Category: அவசியம் படிக்க

அவசியம் படிக்க

  • சபரிமலையில் சுத்திகிரியை பூஜைகள் தொடக்கம்

    சபரிமலையில் மகரவிளக்கு முன்னிட்டு சுத்திகிரியை பூஜைகள் தொடங்குகிறது. மகரஜோதி நாளில் முக்கிய பூஜையான மகர சங்கரம பூஜை நடைபெறும். இதற்கு முன்னோடியாக சுத்திகிரியைகள் தொடங்குகிறது. வெள்ளிகிழமை மாலை தீபாரதனைக்கு பின்னர் பிரசாத சுத்தி பூஜைகள் நடைபெறும். மறுநாள் உச்சபூஜைக்கு முன்பாக பிம்ப சுக்தி பூஜைகள் நடைபெறும். தந்தரி கண்டரு மகேஷ் மோகனரரு தலைமையில் மேல்சாந்தி உண்ணி கிருஷ்ணன் நம்பூதிரி மற்றும் பூஜாரிகள் இந்த பூஜைகளை நடத்துவர். மகரவிளக்கு சீசனையொட்டி கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சந்நிதானத்தில் மட்டும் 3 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  • தோரணமலை முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா

    நெல்லை மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற தோரணமலை முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா ஜனவரி 28-ந்தேதி தொடங்குகிறது. தோரணமலை முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா 28-ந்தேதி தொடங்குகிறது. தென்காசி-கடையம் செல்லும் சாலையில் அமைந்துள்ள இக்கோவிலில் தைப்பூச திருவிழா வருகிற 28-ந் தேதி காலை 6 மணிக்கு தொடங்கு கிறது. அதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோமம் நடக்கிறது. தொடர்ந்து மூலவர்-உற்சவமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. பின்னர் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் உற்சவமூர்த்தி அந்த பகுதியில் வீதி உலா செல்லும் நிகழ்ச்சி நடக்கிறது. 30-ந் தேதி காலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. 31-ந் தேதி அதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோமம் நடக்கிறது. பின்னர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. காலை 9.05 மணிக்கு மலைஅடிவாரத்தில் உள்ள சொக்கலால் கலையரங்கில் சுவாமி- வள்ளி தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது. தொடர்ந்து ஊட்டி படுகர் இன மக்களின் பாரம்பரிய நடனமும், அன்னதானமும் நடக்கிறது. சந்திரகிரகணத்தை முன்னிட்டு மாலை 3.30 மணி அளவில் கோவில் நடை அடைக்கப்படுகிறது.

  • தோரணமலை முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா

    நெல்லை மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற தோரணமலை முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா ஜனவரி 28-ந்தேதி தொடங்குகிறது. தோரணமலை முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா 28-ந்தேதி தொடங்குகிறது. தென்காசி-கடையம் செல்லும் சாலையில் அமைந்துள்ள இக்கோவிலில் தைப்பூச திருவிழா வருகிற 28-ந் தேதி காலை 6 மணிக்கு தொடங்கு கிறது. அதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோமம் நடக்கிறது. தொடர்ந்து மூலவர்-உற்சவமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. பின்னர் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் உற்சவமூர்த்தி அந்த பகுதியில் வீதி உலா செல்லும் நிகழ்ச்சி நடக்கிறது. 30-ந் தேதி காலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. 31-ந் தேதி அதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோமம் நடக்கிறது. பின்னர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. காலை 9.05 மணிக்கு மலைஅடிவாரத்தில் உள்ள சொக்கலால் கலையரங்கில் சுவாமி- வள்ளி தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது. தொடர்ந்து ஊட்டி படுகர் இன மக்களின் பாரம்பரிய நடனமும், அன்னதானமும் நடக்கிறது. சந்திரகிரகணத்தை முன்னிட்டு மாலை 3.30 மணி அளவில் கோவில் நடை அடைக்கப்படுகிறது.

  • வாழ்க்கையில் வெற்றி பெற அனுமனுக்கு வெற்றிலை மாலை

    இலங்கையில் ராமனுக்கும், ராவணனுக்கும் யுத்தம் நடைப்பெற்ற போது அரக்கர்களை பந்தாடி போர்களத்தில் வெற்றிக்கொடி நாட்டியவர் அனுமான். அதனால் தான் அவருக்கு கொடியிலேயே வளரும் வெற்றிலையை மாலையாக போடுகிறார்கள். ஈலங்கையில் அசோகவனத்தில் சீதா பிராட்டியார் சிறைப்பட்டு இருந்த போது ராமதூதனாக சென்ற அனுமன் சீதையை சந்தித்து, ராமர் விரைவில் இலங்கை வந்து உங்களை சிறைமீட்டுச் செல்வார் என்று கூறினார். இதைக் கேட்டு மகிழ்ந்து போன சீதை அருகில் இருந்த வெற்றிலை கொடியில் இருந்து வெற்றிலையை பறித்து அனுமானின் சிரசில் போட்டு சிரஞ்சீவியாக இருப்பாயாக என்று கூறி ஆசி வழங்கினார். இதை நினைவுகூரும் விதத்தில் வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டி அனுமானுக்கு வெற்றிலை மாலை அணிவிக்கின்றனர்

  • வாழ்க்கையில் வெற்றி பெற அனுமனுக்கு வெற்றிலை மாலை

    இலங்கையில் ராமனுக்கும், ராவணனுக்கும் யுத்தம் நடைப்பெற்ற போது அரக்கர்களை பந்தாடி போர்களத்தில் வெற்றிக்கொடி நாட்டியவர் அனுமான். அதனால் தான் அவருக்கு கொடியிலேயே வளரும் வெற்றிலையை மாலையாக போடுகிறார்கள். ஈலங்கையில் அசோகவனத்தில் சீதா பிராட்டியார் சிறைப்பட்டு இருந்த போது ராமதூதனாக சென்ற அனுமன் சீதையை சந்தித்து, ராமர் விரைவில் இலங்கை வந்து உங்களை சிறைமீட்டுச் செல்வார் என்று கூறினார். இதைக் கேட்டு மகிழ்ந்து போன சீதை அருகில் இருந்த வெற்றிலை கொடியில் இருந்து வெற்றிலையை பறித்து அனுமானின் சிரசில் போட்டு சிரஞ்சீவியாக இருப்பாயாக என்று கூறி ஆசி வழங்கினார். இதை நினைவுகூரும் விதத்தில் வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டி அனுமானுக்கு வெற்றிலை மாலை அணிவிக்கின்றனர்

  • திருப்பதியில் 5 நாட்கள் வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்து

    ரதசப்தமியையொட்டி திருப்பதியில் ஜனவரி 24-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. திருப்பதியில் வருகிற 24-ந்தேதி ரத சப்தமி விழா நடக்கிறது. இதையொட்டி அன்று ஒரு நாள் பிரம்மோற்சவம் நடைபெற உள்ளது. அன்று அதிகாலை 5.30 மணி முதல் இரவு 9 மணி வரை 7 வாகனங்களில் மலையப்பசுவாமி மாடவீதியில் வலம் வருகிறார். மதியம் 2 மணி முதல் 3 மணி வரை தீர்த்தவாரி நடைபெற உள்ளது. அதனால் வருகிற 24-ந்தேதி முதல் 28-ந் தேதி வரை தேவஸ்தானம் வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தை ரத்து செய்துள்ளது. அந்த நாட்களில் அதிமுக்கியத்துவ வி.ஐ.பி.கள் மட்டுமே தரினத்துக்கு அனுமதிக்கப்படுவர். மேலும் 24-ந் தேதி அன்று ஆர்ஜித சேவைகள், மூத்த குடிமகன், மாற்றுத் திறனாளிகள், கைக் குழந்தைகளின் பெற்றோருக்கான தரிசனங்கள் உள்ளிட்டவை ரத்து செய்யப்பட்டுள்ளன. நடைபாதை மார்க்கத்தில் வருபவர்களுக்கு வழங்கப்படும் திவ்ய தரிசன டோக்கன்கள், ரூ.300 விரைவு தரிசனம் உள்ளிட்டவை வழக்கம் போல் வழங்கப்படும்.

  • தங்க கவசத்தில் அருள்பாலித்த காலபைரவர்

    தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டையில் உள்ளது காலபைரவர் கோயில். இங்கு தேய்பிறை அஷ்டமி பெருவிழா விமர்சையாக நடந்தது. விழாவையொட்டி காலை 6 மணி முதல் அஷ்டபைரவர் யாகம், அஷ்ட லட்சுமி யாகம், தனாகர்சன யாகம், குபேர யாகம், அதிருத்ர யாகம் நடந்தது. காலை 9 மணிக்கு தங்க கவசத்தில் காலபைரவர் அருள்பாலித்தார். அதை தொடர்ந்து 64 வகையான அபிஷேகம் 1008 அர்ச்சனைகள், 28 ஆகம பூஜைகள், 1008 அர்ச்னைகள், 64 வகையான அபிஷேகம் நடந்தது. இதில் தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் கர்நாடகா பக்தர்கள் கலந்து கொண்டு தீபமேற்றி வழிபட்டனர்.

  • நெல்லையப்பர் கோயிலில் பத்ர தீபத் திருவிழா

    திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோயிலில் பத்ர தீபத் திருவிழா ஜனவரி 14 ஆம் தேதி தொடங்குகிறது. இதையொட்டி, கோயிலில் தினமும் வேணுவனநாதர் மூலஸ்தானத்தில் ருத்திர ஜெபம் , அபிஷேக ஆராதனைகள், திருமூலமகாலிங்கம் ஸ்ரீ காந்திமதி அம்பாள் மூலவர் சன்னதிகளில் அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.
    ஜனவரி 15 ஆம் தேதி மாலை 6.30 க்கு மேல் 7.15 மணிக்குள் சுவாமி கோயில் மணி மண்டபத்தில் தங்க விளக்கு தீபம் ஏற்றும் நிகழ்ச்சியும், ஜனவரி 16 மாலை 6 மணிக்கு சுவாமி கோயில், ஸ்ரீகாந்திமதி அம்பாள் கோயில் உள் சன்னதிகளில் வெளிப் பிரகாரங்கள், ஸ்ரீஆறுமுகநயினார் திருக்கோயில் உள்சன்னதியில் வெளிப் பிரகாரங்கள் ஆகிய இடங்களில் பத்ர தீபங்கள் ஏற்றப்படும்.
    அன்றைய தினம் நண்பகல் 12 மணிக்கு ஸ்ரீஆறுமுகநயினார் சன்னதியில் மகேஸ்வர பூஜை, அன்னதானம் ஆகியவை நடைபெறும் என்ற கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

  • வரதராஜ பெருமாள் கோயிலில் காஞ்சி ஜயேந்திரர் வழிபாடு

    காஞ்சிபுரம் சங்கர மடத்தின் பீடாதிபதி ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், 14 ஆண்டுகளுக்கு பிறகு அங்குள்ள வரதராஜ பெருமாள் கோயிலில் தரிசனம் செய்தார். அவருக்கு ஸ்ரீசடாரி கொண்டு வரப்பட்டு, 16 கால் மண்டபத்தில் ராஜ்ய சன்யாசிகளுக்கு வழங்கப்படும் பஞ்ச முத்திரை மரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து, கோயில் ராஜகோபுரத்தின் அருகில் அற நிலையத்துறை உதவி ஆணையர், பட்டாச்சாரியர்கள் ஆகியோர் மடாதிபதிகளுக்கு வழங்கும் பூரண கும்ப மரியாதையை ஜயேந்திரருக்கு அளித்து வரவேற்றனர். இதையடுத்து கோயிலுக்கு உள்ளே சென்று தாயார் சந்நிதியில் தரிசனம் செய்தார். அதன்பிறகு, வரதராஜ பெருமாள் சந்நிதியில் வழிபட்டார். முன்னதாக, 16 கால் மண்டபத்திலிருந்து ராஜகோபுரம் வரை நடந்து வந்தார். ஜயேந்திரரை அவரது சீடர்கள் பல்லக்கில் தூக்கிச் சென்று தரிசனம் செய்வித்தனர். 14 ஆண்டுகளுக்கு பிறகு வரதராஜ பெருமாள் கோயிலுக்கு வந்த ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளிடம் ஏராளமான பக்தர்கள் ஆசி பெற்றனர்.

  • ஒரே சந்நிதியில் பெருமாள், லட்சுமி, சிவன்

    பொய் சொன்னால் மனிதனுக்கு என்னாகும் என்பதை உணர்த்தும் வகையில் திருமால் ஒரு லீலையை நிகழ்த்த விரும்பினார். ஒருசமயம், கைலாயத்தில் ஒருமுறை சிவனும், பார்வதியும் பகடை விளையாடிக் கொண்டிருந்த போது, அங்கு வந்தார். விளையாட்டுக்கு நடுவராக இருந்து வெற்றி பெற்றது யார் என்று சொல்லும் பொறுப்பை ஏற்றார். விளøயாட்டில் பார்வதி வென்றாள். ஆனால், போட்டியில் சிவன் வென்றதாகக் கூறிவிட்டார். தன் சகோதரரே இப்படி சொல்லிவிட்டாரே என வருத்தமடைந்தாள் பார்வதி. கடவுளாகவே இருந்தாலும் பொய் பேசினால், அவர் அதற்குரிய தண்டனையை அடைந்து தீர வேண்டும் என்பதன் அடிப்படையில், தவறான தீர்ப்பு வழங்கிய திருமால், பிளவுபட்ட நாக்குடன் பாம்பாக மாறும்படி சபித்தாள். சாபவிமோசனமாக,பூலோகத்தில் முக்தி தலமாக விளங்கும் காஞ்சிபுரம் சென்று சிவனைப் பூஜித்தால் சாபம் நீங்கும். பிளவுபட்ட நாக்கு ஒன்றாகி பாம்பு வடிவம் மறையும், என்றாள். அதன்படி, திருமாலும் காஞ்சிபுரத்தில் சிவனை வழிபட்டு சாப விமோசனம் பெற்றார். அவரே, அனந்தபத்மநாபர் என்னும் திருநாமத்துடன் சயனகோலத்தில் லட்சுமி தாயாருடன் அருள்பாலிக்கிறார். சிவன் லிங்கவடிவில் மகாகாளேஸ்வரர் என்ற திருநாமத்துடன் விளங்குகிறார். மூவரும் ஒரே சந்நிதியில் காட்சி தருவது சிறப்பு. விநாயகரும், முருகனும் சந்நிதியின் இருபுறமும் வீற்றிருக்கின்றனர். காஞ்சிபுரத்திலுள்ள நவக்கிரக தலங்களில் இது கேதுவுக்குரியதாக திகழ்கிறது. பூமியில் புதையுண்டு கிடந்த இக்கோயிலைப் பல ஆண்டுகளுக்கு முன், காஞ்சிப்பெரியவர் புதுப்பித்து திருப்பணி செய்தார். பலமுறை அவர் வழிபட்டதோடு, பக்தர் களுக்கு ஆசியும் அளித்துள்ளார். காஞ்சி காமகோடி பீடத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கோயில் செயல்படுகிறது. இது பாம்பு தொடர்புடைய கோயில் என்பதால், தோல், வாய்,நாக்கு, தொடர்பான நோயுள்ளவர்கள், அடிக்கடி தொண்டையில் வலி வந்து பேச சிரமப்படுகிறவர்கள் நோய் நீங்க அனந்த பத்மநாபரை வேண்டலாம்.