pongal festival celebration

தமிழர்களின் மிக முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. இந்தப் பூவுலகம் சிறப்புற இயங்கத் தேவையான ஒளியையும், அதன் மூலம் சக்தியையும் அளிக்கும் சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தி நம் வாழ்வில் வளம் பெறலாம். அந்த வகையில் நாளை, பொங்கல் படையலிட்டு சூரிய பூஜை செய்வது மிகவும் விசேஷம். சரி பொங்கல் வைக்க உகந்த நேரம் எது என்பதை தற்போது பார்க்கலாம்…. 

ஜனவரி 14 – தை 1 வியாழக்கிழமை – தை பொங்கல்

தை 1 (ஜனவரி 14) பொங்கல் பண்டிகை வியாழக்கிழமை சுப தினத்தில் காலை 11 மணி முதல் நண்பகல் 12.00 மணிக்குள் பொங்கல் வைக்க உகந்த நல்ல நேரம் வருகிறது. 

பொங்கல் வைக்க எமகண்டம், ராகு காலத்தைத் தவிர்க்கவும்.

எமகண்டம் : காலை 06:00 மணி முதல் 07:30 மணி வரை

இராகு காலம் : மதியம் 01:30 மணி முதல் 03:00 மணி வரை
 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *