Author: லிங்கேஷ்

  • March month predictions – Kadagam

    கருமமே கண்ணாக இருக்கும் கடக ராசி அன்பர்களே நீங்கள் எல்லோராலேயும் நேசிக்க கூடியவராக  இருப்பீர்கள். கொஞ்சம் பதற்றத்தை குறைத்துக் கொள்வது நல்லது. இந்த மாதம் முன்பு தடைபட்ட காரியங்கள் எவ்வித இடையூறுமின்றி நடந்து முடியும். ராசியிலிருக்கும் கிரக கூட்டணியால் வெளியூர்  பயணங்கள் உண்டாகும், அதனால் நன்மையும் ஏற்படும். நண்பர்கள் பலவிதங்களிலும் ஆதரவாக இருப்பவர்கள்.

    சூரிய சஞ்சாரம் புதனுடன் சேர்ந்து இருப்பது மன தெளிவை உண்டாக்கும். ஆக்கபூர்வமான யோசனைகள் தோன்றும். தொழில் வியாபாரத்தில் இருந்து வந்த இடையூறுகள் குறையும். கடித போக்குவரத்து மூலம் அனுகூலம் உண்டாகும். தொழில் விருத்தி அடைவதுடன் ஆதாயமும் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திருப்தியாக உணர்வார்கள். பணவரத்து இருக்கும் சக ஊழியர்களின் உதவியும் கிடைக்கும்.

    குடும்பாதிபதி சூரியன் சஞ்சாரத்தால் கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி நீடிக்கும். பிள்ளைகள் நீங்கள் சொல்வதை கேட்டு நடப்பார்கள். அவர்களுக்கு தேவையானவற்றை வாங்கி கொடுத்து மகிழ்வீர்கள்.

    பெண்களுக்கு தடைபட்ட காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். மனதெளிவு உண்டாகும். பணவரத்து இருக்கும். 
    கலைத்துறையினருக்கு அனைத்து விதமான நிலைகளிலும் நன்மைகளைப் பெறுவீர்கள். எதிர்பார்த்திருந்த வாய்ப்புகள் வந்து சேரும். 

    அரசியலில் உள்ளவர்களுக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். மற்றவர்களால் கைவிடப்பட்ட காரியத்தை செய்து முடிப்பீர்கள். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் அனுகூலமாக நடந்து முடியும். 

    மாணவர்களுக்கு திறமை வெளிப்படும். சக மாணவர்கள் ஆதரவாக இருப்பார்கள். கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். 

    பரிகாரம்: அபிராமி அந்தாதி சொல்லி அம்மனை வழிபட்டால் பாவம் நீங்கி பிரகாசமான எதிர்காலம் அமையும். பஞ்சமுக விளக்கு ஏற்றுவது சிறந்தது. 

    – பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் 

    Mobile : +91 7845119542

  • March month predictions – Rishabam

    சொல்லிலும் செயலிலும் நிதானத்தை கடைபிடிக்கும் மிதுன ராசி அன்பர்களே இந்த மாதம் ராசியை சனி பார்ப்பதால் வீண் அலைச்சல் உண்டாகும். ஆனாலும் சுபமாக எதுவும் நடந்து முடியும். புதிய காரியங்களில் ஈடுபடும் போது யோசித்து  செய்வது நல்லது.  மன அமைதி பாதிக்கும்படியான சூழ்நிலை ஏற்பட்டு நீங்கும். நண்பர்களிடம் கவனமாக பேசி பழகுவது நல்லது.

    தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். அதே நேரத்தில் சரக்குகளை அனுப்பும் போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் உயர் அதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது.  அலுவலக வேலைகளால் அலைச்சல் உண்டாகும். சக ஊழியர்களிடம் அலுவலகம் தொடர்பான ரகசியங்களை கூறுவதை தவிர்ப்பது நல்லது.

    குடும்பத்தில் இருப்பவர்களின் மூலம் ஏற்பட்ட டென்ஷன் நீங்கும். கணவன் மனைவிக்கிடையே இருந்த மனத்தாங்கல்கள் நீங்கும். பிள்ளைகள் எதிர்பார்த்தபடி நடந்து கொள்வார்கள்.  உறவினர்களிடம் இருந்து வந்த வேற்றுமைகள் அகலும்.

    பெண்களுக்கு நண்பர்களிடம் உறவினர்களிடம் கவனமாக பேசுவது நல்லது. வீண் மனக்கவலை ஏற்பட்டு நீங்கும். புதிய செயல்களை யோசித்து செய்வது நல்லது.   

    கலைத்துறையினருக்கு அனைத்து வகையிலும் நன்மைகள் கிடைக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த சுணக்க நிலை மாறும். கூடுதலாக உழைக்க வேண்டியதிருக்கும். வரவேண்டிய பணம் வந்து சேரும். 
    அரசியலில் உள்ளவர்களுக்கு எந்த வேலையையும் எளிதாக செய்து விடுவீர்கள். முயற்சிகள் வெற்றி பெறும். வேலைகளில் கூடுதல் கவனம் செலுத்துவது நன்மை தரும். திறமை வெளிப்படும். 

    மாணவர்களுக்கு பெரியோர்களை அனுசரித்து செல்வது நல்லது. கூடுதல் கவனத்துடன் படிப்பது நல்ல மதிப்பெண் பெற உதவும். 
    பரிகாரம்: பெருமாளை வழிபட எல்லா நன்மைகளும் உண்டாகும். மன குழப்பம் நீங்கும். தைரியம் பிறக்கும்.

    – பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் 
    Mobile : +91 7845119542

  • March month predictions – Rishabam

    பேச்சாற்றல் மூலம் எப்படிப்பட்ட சிக்கலான காரியங்களையும் சுமூகமாக முடிக்கும் திறமை உடைய ரிஷப ராசி அன்பர்களே இந்த மாதம் தனாதிபதி புதன் சஞ்சாரத்தால் பொருள் வரவை சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் வரும். நண்பர்கள் மூலம் தக்க தருணத்தில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வெளியூர் பயணங்களால் வீண் அலைச்சலும் செலவும் ஏற்படலாம்.

    செய்தொழிலில் மன நிம்மதியும் அதிக நன்மையும் உண்டாகும். மேல் அதிகாரிகளின் ஆதரவை உத்தியோகஸ்தர்கள் பெறுவார்கள். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டி குறையும். வியாபாரம் தொடர்பான பயணங்களால் அலைச்சல் உண்டாகலாம். எதிர்பார்த்த பலன் தாமதப்படும்.

    குடும்பத்தில் சுப காரியம் நடக்கலாம். சிலருக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி கூடும். பிள்ளைகளால் நன்மை ஏற்படும். அவர்களது திறமைகண்டு மன மகிழ்ச்சி கொள்வீர்கள்.
    பெண்களுக்கு வீண் அலைச்சலும், செலவும் ஏற்பட்டாலும் சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் உருவாகும். எதிர்பார்த்த  உதவிகள் கிடைக்க பெறுவீர்கள். 

    கலைத்துறையினருக்கு சிறப்பான காலகட்டமாக இருக்கும். தாமதமாகி வந்த வாய்ப்புகள் அனைத்தும் திரும்ப கிடைக்கும். அரசியலில் இருப்பவர்களுக்கு இந்த காலகட்டம் மந்தமாக காணப்படும். மேலிடத்தை அனுசரித்து செல்வது நல்லது. வீண் அலைச்சலும், வேலை பளுவும் ஏற்படலாம்.

    மாணவர்களுக்கு கல்வியில் இருந்த போட்டி நீங்கும். எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். மனதில் தன்னம்பிக்கை உண்டாகும்.

    பரிகாரம்: ராமாயணத்தில் சுந்தர காண்டம் படித்து வர எல்லா கஷ்டங்களும் நீங்கும். எதிர்பார்த்த காரியம் சாதகமாக முடியும்.
     

    – பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் 
    Mobile : +91 7845119542

  • March Rasi Palan – Mesham

    எந்த காரியங்களிலும் நேர்மையும் உண்மையும் கொண்ட மேஷ ராசி நண்பர்களே நீங்கள் கடுமையாக உழைக்க தயங்காதவராக இருப்பீர்கள்.  நேரத்தின் அருமையை உணர்ந்தவர். இந்த மாதம் ராசிநாதன் செவ்வாய் சஞ்சாரத்தால் எதிர்பாராத திருப்பம் உண்டாகலாம். புதிய நண்பர்கள் சேர்க்கை உண்டாகும். திறமையாக எதையும் சமாளிப்பீர்கள். திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடக்கும். பஞ்சமாதிபதி சூரியன் சஞ்சாரம் பொருள் வரவை தரும்.  செலவுகள் கட்டுக்குள் இருக்கும்.

    தொழில் வியாபாரத்தில் மேன்மை உண்டாகும். வியாபார போட்டிகளில் சாதகமான பலன் கிடைக்கும். ஆனால் வாடிக்கையாளர்களை  அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். நிலுவையில் உள்ள தொகை வந்து சேரும். சிலருக்கு வேலை மாற்றம் உண்டாகும்.

    குடும்பாதிபதி சுக்கிரன் சஞ்சாரத்தால் கணவன், மனைவி உறவு மகிழ்ச்சிகரமாக இருக்கும். குடும்பத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். தெய்வ நம்பிக்கை கூடும். உறவினர்கள், நண்பர் கள் மூலம் உதவிகள் கிடைக்கும். பிள்ளைகளின் நலனில் அக்கறை காட்டுவீர்கள். 

    பெண்களுக்கு திறமையாக சமாளித்து எந்த பிரச்சனையிலும் சாதகமான முடிவை பெறுவீர்கள். இழுபறியாக இருந்த காரியங்களில் எதிர்பாராத திருப்பம் ஏற்படும்.

    கலைத்துறையினருக்கு தகுந்த மரியாதையும் மதிப்பும் கிடைக்கும். விருதுகள் கிடைக்கும். தேவையான பண உதவி கிடைக்கும். கடன் தொல்லை குறையும். தொழில் போட்டிகள் நீங்கும். 

    அரசியலில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். மேலிடத்தில் இருந்து வந்த கருத்து வேற்றுமை நீங்கி ஒற்றுமை உண்டாகும். எடுத்திருக்கும் அரசாங்க வேலைகள் மூலம் நன்மை உண்டாகும்.

    மாணவர்களுக்கு தேர்வுகள் பற்றிய பயம் நீங்கும். கல்வியில் முன்னேற்றம்  காணப்படும்.
    பரிகாரம்: செவ்வாய்கிழமைகளில் முருகனை தீபம் ஏற்றி வழிபட, வயதான தம்பதிகளிடம் ஆசீர்வாதம் பெற எல்லா காரியங்களிலும் நன்மை உண்டாகும் செய் தொழில் சிறக்கும்.

    – பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் 
    Mobile : +91 7845119542

  • Rasi Palangal

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் –   வெற்றி 
    ரிஷபம் – வரவு 
    மிதுனம் – கவலை
    கடனம் – கவனம் 
    சிம்மம் – நலம்
    கன்னி – விவேகம்   
    துலாம் –  திறமை 
    விருச்சிகம் – ஜெயம் 
    தனுசு – பயம் 
    மகரம் – மேன்மை  
    கும்பம் – மகிழ்ச்சி 
    மீனம் – நஷ்டம் 
    சந்திராஷ்டமம்    : ரோகிணி
     

  • Indraya Naal Eppadi?

    இன்றைய நாள் எப்படி?
    பிப்ரவரி 28 
    விளம்பி வருடம் – மாசி 16
    28-பிப்-2019 வியாழன் 
    கரிநாள்
    நல்ல நேரம்    :    10.30 – 12.00    
    ராகு    :    1.30 – 3.00    
    குளிகை    :    9.00 – 10.30
    எமகண்டம்    :    6.00 – 7.30                          
    திதி    :    தசமி          
    திதி நேரம்    :    நவமி    கா    11.41
    நட்சத்திரம்    :    மூலம்    முழுவதும்    0.00
    யோகம்    :    சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    ரோகிணி
    சூலம்    :    தெற்கு
    பரிகாரம்    :    தைலம்
     

  • Thiruthani Hundiyal Ennum

    திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பக்தர்கள் உண்டியலில் காணிக்கையாக செலுத்தும் பணம் மற்றும் தங்கம் ஆகியவை திருத்தணி முருகன் கோவில் நிர்வாகத்தால்-34- நாட்களில் உண்டியல் பணம் என்னும் பணி மலைக்கோயில் மேல் தேவர் மண்டபத்தில் நடைபெற்றது.

     காலையில் தொடங்கிய இந்த பணியில் சேலம் மாவட்டத்திலிருந்து தமிழக முதல்வரின் சொந்த ஊரான எடப்பாடியில் இருந்து தன்னார்வ முருக பக்தர்கள் இந்த உண்டியல் எண்ணும் பணியினை மேற்கொண்டனர் மற்றும் இந்த பணியில் திருத்தணி முருகன் கோயில் ஊழியர்கள் ஆகியவர்கள் ஈடுபட்டனர்.

     காலை முதல் மாலை வரை உண்டியல் எண்ணும் பணியில் திருக்கோயிலின் இணை ஆணையர் செயலாளர் சிவாஜி திருக் கோயில் தக்கார் ஜெய்சங்கர் ஆகியோர்கள் முன்னிலையில் உண்டியல் பணம் எண்ணப்பட்டது என்ன பட்ட பணம் எவ்வளவு என்று கோயில் நிர்வாகம் தெரிவித்தது.

     பணமாக 92 லட்சத்து 32 ஆயிரத்து 713 ரூபாய் தங்கம் ஆயிரத்தி 178 கிராம் வெள்ளி ஏழாயிரத்து 881 கிராம் ஆகியவை பக்தர்கள் முருகன் கோயில் மற்ற உப கோயில்களில் செலுத்திய பணம் என்று கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். 

  • Banana Soorai

    திண்டுக்கல் மாவட்டம் பில்லமநாய க்கன்பட்டியில் கதிர் நரசிங்கப் பெருமாள் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஒரு லட்சம் வாழை பழங்கள் சூறையிட்டு வழிபாடு நடத்தப்பட்டுள்ளது. 

    திண்டுக்கல் மாவட்டம் பெரிய கோட்டை கிராமம் பில்லமநாயக்கன்பட்டியில் ஸ்ரீ கதிர் நரசிங்கப்பெருமாள், ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ காளியம்மன், ஸ்ரீ பகவதியம்மன் கோவில்களின் திருவிழாவை முன்னிட்டு கடந்த திங்களன்று காப்பு கட்டுதல் நடைபெற்றது.

    இதனை தொடர்ந்து ஊர் மக்கள் ஒன்று கூடி வாழை பழங்களை கூடையில் சுமந்து உலக நன்மைக்காக ஊரை சுற்றி வந்து கதிர்நரசிங்கப் பெருமாள் கோவிலில் சூறையிடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இவ்விழாவில் கழந்து கொண்ட பக்தர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேற சூறையிட்ட வாழை வழங்களை எடுத்துச் சென்று சாமி தரிசனம் செய்தனர்.
     

  • Simma Vaganathil Kalyan Venkateswarar

    திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரத்தில் நடைபெற்று வரும் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் 3-ஆம் நாள் காலை சிம்ம வாகனத்தில் யோகநரசிம்மராக கல்யாண வெங்கடேஸ்வரர் வலம் வந்தார். 

    திருப்பதியிலிருந்து 12 கி.மீ. தொலைவில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வரர் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் ஞாயிற்றுக்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதன் மூன்றாம் நாளான செவ்வாய்க்கிழமை காலை சிம்ம வாகனத்தில் யோகநரசிம்மர் அலங்காரத்தில் கல்யாண வெங்கடேஸ்வரர் மாடவீதியில் வலம் வந்தார். 

    அதன்பின் மதியம் உற்சவமூர்த்திகளுக்கு ஸ்நபன திருமஞ்சனத்தை நடத்தி அர்ச்சகர்கள் நைவேத்தியம் சமர்ப்பித்தனர். இரவு 7 மணிக்கு ஊஞ்சல் சேவை நடைபெற்றது. 8 மணிக்கு வெண் முத்துக்களால் அலங்கரிக்கப்பட்ட முத்துப்பந்தல் வாகனத்தில் தனது உபய நாச்சியார்களான ஸ்ரீதேவி, பூதேவியுடன் கல்யாண வெங்கடேஸ்வரர் மாடவீதியில் வலம் வந்தார். 

    வாகனச் சேவையில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு உற்சவமூர்த்திகளுக்கு கற்பூர ஆரத்தி எடுத்து வணங்கினர்.  வாகனச் சேவைக்கு முன் இந்து தர்ம பிரசார பரிஷத் மற்றும் அன்னமாச்சார்யா திட்டம் சார்பில் ஆடல், பாடல், கோலாட்டம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. 
     

  • Pazhani Panguni Uthira Thiruvizha

    அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா மார்ச் 15 தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் வருகிற மார்ச் 20 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. 

    பங்குனி உத்திர திருவிழாவையொட்டி, மலைக்கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்யும் வகையில் சிறப்பு பாதைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. சுட்டெரிக்கும் வெயில் வாட்டி வதைப்பதால், தீர்த்த காவடியுடன் பக்தர்கள் அமர பந்தல் அமைக்கப்பட உள்ளது. 

    கட்டண தரிசனம், கட்டளை தரிசனம், இலவச தரிசனம் ஆகியவற்றுக்கு தனித்தனி வரிசைகள் அமைக்கப்பட்டு வருகிறது. 10 நாட்களும் அடிவாரம் குடமுழுக்கு நினைவரங்கில் மாலை 4 மணி முதல் இரவு 12 மணி வரை சிறப்பு சமய சொற்பொழிவு, இன்னிசை, நாட்டியம் போன்ற நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.