Author: cmsadmin

  • மேஷ ராசி அன்பர்களே மார்ச் மாதம் சாதகமா?.. பாதகமா?.. உங்களுக்கான இந்த மாத ராசி பலன் இதோ..!

    கிரகநிலை:

    தன வாக்கு குடும்ப  ஸ்தானத்தில் குரு -தைரிய வீரிய  ஸ்தானத்தில்  செவ்வாய் -ரண ருண ரோக ஸ்தானத்தில்  கேது -லாப  ஸ்தானத்தில்  சூர்யன், சந்திரன், சனி -அயன சயன போக  ஸ்தானத்தில்  ராகு, சுக்ரன், புதன் என வலம் வருகிறார்கள்
    கிரகமாற்றங்கள்:

    04-03-2025 அன்று சுக்ரன் பகவான் வக்ரம் ஆகிறார்.

    09-03-2025 அன்று புதன் பகவான் வக்ரம் ஆகிறார்.

    14-03-2025 அன்று சூரிய பகவான் லாப  ஸ்தானத்தில்  இருந்து அயன சயன போக  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    18-03-2025 அன்று வக்ர நிலையில் இருக்கும் புதன் பகவான் அயன சயன போக  ஸ்தானத்தில்  இருந்து லாப  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    30-03-2025 அன்று புதன் வக்ர நிவர்த்தி ஆகிறார்.

    பலன்:

    தீவிர உழைப்பும், அதிக முயற்சிகளுடன் காரியங்களில் ஈடுபடும் மேஷ ராசியினரே இந்த மாதம் நல்ல பலன்களை பெறப் போகிறீர்கள். மனம் மகிழும் சம்பவங்கள் நடக்கும். மனகவலை குறையும். எல்லாவகையிலும் சாதகமான பலன் கிடைக்கப் பெறுவீர்கள். சற்று கூடுதலாக எதிலும் கவனம் செலுத்துவது நல்லது. திடீர் செலவு உண்டாகலாம். திட்டமிட்டபடி செல்ல முடியாமல் பயணத்தில் தடங்கல் ஏற்படலாம்.
    தொழில் வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும் என்ற தன்னம்பிக்கை ஏற்படும். சரக்குகளை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி வரும். அலுவலக வேலைகள் உடனே முடியாமல் இழுபறியாக இருக்கும். நல்ல பெயர் கிடைக்கப் பெறுவீர்கள்.

    குடும்பத்தில் வெளிநபர்களால் ஏதாவது குழப்பம் ஏற்படலாம். சொந்த விஷயங்களுக்கு அடுத்தவர் ஆலோசனைகளை கேட்பதை தவிர்ப்பது நல்லது.  கணவன், மனைவி ஒருவருக்கொருவர் மனம் விட்டு பேசுவதன் மூலம் இடைவெளி குறையும். பிள்ளைகள்  நலனுக்காக செலவுகள் செய்ய வேண்டி இருக்கும்.
    பெண்களுக்கு எதிலும் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. எதிர்பாராமல் பயணத்தில் தடங்கல் ஏற்படலாம். 

    கலைத்துறையினருக்கு தொழில் தொடர்பாக வீண் அலைச்சல் இருக்கும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். சக கலைஞர்களிடம் நிதானத்தை கடைபிடிப்பது நன்மை தரும். கோபத்தைக் குறைத்து தன்மையாக பேசுவதால் காரிய வெற்றி உண்டாகும். எதிர்பாராத செலவு இருக்கும். 
    அரசியல் துறையினர் தேவையற்ற அலைச்சலை குறைத்துக் கொள்வது நல்லது. எல்லாவகையிலும்  நன்மை உண்டாகும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்ய தூண்டும். பிரிந்து சென்றவர்களை மீண்டும்  சந்திக்க நேரலாம்.  

    மாணவர்களுக்கு  கல்வியில் மேன்மை அடைய கூடுதல்  கவனத்துடன்  படிப்பது அவசியம்.
அஸ்வினி:
    இந்த மாதம் உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சலும், டென்ஷனும் ஏற்பட்டு நீங்கும். வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. கணவன், மனைவிக்கிடையே தேவையில்லாத ஒரு விஷயத்தால் கருத்து வேற்றுமை உண்டாகலாம். எனவே கவனமாக இருப்பது நல்லது. பிள்ளைகளால் திடீர் செலவு உண்டாகலாம்.

    பரணி:

    இந்த மாதம் யாரையும் எதிர்த்துக் கொள்ளாமல் அனுசரித்து செல்வது நன்மை தரும். வீண் மனக்கவலை, காரிய தாமதம் உண்டாகலாம் கவனம் தேவை. பணவரத்து அதிகரிக்கும். வாக்கு வன்மை ஏற்படும். உங்கள் பேச்சுக்கு மற்றவர்கள் செவிசாய்ப்பார்கள். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். தொலைதூரத்தில் இருந்து நல்ல தகவல்கள் வந்துசேரும்.

    கார்த்திகை 1ம் பாதம்:

    இந்த மாதம் தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். லாபம் கூடும். பழைய பாக்கிகள் வசூலாகும். வியாபாரம், தொழில் தொடர்பான கடிதபோக்கு சாதகமான பலன் தரும். புதிய ஆர்டர்கள் கிடைக்க பெறுவீர்கள். பணியாளர்கள் மூலம் நன்மை உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக எதையும் செய்து முடித்து பாராட்டு பெறுவார்கள். கவுரவம் கூடும். நிலுவை தொகை வந்து சேரும். பதவி உயர்வு கிடைக்கலாம்.

    பரிகாரம்: செவ்வாய்கிழமையில் நவகிரகத்தில் செவ்வாயை அர்ச்சனை செய்து தீபம் ஏற்றி வணங்குவது வாழ்வில் முன்னேற்றத்தை தரும்.

     அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு – செவ்வாய் – வெள்ளி

    சந்திராஷ்டம தினங்கள்: 19, 20, 21

    அதிர்ஷ்ட தினங்கள்:  12, 13, 14

  • புற்றுக்குள் மறைந்த முருகன் கந்தகோட்டம் வந்தது எப்படி?

    ஒருமையுடன் நினதுதிரு மலரடி நினைக்கின்ற
    உத்தமர் தம் உறவுவேண்டும்,
    உள்ஒன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார்,
    உறவுகல வாமைவேண்டும்.
    பெருமைபெறு நினதுபுகழ் பேசவேண்டும், பொய்மை
    பேசா திருக்கவேண்டும்.
    பெருநெறி பிடித்தொழுக வேண்டும்மத மானபேய்
    பிடியா திருக்கவேண்டும்.
    மருவுபெண் ஆசையை மறக்கவே வேண்டும்உனை,
    மறவா திருக்கவேண்டும்.
    மதிவேண்டும் நின்கருணை நிதிவேண்டும் நோயற்ற
    வாழ்வில்நான் வாழவேண்டும்.

    தருமமிகு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர்
    தலம்ஓங்கு கந்தவேளே,
    தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி,
    சண்முகத் தெய்வமணியே

    என அருள் பிரகாச வள்ளலார் சுவாமிகள் தனது திரு அருட்பாவில் கந்தகோட்டை முருகன் குறித்து இவ்வாறு பாடி பணிந்துள்ளார். அத்தகைய சிறப்பு மிக்க கந்தகோட்டை முருகன் வரலாற்றை சற்று பின்னோக்கி பார்ப்போம்.

    போரூர் அடங்கிய நிலப்பரப்பை பாளையக்காரர்கள் ஆண்டு கொண்டு இருந்தபோது, மராட்டியர்கள் பகை கொண்டு படை எடுத்து வந்தனர். அப்போது இருதரப்பிற்கும் ஏற்பட்ட போரில் மராட்டிய படையினர் பெரும் அழிவை ஏற்படுத்தியதோடு, வழிபாட்டு தளங்களையும் விட்டு வைக்காமல் கோவிலுக்குள் புகுந்தும் செல்வங்களையும் அபகரித்தனர். இதனைக் கண்டு மனம் வருந்திய பொன்னம்பல தம்பி பிரான் அடிகள், திருப்போரூர் கோவிலில் இருந்த முருகப்பெருமானின் உற்சவ மூர்த்தியை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு சென்று வைக்குமாறு கட்டளை இட்டார். அதன்படி மூலவர் திரையிட்டு மூடப்பட்ட நிலையில் உற்சவமூர்த்தி பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    இறைவனுக்கு இத்தகைய நிலை ஏற்பட்டதை நினைத்து தம்பி பிரான் அடிகள் மனம் வரைந்தினார். பின் போரூர் கோவிலுக்குள் புகுந்த மராட்டிய படை கலக காரர்கள் அங்கிருந்த பொருட்களை சூறையாடினர். அப்போது மூலவர் முருகப் பெருமான் திரை நீக்கி அங்கிருந்து புற்று ஒன்றில் புகுந்தது மறைந்ததாகவும், முருகப்பெருமானை வேண்டி பக்தர்கள் பக்தியுடன் உருகியதால் மராட்டிய படையினரின் பிடியிலிருந்து இயல்பு நிலைக்கு திரும்பிய அப்பகுதி மீண்டும் செல்வ செழிப்புடன் மேலோங்கி வளர்ந்ததாகவும் பெருமையுடன் பக்தர்கள் தெரிவித்தனர்.

    பகுதியை சேர்ந்த பக்தர்கள் சிலர் ஆடி கிருத்திகை அன்று காவடி எடுத்து பாதயாத்திரை ஆக திருப்போரூர் சென்று முருகனை வழிபட்ட பின்னர், இருப்பிடம் திரும்பி கொண்டு இருந்தபோது, சற்று ஓய்வு எடுப்பதற்காக மரத்தடி ஒன்றில் தங்கினர். அப்போது, பக்தர் ஒருவர் கனவில் தோன்றிய முருகன், அருகில் இருந்த புற்றில், தான் சிலையாக இருப்பதை உணர்த்தினார்.

    புற்றிலிருந்த சிலையை எடுத்த பக்தர்கள், ஊர் திரும்பிய போது குறிப்பிட்ட ஓரிடத்தில் பாரம் அதிகமானதால் கையில் இருந்த முருகன் சிலையைக் கீழே வைத்தனர். பின்னர் அங்கிருந்து அதை எடுக்க முற்பட்டபோது முடியாததால், அங்கேயே திருக்கோயில் எழுப்பினர். முருகனுக்கு “கந்தசுவாமி” என்ற திருப்பெயரிட்டு வழிபட்டனர். அந்த இடம்தான் பெத்தநாயக்கன்பேட்டை என அழைக்கப்பட்ட, அவ்விடம் முருகன் கோயில் அமைந்த பிறகு, “கந்தகோட்டம்” என தற்போது அழைக்கப்படுகிறது.

    இங்குள்ள முருகனை பம்பன் குமாரகுருபரதாச சுவாமிகள், இராமலிங்க அடிகளார் ஆகியோரும் பாமாலை சூட்டி உள்ளனர். அருள்மிகு ஸ்ரீ கந்தசுவாமி திருக்கோயில் கந்தகோட்டம், சென்னை பாரிமுனையில்அமைந்துள்ளது.

    பொன்.கோ.முத்து திருவள்ளூர்

  • கன்னி ராசி அன்பர்களே மார்ச் மாதம் சாதகமா?.. பாதகமா?.. உங்களுக்கான இந்த மாத ராசி பலன் இதோ..!

    கிரகநிலை:

    ராசியில் கேது -ரண ருண ரோக ஸ்தானத்தில் சூர்யன், சந்திரன், சனி -களத்திர  ஸ்தானத்தில் ராகு, சுக்ரன், புதன் – பாக்கிய ஸ்தானத்தில் குரு -தொழில்  ஸ்தானத்தில் செவ்வாய்  என வலம் வருகிறார்கள்

    கிரகமாற்றங்கள்:

    04-03-2025 அன்று சுக்ரன் பகவான் வக்ரம் ஆகிறார்.

    09-03-2025 அன்று புதன் பகவான் வக்ரம் ஆகிறார்.

    14-03-2025 அன்று சூரிய பகவான் ரண ருண ரோக ஸ்தானத்தில்  இருந்து களத்திர  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    18-03-2025 அன்று வக்ர நிலையில் இருக்கும் புதன் பகவான் களத்திர  ஸ்தானத்தில்  இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    30-03-2025 அன்று புதன் வக்ர நிவர்த்தி ஆகிறார்.

    பலன்:

    எந்த ஒரு வேலையையும் மிகவும் பொறுமையாகவும், பொறுப்புடனும் செய்து முடிக்கும் கன்னி ராசியினரே இந்த மாதம் எல்லா காரியங்களும் அனுகூலமாக நடந்து முடியும். முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். எதிர்பார்த்த தகவல்கள் நல்ல தகவலாக வரும்.   விருப்பங்கள்  கைகூடும். நண்பர்கள் மத்தியில் மரியாதையும், அந்தஸ்தும் உயரும்.  மற்றவர்களிடம் பேசும்போது கோபத்தை குறைத்து பேசுவது நல்லது. பணவரத்து இருக்கும்.

    தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் சாதகமான நிலை காணப்படும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு வெற்றி பெறுவார்கள். மேல் அதிகாரிகள் ஆதரவும் கிடைக்கும்.
    குடும்பத்தில் குதூகலமான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி கூடும். உங்கள் சொல்படி பிள்ளைகள் நடந்து கொள்வது மனதுக்கு இதமளிக்கும். பிரிந்து சென்றவர்கள் மீண்டும் உங்களை நாடி வருவார்கள்.

    பெண்கள் நிதானமாக பேசுவது நன்மை தரும். பணவரத்து திருப்தி தரும்.  எதிர்பார்த்த தகவல்கள் வரும். 
    அரசியல்வாதிகள் கோஷ்டி சண்டையிலிருந்து ஒதுங்கி இருப்பது நல்லது. சகாக்களுடன் உரிமையாகப் பேசி பெயரைக் கெடுத்துக் கொள்ளாதீர்கள். எனினும் கட்சி மேல்மட்டத்தில் மதிக்கப் படுவீர்கள்.

    கலைத்துறையினர் மூத்த கலைஞர்களால் ஆதாயமடைவர். பழைய நிறுவனத்திலிருந்து புதிய வாய்ப்பு தேடிவரும். சம்பள விஷயத்தில் கறாராக இருப்பது அவசியம்.
    மாணவர்கள் சக மாணவர்களுடன் பழகும் போது கவனம் தேவை.  பாடங்கள் எளிமையாக தோன்றும். 

    உத்திரம் 2, 3, 4 பாதம்:

    இந்த மாதம் வீண் அலைச்சல் உண்டாகும். மற்றவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் ஏற்படும். வாக்குவன்மையால் அனுகூலம் உண்டாகும். எந்த காரியத்தையும் யோசித்து செய்வது நல்லது. பணம் சார்ந்த கஷ்டங்கள் குறையும். காரிய வெற்றியும், நன்மையும் உண்டாகும்.

    அஸ்தம்:

    இந்த மாதம் காரிய அனுகூலம் உண்டாகும். எடுத்த காரியத்தை திறமையாக செய்து முடிக்க தேவையான உதவிகள் கிடைக்கும். சுய நம்பிக்கை அதிகரிக்கும். புத்தி தெளிவு உண்டாகும். எந்த பிரச்சனையும் எதிர்கொள்ளும் தைரியம் உண்டாகும்.

    சித்திரை 1, 2, பாதம்:

    இந்த மாதம் மனதை கவலை கொள்ளச் செய்த பிரச்சனைகளில் எதிர்பாராத திருப்பங்கள் ஏற்பட்டு சாதகமான பலன் கிடைக்க பெறலாம். தொழில், வியாபாரம் முன்னேற்றப் பாதையில் செல்லும், சிறப்பாக செயல்பட முடியும்  என்ற நம்பிக்கை ஏற்படும். எதிர்பார்த்த பண உதவியும் கிடைக்க பெறும். வேலை தேடி கொண்டு இருப்பவர்களுக்கு உத்தியோக வாய்ப்புகள் வரும். முக்கிய நபர்களின் உதவியும் கிடைக்கும்.

    பரிகாரம்:  கிருஷ்ண பரமாத்மாவை வணங்க கஷ்டங்கள் தீரும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். 

    அதிர்ஷ்ட கிழமைகள்: புதன் – வெள்ளி

    சந்திராஷ்டம தினங்கள்: 4, 5

    அதிர்ஷ்ட தினங்கள்:  24, 25, 26

  • அடியார் மீது பொய் புகார் கொடுத்து வழக்காடு மன்றம் வரை அளக்க அழித்த  சிவபெருமான்

    தனது திரு ஓட்டை தானே மறைத்துவிட்டு தனது பக்தன் மீது பொய் புகார் கொடுத்து வழக்காடு மன்றத்திற்கு அளக்க அழிக்க விட்ட திருநீலகண்டம் தில்லையில் ஆடிய தாண்டவ திருவிளையாடல் என்ன தெரியுமா ?

    சிவ பக்தரான தில்லையைச் சேர்ந்த நீலகண்டம் எப்பொழுதும் நடராஜப் பெருமானை நினைத்தபடி திருநீலகண்டா "திருநீலகண்டா" என கூறுவதை வழக்கமாக கொண்டிருந்தார்.  அதேபோன்று'அடியார்கள் இடமும் அன்பு மிகுதியுடன் நடந்து கொள்வார். நடராஜ பெருமானை எந்த நேரமும், துதித்து வந்தமையால்,  இவரை திருநீலகண்டர் என காரண பெயரிட்டு அழைத்தனர். தனது குல மரபின்படி திரு ஓடுகளை செய்து, அடியார்களுக்கு வழங்கும் அரும்ப பணியினை செய்து வந்தார். நீலகண்டத்தின்  மனைவியும் கணவனின் சொல்படி வாழ்ந்து வந்தாள். அப்போது ஊழ்வினையின் பலனாக அவரது தூய உள்ளம், சிற்றின்பத்தை தேடி தாசியிடம் சென்றது.  இதை அறிந்து, அவரது மனைவி வேதனையுடன் தன் கணவரிடம் கோபம் கொண்டாள். நீலகண்டர் ஏதும் புரியாது திகைத்தார். கூடல்  இன்பத்திற்காகவே" மனைவி இவ்வாறு நடந்து கொள்வதாக எண்ணி' நீலகண்டர். ஒருநாள் இரவு  மனைவியின்.

    அங்கத்தை நீக்கி கூடச் சென்றார். பொறுமை இழந்த மனைவி .ஐயனே" இனி எம்மை தொடுவீரின்  திருநீலகண்டம் என்று கூறித் திருநீலகண்டத்தின் மீதே சத்தியம் இட்டு, தம்மை இனி தீண்டக் கூடாது என்று கூறி விட்டாள். சிவபெருமானையே"தன் உயிராக உணர்வாக நினைத்த நீலகண்டம், மனைவி, இவ்வாறு ஆணையிட்டதை  கேட்டு மனம் வருந்தினார்.  மனைவியின் கோபத்தில் உள்ள நியாயத்தை  உணர்ந்து.  எம்மை என்றதனால்  மற்ற மங்கையரையும் இனி மனதாலும் தீண்டேன்" என  சிவன் மீது சத்தியம் செய்து. நீலகண்டர். அன்று முதல் தனது சிற்றின்பத்தை விட்டு, முற்றும் துறந்த முனிவரைப் போல ஐம்புலன்களையும் தன்னுள் அடக்கி வாழ தொடங்கினார். ஒரே வீட்டில் வசித்த போதும், கணவன்-மனைவி இருவரும் இடைவெளியை ஏற்படுத்திக் கொண்டு'கட்டுப்பாடுடன் வாழ்ந்தனர். பின் ஆண்டுகள் பல கடந்து நீலகண்டரும்,  அவரது துணைவியாரும் முதுமை அடைந்தனர்.

    அப்போது சிவபெருமான், நீலகண்டனின் பெருமையை உலகுக்கு பறைசாற்ற எண்ணி' தனது திருவிளையாடலை தொடங்கினார். சிவ அடியார் போல் வேடமிட்டு,  திருவோடு ஏந்தி தெருவில் நடந்து  நீலகண்டனின் வீட்டை வந்து அடைந்தார்.நீலகண்டரும் அவரது துணைவியாரும் அடியார் கோலத்தில் வந்த பெருமானை வணங்கி வரவேற்று உபசரித்து முறைப்படி வழிபட்டனர். அப்போது நீலகண்டம் சிவ அடியாரிடம், ஐயனே" இத் தொண்டன் என்ன பணி செய்தல் வேண்டும் ? என
    பணிவுடன் கேட்டார். அதற்கு சிவ அடியார்  தன்னிடமிருந்த  திருவோட்டைக் காண்பித்து  நீலகண்டா ! இத் திருஓட்டின் மதிப்பை நிர்ணிக்க முடியாது.  விலை மதிப்பிட முடியா" கற்பகத் தரு போன்றது, பொன்னும், மணியும், தங்கமும், வைரமும் கூட இதற்கு ஈடாகாது. இத்தகைய திருவோடடை உன்னிடம் ஒப்படைக்கிறேன். திரும்பி வந்து நான் கேட்கும்போது தருவாயாக என்று கூறி திருவோட்டினை நீலகண்டன் இடம் கொடுத்தார்.

    அதை பணிவோடு நீலகண்டம் பெற்று ஐயனே"  உங்கள் சித்தம் என் பாக்கியம் என்று கூறினார். திருஓட்டை பாதுகாப்பான இடத்தில் மறைத்து வைத்தார். சிவ அடியாரும், தில்லை சென்று அங்கு சில காலம் தங்கி' பின் ஒரு  நாள் நீலகண்டத்தைக் காண வந்த. சிவ அடியாரை வரவேற்று, பாத பூஜை செய்து, இருக்கையில் அமரச் செய்தார். சிவனடியார் நீலகண்டத்திடம் தான் வந்த வேலை முடிந்து விட்டமையால், திருவோட்டைத் தருமாறு கேட்டார். நீலகண்டம் வேகமாக சென்று திருஓட்டைப் பாதுகாப்பாக வைத்திருந்த இடத்தில் போய் பார்த்தபோது. அங்கு அதனைக் காணாது அதிர்ச்சியுடன்  மனைவி யிடம் ஓட்டை காணவில்லையே என்றார். தான் அறியேன்"  எப்படி காணாமல் போகும் என்று இருவரும் தவித்தனர்.  நிலை தடுமாறினர். பின் வாடிய முகத்துடன் இருவரும் சிவனடியார் பக்கம் வந்து சுவாமி என அழைத்து. தயங்கி நின்றார் நீலகண்டன் அவரின். தயக்கத்தை  கண்ட சிவனடியார் சற்று கோபமாகவே ஏனடா"  இத்தனை தாமதம் ? திரு ஓட்டை கேட்டால் கொடுக்க மனமின்றி ஒளித்து வைத்துக் கொண்டாயா? நான் உடனே  போகவேண்டும் , காலம் தாழ்த்தாமல் அதை கொடு என்றார். அவரது சினத்தை கண்டு நடுங்கிய நீலகண்டம், உண்மையிலே யே அத்திருஓடு காணாமல் போய் விட்டது சுவாமி என கண்ணீர் மல்க வணங்கினார்.  அடியாரோ கோபத்தில் நிதானம் இழந்து தாண்டவம் ஆடினார்.  நீலகண்டம்  அய்யனே  சினங்கொள்ளாதீர் அறியாது நடந்த தவறு பொறுத்துக் கொள்ள வேண்டும், திருஓடு மறைந்த தந்திரத்தை நான் அறியேன். மன்னித்து விடுங்கள்" உங்கள் மண் ஓட்டிற்குப் பதில் பொன் ஓடு வேண்டும் என்றாலும் , தருகிறேன் என்று பணிவோடு கூறினார்.

    சிவனடியாருக்கு மீண்டும் கோபம் வந்தது . என்ன ? வேறு ஒரு ஓடு தருகிறாயா ?  நீலகண்டா !  ஓட்டின் அருமைபெருமை பற்றி நான்  கூறியதனால்' நீ அந்த ஓட்டைத் திருடியிருக்கிறாய் என குற்றம் சாட்டியதைக் கேட்டு, தவறு சுவாமி"தவறு  உண்மையாகவே சொல்கிறேன்  அடியேன் தங்களது த திரு ஓட்டை  திருடவில்லை என்று நீலகண்டன் கூறினார் . நீ திருட வில்லை என்பது உண்மையானால், நான் திருடவில்லை என்று உன் மகன் கரம் பற்றி கோவில் பொற்றாமரைக் குளத்தில் மூழ்கி அம்பலத்தான் மீது சத்தியம் செய்யும் என்றார் எனக்கு மகன் இல்லையே சுவாமி ! என  மகன் இல்லாவிட்டால் என்ன ? மனைவியின் கையைப் பற்றி குளத்தில்  மூழ்கி உண்மையை நிலை நாட்டினால் அது போதும்" என்றார். சிவ அடியாரின்  ஆணை, நீலகண்டத்தின்  மனத்தை மேலும் வேதனை ப்படுத்தியது. அவர் தர்ம சங்கடமான நிலைக்கு தள்ளப்பட்டார்.  தமக்கும் – மனைவிக்கும் உள்ள இல்லற பிரச்சனையை சொல்ல முடியாத நிலையில், சுவாமி மன்னிக்க வேண்டும், நானும் என் மனைவியும் ஒரு சபதம் செய்து கொண்டிருக்கிறோம். எனவே என் மனைவி கரம் பற்றி சத்தியம் செய்ய முடியாது என்று திட்டவட்டமாக மறுத்தார் நீலகண்டன். இனியும் உன்னோடு பேசிப் பயனில்லை வா  வழக்குமன்றம் செல்வோம் என முடிவாகச் சொன்னார் சிவ அடியார்.

    நீலகண்டன் அதற்கு சம்மதிக்க இருவரும், தில்லைவாழ் அந்தணர்களின் அரிய அவைக்கு சென்று' அவர்களிடம் வழக்கை எடுத்துரைத்தார் அப்போது. நீலகண்டனோ"  ஓட்டைத் திருடவில்லை என  முடிவாக தெரிவித்தார். இதனால் அவை முன்னவர் சிவ அடியார் விருப்பத்தின் படி குளத்து நீரில் மூழ்கி சத்தியம் செய்யுமாறு கூறினர். நீலகண்டன் மனைவியின்  கரம்பற்றி , நிபந்தனையை நிறைவேற்ற முன்வரவில்லை மாறாக'; இல்லம் சென்று, தன் மனைவியை  அழைத்து கொண்டு கோவில் குளம் நோக்கி வந்த நீலகண்டன்.   மூங்கில் கட்டை  ஒன்றினை கொண்டு வந்து அதன் ஒரு பக்கத்தைத் தாமும், மறுபக்கத்தை அவர் மனைவியும் பிடித்தவாறு நீரில் மூழ்குவதை ஏற்க மறுத்த அவைனர். கரம் பற்றியே குளத்து நீரில் மூழ்கிச் சத்தியம் செய்ய வேண்டும் என ஆணையிட்டனர்.  

    வேறு வழியின்றி நடந்த எல்லா நிகழ்ச்சிகளையும் அவை அறிய எடுத்துக் கூறி மூங்கில் கட்டையை கணவன் மனைவி இருவரும் பற்றிக் கொண்டு, அவையின் அனுமதியின்றி குளத்து நீரில் மூழ்கி எழுந்தபோது. சிவபெருமானின் அருளால், முதுமை நீங்கி, இளமையுடன் எழுந்தனர். அப்போது அங்கிருந்த   சிவனடியார் திடீரென்று மறைந்து விட்டார். ஆகாயத்தில் இருந்து பூ மழை பொழிந்தது. தில்லை நடராஜர் கோவில் மணிகள் ஒலித்தன" சங்கு நாதம்  முழங்கியது' கைலாய எங்கும் வாக்கியங்கள் இசைத்தென" ஜோதி வடிவான ஈசன் பார்வதி தேவியுடன் எழுந்தருளி பக்த  தம்பதியருக்கு காட்சி அளித்தார்.  

    திருநீலகண்டரும் அவரது துணைவியாரும் பக்தி பெருக்கில் நிலத்தில் வீழ்ந்து அம்மை அப்பரை வணங்கினர். சிற்றின்ப சேற்றில் சிக்காமல் ஐம்புலன்களையும்  வென்ற அடியவர்களே" தில்லை அம்பலத்துல் அகப்பட்டு திருநீறு நீலகண்டத்தை பற்றியதால்" நீலகண்டா இனி நீ திருநீலகண்டர் என அழைக்கப்படுவாய்" எக்காலமும், குன்றா இளமையுடன் அனைத்து செல்வங்களையும் பெற்று  நலமுடன் வாழ்வீர்கள் ஆக" என எம்பெருமான் வரம் அளித்தார். அதன் பின் திருநீலகண்ட நாயனாரும் அவரது மனைவியாரும் இறைவனின் திருவருளினால் இளமை குன்றாமல், இன்பத்துடன் திருப்பணிபுரிந்து  நெடுநாள் வாழ்ந்து தில்லை நடராஜனின் பொற்பாத கமலங்களில் பணிந்து பிறவா நிலை அடைந்து திரு நீலகண்டர் 63 நாயன்மார்களில் ஒருவராக இறைப் புகழுடன் அடியார்களின் உள்ளங்களில் குடி கொண்டுள்ளார். 

    பொன்.கோ.முத்து திருவள்ளூர்

  • ஒரு ராசியை கூறி பூஜை செய்தால் 12 ராசிகளுக்கும் பலன் கிடைக்கும் அதிசயம்! 

    உயிரினங்கள் இயங்குவது கிரகங்களின் செயல்பட்டின் ஆதிக்கத்தால் தான் என சாஸ்திரங்கள் கூறுகின்றன. அதன்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ராசி நட்சத்திரங்கள் அமையப்பட்டு, அதன்படி அவர்களின் வாழ்வியல் அமையும் என்பது ஜோதிட வல்லுநர்களின் கணிப்பு ஆனால்"குறிப்பிட்ட ஒரு ராசிக்கு உரியவர் சிவபெருமானுக்கு பூஜை செய்தால் அதன் பலன் 12 ராசிகளுக்கும் கிடைக்கும் அதிசய கோவிலை தரிசிக்கலாம் வாருங்கள்.

    மன்னார்குடி அடுத்த  கழுவத்தூரில் சோழ மன்னர்களால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட அருள்மிகு ஸ்ரீ ஜடாயுபுரீஸ்வரர் திருக்கோவில் உள்ளது. ராமாயண காலத்தில்' பறவைகளின் அரசனான ஜடாயு சிவபெருமானை வேண்டி இங்கு தவம் தவம் புரிந்து கொண்டிருந்தான். அப்போது இலங்கையின் மன்னனான ராவணன் சீத்தையை கடத்திச் சென்றான் சீதையின் அவையே குரலைக் கேட்டு, தனது தவத்தை கலைத்த பறவைகளின் அரசனான ஜடாயு சீதையைக் காப்பாற்ற ராவணனை தடுக்க முற்பட்டபோது. அறிவிழந்த ராவணன்  வாள் கொண்டு ஜடாயு இறகுகளை வெட்டி வீசினான்' காயத்துடன் ரத்தம் வலிய ராமனை தேடிச்சென்று சீதையை ராவணன் கடத்திச் சென்ற செய்தியை கூறிவிட்டு ராமனின் திருவடியிலேயே ஜடாயு தனது உயிரை விட்டான்.

    அவருக்கு ராமன் இறுதி சடங்கு செய்து அடக்கம் செய்தான். பறவைகளின் அரசன் ஜடாயு இங்கு  தவம் புரிந்த போது  பூஜை செய்த சுயம்புலிங்கம் அருள்மிகு ஸ்ரீ ஜடாயுபுரீஸ்வரர் என்ற திருப்பெயருடன் சிவனின் வடிவமாகவும், ஆதிபராசக்தி அன்னை பார்வதி தேவியின் வடிவமாக' அருள்மிகு ஸ்ரீ சவுந்திர நாயகி தாயாரும் அருள் பாவிக்கிறாள். கழுகத்தூர் அருள்மிகு ஸ்ரீ சவுந்தரநாயகி உடனுறை அருள்மிகு ஸ்ரீ ஜடாயுபுரீஸ்வரர் திருக்கோவிலில்' பிரகாரத்தில் 12 ராசிகளின் சின்னம் பொறிக்கப்பட்ட யோக ராஜ சிம்மாசனத்தில் தட்சிணாமூர்த்தி காட்சி தருகிறார். இங்கு ஒரு ராசியைக் கூறி அர்ச்சனை செய்தால், 12 ராசிகளுக்கும் அந்த பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை,

    பொன்.கோ.முத்து திருவள்ளூர்

  • புத்தர் சொன்னார் நல்ல குதிரை சவுக்கின் நிழல் பார்த்தாலும் ஓடும்”

    தனிமனித வாழ்விலும், அல்லது ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கும் தடையாக இருப்பது செயல்படுத்த வேண்டிய திட்டத்தை குறித்த நேரத்தில் நிறைவேற்றாமல் தாமதப்படுத்துவதும், சிந்தித்து செயல்பட வேண்டிய தருணத்தில் அவசரகதியில் முடிவுகள் எடுப்பதும் தீர்க்க முடியாத பிரச்சனையை உருவாக்கி விடும், இத்தகைய தருணத்தில் எடுக்கப்படும் முடிவை பொறுத்து தான் அதற்கேற்ப தீர்வு கிடைக்கும் இத்தகைய தருணங்களில் புத்தர் வழியில் அமைதியாக இருப்பதே"சிறந்ததாகும்.

    ஒரு தத்துவஞானி ஒருமுறை புத்தரிடம் கேட்டார்: "வார்த்தைகள் தவிர்த்தும், வார்த்தைகள் இன்றியும், எனக்கு உண்மையைச் விளக்குவீர்களா?"

    புத்தர் அமைதியாக இருந்தார்.

    சிறிது நேரத்துக்குப் பிறகு தலைவணங்கி அவர் புத்தருக்கு நன்றி கூறினார் " உங்கள் அன்பான தயவால், என் பிரமை அனைத்தும் களைந்து உண்மையான பாதையில் நுழைந்தேன்."

    தத்துவஞானி வெளியேறியதும், புத்தரின் மூத்த சீடரான ஆனந்தர் கேட்டார் "ஆசீர்வதிக்கப்பட்டவரே, இந்த தத்துவஞானி எதை அடைந்தார்?"

    புத்தர் பதிலளித்தார் " நல்ல குதிரை, சவுக்கின் நிழல் பார்த்தாலும் ஓடும்"

    பொன்.கோ.முத்து

  • ராவணன் தழுவிய போது திருக்குளத்தில் தோன்றிய அக்கினி” மண்டோதரி பிள்ளை பேரு பெற்றது எப்படி ?

    உலகிலேயே முதலில் தோன்றிய சிவாலயம் எங்கு உள்ளது தெரியுமா ? இலங்கை மன்னனின் திருமணத்தடை நீக்கி பிள்ளை பெறு வரம் அளித்த திருக்கோவில் இராமநாதபுரம் மாவட்டத்தில்  சிவபெருமான் அருள் பாவிக்கும் திருக்கோவில்களில்  ஒன்று தான் உத்திரகோசமங்கை. இதுவே உலகிலேயே முதன் முதலில் தோன்றிய சிவ ஆலயம் என கூறப்படுகிறது. ஸ்ரீ ராமபிரான் தோன்றிய காலத்தூள் சிறந்து விளங்கிய இதன் தொன்மை வாய்ந்த வரலாறை நாம் அறிவோம்"

    இலங்கையை ஆண்ட ராவணனுக்கு திருமணம் தாமதமாகிக் கொண்டே போனது, இதற்கான காரணம் குறித்து அவர் வேத விற்பனர்களிடம் கேட்டபோது. உலகம் தோன்றிய போது முதலில் சுயம்புவாக தோன்றிய சிவலிங்கத்தை வழிபட்டால் தடை நீங்கி திருமணம் கைகூடும் என"கூறியதை ஏற்று ராவணன். திரு உத்தர கோச மங்கை சுயம்பு லிங்கத்தை பக்தியுடன் வழிபட்டு, ஈசனை வேண்டியது பலனாக' மாண்டோதரியை தனது. துணையாக தேர்வு செய்து மனம் முடித்துக் கொண்டான் ராவணன். பின் நீண்ட காலம் புத்திர பாக்கியம் ஏற்படாததால்,  ராவணனின் வாக்குப்படி,  மண்டோதரி சுயம்பு லிங்கத்தை வழிபட்டு  புத்திரப் பாக்கியம் அடைந்தாள்' 
    உத்திர கோச மங்கை என தற்போது அழைக்கப்பட்டாலும், இதன் பண்டைய கால முழுப் பெயர் ‘திரு உத்திர கோச மங்கை’ என்பதேயாகும்.

    ‘  இறைவன்"  ராவணனுக்கு மங்கள நாள் அருளியதால், இங்குள்ள ஈசன் ‘மங்களநாதர்’ ஆனார். மண்டோதரி, புத்திரப்பேறு வேண்டி  இறைவனை நோக்கி தவம் இருந்தாள். கருணை கொண்டு  சிவபெருமான், அவளுக்கு பிள்ளைப்  பேறு வரம் அளிப்பதற்காக, இலங்கை  எழுந்தருளி வரம் அளித்தார்.  அதற்கு முன்பாக தன் அடியார்களிடம், ‘தனது திரு மேனியை ராவணன் தழுவும் போது,  இங்குள்ள குளத்தில் அக்னி தோன்றும்’ என்று கூறி மறைந்தார். பின்னர் இலங்கையில் தோன்றிய  இறைவன், மண்டோதரியின் முன்பாக சிறு பாலகனாக உருமாறி வரம் அளித்தார். 

    அப்போது அங்கு வந்த ராவணன், குழந்தையின் தெய்வீக முகத்தைப் பார்த்து,  தன் கரங்களால் தூக்கி  கொஞ்சி மகிழ்வடைந்தான்.  ராவணன் கைகள் தழுவியவுடன்  உத்தர கோச மங்கை ஆலயத்தில் உள்ள திருக்குளத்தில் அக்னி தோன்றியதாக புராணம் கூறுகிறது.  இத்திருக்கோவிலில்  எழுந்தருளி இருக்கும் இறைவன் அருள்மிகு ஸ்ரீ ‘மங்களநாதர்’ என்றும், அம்பிகை அருள்மிகு ஸ்ரீ ‘மங்கள நாயகி’ என அழைக்கப்படுகிறாள்.

    மற்ற இடங்களில் சக்தியும்-சிவனும் சமேதராக விற்று இருப்பார்கள். இங்கு அம்மையும்' அப்பரும்" தனித்தனியே சன்னதி கொண்டிருப்பதும், தனித்தனி கருவறை விமானமும்,  ராஜகோபுரம் என'  இவ்விடம் ஏழு நிலை கொண்ட ராஜகோபுரம் உட்பட பல ஐந்து கோபுரங்கள் உள்ளன. மங்களநாதர் என்ற திருப்பெயரை சிவபெருமான் தனக்குத்தானே சூட்டிக்கொண்டதாகும்,  மங்களநாயகி தாயாரையும்" மங்கள நாதரையும்' தரிசனம் செய்தால் திருமண தடை நீங்கும், பிள்ளை பெறு பாக்கியம் கைகூடும், சொந்த வீடு மனை செல்வங்கள் உழைப்பின் வழியாக நம்மை தேடி வரும் என்பது திண்ணம்.

    பொன்.கோ.முத்து திருவள்ளூர்

  • இரண்டாம் புலிகேசியை வென்ற பல்லவ சேனாதிபதி” தன் மகனை கொன்று மாமிசத்தை சிவ அடியார்க்கு கொடுத்தது எப்படி ? 

    காவிரி வளநாட்டில் தற்போதைய தஞ்சை மாவட்டத்தில்'  திருச்செங்காட்டங்குடி கிராமத்தில் பிறந்தவர்  பரஞ்சோதி இவர். நரசிம்ம வர்ம  பல்லவனின்  சேனாதிபதியாய் இருந்து. போர்க்களத்தில் இரண்டாம் புலிகேசி வென்று பகைவர்களை புற முதுகு காட்டி ஓட செய்து. வாதாபி நகரை கைப்பற்றி  கொண்டு அங்கிருந்து விலை உயர்ந்த செல்வங்களையும், பகைவர்களின் யானை, குதிரை படை, போர்க்கருவிகள் ஆகியவற்றையும் பல்லவ நாட்டு உடமை ஆகியதால், மன்னன் இவரது வெற்றியை போற்றும் வகையில் அரண்மனையில் சான்றோர் முன்னிலையில் விழா எடுத்து சேனாதிபதி பரஞ் சோதியின் வீரத்தைப் புகழ்ந்து பாராட்டினார். 
    அப்போது அமைச்சர்கள், ‘அரசே! சேனாதிபதியிடம்  சிவபெருமானுக்குத் திருத்தொண்டு புரியும் பண்பு உள்ளது. இதன் காரணமாக போரில் இவர் வெற்றிவாகை சூடி வருகிறார்.  என்றனர். இதனைக் கேட்டு பூரிப்படைந்த பல்லவ மன்னன்  அவருக்கு வேண்டிய பொன் பொருள், விலை நிலம்,  கால்நடைகள் ஆகியவற்றை வேண்டிய அளவிற்கு அளித்து வணங்கி, 'நீர் உம்முடைய சிவ தொண்டின் பணியினை சிறப்புடன் செய்வீராக’ என வாழ்த்தி அரண்மனை வாசலுக்கு சென்று விடை கொடுத்தனுப்பினார். 

    பின் பரஞ்சோதி வெண்காட்டு நங்கை எனும் தன் மனைவி, அழகிய மகன் ஒருவனுடன் வாழ்ந்து, திருத்தொண்டினை புரிந்து வந்தார். ஒரு நாள் இவரது இல்லத்திற்கு உடல் முழுவதும் திருநீர் பூசி காவி உடையுடன் வந்த சிவ அடியார் தன் பசிப்பிணி நீங்க உணவளிக்குமாறு வேண்டினார், அப்போது உணவு உண்ண வீட்டிற்குள் அவரை பரஞ்சோதி அழைத்துச் சென்றபோது. தம் ஆறு மாதத்திற்கு ஒரு முறை தான் உணவு அருந்துவது வழக்கம் என்றும்' அந்த உணவு.

    நரமாமிசத்துடன்‌ கூடியது. அந்த மாமிசமானது,  ஒரே புத்திரனாய்‌, அங்கக்‌ குறைவு ஏதும் இல்லாதவனாய், ஐந்து வயது பாலகனாய்
     இருப்பவனை அறுத்து, ஒரு உறுப்பும்‌ குறையாது  சமைத்ததாய்‌ இருக்கவேண்டும்‌” என்றார்‌ வந்த சிவ அடியார்‌.

    அதனை ஏற்று; பரஞ்சோதி அடியாரின் விருப்பத்தை மனைவியிடம்‌ தெரிவித்தார்‌; அதன்படி தன்‌ மகன்  சீராளதேவனை கொன்று அறுத்துச்‌ சமைத்து, சிவ அடியாருக்கு உணவாக தந்தார்‌. அப்போது" “என்னோடு உண்ண இன்னொரு சிவனடியாரும்‌ வேண்டும்‌” என – இச்‌ சிவனடியார்‌ கேட்டார்‌.
    உடனே பரஞ்சோதி வீதியில் வந்து தேடிய போது மற்றொரு சிவ அடியார் யாரும் கண்ணுக்கு தென்படாததால்,  இறுதியில்‌, “நீரே அமரும்‌” என்றார்‌ சிவ அடியார் பரஞ்சோதியிடம். அதற்கு அவரும் உடன்பட்டு அமர்ந்து, மகனின் மாமிசத்தை கையில் எடுத்து புசிக்க முனைந்தார்‌. உடனே" தடுத்த  சிவவனடியார்‌, “உமக்குப்‌ புத்திரன்‌ இருந்தால்‌ அவனையும்‌" அழையுங்கள்‌, ஒன்றாக அமர்ந்து உண்ணலாம்" என்றார்‌.

    அதற்கும்‌ உடன்பட்ட பரஞ்சோதி, துயரத்தை உள்ளடக்கி வீதிக்குச் சென்று, மகனே“ சீராள!”  என்று அழைத்தார். உடனே,  குருகுலத்தில் இருந்து திரும்பிக்‌கொண்டிருந்த  தன்‌ மகன்‌ சீராள தேவன் எதிரே ஓடி வந்தான்‌.  பரஞ்சோதி அவனை ஆரத் தழுவி கொண்டு வீட்டினுள்‌ நுழைய, அச்சிவனடியாரும்‌ சமைத்த மாமிச உணவுகளும்‌ மறைந்துவிட்டன. 

    ஆங்கு சிவபெருமான் ரிஷப வாகனத்தில்  காட்சி தந்து , திருத்தொண்டு புரிவதில் நீர் சிறந்தவர் என்பதை மெய்ப்பிக்கும் வகையில் சிறு பாலகனான உமது பிள்ளையை உணவாக்கி சிவ அடியாரின் பசிப்பிணி போக்கை எண்ணிய நீர் இன்று முதல் சிறுத்தொண்டர் என அழைக்கப்படுவீராக'அருளிய சிவபெருமான் ஜோதி வடிவாக மறைந்தார் அன்று தொட்டு பரஞ்சோதியார்; சிறுத்தொண்டர்‌ நாயனார் என மக்களால் அழைக்கப்பட்டு தன் வாழ்நாள் முழுவதும் இறைத் தொண்டில் ஈடுபட்டு ஈசன் திருவடியிற்‌ சேர்ந்தார்‌ என்பது சிவ புராண வரலாறு'. 

    பொன்.கோ.முத்து திருவள்ளூர்

  • கோவில் ஒன்று ராஜகோபுரம் இரண்டு” பார்வதி தேவி காட்சி தரும் அதிசய சிவலிங்கம் !

    இங்கு ராமகோனார் என்ற விவசாயி கரவை மாடுகளை வளர்த்து, அவைகள் மூலம் கிடைக்கும் பாலைக்கரந்து ஊர் முழுவதும் வியாபாரம் செய்து வந்தார். ஒரு முறை வழக்கம் போல் அரண்மனைக்கு பால் கொண்டு போகும்போது. அரண்மனை வீதியில் இருந்த கல் ஒன்றில் அவரின் காலை தடுக்கி நிலைத்திரு மாறிய போது அவரது, கையில் இருந்த பால் குடம் கீழே நழுவி விழுந்து அதிலிருந்து பால் முழுவதும்  கொட்டி விட்டது. இதேபோன்று தொடர்ச்சியாக  4 தினங்கள்  நடைபெற்றது.

    எதிர்பாராமல்  தடுக்கி விழுவது என்பது ஒருநாள் மட்டும் நடந்தால் பரவாயில்லை,  தினந்தோறும் நடந்தால்'; அச்சமடைந்த விவசாயி ராமகோனார் அரண்மனைக்குச் சென்று" மன்னரிடம் நடந்ததை எடுத்துரைத்தார். இதைக் கேட்டு உடனே  மன்னர் படைவீரர்கள் சிலரை அழைத்துக் கொண்டு  அந்த இடத்திற்கு சென்று, வீதியில் இருந்த கல்லை அகற்ற கோடரியால் வெட்டும்படி ஆணையிட்டார், அதன்படி கல்லை அகற்ற முற்பட்டபோது. கோடரி பட்டதால் கல்லிலிருந்து ரத்தம் வெளியேறியது. இதனைக் கண்டு, மன்னன் உள்ளிட்ட அனைவரும் நிலை குலைந்து நின்றனர். அப்போது விண்ணிலிருந்து ஒரு அசரீரி குரல் ஒலித்தது.

    அந்தக் கல்லின் அடியில் சுயம்பு சிவலிங்கம்  இருப்பதாகவும், அந்த லிங்கத்தை தோண்டி எடுத்து திருக்கோவில் எழுப்பி அதனை கருவறையில்  மூலவராக  பிரதிஷ்டை செய்து குடமுழுக்கு நடத்தி வழிபட வேண்டும் என அந்த குரல் ஒலித்தது. சிவபெருமானே"விண்ணிலிருந்து தனக்கு கட்டளையிட்டதாக உணர்ந்த மன்னன். அந்த சிவலிங்கத்தை பக்தியுடன் அணுகி அங்கிருந்து தோண்டி எடுத்து அதே" இடத்தில் சிவபெருமானுக்கு  நெல்லையப்பர் என்ற திருப்பெயரில் இன்றளவும் அருள் பாவிக்கும் கோவிலை கட்டியதாக இதன் வரலாறு கூறுகிறது. சுயம்பு வடிவ அருள் பாவிக்கும் சிவலிங்கத்தினை.

    அருள்மிகு ஸ்ரீ 'நெல்லையப்பர் சுவாமி என்ற திரு பெயரிலும் 'வேண்ட வளர்ந்தநாதர்' என்றும் அழைக்கின்றனர். சிவலிங்கத்தின்  மத்திய பகுதியில் அன்னை பார்வதி தேவியின் திரு உருவம் தென்படுகிறது.  அபிஷேக சமயத்தின் போது அந்த அற்புத காட்சியினை தரிசனம் செய்யலாம். அம்மையும்" அப்பனும் ஒன்று தான் என்பது போன்று" அர்த்தநாரீஸ்வரராக ஈசன் இங்கு காட்சி தருகிறார். வேறு எந்த ஆலயத்திலும் இல்லாத தனி சிறப்பாக இறைவனுக்கு என தனி ராஜ கோபுரமும், இறைவிக்கு என மற்றொரு ராஜ கோபுரமும் தனித்தனியாக கம்பீரத்துடன் நிற்கும் இரண்டு சன்னதிகளை இணைக்கும் பாலமாக நீண்ட மண்டபம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

    பார்ப்பதற்கு வெவ்வேறு கோவிலாக தோற்றம் அளித்தாலும் சக்தியும் சிவனும் ஒன்றே என்பதை மானுடருக்கு உணர்த்தும் இரண்டும் ஒரே கோவில்தான். அருள்மிகுஸ்ரீ காந்திமதி அம்மை உடனுறை அருள்மிகு ஸ்ரீ நெல்லையப்பர் திருக்கோவில், தென் வடக்காக 756 அடி நீளமும், மேற்கு கிழக்காக 378 அடி அகலமும் கொண்டு ஆசியாவிலேயே மிகப்பெரிய சிவன் கோவிலாக காட்சியளிக்கிறது. இதன் தீா்த்தம்: பொன் தாமரை தீா்த்தம்(சுவா்ணபுஷ்கரணி) வெள்ளி திருக்குளம் (சந்திரபுஷ்கரணி) சிந்துபூந்துறை உட்பட 32 புனித தீா்த்தங்கள்

    தல விருட்சம்:
    முங்கில்
    ஆகமம்
    காமிக ஆகமம்,
    இசைக்கருவி:
    சாரங்கி" – இத்திருக்கோவிலுக்கு.  வேணுவனம், நெல்லூா். சாலிவேலி. சாலிவாடி. சாலிநகா், தாருகாவனம், கீழவெம்பு நாட்டு குலசேகர சதுா்வேதி மங்கலம், ஆகும்.
    புராணத்தின் படி, பார்வதி தேவி தான் படைத்த உலகை காக்கும் பொருட்டு  இறைவனை வேண்டி கடும் தவம் புரிந்து சிவன்  அருளை உலகம் பெறும்படிச் செய்தது. இறைவனிடம் இருநாழி நெல் பெற்று.வேணுவனம் அடைந்து. முப்பத்திரண்டு அறங்களையும் வளா்த்தது.

    கம்பை நதியின் கரையில் ஈசனை வேண்டி தவமிருந்து.நெல்லை நாதனது திரு அருளை பெற்று  சிவனும் சக்தியுமாய் தோன்றி உயிர்களுக்கு இன்ப  வாழ்வினை அளித்து அளித்தருளி அம்மை அப்பனாய் எல்லா உயிர்களையும் காத்து தவத்தின் வலிமையை அறிவுறுத்த அருள்வது,உயிர்களுக்குத் தவம் இயற்றும் முறையை அறிவுறுத்தற் அன்னை ஸ்ரீ காந்திமதி' கமலபீட நாயகியாக காமாட்சி என்ற திருப்பெயருடன்  தவக்கோலம் கொண்டது.

    அகத்தியமா முனிவருக்கு  திருமணக்கோலம் காட்டி திருக்கல்யாண விழா நடத்தியது இங்குதான். சிவபெருமானின் நித்திய நிவேதனத்திற்காக  வேதசா்மா என்ற அந்தண சான்றோர் யாசகம் எடுத்து  வந்து உலா்த்தியிருந்த நெல்லை. திடீரென பொய்த கனமழை  அடித்து சென்றுவிடுமோ"  என அஞ்சியபோது. ஈசனே" இறங்கி வந்து உலர்த்தி வைக்கப்பட்டு இருந்த நெல்லை. மழை நீா் அடித்துச் செல்லாமல்'தானே" வேலியாக நின்று காத்தமையால் நெல்வேலி நாதா் எனவும் எனப்பெயா் பெற்றார். இதன் காரணமாகவே'  திருநெல்வேலி என்றும் பெயா் வந்தது.

    பொன்.கோ.முத்து திருவள்ளூர்

  • கர்நாடகாவில் தர்ம தேவதைகளின் கட்டளைக்கு பணிந்து’மஞ்சு நாதனுக்கு தொண்டு புரியும் ஊர் நாட்டாமை ! 

    கர்நாடக மாநிலம் தெட்சிண கன்னாடா மாவட்டம் பெல் தங்கடி பகுதியில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ மஞ்சுநாதர் திருக்கோயில் உள்ளது.
     பல ஆண்டுகளுக்கு முன்பு இவ்விடம் குடுமபுரம் என்ற பெயரில் விளங்கியது. இந்த ஊரின் நாட்டாமையாக  பரமண்ணா ஹெக்டே என்பவர் இருந்தார். அப்போது ஒரு நாள் யானை, குதிரை ஆகியவற்றில் வந்த சிலர் தாங்கள் வெகு தூரத்தில் இருந்து வந்துள்ளதாகவும், நீண்ட தூர பயணத்தின் காரணமாக களைப்புடன் இருப்பதால், சற்று ஓய்வெடுக்க ஏதேனும் இடம் கிடைக்குமா ? என ஊரிலிருந்து சிலரிடம் விசாரித்தபோது, நாட்டாமையின் இருப்பிடத்திற்கு அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.

    வீடு தேடி வந்தவர்களை வரவேற்று அவர்களின் தாகம் தீர இளநீர், கொடுத்து உபசரித்து சற்று ஓய்வு எடுக்குமாறு மதிய உணவு அருந்திவிட்டு வெயில் மறைந்த பின் பயணத்தை தொடருங்கள் என வந்தவர்களிடம், நாட்டாமை ஹெக்டே, கூறிவிட்டு, விருந்தினர்களுக்கு உணவுக்கான ஏற்பாடுகளை செய்து முடித்தார். அவர்களும் உணவை அருந்தி விட்டு, திடீரென நாட்டாமை ஹெக்டேவிடம், நாங்கள் இந்த வீட்டிலேயே நிரந்தரமாக தங்க விரும்புகிறோம். எனவே" உங்கள் உடமைகளை எடுத்துக் கொண்டு குடும்பத்துடன் உடனே ' வெளியேறுங்கள் என உத்தரவிட்டனர். தர்மசீலரான ஹெக்டே, மறுவார்த்தை கூறாமல் குடும்பத்தினருடன் தனது வீட்டில் இருந்து வெளியேற  தயாராகி விட்டார்.

    ஹெக்டேவின் இந்த செயலை கண்டவர்கள்.  ‘நாங்கள் சிவபெருமானின்  ஆணைப்படி உங்களின் இருப்பிடத்திற்கு வந்த தர்மதேவதைகள். இங்கு ஈசன் குடி கொள்ள போவதால் இந்த குடுமபுரம் வரும் காலத்தில் ஒரு புண்ணிய பூமியாக திகழப் போவதாகவும், இங்கு நீங்கள் தான் ஜோதி வடிவான இறைவனுக்கு கோவில் கட்டி வழிபாடுகள் நடத்த வேண்டும், என்பது சிவனின் கட்டளை என்றும் எனவே"  அதற்கான சோதனை தான் தற்போது உங்களுக்கு நடத்தப்பட்டது. தன்னலம் இன்றி பிறருக்கு உதவி புரிய வேண்டும் என்ற  தன்னலமில்லாத உங்களின் குணத்தை பரிசோதிக்கத்தான் இந்த நாடகம்.

    நீங்கள் கட்டப்போகும் இந்த திருக்கோவிலில்  கன்னியாகுமரி அம்மனையும், மஞ்சு நாதரையும், தர்மதேவதை சிலையையும் வைத்து வழிபட வேண்டும். இங்கு தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் வேண்டுதல் நிறைவேறும் அதன் மூலம் மகிழ்ச்சி அடையும் பக்தர்கள் செலுத்தும் காணிக்கையை தொகையை வைத்து. நீங்கள் தர்ம
    காரியங்கள் செய்ய வேண்டும். உங்களுக்கு ஒரு குறையும் வராமல் அந்த சிவபெருமான் காத்தருள்வார்;" என  கூறி அந்த தேவதைகள்  வின் நோக்கி மறைந்து விட்டனர்.’ தர்ம தேவதைகளின் கட்டளைப்படி நாட்டாமை ஹெக்டேவும் தொடர்ந்து. பல தர்ம காரியங்களை செய்து வந்தார். இதனால் இந்த இடம் ‘தர்மஸ்தலம்’ என்ற பெயரை பெற்றது. நாட்டாமை ஹெக்டேவுக்கு பிறகு தலைமுறை தலைமுறையாக அவரது, சந்ததியினர் இந்த தர்ம காரியத்தை விடாமல் இன்று வரை செய்து வருகின்றனர். இதன் காரணமாக ஊர் மக்கள் நாட்டாமை ஹெக்டேவின்  குடும்பத்திற்கு தொடர்ந்து மரியாதை அளித்து கௌரவித்து வருகின்றனர். அவரது வம்சாவழி வாரிசுகளும் நீதிநெறி தவறாமல் தர்மத்தின் பக்கம் நின்று இன்று வரை வாழ்ந்து வருகின்றனர். அருள்மிகு ஸ்ரீ மஞ்சுநாதரின் சன்னிதியின் வலது புறம் தர்ம தேவதைகளுக்கும், அன்னை ஸ்ரீ கன்னியாகுமரி அம்மனுக்கும் தனித்தனி சன்னதிகள் உள்ளன. கோவிலுக்கு வெளியே  உள்ள அன்னபூர்ணா 'அன்ன  சத்திரத்தில் நாள்தோறும் ஆயிரக்கணக்கானோருக்கு உணவு அளிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    பொன்.கோ.முத்து திருவள்ளூர்