Category: அவசியம் படிக்க

அவசியம் படிக்க

  • அக்டோபர் 02 – 12 ராசிகளுக்கும் இன்றைய ராசிபலன்…

    இன்றைய ராசிபலன்
    மேஷம்         –  தாமதம்
    ரிஷபம்         – லாபம்
    மிதுனம்     – ஆதரவு
    கடகம்         –  சிந்தனை  
    சிம்மம்         –   தனம்
    கன்னி         –    வெற்றி
    துலாம்         –     நன்மை  
    விருச்சிகம்     –  பொறுமை
    தனுசு         –    நஷ்டம்
    மகரம்         –   பயம்
    கும்பம்         –     பக்தி
    மீனம்         –    இன்பம்
    சந்திராஷ்டமம்    –        திருவோணம், அவிட்டம்

  • அக்டோபர் 02 – மகாளய அமாவாசை

    அக்டோபர் 02 – மகாளய அமாவாசை
    குரோதி வருடம் – புரட்டாசி 16
    அக்டோபர் 02 – 2024
    புதன்
    காந்தி ஜெயந்தி
    மகாளய அமாவாசை
    நவராத்திரி கொலு வைக்க காலை 10.00 – 10.30 மணி
    நல்ல நேரம் : கா 9.00 – 10.30
    எமகண்டம் : கா 7.30 – 9.00
    குளிகை : கா 10.30 – 12.00
    ராகு : ம 12.00 – 1.30
    திதி : அமாவாசை
    திதி நேரம் :  அமாவாசை முழுவதும் 0.00
    நட்சத்திரம் :  உத்திரம் ம 1.44
    யோகம் : அமிர்த-மரண
    சந்திராஷ்டமம் :   அவிட்டம்
    சூலம் : வடக்கு
    பரிகாரம் : பால்

  • ஏழுமலையான் கோயிலில் ஆழ்வார் திருமஞ்சனம்….

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உற்சவர்களுக்கு நடத்தப்படும் அபிஷேகத்தை திருமஞ்சனம் என்று கூறுவது வழக்கம். அதேபோல் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வருடத்தில் நான்கு முறை திருமஞ்சனம் (கோவிலை முழுவதுமாக கழுவி சுத்தம் செய்து சுவர்களுக்கு நறுமண கலவை பூசும் நிகழ்ச்சி) நடத்தப்படுகிறது.

    யுகாதி, வருடாந்திர பிரம்மோற்சவம், ஆனி வார ஆஸ்தானம், வைகுண்ட ஏகாதசி ஆகிய திருநாட்களுக்கு முன் வரும் செவ்வாய்க்கிழமை அன்று ஒவ்வொரு ஆண்டும் வருடத்தில் நான்கு முறை திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு திருமஞ்சனம் நடத்துவார்கள்.

    இந்த நிகழ்ச்சியின் போது ஏழுமலையான் கோவிலை ஒரு ஆழ்வாராக கருதி அதனை முழுவதுமாக கழுவி சுத்தம் செய்து சுவர்களுக்கு நறுமண கலவை பூசும் காரணத்தால் இந்த நிகழ்ச்சி கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் என்று அழைக்கப்படுகிறது. இந்த நிலையில் இம்மாதம் 4 ம் தேதி திருப்பதி ஏழுமலையானின் வருடாந்திர பிரமோற்சவம் துவங்கி நடைபெற இருப்பதால் அதற்கு முந்தைய செவ்வாய்க்கிழமையான இன்று கோவில் ஆழ்வார்  திருமஞ்சனம் நடத்தப்பட்டது.

     அப்போது தேவஸ்தான அதிகாரிகள், ஊழியர்கள் ஆகியோர் கோவிலை முழுவதுமாக கழுவி சுத்தம் செய்து பல்வேறு வகையான சுகந்த திரவியங்களை பயன்படுத்தி தயார் செய்யப்பட்ட நறுமண கலவையை கோவில் சுவர்களுக்கு  தெளித்தனர்.

  • ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் புரட்டாசி மாத சோமவார பிரதோஷம்…

    வேலூர் கோட்டை ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் புரட்டாசி மாத சோமவார பிரதோஷம் நந்திபகவானுக்கு பால்,தயிர் ,தேன்,சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் சிறப்பு அலங்காரங்களை  மகாதீபாராதனைகள் பக்தர்கள் சுவாமிதரிசணம் செய்தனர்.

    வேலூர்மாவட்டம்,வேலூர் கோட்டையில் உள்ள ஸ்ரீ அகிலாண்டீஸ்வரி சமேத ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் இன்று புரட்டாசி மாத சோமவார பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு பால்,தயிர்,தேன்,சந்தனம்,விபூதி,கரும்புசாறு ,பன்னீர் இளநீர் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகங்களை செய்து அருகம்புல்,வில்வ இலைகள் ,தாமரை மலர்கள்,மலர்மாலைகளால் சிறப்பு அலங்காரங்களை செய்து மகாதீபாராதனைகள் நடந்தது.

    பின்னர் ஸ்ரீ ஜலகண்டீஸ்வரி அகிலாண்டீஸ்வரி அம்மன் சுவாமி உட்பிரகார உலாவும் வந்தது  இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமிதரிசனம் செய்தனர்.

  • அக்டோபர் 01 – புரட்டாசி 15

    அக்டோபர் 01 – புரட்டாசி 15
    குரோதி வருடம் – புரட்டாசி 15
    அக்டோபர் 01 – 2024
    செவ்வாய்
    நல்ல நேரம் : கா 7.31 – 9.00
    எமகண்டம் : கா 9.00 – 10.30
    குளிகை : ம 12.00 – 1.30
    ராகு : ம 3.00 – 4.30
    திதி : சதுர்த்தசி
    திதி நேரம் :  சதுர்த்தசி இ 10.34
    நட்சத்திரம் :  பூரம் கா 11.15
    யோகம் : சித்த-அமிர்த
    சந்திராஷ்டமம் :   அவிட்டம்
    சூலம் : வடக்கு
    பரிகாரம் : பால்

     

  • அக்டோபர் 01 – இன்றைய ராசிபலன்…

    இன்றைய ராசிபலன்
    மேஷம்         –  பகை
    ரிஷபம்         – வரவு
    மிதுனம்     – பயம்
    கடகம்         –  நன்மை
    சிம்மம்         –   ஆதாயம்
    கன்னி         –    சிந்தனை
    துலாம்         –     தாமதம்
    விருச்சிகம்     –  சுகம்
    தனுசு         –    லாபம்
    மகரம்         –   அச்சம்
    கும்பம்         –     ஆர்வம்
    மீனம்         –    வாழ்வு
    சந்திராஷ்டமம்    –        உத்திராடம், திருவோணம்

  • செப்டம்பர் 30 – பிரதோஷ நாள் ராசிபலன்…

    இன்றைய ராசிபலன்
    மேஷம்         –  பரிசு
    ரிஷபம்         – தனம்
    மிதுனம்     – தேர்ச்சி
    கடகம்         –  செலவு
    சிம்மம்         –   ஓய்வு  
    கன்னி         –    சினம்
    துலாம்         –     நன்மை
    விருச்சிகம்     –  மறதி
    தனுசு         –    ஆதரவு
    மகரம்         –   பக்தி
    கும்பம்         –     சலனம்
    மீனம்         –    உயர்வு  
    சந்திராஷ்டமம்    –        உத்திராடம்

     

  • செப்டம்பர் 30 – பிரதோஷம்

    செப்டம்பர் 30 – பிரதோஷம்
    குரோதி வருடம் – புரட்டாசி 14
    செப்டம்பர் 30 – 2024
    திங்கள்
    பிரதோஷம்
    நல்ல நேரம் : கா 6.00 – 7.30
    எமகண்டம் : கா 10.30 – 12.00
    குளிகை : ம 1.30 – 3.00
    ராகு : கா 7.30 – 9.00
    திதி : திரையோதசி
    திதி நேரம் :  திரையோதசி இ 8.45
    நட்சத்திரம் :  மகம் கா 9.01
    யோகம் : மரண-சித்த
    சந்திராஷ்டமம் :   திருவோணம்
    சூலம் : கிழக்கு
    பரிகாரம் : தயிர்

     

  • 20 வகை பிரதோஷங்கள் அவற்றின் பலன்கள்….

    சோம வாரம் எனப்படும் திங்கள் கிழமையில் சிவ வழிபாடு செய்தல் மிக விசேஷம். அதுவும் அன்று பிரதோஷம் வேறு வந்தால் அன்று சிவ பூஜையும், பிரதோஷ காலத்தில் சிவன் கோவிலில் வழிபாடும் செய்தல் பல்கோடி புண்ணியத்தை தரவல்லது.

    குறிப்பாக ஜாதகத்தில் மதி [சந்திரன்] நல்ல நிலையில் இல்லாதவர்கள் சோம வார பிரதோஷம் அன்று சிவன் கோவில்களில் அர்ச்சனைக்கு வில்வம் அளித்து வழிபட்டால் உங்கள் ஜாதகத்தில் உள்ள மதி மட்டுமல்ல உங்கள் மதியும் [புத்தியும்] நன்றாகும்..

    20 வகை பிரதோஷங்கள் அவற்றின் பலன்களையும் பார்ப்போம்.

    1.தினசரி பிரதோஷம் :
    தினமும் பகலும், இரவும் சந்திக்கின்ற சந்தியா காலமாகிய மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை உள்ள காலமாகும். இந்த நேரத்தில் ஈசனைத் தரிசனம் செய்வது உத்தமம் ஆகும். நித்தியப்பிரதோஷத்தை யார் ஒருவர் ஐந்து வருடங்கள் முறையாகச் செய்கிறார்களோ அவர்களுக்கு “முக்தி” நிச்சயம் ஆகும் என்கிறது நமது சாஸ்திரம்.

    2. பட்சப் பிரதோஷம் :
    அமாவாசைக்குப் பிறகான, சுக்லபட்சம் என்ற வளர் பிறை காலத்தில் 13-வது திதியாக வரும் “திரயோதசி” திதியே பட்சப் பிரதோஷம் ஆகும். இந்தத்திதியின் மாலை நேரத்தில் பட்சிலிங்க வழிபாடு [பறவையோடு உள்ள அது சம்பந்தப்பட்ட லிங்கம் மைலாப்பூர், மயிலாடு துறை போல்] செய்வது உத்தமம் ஆகும்.

    3. மாசப் பிரதோஷம் :
    பவுர்ணமிக்குப் பிறகு வரும் கிருஷ்ணபட்சம் என்ற தேய்பிறை காலத்தில், 13-வது திதியாக வரும் “திரயோதசி” திதியே மாதப் பிரதோஷம் ஆகும். இந்த திதியின் மாலை நேரத்தில் “பாணலிங்க” வழிபாடு [பல்வேறு லிங்க வகைகளில் பான லிங்கம் ஒரு வகை] செய்வது உத்தம பலனைத் தரும்.

    4. நட்சத்திரப் பிரதோஷம் :
    பிரதோஷ திதியாகிய “திரயோதசி திதி”யில் வரும் நட்சத்திரத்திற்கு உரிய ஈசனை பிரதோஷ நேரத்தில் வழிபடுவது நட்சத்திர பிரதோஷம் ஆகும்.

    5. பூரண பிரதோஷம் :
    திரயோதசி திதியும், சதுர்த்தசி திதியும் சேராத திரயோதசி திதி மட்டும் உள்ள பிரதோஷம் பூரண பிரதோஷம் ஆகும். இந்தப் பிரதோஷத்தின் போது “சுயம்பு லிங்கத்தை”த் தரிசனம் செய்வது உத்தம பலனை தரும். பூரண பிரதோஷ வழிபாடு செய்பவர்கள் இரட்டைப் பலனை அடைவார்கள்.

    6. திவ்யப் பிரதோஷம் :
    பிரதோஷ தினத்தன்று துவாதசியும், திரயோதசியும் சேர்ந்து வந்தாலோ அல்லது திரயோதசியும், சதுர்த்தசியும் சேர்ந்து வந்தாலோ அது “திவ்யப் பிரதோஷம்” ஆகும். இந்த நாளன்று மரகத லிங்கேஸ்வரருக்கு அபிஷேக ஆராதனை செய்தால் பூர்வஜென்ம வினை முழுவதும் நீங்கும்.

    7.தீபப் பிரதோஷம் :
    பிரதோஷ தினமான திரயோதசி திதியில் தீப தானங்கள் செய்வது, ஈசனுடைய ஆலயங்களைத் தீபங்களால் அலங்கரித்து ஈசனை வழிபட சொந்த வீடு அமையும்.

    8.அபயப் பிரதோஷம் என்னும் சப்தரிஷி பிரதோஷம் :
    வானத்தில் “வ” வடிவில் தெரியும் நட்சத்திர கூட்டங்களே, “சப்தரிஷி மண்டலம்” ஆகும். இது ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை, மாசி, பங்குனி மாதங்களில் வானில் தெளிவாகத் தெரியும். இந்த மாதங்களில் திரயோதசி திதியில் முறையாக பிரதோஷ வழிபாடு செய்து, சப்தரிஷி மண்டலத்தைத் தரிசித்து வழிபடுவதே அபயப் பிரதோஷம் என்னும் சப்தரிஷி பிரதோஷம் ஆகும். இந்த வழிபாட்டை செய்பவர்களுக்கும் ஈசன் தரம் பார்க்காது அருள் புரிவான்.

    9. மகா பிரதோஷம் :
    ஈசன் விஷம் உண்ட நாள் கார்த்திகை மாதம், சனிக்கிழமை, திரயோதசி திதி ஆகும். எனவே சனிக்கிழமையும், திரயோதசி திதியும் சேர்ந்து வருகின்ற பிரதோஷம் “மகா பிரதோஷம்” ஆகும். இந்த மகா பிரதோஷத்து அன்று எமன் வழிபட்ட சுயம்பு லிங்க தரிசனம் செய்வது மிகவும் உத்தமம் ஆகும்.

    குறிப்பாக திருக்கடையூர், சென்னை வேளச்சேரியில் உள்ள, “தண்டீசுவர ஆலயம்”. திருச்சி, மண்ணச்சநல்லூர் அருகே உள்ள “திருப்பைஞ்ஞீலி” சிவ ஆலயம், குடவாசலில் இருந்து நன்னிலம் செல்லும் பாதையில் உள்ள “ஸ்ரீவாஞ்சியம்” சிவ ஆலயம், கும்ப கோணம் முதல் கதிராமங்கலம் சாலையில் உள்ள “திருக்கோடி காவல்” சிவ ஆலயம் ஆகியவை குறிப்பிடத்தக்கனவாகும். மாசி மாதம் வரும் மகா சிவராத்திரிக்கு முன்னால் வரும் பிரதோஷமும், “மகா பிரதோஷம்” எனப்படும்.

    10. உத்தம மகா பிரதோஷம் :
    சிவபெருமான் விஷம் அருந்திய தினம் சனிக்கிழமையாகும். அந்தக் கிழமையில் வரும் பிரதோஷம் மிகவும் சிறப்பானதாகும். சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை ஆகிய மாதங்களில் வளர்பிறையில், சனிக்கிழமையில் திரயோதசி திதியன்று வரும் பிரதோஷம் உத்தம மகா பிரதோஷம் ஆகும். இது மிகவும் சிறப்பும் கீர்த்தியும் பெற்ற தினமாகும்.

    11. ஏகாட்சர பிரதோஷம் :
    வருடத்தில் ஒரு முறை மட்டுமே வரும் மகா பிரதோஷத்தை `ஏகாட்சர பிரதோஷம்’ என்பர். அன்றைக்கு சிவாலயம் சென்று, `ஓம்’ என்ற பிரணவ மந்திரத்தை எத்தனை முறை ஓத முடியுமோ, அத்தனை முறை ஓதுங்கள். பின், விநாயகரையும் வழிபட்டு, ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் வழங்கினால் பல விதமான நன்மைகள் ஏற்படும்.

    12. அர்த்தநாரி பிரதோஷம் :
    வருடத்தில் இரண்டு முறை மகாபிரதோஷம் வந்தால் அதற்கு அர்த்தநாரி பிரதோஷம் என்று பெயர். அந்த நாளில் சிவாலயம் சென்று வழிபட்டால், தடைப்பட்ட திருமணம் நடைபெறும். பிரிந்து வாழும் தம்பதி ஒன்று சேர்வார்கள்.

    13. திரிகரண பிரதோஷம் :
    வருடத்துக்கு மூன்று முறை மகாபிரதோஷம் வந்தால் அது திரிகரண பிரதோஷம். இதை முறையாகக் கடைப்பிடித்தால் அஷ்ட லட்சுமிகளின் ஆசியும் அருளும் கிடைக்கும். பிரதோஷ வழிபாடு முடிந்ததும் அஷ்ட லட்சுமிகளுக்கும் பூஜை வழிபாடு செய்வது மிகவும் நல்லது.

    14. பிரம்மப் பிரதோஷம் :
    ஒரு வருடத்தில் நான்கு மகா பிரதோஷம் வந்தால், அது பிரம்மப் பிரதோஷம். இந்தப் பிரதோஷ வழிபாட்டை முறையாகச் செய்தால் முன்ஜென்மப் பாவம் நீங்கி, தோஷம் நீங்கி நன்மைகளை அடையலாம்.

    15. அட்சரப் பிரதோஷம் :
    வருடத்துக்கு ஐந்து முறை மகா பிரதோஷம் வந்தால் அது அட்சரப் பிரதோஷம். தாருகா வனத்து ரிஷிகள். `நான்’ என்ற அகந்தையில் ஈசனை எதிர்த்தனர். ஈசன், பிட்சாடனர் வேடத்தில் வந்து தாருகா வன ரிஷிகளுக்குப் பாடம் புகட்டினார். தவறை உணர்ந்த ரிஷிகள், இந்தப் பிரதோஷ விரதத்தை அனுஷ்டித்து பாவ விமோசனம் பெற்றனர்.

    16. கந்தப் பிரதோஷம் :
    சனிக்கிழமையும், திரயோதசி திதியும், கிருத்திகை நட்சத்திரமும் சேர்ந்து வரும் பிரதோஷம் கந்தப் பிரதோஷம். இது முருகப் பெருமான் சூரசம்ஹாரத்துக்கு முன் வழிபட்ட பிரதோஷ வழிபாடு. இந்தப் பிரதோஷத்தில் முறையாக விரதம் இருந்தால் முருகன் அருள் கிட்டும்.

    17. சட்ஜ பிரபா பிரதோஷம் :
    ஒரு வருடத்தில் ஏழு மகா பிரதோஷம் வந்தால் அது, `சட்ஜ பிரபா பிரதோஷம்’. தேவகியும் வசு தேவரும் கம்சனால் சிறையிடப்பட்டனர். ஏழு குழந்தைகளைக் கம்சன் கொன்றான். எனவே, எட்டாவது குழந்தை பிறப்பதற்கு முன்பு ஒரு வருடத்தில் வரும் ஏழு மகா பிரதோஷத்தை முறையாக அவர்கள் அனுஷ்டித்ததால், கிருஷ்ணர் பிறந்தார். நாம் இந்த விரதத்தைக் கடைப்பிடித்தால் முற்பிறவி வினை நீங்கி பிறவிப் பெருங்கடலை எளிதில் கடக்கலாம்.

    18. அஷ்ட திக் பிரதோஷம் :
    ஒரு வருடத்தில் எட்டு மகா பிரதோஷ வழிபாட்டை முறையாகக் கடைப்பிடித்தால், அஷ்ட திக்குப் பாலகர்களும் மகிழ்ந்து நீடித்த செல்வம், புகழ், கீர்த்தி ஆகியவற்றைத் தருவார்கள்.

    19. நவக்கிரகப் பிரதோஷம் :
    ஒரு வருடத்தில் ஒன்பது மகா பிரதோஷம் வந்தால், அது நவக்கிரகப் பிரதோஷம். இது மிகவும் அரிது. இந்தப் பிரதோஷத்தில் முறையாக விரதம் இருந்தால் சிவனின் அருளோடு நவக் கிரகங்களின் அருளும் கிடைக்கும்.

    20. துத்தப் பிரதோஷம் :
    அரிதிலும் அரிது பத்து மகாபிரதோஷம் ஒரு வருடத்தில் வருவது. அந்தப் பிரதோஷ வழிபாட்டைச் செய்தால் பிறவி குறைபாடுகள் கூட சரியாகும்.

  • செப்டம்பர் 29 – இன்றைய ராசிபலன்…

    இன்றைய ராசிபலன்
    மேஷம்         –  நலம்
    ரிஷபம்         – நன்மை
    மிதுனம்     – நற்செயல்
    கடகம்         –  தடங்கல்
    சிம்மம்         –   ஆர்வம்
    கன்னி         –    சாந்தம்
    துலாம்         –     செலவு
    விருச்சிகம்     –  குழப்பம்
    தனுசு         –    வெற்றி
    மகரம்         –   துன்பம்
    கும்பம்         –     விவேகம்   
    மீனம்         –    இரக்கம்
    சந்திராஷ்டமம்    –        பூராடம்