Author: லிங்கேஷ்

  • Muruganukku Ugandha Kizhamai

    வருவாய் அதிகரிக்க வேண்டுமானால் செவ்வாய்க்கிழமை விரதம் இருக்க வேண்டும் என்று முன்னோர்கள் சொல்வார்கள். வாரத்தின் ஏழு நாட்களில் மூன்றாவது நாளாக இடம் பிடிப்பது செவ்வாய்க் கிழமை. 

    பொருளாதார நிறைவையும் வழங்குவது அங்காரகன்தான். அந்த அங்காரகனுக்குரிய தெய்வமாக விளங்குவது முருகப்பெருமான் மற்றும் சக்தி தேவி. முருகப் பெருமான், சக்தி தேவி, அம்பிகைக்கு உகந்த நாளான செவ்வாய் கிழமை இந்த தெய்வங் களை வணங்கினால் கவலைகள் அகலும். 

    செந்நிற ஆடை அணிந்து வழிபாட்டில் பங்கேற்பது; நைவேத்தியமாக அன்றை தினம் அங்காரகனுக்கு முக்கியத்துவம் உகந்த நாளாகும். தங்குதடை இல்லாத வாழக்கையும், தன்னிகரில்லாத அளவு புகழும், மங்கல வாய்ப்பு களையும், மாபெரும் சக்தியையும் பொங்கி வரும் உள்ளத்தில் தன்னம்பிக்கையையும், செந்நிற கனிவைத்து தீபாராதனை செய்ய வேண்டும்.
     

  • Sivan Malai Theertha kavasam

    சிவன்மலை முருகன் கோயில் ஆண்டவன் உத்தரவு கண்ணாடி பெட்டியில் தீர்த்தக்  கலசம் வைக்க உத்தரவு வந்து இருக்கிறது. 

    சிவன்மலை சுப்ரமணிய சுவாமி கோயிலில் உத்தரவு பொருள் மாற்றப்பட்டுள்ளது. கண்ணாடிப் பேழையில் காவிரி தீர்தத்துடன் கலசம் வைக்க உத்தரவு வந்துள்ளது. கரூரைச் சேர்ந்த பாஸ்கர் என்பவர் கனவில் கடவுள் தோன்றி தீர்த்தக் கலசம் வைக்க உத்தரவு கொடுத்ததையடுத்து காவிரி தீர்தத்துடன் கலசம் வைக்கப்பட்டுள்ளது. 

    திருப்பூர் மாவட்டம், காங்கயம் அருகே உள்ள சிவன்மலையில் புகழ்பெற்ற சுப்பிரமணிய சுவாமி  முருகன் கோயிலில் ஆண்டவன் உத்தரவு என்ற பெயரில் ஏதாவது ஒரு பொருளை வைத்து சிறப்பு பூஜை செய்வது வழக்கம். பின்னர் அந்தப் பொருள் கோயில் மூலவர் அறைக்கு முன்பாக கற்தூணில் உள்ள கண்ணாடிப் பேழைக்குள் பக்தர்கள் பார்வைக்கு வைக்கப்படும்.

    இந்தக் கண்ணாடிப் பேழைக்குள் என்ன பொருளை வைக்க வேண்டும் என்பதை சிவன்மலை முருகனே பக்தர்களின் கனவில் வந்து உத்தரவிடுவதாகக் கூறப்படுகிறது. இதனால்தான் இது ஆண்டவன்  உத்தரவு' என்று அழைக்கப்படுகிறது. இப்படி கண்ணாடிப் பேழைக்குள் வைக்கப்படும் பொருளுக்கு கால நிர்ணயம் எதுவும் இல்லாமல் இன்னொரு பக்தரின் கனவில் வந்து அடுத்த பொருளை சுட்டிக்காட்டும் வரையில் பழைய பொருள் கண்ணாடிப் பேழைக்குள் வைக்கப்பட்டிருக்கும். 

    கடைசியாக, கடந்த அக்டோபர் 26ஆம் தேதி 3 கதிர் அறுக்கும் அரிவாள்கள் வைத்து பூஜை செய்யப்பட்டு, அந்த அரிவாள்கள் புதன்கிழமை வரை கண்ணாடிப் பேழைக்குள் வைக்கப்பட்டிருந்தன. 

    இந்நிலையில், கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை பகுதியைச் சேர்ந்த பாஸ்கரன் என்ற பக்தரின் கனவில் வந்ததாகக் கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து சுவாமி சன்னதியில் வெள்ளை மற்றும் சிவப்பு நிற பூக்கள் வைத்து உத்தரவு கேட்கப்பட்டது. இதில் வெள்ளை நிற பூ விழுந்ததை அடுத்து  சிவன்மலை கோயிலில் காவிரி நீர் அடங்கிய தீர்த்தக் கலசம் வைக்கப்பட்டுள்ளது. சிறப்பு பூஜை செய்யப்பட்ட பின், கண்ணாடிப் பேழைக்குள் இந்த தீர்த்தக் கலசம் பக்தர்களின் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது.

    பொதுவாக இந்த கண்ணாடிப் பேழைக்குள் வைக்கப்படும் பொருள் சமுதாயத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. தற்போது தீர்த்த கலசம் வைக்கப்பட்டுள்ளதால், கன மழை அல்லது கடும் வறட்சி ஏற்படுமா என்ற கேள்வி பக்தர்களின் மனதில் எழுந்து இருக்கிறது. 

  • Indraya Rasi Palangal

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் –   உதவி 
    ரிஷபம் – வரவு 
    மிதுனம் – பயம்  
    கடனம் –  நன்மை 
    சிம்மம் – தாமதம்  
    கன்னி – உயர்வு
    துலாம் –  இன்பம் 
    விருச்சிகம் – பரிசு 
    தனுசு – பெருமை 
    மகரம் – ஆதாயம் 
    கும்பம் – புகழ்
    மீனம் – முயற்சி
    சந்திராஷ்டமம்    :    பூரம்,உத்திரம்

  • Indraya Naal eppadi

    பிப்ரவரி 8
    விளம்பி வருடம் – தை 25
    சதுர்த்தி
    08-பிப்-2019 வெள்ளி  
    நல்ல நேரம்    :    9.00 – 10.30    
    ராகு    :    10.30 – 12.00    
    குளிகை    :    7.30 -9.00
    எமகண்டம்    :    3.00 – 4.30                          
    திதி    :    சதுர்த்தி          
    திதி நேரம்    :    திரிதியை    கா    8.57
    நட்சத்திரம்    :    பூரட்டாதி    ம    1.44
    யோகம்    :    சித்த யோகம்
    சூலம்    :    மேற்கு
    பரிகாரம்    :    வெல்லம்
     

  • Kadan Thollai Teera Koil

    மும்மூர்த்திகளின் அம்சத்தோடு ஒரு பெருமாள் சிலையை பார்த்திருக்கிறீர்களா?

    ஒரு பெரிய மருத்துவமனையாக செயல்பட்ட இடத்தின் மிச்சங்கள் முழுமையாக இருப்பதை பார்த்திருக்கிறீர்களா?

    1100 ஆண்டுகளுக்கு முன் மருத்துவம், கலைகள், தொழில் என பலதுறைகளை கற்றுக்கொடுத்த இடம் இப்போதும் சென்னைக்கு அருகில் இருப்பதை நீங்கள் அறிவீர்களா?

    இத்தனைக்கும் ஒரே பதில் திருமுக்கூடல்.

    வேகவதி, பாலாறு, செய்யாறு என மூன்று ஆறுகள் கூடும் இடம், இப்போது வறண்டு போய் வெறும் மணலாய் காட்சியளித்தாலும், அப்போது 3 ஆறுகளும் கட்டற்று பாய்ந்த இடம். ஒரு பக்கம் குதிரைப்படை, யானைப்படைகள் குளிக்க, இளைப்பாற இந்த முக்கூடல்தான் இடம் தந்திருக்கிறது. 

    மிகச்சரியாக மூன்று ஆறுகள் கூடும் இடத்தில், நுழைவு கோபுரம் இல்லாமல், காட்சியளிக்கும் கோயிலில் வேங்கடேச பெருமாள் உறைகிறார். 

    நுழைந்ததும் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இருப்பதை உணர்த்தும் வகையில் மிகவும் தூய்மையாக அழகாக நந்தவனத்தோடு காட்சியளிக்கிறது.

    வரதர், ஆண்டாள், தனித்தனி சன்னதிகளில் எழுந்தருளி இருக்கிறார்கள். தாயார் அலமேலு மங்கையாக காட்சியளிக்கிறார். 

    தலத்தின் நாயகனான வேங்கடேசப்பெருமாளைப் பார்க்கும் ஆவலுடன் எட்டி நடைபோட்டால், வடக்கு பார்த்த விதத்தில் நின்றவண்ணம் அருள்பாலிக்கிறார் எம்பெருமான்.

    ஏன் இரு கண்களை மட்டும் படைத்திருக்கிறான் இறைவன். இன்னும் இன்னும் பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல பேரழகாக எழுந்து நிற்கிறான் பெருமான். கண்கள் போதவில்லை, கொஞ்சம் விட்டால் நம்முடன் கிளம்பி வந்துவிடுவான் இந்த வேங்கடேச பெருமான். அப்படியொரு அன்பும், கருணையும் பொங்கி வழிகிறது இவனிடத்தில்.  

    கருவறையில், திருப்பதி போலவே சங்கு, சக்கரம் தனியாக பிரதிஷ்டை செய்யப்பட்டு இருக்கிறது. சங்கு சக்கரம் இறைவனின் இடப்புறம் காட்சியளிக்கிறது. 

    வேங்கடேசனின் வலப்புறம் மார்க்கண்டேயர், பிருகு மகரிஷி,  தாயார் காட்சியளிக்கிறார்கள். வழக்கமாக சயன கோலத்தில் இருக்கும் பெருமாளுடன் காட்சியளிக்கும் இவர்கள், நின்ற கோலத்தில் அருள்தரும் வேங்கடேசனுடன் இருக்கிறார்கள். 

    அதற்கொரு காரணம் இருக்கிறது. பக்தனுக்காக எம்பெருமான் தனது தோற்றத்தையே மாற்றிக்கொண்ட நெகிழ்ச்சி தரும் புராணம். 

    தொண்டைமான் மன்னன் திருப்பதிக்கு போக நினைக்கிறான். அதுவோ பகைவன் நாட்டை நெருங்கும் நேரம். பக்தனாக தவிக்கிறான் மன்னன். பக்தனுக்காக தவிக்கிறான் இறைவன். 

    சங்கு சக்கரத்தை அனுப்பி பகைவனை விரட்டி பக்தனுக்கு அருள் பாலிக்கிறார். இறைவனின் அருளை எண்ணி மனம் உருகி, அப்பா என்றழைத்து ஆனந்த கண்ணீர் வடிக்கிறான் தொண்டைமான் மன்னன். அந்த அழைப்பின் ஒலி இன்றளவும் ஸ்ரீ அப்பன் வேங்கடேச பெருமாள் என்ற அழைப்பாக பக்தர்களிடத்தில் ஒலிக்கிறது. 

    அப்படி பக்தனின் அனுக்கனாக உள்ள வேங்கடேச பெருமாள், தன்னை நோக்கி வரும் மன்னன் தொண்டைமானுக்காக சயன கோலத்தில் இருந்து அவசரமாக எழுந்து மன்னன் பார்க்க ஆசைப்பட்ட திருப்பதி பெருமாளின் நின்ற கோலத்தில் அருள் தருகிறார்.

    மன்னனாக வந்ததற்காக மாறவில்லை. அன்பனாக, பக்தியுடன் பரிதவித்த ஒரு உயிருக்கு அருள்பாலிக்கும் வேகத்தில் எழுந்து நின்ற இறையின் தரிசனம். 

    இப்பெருமானின் வலக்கரத்தில் பிரம்மனின் அம்சமாக தாமரை ஜொலிக்கிறது. சிவபெருமானின் ஜடா முடி கிரீடத்துடன் பெருமாளின் தலையை அலங்கரிக்கிறது. மும்மூர்த்திகளையும் ஒரேசேர தரிசிக்க இரண்டு கண்கள் போதாது என்று சொன்னது உண்மை என்று நீங்களும் உணர்வீர்கள்.. 

    கோயிலில் உள்ள அனுமனுக்கு வடைமாலை சாத்தப்படுவதில்லை. தேன்குழல்தான் சாத்தப்படுகிறது. மிகவும் சக்திவாய்ந்தவராக மெய்சிலிர்க்கிறார்கள் பக்தர்கள். வேங்கடேச பெருமாள் கோயிலில் எழுந்தருளியுள்ள அனுமன் பக்தர்களின் கடன்பிரச்னைகளை தீர்த்து மனநிம்மதி தருவதாக ஐதீகம். அதனால், கண்குளிர கண்டு அனுமனின் அருள்பெற்று திரும்புகிறார்கள்.

    இத்திருக்கோயிலில் பொங்கலையொட்டி நடக்கும் பரிவேட்டை மிகவும் பிரசித்தி பெற்றது. 

    கோயிலின் கிழக்குப் புறச்சுவரில் உள்ள கல்வெட்டில் இங்கு சிறப்பான மருத்துவமனை ஒன்று செயல்பட்டதற்கான ஆதாரம் இருக்கிறது. 

    தமிழிலும், கிரந்த எழுத்துகளிலும் செதுக்கப்பட்டுள்ள கல்வெட்டுகள் பதினொன்றாம் நூற்றாண்டை சேர்ந்ததாக கண்டறியப்பட்டிருக்கிறது.

    பதினொன்றாம் நூற்றாண்டில் 15 பேர் ஒரேநேரத்தில் சிகிச்சை பெறும் வகையில் 15 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை செயல்பட்டிருக்கிறது. நோயுற்ற, காயமடைந்த படை வீரர்கள் மற்றும் மக்களுக்கு மருத்துவ சிகிச்சைகள், அறுவை சிகிச்சைகள், அவர்களுக்கான மருந்துகள், மருந்துகளை தயாரிக்கும் ஆதூர சாலைகள் என நேர்த்தியாக செயல்பட்ட மருத்துவமனை இருந்திருக்கிறது. 

    கோயில் கல்வெட்டில் படி எடுக்கப்பட்டதன்படி எந்தெந்த நோய்க்கு என்ன மருந்து என்று தெளிவாக எழுதப்பட்டுள்ளது. அதைப் பார்த்ததும் நம் முன்னோர்களின் மருத்துவத்திறன் வியப்பை ஏற்படுத்துகிறது.

    திருமுக்கூடல் கல்வெட்டானது ஆதூர சாலையில் சேமித்து வைக்கப்பட்டிருந்த மருந்துகளின் பட்டியல் மருந்து வகைகள் ஓராண்டுக்கு தேவையான அளவில் சேர்த்துவைக்கப்பட்டிருந்தன. அந்த மருந்துகள் மாத்திரைகள், பொடிகள் கரைசல்கள், திரவங்கள், லேகியங்கள் போன்றவையும் இருந்துள்ளன.

    இக்கோயிலில் சுற்றுப்புறக்கூடங்களும், ஜனநாத மண்டபமும் ஹைஷ்ய மாதவன் தமயன் என்பவனாலும் கட்டப்பட்டுள்ளது. வேதங்கள், சாத்திரங்கள், இலக்கணம் மற்றும் மருத்துவம் போன்றவற்றை கற்றுக்கொடுக்கும் பள்ளியும், மாணவர்களுக்கான தங்கும் விடுதியும், மருத்துவ விடுதியும் ஜனநாத மண்டபத்தில் நிறுவப்பட்டிருந்தன. மருத்துவமனையையும், இம்மண்டபத்தையும் காவல் காத்த திருமுக்கூடல்பேரய்யன் என்பவனுக்கு நாள் ஒன்றுக்கு நான்கு நாழி நெல்லும், ஒரு காசும் ஊதியமாக வழங்கப்பட்டு வந்தது என்ற குறிப்பும் கல்வெட்டில் இருக்கிறது. 

    கோயிலுக்கு செல்லும் வழி
    செங்கல்பட்டில் இருந்து பழைய சீவரம் சென்றால், திருமுக்கூடலை தரிசித்து வேங்கடேசனை கைதொழலாம். சென்னையில் இருந்து ஏறக்குறைய 70 கிலோமீட்டர் தொலைவுதான். 
    1100 ஆண்டுகளுக்கு முன் கல்விசாலை, மருத்துவமனை, படைகள் பரிபாலனம், என பண்பட்டு வாழ்ந்த மக்கள் இருந்த மண்ணை போற்றுவோம்.
    வாவென்று கைநீட்டி அழைத்தால் மனதில் வந்து குடியேறி கலி தீர்க்கும் தெய்வத்தை தொழுவோம்.

    ஓம் நமோ நாராயணாயா ! 

    (இந்த கோயிலின் அறியவகை புகைப்படங்கள் கீழே உள்ள போட்டோ கேலரியில் காணலாம்)

    – எழுத்தாளர் பாமா

  • Thirunallaru Yagasalai poojai thodangiyadhu

    திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் வரும் 11 ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற இருக்கிறது. கும்பாபிஷேகத்தையொட்டி முதல் கால யாகசாலை பூஜை தொடங்கி உள்ளது. 

    கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வாஸ்து சாந்தி பூஜையும், தீர்த்த சங்ரகணம் பூஜையும் நடைபெற்றது. தொடர்ந்து கால யாகசாலை பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கி உள்ளது. 
     
    வருகிற 11-ந் தேதி அதிகாலை 4 மணிக்கு 8-ம் கால யாகசாலை நிறைவு பெறுகிறது. கும்பாபிஷேகம் முடியும் வரை சன்னதி வழியாக சாமி தரிசனம் செய்ய இயலாது. அதனால் யாகசாலை பூஜைகளில் பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்யலாம். விழாவில் கலந்துகொள்ளும் பக்தர்களுக்கு குடிநீர், கழிவறை, பஸ், அன்னதானம் உள்பட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

    கோவிலின் எந்த பகுதியில் இருந்து கும்பாபிஷேகத்தை தரிசித்தாலும் அவர்கள் மீது புனிதநீர் தெளிக்க விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    கும்பாபிஷேக விழாவில் கவர்னர் கிரண்பெடி, முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.

  • Thirupathy Break Dharisanam

    திருமலையில் வி.ஐ.பி. பிரேக் தரிசனங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. ரதசப்தமி உற்சவத்தை முன்னிட்டு வரும் 11 மற்றும் 12 ஆம் தேதி வி.ஐ.பி. தரிசனம் ரத்து செய்யப்படுவதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் கூறி உள்ளது. 

    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ரதசப்தமி உற்சம் விமரிசையாக நடைபெறும். இந்தாண்டு ரதசப்தமி பிப்ரவரி 12 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அன்று ஒரு நாள் 7 வாகனங்களில் மலையப்ப சுவாமி மாடவீதியில் வலம் வர உள்ளார்.

    மாட வீதியில் மலையப்ப சுவாமி வலம் வரும் அழகான காட்சியைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் திருமலையில் குவிவது வழக்கம். இந்தாண்டு அவ்வாறு எதிர்பார்க்கப்படுகின்றது. எனவே, பிப்ரவரி 11 மற்றும் பிப்ரவரி 12-ம் தேதிகளில் பரிந்துரைக் கடிதங்கள் மூலம் வழங்கும் விஐபி பிரேக் தரிசனத்தை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.

    மேலும் அந்த நாள்களில் விஐபி-க்கள் நேரடியாக வந்தால் மட்டும் தரிசனம் வழங்கப்படும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. 12-ம் தேதி தர்ம தரிசனம், நடைபாதை மார்க்கத்தில் நடந்து செல்லும் பக்தர்களுக்கான திவ்ய தரிசனம் ஆகியவற்றைத் தவிர்த்து மற்ற அனைத்து தரிசனங்களையும் தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.

  • Sivalayangalil valam varuvadhu eppadi

    பிரதோஷ விரதம் மேற்கொண்டால் திருமணம் கைகூடும், பிள்ளை பாக்கியம் கிடைக்கும், வறுமைவிலகும்,நோய்கள் நீங்கும், சகலகாரியங்களில் வெற்றிகிடைக்கும், சகல சௌபாக்கியங்களையும் தரக்கூடியது பிரதோஷவிரதம்.

    பிரதோஷ காலம் என்பது சூரியன் அஸ்தமனத்திற்கு முன் மூன்றே முக்கால் நாழிகையும் சூரியன் அஸ்தமனத்திற்கு பின் மூன்றே முக்கால் நாழிகையும் ஆகும். ஒருநாழிகை என்பது 24 நிமிடங்கள். ஒரு மணிக்கு இரண்டரை நாழிகைகள்.ஆக சராசரியாக மாலை 4 மணியில் இருந்து இரவு 7.30 வரை பிரதோஷ காலம் உண்டு. சவுகரியத்திற்காக மாலை 4.30 முதல் 6.00வரை என சொல்லப்படுகிறது.

    சிவாலயங்களை பிரதோஷ காலத்தில் பின்வருமாறுதான் வலம் வர வேண்டும். இந்த பிரதட்சணம் சோம சூக்த பிரதட்சணம் என்று வழங்கப்படுகிறது

    நந்தி பெருமானிடம் இருந்து புறப்பட்டு இடப்புறமாக சென்று சண்டிகேஸ்வரரை வணங்கி அங்கிருந்து திரும்பி நந்திபெருமானிடம் வணங்கி இரு கொம்புகளிடையே சிவதரிசனம் செய்து அங்கிருந்து வலப்புறமாக சென்று கோமுகி வரை சென்று கோமுகியை வணங்கி பின்னர் திரும்பி நந்தி தேவரிடம் வந்து வணங்கி சண்டிகேஸ்வரரை வணங்க வேண்டும். 

    பின்னர் அங்கிருந்து திரும்பி நந்திதேவரை வணங்கி கோமுகியை வணங்கவேண்டும். அங்கிருந்து வந்து சண்டிகேஸ்வரரை வணங்கிவிட்டு நந்தி தேவரிடம் பிரதட்சணத்தை முடிக்க வேண்டும். இது சோமசூக்த பிரதட்சணம் என்று வழங்கப்படுகிறது.
     

  • Indraya Rasi Palangal

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் –   ஜெயம் 
    ரிஷபம் – ஆதாயம் 
    மிதுனம் – அசதி 
    கடனம் –  நன்மை 
    சிம்மம் – வருத்தம் 
    கன்னி – அமைதி
    துலாம் –  செலவு  
    விருச்சிகம் – பயம் 
    தனுசு – கவலை
    மகரம் – உயர்வு 
    கும்பம் – வெற்றி 
    மீனம் – தாமதம் 
    சந்திராஷ்டமம்    :    மகம்,பூரம்
     

  • Trithiyai Naal Indru

    பிப்ரவரி 7
    விளம்பி வருடம் – தை 24
    07-பிப்-2019 வியாழன் 
    நல்ல நேரம்    :    10.30 – 12.00    
    ராகு    :    1.30 – 3.00    
    குளிகை    :    9.00 – 10.30
    எமகண்டம்    :    6.00 – 7.30                          
    திதி    :    திரிதியை          
    திதி நேரம்    :    துவிதியை    கா    7.10
    நட்சத்திரம்    :    சதயம்    கா    11.31
    யோகம்    :    மரண-சித்த யோகம்
    சூலம்    :    தெற்கு
    பரிகாரம்    :    தைலம்