Author: லிங்கேஷ்

  • Ragu kedhu peyarchi podhu palangal

    ஏற்றம் தரும் ராகு பெயர்ச்சி – ஞானம் தரும் கேது பெயர்ச்சி

    பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் MCA., MBA., MA

    Mobile/WhatsApp: +91 7845119542

    நிகழும் மங்களகரமான ஸ்வஸ்திஸ்ரீ விளம்பி வருஷம் உத்தராயனம் சிசிரரிது மாசி மாதம் 01ம் தேதி – 13.02.2019 சுக்லபக்ஷ நவமி – கிருத்திகை நக்ஷத்ரம் – புதன்கிழமை – மாஹேந்திர நாமயோகம் – பாலவ கரணம் – அமிர்தயோகம் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி நாழிகை 18.29க்கு (உதயாதி பகல் மணி 02.02க்கு) மிதுன லக்னத்தில் ராகு பகவான் கடக ராசியில் இருந்து மிதுன ராசிக்குள் பிரவேசிக்கிறார். 

    நிகழும் மங்களகரமான ஸ்வஸ்திஸ்ரீ விளம்பி வருஷம் உத்தராயனம் சிசிரரிது மாசி மாதம் 01ம் தேதி – 13.02.2019 சுக்லபக்ஷ நவமி – கிருத்திகை நக்ஷத்ரம் – புதன்கிழமை – மாஹேந்திர நாமயோகம் – பாலவ கரணம் – அமிர்தயோகம் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி நாழிகை 18.29க்கு (உதயாதி பகல் மணி 02.02க்கு) மிதுன லக்னத்தில் கேது பகவான் மகர ராசியில் இருந்து தனுசு ராசிக்குள் பிரவேசிக்கிறார். 

    ராகு கேது – ஓர் அறிமுகம்:
    ராகு – கேதுக்கள் சகோதரர்களாவார்கள். ராகுவும் கேதுவும் சாயா கிரகங்கள் என்று அழைக்கப்படும். ஆனால் மற்ற கிரகங்களுக்கு இல்லாத ஒரு சிறப்பு இந்த கிரகங்களுக்கு உண்டு. எந்த வீட்டில் இருக்கிறார்களோ அவர்களது ஆதிபத்தியத்தை இந்த கிரகங்கள் நமக்குக் கொடுப்பார்கள். உதாரணமாக ஜெனன கால ஜாதகத்தில் மேஷ ராசியில் ராகு இருக்கிறார் என்றால் அவர் மேஷ ராசியின் அதிபதியாகிய செவ்வாயின் ஆதிபத்தியத்தை எடுத்துக் கொள்வார். 

    அறிவியல் பூர்வமாக நமது DNAதான் நம்மைப் பற்றியும் நமது முன்னோர்களைப் பற்றியும் சொல்லும் விஷயமாகும். ராகு – கேது என்னும் கிரகங்கள் DNA போலதான். ராகுவை வைத்து தகப்பானார் வழிகளையும் – கேதுவை வைத்து தாயார் வழிகளையும் புரிந்து கொள்ள இயலும். எனவே தான் ராகு தந்தை வழி காரகன் என்றும் கேதுவை தாய் வழி காரகன் என்றும் சொல்கின்றனர். 

    ராகு கேதுக்களை வைத்துதான் தார தோஷம்- களத்திர தோஷம் – பிதுர் தோஷம் – புத்திர தோஷம் போன்றவற்றை சொல்ல முடியும்.
    கல்வி – ஞானம் – திருமணம் – மக்கட்பேறு – வேலை – வெளிநாடு சம்பாத்தியம் – கர்மா போன்ற நமது வாழ்வின் இன்றியமையாத காரகங்களுக்கு ராகு கேது முக்கியமானவர்களாகும்.

    பொது பலன்கள்:
    பொதுவில் உலகளவில் அரசு சார்ந்த விஷயங்களில் சிறிது பிரச்சனைகள் தலைதூக்கலாம். உத்திர நக்ஷத்ரத்தில் ராகுவும் – பூரட்டாதி நக்ஷத்ரத்தில் கேதுவும் சஞ்சாரம் செய்கிறார்கள். ராகுவினுடைய அம்சம் என்பது குருவினுடைய நக்ஷத்ரம் – புதன் ராசியில் சஞ்சரிக்கிறார். கேது சூரியனுடைய நக்ஷத்ரம் – குருவின் ராசியில் இருக்கிறார். அரசாங்கம் ஒவ்வொரு முடிவையும் தவறாக எடுப்பதும் அதற்கு பரிகாரமாக மேல் மட்டத்தில் இருக்கும் அதிகாரிகள் அதை சரி செய்வதுமாக இருக்கும். ராகுவினுடைய மாற்றம் புதன் வீட்டில் இருக்கிறது.

    சனியின் பார்வை ராகுவின் மீது விழுகிறது. நாடுகளுக்குள் மோதல்கள் வரலாம். இவ்வருடம் வெப்பம் அதிகமாக இருக்கும். பணநடமாட்டம் சீராக இருக்கும். கல்வி சார்ந்த விஷயங்களில் தொய்வு ஏற்படும். அதே வேளையில் குருவின் வீட்டில் கேது சாரம் இருப்பதன் மூலம் ஆன்மீகம் மிக அதிகமான வளர்ச்சி காணும். பூமி நிலம் சம்பந்தாமான பிரச்சனைகள் அதிகமாவதும் அதை தீர்க்க நீதிமன்றத்தை நாடுவதும் அதிகமாகும். அறுவை சிகிச்சை சம்பந்தமான புதிய கண்டுபிடிப்பு உருவாகும்.

    அதே வேளையில் கேதுவிற்கு முதல் கேந்திரத்தில் சனி பகவான் இருக்கிறார். ஆன்மீகம் – கோவில் சம்பந்தமான பிரச்சனைகளில் சிறிது சுணக்கம் ஏற்படும். ராகு – கேது சஞ்சாரம் செய்யும் இடங்களால் கலப்புத் திருமணங்கள் அதிகமாகும். நிலம் – நீர் – காற்று – ஆகாயம் – நெருப்பு என பஞ்சபூதங்கள் மூலமாகவும் மக்களுக்கு பிரச்சனைகள் ஏற்படும். தற்கொலைகள் அதிகமாகும். 

    பொது பரிகாரம்:
    ராகுவும் கேதுவும் நாகம் சம்பந்தமான கிரகங்கள் என்பதால் அடிக்கடி நாகதேவதையை வணங்குவது நல்லது.

    ராகுவிற்கு ஸ்ரீதுர்க்கை அம்சமுள்ள அம்மனையும் – கேதுவிற்கு வினாயகர் – ஆஞ்சநேயரையும் வணங்குவது நன்மை தரும்.

    பெயர்ச்சியால் நன்மை அடையும் ராசிகள்:
    மேஷம் – மிதுனம் – கடகம் – சிம்மம் – கன்னி – துலாம் – தனுசு – மகரம்

    பெயர்ச்சியால் பரிகாரத்தின் மூலம் நன்மை அடையும் ராசிகள்:
    ரிஷபம் – விருச்சிகம் – கும்பம் – மீனம்
     

  • Rasi palangal

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் –   ஊக்கம் 
    ரிஷபம் – அமைதி
    மிதுனம் – ஓய்வு 
    கடனம் –  பக்தி 
    சிம்மம் – தனம் 
    கன்னி – போட்டி 
    துலாம் –  அசதி
    விருச்சிகம் – சினம்  
    தனுசு – நற்செயல்
    மகரம் – பணிவு 
    கும்பம் – ஆர்வம் 
    மீனம் – சாதனை
    சந்திராஷ்டமம்    : சுவாதி, விசாகம்
     

  • Feb 12 – Radham Sapdhami

    பிப்ரவரி 12
    விளம்பி வருடம் – தை 29
    ரத சப்தமி
    12-பிப்-2019 செவ்வாய்  
    நல்ல நேரம்    :    7.30 – 9.00    
    ராகு    :    3.00 – 4.30    
    குளிகை    :    12.00 – 1.30
    எமகண்டம்    :    9.00 – 10.30                          
    திதி    :    அஷ்டமி          
    திதி நேரம்    :    சப்தமி    கா    11.44
    நட்சத்திரம்    :    பரணி    மா    6.18
    யோகம்    :    சித்த யோகம்
    சூலம்    :    வடக்கு
    பரிகாரம்    :    பால்
     

  • Thyagarjar Swami koil masi thiruvizha

    பூலோகம் கைலாயம் என்று அழைக்கப்படும் திருவொற்றியூர் தியாகராஜ சுவாமிதிருகோவிலில் மாசி உற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    உலக பிரசித்தி பெற்ற 2000 ஆயிரம் ஆண்டுகள்  பழமை வாய்ந்த, திருவொற்றியூர் தியாகராஜசுவாமி , வடிவுடையம்மன் கோவிலில் மாசி திருவிழா பத்து நாள் பிரம்மோற்சவம்   ஆண்டு தோறும் மாசிமாதம் நடைபெறுகிறது. 

    இந்நிலையில் திருவிழாவை முன்னிட்டு 108 சங்க நாதங்கள் முழங்க பரிவர்த்தனைகளுடன் கலச பூஜைகளுடன்  வாத்தியங்கள் ஒலிக்க  வெகு விமரிசையாக  கொடியேற்றப்பட்டது
     10 ம் தேதி முதல் தொடங்கப்படும் மாசி உத்சவம் 20 ம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது.

    தினமும் உற்சவர் தியாகராஜர் , சூரிய பிரபை, சந்திர பிரபை, நாகவாகனம், அதிகாரநந்தி யானை வாகனம் என  தினதோரும்  பக்தர்களுக்கு காட்சியளிப்பார். முக்கிய நிகழ்வான திருத்தேர் ஓட்டம் 16 ம் தேதி சனிக்கிழமை நடைபெறவுள்ளது.

     இதனையடுத்து 18 ம் தேதி ஒன்பதாம் நாள் திங்கட்கிழமைகல்யாண சுந்தரர்  சங்கிலி நாச்சியார்  திருக்கல்யாண உத்சவம் நடைபெறுகிறது இதற்க்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்துள்ளனர்
     

  • Ranganathar koil maha kumbabishegam

    கோவை பெரியநாயக்கன்பாளைம் அருகே மேற்குதொடர்ச்சி மலையிலுள்ள பாலமலையில் தென்திருப்பதி என்றழைக்கப்படும் பிரசித்தி பெற்ற மிகவும் பழமையான ஸ்ரீ செங்கோதை அம்மன், ஸ்ரீபூங்கோதை அம்மன் சமேத அருள்மிகு அரங்கநாதர் திருக்கோவிலில் மஹா கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது. 

    இந்த கோவிலில் தாயார், அரங்கநாதருடன் தன்வந்திரி பகவான், ஆஞ்சிநேயர், சக்கரத்தாழ்வார் பன்னிரு ஆழ்வார்கள், கருடாழ்வார், தும்பிக்கையாழ்வார்,  ராமானுஜர் கோயில்கள் உள்ளன. மேலும் இக்கோயில் உருவாக பெரும் பங்கு வைத்த பெரியவரான காளி தாசருக்கும் ஒரு கோயில் உள்ளது.

    கடந்த 8ம் தேதி மாலை 4 மணிக்கு ஆச்சார்ய வர்ணத்துடன் தொடங்கிய விழாவில் மகாகணபதி ஹோமம், சங்கல்பம், முதல்கால யாக பூஜைகள், தீபாராதனை, 2ம் கால யாக பூஜை, பூர்ணாகுதி, பிம்பசுத்தி நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடர்ந்து இன்று காலை 9 மணியளவில் காரமடை அருள்மிகு ரங்கநாதர் திருக்கோவில் ஸ்ரீ சுதர்சன பட்டர் ஸ்வாமிகள் தலைமையில் மஹா கும்பாஷேகம் நடைபெற்றது. 

    இந்த விழாவில் யாக பூஜைகளில் இருந்து பூஜிக்கப்பட்ட புனித நீர் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு மூலவர் கோபுரம், அம்மன் கோபுரம், ராஜ கோபுரங்களில் உள்ள விமான கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. அதனை தொடர்ந்து பெருமாள் மற்றும் அம்மன் சாமிகளுக்கு சிறப்பு அலங்கார பூஜைகள், அபிசேக பூஜைகள் நடைபெற்றன. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். மேலும் 

    கவுண்டம்பாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.சி.ஆறுக்குட்டி இந்த விழாவில் கலந்து கொண்டு ஜமாப் குழுவினருடன் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடனமாடி பக்தர்களை உற்சாகப்படுத்தினார். அதனை தொடர்ந்து பஜனை குழுவினரின் பாடல்கள் நாள் முழுவதும் நடைபெற்றன. விழாவில் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. 

  • Thirukostiyur perumal koil theppa urchavam

    சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் பெருமாள் கோயிலில் மாசித் தெப்ப உற்ஸவ விழா தொடங்கி உள்ளது. 

    சிவகங்கை தேவஸ்தான ஆளுகைக்கு உட்பட்ட சவுமிய நாராயணப் பெருமாள் கோயிலில் மாசி தெப்ப உற்ஸவம் 11 நாட்கள் நடைபெறும். மூலவர் சன்னதியில் உத்தரவு வாங்குதல் போன்ற பூர்வாங்க பூஜைகள் நேற்று நடந்து இன்று  பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியருடன் நின்ற திருக்கோலத்தில் கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினார்.

    தொடர்ந்து   திருவீதி வலம் வந்து பின்னர் கொடியேற்றம் நடைபெற்றது   பெருமாளுக்கும் தேவியருக்கும் காப்புக் கட்டி உத்ஸவம் துவங்கியது இன்று இரவில் தங்கப் பல்லக்கில் பெருமாள் புறப்பாடு நடைபெறும். 

    தினசரி காலை மற்றும் இரவில் பெருமாள் திருவீதி புறப்பாடு நடைபெறும். பிப்.,15ல் ஆண்டாள் சன்னதியில் மாலை மாற்றுதல், பிப்.,7 ல் சூர்ணாபிஷேகம், பிப்.,18 ல் வெண்ணெய்தாழி சேவையும், பிப்.,19ல் பகல் 11:00 மணிக்கு பகல் தெப்பமும், இரவு 10:00 மணிக்கு இரவு தெப்பமும் நடைபெற உள்ளது மறுநாள் தீர்த்தவாரியுடன் உற்ஸவம் நிறைவடையும். 

    இவ்விழாவிற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது தெப்ப உற்சவத்தில் பல லட்சம் பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்க படுகிறது.

  • Boologanathar Koil Kumbabishegam

    சோழற்காலத்துக்கு முந்தைய 1800 ஆண்டு பழமை வாய்ந்த திருமங்கலம் பூலோகநாதர் ஆலய குடமுழுக்கு விழா வெகு விமர்சையாக நடைபெற்றுள்ளது. 

    நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே திருமங்கலம் கிராமத்தில் பழைமை வாய்ந்த பூலோகநாதர், பூலோகநாயகி தாயார் ஆலயம் அமைந்துள்ளது. கி.பி 3-ம் நூற்றாண்டுக்கு முந்தைய காலத்தை சார்ந்த இந்த ஆலயத்தில், ஒலி எழுத்துக்கள் எனப்படும் தற்போதைய தமிழ் எழுத்துக்களுக்கு முன்னோடியாக விளங்கிய குறியீடு எழுத்துக்கள் அடங்கிய பல்வேறு கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன. 

    இந்த ஆலயம் மிகவும் தொன்மை வாய்ந்ததாக கருதப்படுகின்றது. இந்த ஆலயத்தின் முன் மண்டபம், மகாமண்டபம், அர்த்தமண்டபம் ஆகியவற்றில் ஏராளமான கல்தூண்கள் அமைந்துள்ளன. இதில் நாட்டியக்கலையின் அபிநயங்கள் 60க்கும் மேற்பட்ட கையளவு சிற்பங்களாக செதுக்கப்பட்டுள்ளன. மேலும், இங்குள்ள காலசம்ஹார மூர்த்தி கல்லினால் செய்யப்பட்டவர். ஏராளமான சிற்பங்கள், கல்வெட்டுகள் இந்த ஆலயம் மற்றம் கருங்கற்கலால் கட்டப்பட்ட சுற்றுச்சுவர்களில் காணப்படுகின்றன. 

    புராதானமான சிறப்பு மிக்க இந்த ஆலயத்தின் கும்பாபிஷேகம்  நடைபெற்றது. யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு, கோபுரகலசங்களுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, கும்பாபிஷேகம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்
     

  • Rasi Palangal

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் –   ஆதாயம் 
    ரிஷபம் – ஜெயம் 
    மிதுனம் – நன்மை 
    கடனம் –  நிம்மதி
    சிம்மம் – உதவி 
    கன்னி – அமைதி
    துலாம் –  புகழ் 
    விருச்சிகம் – சுகம் 
    தனுசு – லாபம் 
    மகரம் – வெற்றி  
    கும்பம் – வரவு 
    மீனம் – களிப்பு

    சந்திராஷ்டமம்    : சித்திரை, சுவாதி

  • Feb 11 Sasti

    பிப்ரவரி 11 – சஷ்டி திதி
    விளம்பி வருடம் – தை 28
    11-பிப்-2019 திங்கள்  
    நல்ல நேரம்    :    6.00 – 7.30    
    ராகு    :    7.30 – 9.00    
    குளிகை    :    1.30 – 3.00
    எமகண்டம்    :    10.30 – 12.00                          
    திதி    :    சப்தமி          
    திதி நேரம்    :    சஷ்டி    கா    11.49
    நட்சத்திரம்    :    அசுவினி    மா    5.53
    யோகம்    :    சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    சித்திரை,சுவாதி
    சூலம்    :    கிழக்கு
    பரிகாரம்    :    தயிர்
     

  • Thirukostiyur Perumal koil theppa thiruvizha

    சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் பெருமாள் கோயிலில் மாசித் தெப்ப உற்ஸவ விழா இன்று துவங்கியது.

    சிவகங்கை தேவஸ்தான ஆளுகைக்கு உட்பட்ட சவுமிய நாராயணப் பெருமாள் கோயிலில் மாசி தெப்ப உற்ஸவம் 11 நாட்கள் நடைபெறும். மூலவர் சன்னதியில் உத்தரவு வாங்குதல் போன்ற பூர்வாங்க பூஜைகள் நேற்று நடந்து இன்று  பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியருடன் நின்ற திருக்கோலத்தில் கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினார்.

    தொடர்ந்து   திருவீதி வலம் வந்து பின்னர் கொடியேற்றம் நடைபெற்றது   பெருமாளுக்கும் தேவியருக்கும் காப்புக் கட்டி உத்ஸவம் துவங்கியது இன்று இரவில் தங்கப் பல்லக்கில் பெருமாள் புறப்பாடு நடைபெறும். தினசரி காலை மற்றும் இரவில் பெருமாள் திருவீதி புறப்பாடு நடைபெறும். 

    பிப்.,15ல் ஆண்டாள் சன்னதியில் மாலை மாற்றுதல், பிப்.,7 ல் சூர்ணாபிேஷகம், பிப்.,18 ல் வெண்ணெய்தாழி சேவையும், பிப்.,19ல் பகல் 11:00 மணிக்கு பகல் தெப்பமும், இரவு 10:00 மணிக்கு இரவு தெப்பமும் நடைபெற உள்ளது மறுநாள் தீர்த்தவாரியுடன் உற்ஸவம் நிறைவடையும். இவ்விழாவிற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது தெப்ப உற்சவத்தில் பல லட்சம் பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்க படுகிறது