைகள் மாறும். ஆனாலும் அனைத்து விஷயங்களிலும் நீங்கள் அனுசரித்து செல்வது நல்லது. கணவன் மனைவிக்கிடையே  எதிர்பாராத மனவருத்தம் ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகள் பற்றிய கவலை உண்டாகும். நிதானமாக செய்யும் செயல்கள் வெற்றியை தரும். பெண்களுக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கூடுதல் கவனத்துடன் செய்யும் காரியங்கள் சாதகமான பலன் தரும்.

    அரசியல்வாதிகள் எதிர்ப்புகளையும் மீறி முன்னேறுவர். சகாக்கள் மத்தியில் ஆதரவு பெருகும். வீண், வறட்டு கௌரவத்துக்காக சேமிப்புகளை கரைத்துக்கொள்ள வேண்டாம். கலைத்துறையினரின் படைப்புத் திறன் வளரும். பொது நிகழ்ச்சிக்கு தலைமை தாங்குமளவுக்குப் பிரபலமாவார்கள். நல்ல வாய்ப்புகள் வரும்.

    உங்கல் முன்னேற்றத்திற்கு பாதை வகுக்கும் காலமாக இருக்கும். மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதில் முழுமூச்சுடன் ஈடுபடுவீர்கள். உங்களது பொருட்களின் மீது கூடுதல் கவனம் இருப்பது நல்லது. 

    பரிகாரம்:  

    பவுர்ணமியில் பூஜை செய்து அம்மனை வணங்க எல்லா காரியங்களும் நல்லபடியாக நடக்கும் மனகவலை நீங்கும்.

    சந்திராஷ்டம தினங்கள்: 1, 2, 3, 28

    – பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் MCA., MBA., MA
    Mobile/WhatsApp: +91 7845119542

     

  • Feb month predictions – Mesham

    மேஷம் (அஸ்வினி, பரணி,  கார்த்திகை 1ம் பாதம்)

    இந்த மாதம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். ஆனாலும் எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரம் திருப்தியாக நடக்கும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள்  அலுவலக வேலையாக அலைய வேண்டி இருக்கும். புதிய பொறுப்புகள் சிலருக்கு கிடைக்கலாம்.

    வெளிநாடு முயற்சிப்பவர்களுக்கு அனுகூலம் கிடைக்கும். குடும்பத்தில் சகஜநிலை காணப்படும். உறவினர்கள் மூலம் நல்ல தகவல் வந்து சேரும். கணவன் மனைவிக்கிடையே இருந்த இடைவெளி குறையும். குடும்பத்தினருடன் ஆன்மிக பயணம் செல்லும் நிலை உருவாகும்.  மற்றவர்கள் ஆலோசனை கேட்டு உங்களை நாடி வருவார்கள்.

    உங்கள் குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து சேருவார்கள். பெண்களுக்கு மனதிருப்தியுடன் காரியங்களை செய்து சாதகமான பலன் பெறுவீர்கள். பயணம் செல்ல நேரலாம். அரசியல்வாதிகள் கட்சிப் பிரச்சனைகளில் இருந்து ஒதுங்கி இருப்பது நல்லது. எதிர்க்கட்சியினரின் உதவி கிடைக்கும். கட்சித் தலைமை உங்களை நம்பி சில ரகசியப் பொறுப்பை ஒப்படைக்கும்.

    கலைத்துறையினரின் படைப்புகளுக்கு மதிப்பு, மரியாதை கூடும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். உங்கள் உழைப்பினை தொடர்ந்து செய்வதன் மூலம் வெற்றியை உங்கள் பக்கம் தக்க வைத்துக் கொள்ளலாம். மாணவர்களுக்கு மிகவும் கவனமாக பாடங்களை படிப்பது முன்னேற்றத்திற்கு உதவும்.

    பரிகாரம்:

    முருகனுக்கு பால் பாயாசம் நிவேதனம் செய்து வணங்கி வர பல நாட்களாக இழுபறியான காரியம் வெற்றிகரமாக முடியும். மனகவலை நீங்கும். 
    சந்திராஷ்டம தினங்கள்: 26, 27

    – பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் MCA., MBA., MA

    Mobile/WhatsApp: +91 7845119542

  • Vinayakar vazhipadu

    விநாயகர் மிகவும் எளிமையான கடவுள். விநாயகரை வழிபடும் அனைவருக்கும் அவர் ஓடோடி வந்து அருள் புரிவதால், எல்லோருக்கும் பொதுவாகவும் அனைவரும் பூஜிக்கற மாதிரியும் இருக்கிறார். ஒவ்வொரு ராசியினரும் விநாயகரை வழிபடுவதற்கு என்று ஒரு தனி முறை இருக்கிறது. 

    மேஷம், கடகம், துலாம், மகரம் ஆகிய ராசிகாரர்கள், வளர்பிறையில் வரும் சனிக்கிழமைகளில் விநாயகரை வழிபட வேண்டும். அதாவது சூரிய உதயத்திற்கு பின்னர் காலை 6.00 மணி முதல் 7.30 மணிக்குள் தேங்காய் உடைத்து, அருகம்புல்லினால் வினாயகரை அர்ச்சனை செய்து வரிபட வேண்டும். 

    சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தேன், பால் படைத்தும், உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மோதகமும், ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பாசிப்பயறும் நைவேத்தியம் செய்தும் விநாயகரை வழிபட வேண்டும். 

    மற்ற நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் வளர்பிறை செவ்வாய், சனிக் கிழமைகளில் தேங்காய் உடைத்தும், செவ்வரலி பூவினால் வினாயகரை அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். பசும்பால், அப்பம், வடை, அவல், பொரிகடலை போன்றவற்றை நைவேத்தியம் செய்தும் வெற்றிலை, பழம், பாக்கு வைத்து விநாயகரை வழிபடுவது நல்லது. 

    ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் ஆகிய ராசிகாரர்கள்,  வளர்பிறையில் வரும் செவ்வாய், சனிக்கிழமைகளில் விநாயகரை வழிபடலாம். அதாவது விடியற்காலை பிரம்ம முகூர்த்த நேரத்தில்  காலை 4.00 மணிமுதல் 6.00 மணி வரையான காலத்தில் தேங்காய்  உடைத்து, வெள்ளெருக்கு மலர் அல்லது வெள்ளரலி பூ அல்லது வெண்தாமரை மலரினால் அர்ச்சனை செய்ய வேண்டும். 

    மேலும், பசும் பால், அவல், கொண்டக்கடலை சுண்டல், பாசிப்பயறு நைவேத்தியம் செய்து வெற்றிலை, பழம், பாக்கு வைத்து வழிபடவேண்டும். இதனால் எடுத்த காரியங்களில் பிரச்சினைகள் இன்றி நடைபெறும். சகல சௌபாக்கியங்களும் உங்களுக்கு கிடைக்கும்.

  • Indru Egadasi

    ஏகாதசி ….. மோட்சத்தை அளிக்கும் விரதத்தை கடைபிடிக்க ஏற்படுத்தி இருக்கும் வழி தான் ஏகாதசி. ஏகாதசி விரதம் என்பது ஒவ்வொரு பக்தருக்கும் ஒரு அற்புதமான தினமாக இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் 24 அல்லது 25 ஏகாதசிகள் வருகின்றன.

     அதாவது அமாவாசை, பவுர்ணமிக்கு அடுத்த 11 நாட்களில் ஒரு ஏகாதசி என்ற கணக்கில்  ஆண்டு முழுவதும் ஏகாதசி வரும். இப்படி வரும் ஒவ்வொரு ஏகாதசிக்கும் ஒரு பெயர் உண்டு. 
    அந்தந்த ஏகாதசி தினங்களில் மேற்கொள்ளும் விரதங்களால் பக்தர்களுக்கு கிடைக்கப்பெறும் நன்மை பயக்கும் பலன்களும் பல. ஒவ்வொரு ஏகாதசியும் ஒவ்வொரு பலனை வழங்குவதோடு, வைகுண்ட பதவிக்கும் வழிவகுக்கும் என்பதே மிகச் சிறப்பானது. அப்படி இருக்க இன்று தை மாத தேய்பிறை ஏகாதசி… 
    தை தேய்பிறை ஏகாதசி ஸபலா எனப்படும். இன்று பழங்கள் தானம் செய்வதால் ஒளிமயமான வாழ்க்கை அமையும். இல்லறம் இனிக்கும்.

    அதேபோல தை மாத வளர்பிறை ஏகாதசி புத்ரா என்று அழைக்கப்படும் . இந்தநாளில் கடைபிடிக்கும் விரதம் புத்திரபாக்யம் தரும். வம்சாவளி பெருக்கம் தரும் சந்தான ஏகாதசி ஆகும்.

  • Indraya Rasi Palan

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் –   உதவி 
    ரிஷபம் – பொறுமை 
    மிதுனம் – போட்டி
    கடனம் –  வெற்றி 
    சிம்மம் – ஆதரவு 
    கன்னி – அமைதி
    துலாம் –  பாராட்டு
    விருச்சிகம் – புகழ் 
    தனுசு – பிரீதி
    மகரம் – பாசம் 
    கும்பம் – நலம் 
    மீனம் – சுபம்  
    சந்திராஷ்டமம்    : கார்த்திகை, ரோகிணி

  • Indraya Nalla Neram

    ஜனவரி 31
    விளம்பி வருடம் – தை 17
    31-ஜன-2019 வியாழன்  
    கரிநாள்
    நல்ல நேரம்    :    10.30 – 12.00    
    ராகு    :    1.30 – 3.00    
    குளிகை    :    9.00 – 10.30
    எமகண்டம்    :    6.00 – 7.30                          
    திதி    :    ஏகாதசி          
    திதி நேரம்    :    ஏகாதசி    இ    8.38
    நட்சத்திரம்    :    கேட்டை    இ    10.03
    யோகம்    :    சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    கார்த்திகை, ரோகிணி
    சூலம்    :    தெற்கு
    பரிகாரம்    :    தைலம்
     

  • Periyapalayam Amman Maha Kumbabishegam

    சென்னை ராயபுரம் அடுத்த அட்டப்பாடி மீனவ கிராமத்தில் உள்ளது பழமையான   பெரியபாளையத்தம்மன் ஆலயம். இந்த ஆலயத்தில்  36 ஆண்டுகள்  கழித்து மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. 

    யாகசாலை வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு பூஜைகள் நடைப்பெற்று   கைலாய வாத்தியங்கள் முழங்க கோபுர கலசத்தில் புனித நீரை ஊற்றி   சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர் இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    முன்னதாக கங்கையில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர்   யாகசாலை பூஜையில்  40 நாட்கள் வைக்கப்பட்டு சிறப்பு பூஜகள் நடைபெற்றது  கடந்த  மூன்று நாட்களாக  நடந்து  வந்த யாகசாலை பூஜைகள்  நிறைவு பெற்று நான்காம் காலயாக  பூஜையில்  மஹா பூர்ணாஹீதி நிறைவுபெற்று வேத பாராயணம் முழங்க சிவாச்சாரியார்களால் இராஜகோபுரம் மற்றும் சன்னதி கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டது. இதில் எராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

  • Sivan Koilil Kumbabishegam

    அறந்தாங்கி கோட்டை பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீகாசிவிஸ்வநாதர் சமேத விசாலாட்சியம்மன் கோவிலின் கொடிமரம் நடும் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது. கொடிமரம் நடும் நிகழ்ச்சியில் சிவனடியார்கள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
    அறந்தாங்கி கோட்டை பகுதியில் அமைந்துள்ள சிவன் கோவில் மிகவும் பழைமை வாய்ந்த கோவில் திருப்பணிகள் ஏதும் செய்யபடாமல் சிதிலமடைந்து சுமார் 400 ஆண்டுகளாக கும்பாபிஷேகம் நடைபெறாமலும் இருந்து வந்தது.

    அப்பகுதி வாழ் மக்களின் முயற்சியால் கோவில் புதுபொலிவு பெற்று வருகின்ற பிப்ரவரி 17ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற இருக்கிறது. அதற்க்கு முன்னராக கொடிமரம் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இக்கொடி மரமானது இலுப்ப மரத்தில் செய்யபட்டது இதன் உயரம் சுமார் 25 அடி இக்கொடி மரத்தை கிழபனையூர் எனும் பகுதியில் இருந்து எடுத்து வரப்பட்டு அறந்தாங்கி முக்கிய வீதிகள் வழியாக கொண்டுவரப்பட்டு வழி எங்கும் பக்தர்களுக்கு தீபாரதனை கட்டபட்டது சிவ பக்தர்கள் பொதுமக்கள் மலர் தூவி வரவேற்றனர்.

    பின்னர் பக்தர்களால் சிவபுராணம் பாட பெற்றது கொடிமரத்திற்க்கு சிறப்பு அபிஷேகங்கள் திபாரதனைகள் செய்யபட்டு நமச்சிவாய எனும் முழக்கங்களுடன் கொடிமரம் நடபெற்றது. வரும் பிப்ரவரி 17ம் தேதி கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற இருக்கிறது.
     

  • Indraya Rasi Palangal

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் –   ஜெயம் 
    ரிஷபம் – மேன்மை  
    மிதுனம் – பாராட்டு
    கடனம் –  ஆக்கம் 
    சிம்மம் – பிரீதி
    கன்னி – நட்பு 
    துலாம் –  பாசம் 
    விருச்சிகம் – சினம் 
    தனுசு – சாதனை 
    மகரம் – சிந்தனை 
    கும்பம் – இரக்கம் 
    மீனம் – இன்பம்