Author: லிங்கேஷ்

  • Dhoshangalai Nivrthi Seyum Perumal

    விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில்.  108 திவ்ய தேசங்களில் 53வது தலமாக உள்ளது இந்த கோயில். 

    நடுநாட்டு திருப்பதிகளில் 2வது தலமாகவும், பஞ்ச கிருஷ்ணாரண்ய ஷேத்திரத்தில் 4வது தலமாகவும், தமிழ்வேதம் எனப்படும் நாலாயிர திவ்யபிரபந்தம் அவதரித்த தலமாகவும் விளங்குகிறது உலகளந்த பெருமாள் கோவில். 

    சுமார் 2ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த கோவில் பல்லவர்கள், விஜயநகரபேரரசு, இரண்டாவது நரசிம்மவர்மன், பாண்டியர்கள், திருமலைநாயக்கர், திருமங்கை மன்னன், மலையமான் சக்கரவர்த்தி ஆகியோர் படிப்படியாக இக்கோவிலை நிறுவினார்கள். 

    இந்த திருக்கோயிலில் திருக்கோலத்தில் வலது கை யில் சங்கும், இடது கையில் சக்கரத்தையும் பிடித்தபடி வலது காலை ஆகாயம் நோக்கி தூக்கி நின்று திருவிக்கிரம அவதாரத்தில் பெருமாள் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். 

    வலது காலின் மேல்புறம் லட்சுமி உள்ளார், கீழே இடது காலில் நமச்சு முனிவர், மகாபலி சக்கரவர்த்தி, சுக்கிராச்சாரியார். ஆண்டாள், கருடன் ஆகியோர் பூஜை செய்கின்றனர். முதலாழ்வார்களான பேயாழ்வார், பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகியோர் பாடல் பாடுகின்றனர். கோவிலில் கருவறையில் இந்த காட்சிகளை பக்தர்கள் தரிசிக்க முடியும். 

    உலகளந்த பெருமாள் கோவிலில் உற்சவர் தேகளீச பெருமாள் ஆவார். ஒரு காலத்தில் வேணுகோபால சன்னதியாக இருந்து படிப்படியாக உலகளந்த பெருமாள் கோவிலாக மாற்றம் கண்டது. திருவிக்ரமசுவாமி சன்னதிக்கு பின்புறம் வாமனருக்கு தனி சன்னதி உண்டு. 

    இங்குள்ள வாமனர் கையில் குடையுடன் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். கேரளாவிற்கு அடுத்த படியாக வாமனருக்கு இங்கு தான் சன்னதி உள்ளது. ஆண்டுதோறும் பங்குனி பிரம்மேற்சவமும், வேணுகோபாலஜெயந்தி உற்சவமும் நடைபெறுகிறது. உற்சவர்கள் புஷ்பவள்ளி தாயார் மற்றும் தேகளீச பெருமாள் ஆவர். சன்னதிக்கு செல்வதற்கு முன்பு கொடிமரத்தில் இருந்து இடதுபுறத்தில் உள்ளது பூங்கோவல் நாச்சியார் சன்னதி உள்ளது. 

    தென்பெண்ணை ஆற்றின் வலதுபுறத்தில் உள்ள இந்த தலத்திற்கு அடிக்கடி பேருந்து வசதியும், விழுப்புரம்-காட்பாடி ரயில் மார்க்கத்தில் திருக்கோவிலூர் ரயில்நிலையத்தில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது. ஊரே கோவிலுக்குள் அடங்கி இருப்பதால் திருக்கோவிலூர் என்று அழைக்கப்பட்டது. 
     

  • January 26 – Rasi Palangal

    ஜனவரி 26
    விளம்பி வருடம் – தை 12
    குடியரசு தினம்
    26-ஜன-2019 சனி  
    வாஸ்து நாள்(காலை 10.41 – 11.17)
    நல்ல நேரம்    :    7.30 – 9.00    
    ராகு    :    9.00 – 10.30    
    குளிகை    :    6.00 – 7.30
    எமகண்டம்    :    1.30 – 3.00                          
    திதி    :    சஷ்டி          
    திதி நேரம்    :    சஷ்டி    இ    10.56
    நட்சத்திரம்    :    அஸ்தம்    இ    9.20
    யோகம்    :    மரண யோகம்
    சந்திராஷ்டமம்    :    பூரட்டாதி,உத்திரட்டாதி
    சூலம்    :    கிழக்கு
    பரிகாரம்    :    தயிர்

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் –   பாராட்டு 
    ரிஷபம் – புகழ்
    மிதுனம் – ஜெயம் 
    கடனம் –  அசதி
    சிம்மம் – தனம்  
    கன்னி – அமைதி
    துலாம் –  ஆதரவு 
    விருச்சிகம் – சோதனை 
    தனுசு – ஓய்வு
    மகரம் – தொல்லை 
    கும்பம் – முயற்சி 
    மீனம் – ஊக்கம் 

  • Palani theppa Ther Thiruvizha

    பழனி தைப்பூச திருவிழா நிறைவாக தெப்பத்தேர் விழா வெகு விமர்சையாக நடைபெற்றுள்ளது. இரவு தெப்பத்தேரில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 

    தெப்பத்திருவிழாவை முன்னிட்டு பெரிய நாயகி அம்மன் கோவிலில் இருந்து அருகில் உள்ள தெப்பக்குளத்தில் அலங்கரிக்கப்பட்ட மண்டபத்திற்கு முத்துக்குமார சுவாமி, வள்ளி-தெய் வானையை அழைத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. 

    6 கலசங்கள் வைத்து சிறப்பு பூஜைகளும், அதை தொடர்ந்து, 16 வகை அபிஷேகமும் சிறப்பு அலங்காரமும் செய்யப்பட்டு 16 வகை தீபாராதனையும், உபசாரங்களும் நடைபெற்றது. 

    அதன் பின்னர் முத்துக்குமாரசுவாமி வள்ளி-தெய்வானையுடன் தெப்பத்தேரில் எழுந்தருளினார். தெப்பத்தேர் 3 முறை குளத்தில் வலம் வந்தது. பின்னர் முத்துக்குமாரசுவாமி வள்ளி-தெய்வானை தோளுக்கினியாள் வாகனத்தில் வந்து பெரியநாயகி அம்மன் கோவிலில் எழுந்தருளினார். விழாவையொட்டி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பழனியில் குவிந்தனர். 

  • Theertha Kalasa Oorvalam

    சேலம் மாநகர் பிரசித்தி பெற்ற  பள்ளப்பட்டி  மாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி தீர்த்த கலச ஊர்வலம் வெகு விமர்சையாக நடைபெற்றுள்ளமு. இதில் ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டு அம்மனுக்கு தீர்த்தக்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தி உள்ளனர். 

     சேலம் மாநகர்  பள்ளப்பட்டியில் உள்ள பிரசித்திப்பெற்ற   அருள்மிகு மாரியம்மன் கோயில் தற்போது புதிதாக புனரமைக்கப்பட்டுள்ளது. இந்த கோவில் வளாகத்தில் புதியதாக அருள்மிகு அண்ணாமலையார், உண்ணாமலையம்மாள்  சன்னதிகள்  அமைக்கப்பட்டு அதற்கான பூஜைகளும் நடத்தப்பட்டு வருகிறது.

     புதிதாக  அமைக்கப்பட்டுள்ள கோவில்களுக்கு  தீந்தமிழ் திருக்குட புனித நன்னீராட்டு விழா,  வருகின்ற ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. இந்நிலையில் அதற்கான தீர்த்தக்குடம் மற்றும் முளைப்பாரி எடுத்து வரும்  ஊர்வலம் நடைப்பெற்றது. பள்ளப்பட்டி மூன்று ரோடு  பகுதியிலிருந்து துவங்கிய இந்த ஊர்வலத்தில்  கடுமையான  விரதம் மேற்கொண்டு  மூவாயிரத்திற்கும் மேற்பட்ட   பெண்கள் தீர்த்தக்குடம் மற்றும் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக வந்தனர்.

     தாரை, தப்பட்டைமற்றும் வாணவேடிக்கையுடன் நடைபெற்ற இந்த ஊர்வலத்தின் முன்பாக 50-பெண்கள்  கோவிலின்  மேல்புறத்தில் அமைக்கப்படும் கலசங்களை ஊர்வலமாக எடுத்து வந்தனர் .
    இதில்  பெண்கள் மஞ்சள் ஆடை அணிந்து முளைப்பாரி எடுத்து வந்து  அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    தொடர்ந்து ஊர்வலத்தில் எடுத்து வரப்பட்ட தீர்த்த கலசங்கள் அனைத்தும் யாகசாலையில்  வைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்ற பின்னர்,   இரண்டாம் மற்றும் மூன்றாம் கால  பூஜைகள் செய்யப்பட்டதும் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை அனைத்து கோபுர கலசங்களுக்கு புனித நன்னீராட்டு விழா நடைபெற உள்ளது. இதற்காக  கோவில் வளாகத்தில் பிரமாண்ட யாகசாலை அமைக்கப்பட்டு தினந்தோறும் சிறப்பு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது.
     இன்று நடைபெற்ற தீர்த்த கலசம் மற்றும் முளைப்பாரி  ஊர்வலத்திற்கு  ஏற்பாட்டினை விழாக்குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.

  • January 25 – Rasi Palangal

    ஜனவரி 25
    விளம்பி வருடம் – தை 11
    25-ஜன-2019 வெள்ளி  
    கரிநாள்
    நல்ல நேரம்    :    9.00 – 10.30    
    ராகு    :    10.30 – 12.00    
    குளிகை    :    7.30 -9.00
    எமகண்டம்    :    3.00 – 4.30                          
    திதி    :    பஞ்சமி          
    திதி நேரம்    :    பஞ்சமி    இ    12.36
    நட்சத்திரம்    :    உத்திரம்    இ    10.24
    யோகம்    :    சித்த-அமிர்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    சதயம்,பூரட்டாதி
    சூலம்    :    மேற்கு
    பரிகாரம்    :    வெல்லம்

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் –   நன்மை 
    ரிஷபம் – அமைதி
    மிதுனம் – களிப்பு 
    கடனம் –  சிக்கல் 
    சிம்மம் – பயம்  
    கன்னி – பாராட்டு
    துலாம் –  ஜெயம் 
    விருச்சிகம் – பரிசு 
    தனுசு – பிரீதி
    மகரம் – நலம் 
    கும்பம் – வெற்றி 
    மீனம் – ஆக்கம் 

  • Chadurthi Viradham Thondriya Kadhai

    கயிலாயத்திற்கு ஒருமுறை  வந்த பிரம்மனை பார்த்து, சந்திரன் ஏளனமாக சிரித்தார். இதைப் பார்த்த விநாயகர். சந்திரனே, உன் பிரகாசம் உலகில் எங்கும் இல்லாமல் போகட்டும், உன் பிரகாசம் யார் கண்களுக்கும் புலப்படாமல் மறைந்து போகட்டும் என்று சாபமிட்டார். 

    விநாயகர் சாபம் கொடுத்த அந்த நொடியே சந்திரன்  வானத்தில் இருந்து காணாமல் போனார். நலவு வானத்தில் காணாமல் போனதை கண்டு தேவர்களும், இந்திரனும், அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து சந்திரனுக்கு சாப விமோசனம் அளிக்குமாறு விநாயகரை வேண்டிக்கொண்டனர். 

    தேவர்களின் வேண்டுகோளை ஏற்று ஆண்டுக்கு ஒருநாள் ஆவணி மாத சதுர்த்தியன்று சந்திரனை பார்ப்பவர்கள் துன்பப்படுவார்கள் என்று கூறி சந்திரனுக்கு கொடுக்கப்பட்ட சாபத்தை கொஞ்சம் குறைத்தார் விநாயகர். ஒவ்வொரு மாதமும் பவுர்ணமிக்கு அடுத்து வரும் சதுர்த்தியன்று விரதம் இருந்து தம்மை வழிபடுபவர்களின் சங்கடங்களை எல்லாம் நான் நிவர்த்தி செய்வேன் என்று கூறினார். 

    இதைக்கேட்ட சந்திரன் தன் தவறை உணர்ந்து விநாயகரை குறித்து கடும் தவம் இருந்தான். அவனது தவத்துக்கு மனம் மகிழ்ந்த விநாயகர் அவனுக்கு அருள்புரிந்து வளரும் வரத்தை கொடுத்தார். இப்படி சந்திரன் வரம் பெற்ற நாள் தேய்பிறை சதுர்த்தி தினமாகும். ஆகவே சதுர்த்தி திதி விநாயகருக்கு உகந்த திதியானது. சந்திரனின் அகந்தையை அழித்த தினம் இது. 
     

  • Sangadangali Theerkum Sangadahara Chadurthi

    சங்கடஹர சதுர்த்தி அன்று விரதம் இருந்தால் சங்கடங்கள் தீரும் என்பது ஐதீகம். முழுமுதற்கடவுளான விநாயகப் பெருமானை சங்கடஹர சதுர்த்தி நன்னாளில், மனமுருகப் பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும். அப்படி செய்தால், உங்களின் வாழ்வில் உள்ள சங்கடங்களையெல்லாம் தீர்த்து சந்தோஷக் கடலில் நீந்தச் செய்வார் விநாயக பெருமான். 

    எந்த ஒரு செயலை தொடங்கும் போதும் விநாயகர் பூஜை செய்து தொடங்குவதால், நினைத்த காரியம், செயல் என்று எதுவாயினும் எளிதில் முடியும். இப்படி இருக்க மகா சங்கடஹர சதுர்த்தி நாளில் செயலை தொடங்குவது இன்றும் சிறந்தது.

     ஒவ்வொரு மாதமும் பவுர்ணமிக்கு அடுத்து வரும் நான்காம் நாள் சங்கடஹர சதுர்த்தி நாள் ஆகும்.  நமக்கு வரும் துன்பங்களை, தடைகளை, கஷ்டங்களை அழிப்பதற்காக ஏற்பட்ட ஒரு சிறப்பு மிக்க விரதம் இது. மனிதருக்கு மட்டும் அல்ல. தெய்வங்களுக்கும், தேவர்களுக்கும் கூட கஷ்டங்கள் வந்த போது, அவர்கள் கணபதியை வணங்கி நலம் பெற்றுள்ளனர். 'மகாசங்கடஹர சதுர்த்தி' அன்று வழிபாடு செய்தால் வருடம் முழுவதும் சதுர்த்தி விரதம் இருந்த பலன் கிடைக்கும்.
     

  • Kumari thirupathy koil

    கன்னியாகுமரியில் கட்டப்பட்டுள்ள திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் வரும் 27 ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்கான  யாகசாலை பூஜைகள் தொடங்கியுள்ளது. யாகசாலை பூஜைகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் 22 கோடியே 50 லட்ச ரூபாய் செலவில் கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தா கேந்திரா கடற்கரையில் 5.5 ஏக்கர் நிலத்தல் ஏழுமலையான் கோவில் கட்டப்பட்டுள்ளது.

    திருப்பதி திருமலையை போன்று கன்னியாகுமரியில் எழுந்தருளி உள்ள இந்த கோவிலிலும் பிரம்மோற்சவம் ,ரத உற்சவம் தீர்த்தவாரி ,சீனிவாச கல்யாணம், ஆர்ஜித சேவை ,சுப்ரபாதம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறும்.

    குமரி வெங்கடாசலபதி கோவிலின் மேல் பகுதியில் வெங்கடாசலபதி சன்னதி உள்ளது மூலஸ்தானத்தில் வீற்றிருக்கும் வெங்கடாஜலபதி பத்மாவதி தாயார் சன்னதியும், இடதுபுறம் அம்பாள் சன்னதியும், வெங்கடாசலபதி எதிரே கருடாழ்வார் சன்னதியும் உள்ளன.

    கோவிலின் கீழ்ப்பகுதியில் இரண்டு ஆயிரம் பேர் அமர்ந்து நிகழ்ச்சியை பார்க்கும் வகையில் சீனிவாச கல்யாண மண்டபம் கட்டப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல அன்னதான கூடம் தியான மண்டபம் போன்றவை கட்டப்பட்டுள்ளன.  இங்கு வருகிற 27ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. 

    இதனையொட்டி நேற்று முன்தினம் 40 அடி உயரமுள்ள கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது கொடிமரத்தில் நேற்று காலையில் செம்புத் தகடுகள் பதிக்கும் பணி நடைபெற்றது.
    கும்பாபிஷேக விழா யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. இதற்காக கோவில் முன்பு 16 யாக குண்டங்களில் திருமலை திருப்பதி தேவஸ்தான தலைமை அர்ச்சகர் சேஷாத்ரி தலைமையில் 60 அர்ச்சகர்கள் யாகசாலை பூஜை நடத்தினர் யாகசாலை பூஜை நடைபெறும் இடம் வாழைத் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டு காட்சி அளிக்கப்பட்டது.

     27ம் தேதி காலை 7.30 மணிக்கு மேல் 9 மணிக்குள் கும்பாபிஷேகம் நடக்கிறது அன்று மாலை 4 மணி முதல் 5 மணிவரை சீனிவாச கல்யாணம் நடைபெறுகிறது கும்பாபிஷேக நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

  • January 24 – Rasi Palangal

    ஜனவரி 24 
    விளம்பி வருடம் – தை 10
    24-ஜன-2019 வியாழன்  
    கரிநாள்
    நல்ல நேரம்    :    10.30 – 12.00    
    ராகு    :    1.30 – 3.00    
    குளிகை    :    9.00 – 10.30
    எமகண்டம்    :    6.00 – 7.30                          
    திதி    :    சதுர்த்தி          
    திதி நேரம்    :    சதுர்த்தி    இ    2.34
    நட்சத்திரம்    :    பூரம்    இ    11.42
    யோகம்    :    சித்த-மரண யோகம்
    சந்திராஷ்டமம்    :    அவிட்டம்,சதயம்
    சூலம்    :    தெற்கு
    பரிகாரம்    :    தைலம்

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் –   கீர்த்தி 
    ரிஷபம் – நன்மை 
    மிதுனம் – சிரமம் 
    கடனம் –  நஷ்டம் 
    சிம்மம் – கவலை 
    கன்னி – பக்தி 
    துலாம் –  நட்பு
    விருச்சிகம் – பாசம் 
    தனுசு – வெற்றி 
    மகரம் – ஓய்வு
    கும்பம் – அமைதி
    மீனம் – மகிழ்ச்சி

  • Thirupathyil Radha Sapdhami

    திருப்பதி திருமலையில் பிப்ரவரி 12 அம் தேதி ரதசப்தமி விழா நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. திருப்பதியில் ஆண்டுதோறும் ரதசப்தமி எனப்படும் சூரிய ஜெயந்தி உற்சவம் மிக சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. 

    ரதசப்தமி அன்று ஒரே நாளில்  7 வாகன சேவைகளில் திருப்பதி ஏழுமலையான் மாட வீதிகளில் பவனி வருகிறார்.  ரதசப்தமியை தரிசிக்க திருப்பதிக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். எனவே ரதசப்தமி விழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ரதசப்தமி அன்று நடைபெறவுள்ள வாகன சேவைகளின் பட்டியலை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது. 

    அதன் விவரம் வருமாறு:-

    காலை 5.30 மணி முதல் 8 மணி வரை சூரிய பிரபை வாகனம். காலை 9 மணி முதல் 10 மணி வரை சின்னசே‌ஷ வாகனம். காலை 11 மணி முதல் 12 மணி வரை கருட வாகனம். மதியம் 1 மணி முதல் 2 மணி வரை அனுமந்த வாகனம். மதியம் 2 மணி முதல் 3 மணி வரை தீர்த்தவாரி. மாலை 4 மணி முதல் 5 மணி வரை கல்பவிருட்ச வாகனம். மாலை 6 மணி முதல் 7 மணி வரை சர்வபூபால வாகனம். இரவு 8 மணி முதல் 9 மணி வரை சந்திரபிரபை வாகனம் போன்ற வாகன சேவைகள் நடைபெறுகிறது.