Thirupathy Hundiyal Kanikkai

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 2019ஆம் ஆண்டு 2 கோடியே 78 லட்சத்து 90 ஆயிரத்து 179 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து உண்டியலில் 1161.74 கோடி ரூபாய் காணிக்கை செலுத்தியுள்ளனர். 

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 2019ஆம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் மாதம் வரை 2 கோடியே 78 லட்சத்து 90 ஆயிரத்து 179 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். இது கடந்த ஆண்டு 2018 காட்டிலும் இந்த ஆண்டு ஒரு லட்சத்து 88 ஆயிரத்து 132 பக்தர்கள் கூடுதலாக சுவாமி தரிசனம் செய்துள்ளனர். 

சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள் உண்டியலில் காணிக்கையாக 1161. 74 கோடி ரூபாய் உண்டியலில் காணிக்கை செலுத்தியுள்ளனர். கடந்த ஆண்டு கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 95. 25 கோடி ரூபாய் கூடுதலாக உண்டியலில் காணிக்கை செலுத்தப்பட்டுள்ளது. 

மேலும் சுவாமி தரிசனம் செய்த பக்தர்களுக்கு 12 கோடியே 49 லட்சத்து 80 ஆயிரத்து 815 லட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. 1 கோடியே 16 லட்சத்து 61 ஆயிரத்து 625 பக்தர்கள் மொட்டை அடித்து தலை முடி காணிக்கை செலுத்தியுள்ளனர். 

பக்தர்களுக்கு அறைகள் வாடகை விட்டதன் மூலம் 83.71 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது என தேவஸ்தான செயல் அலுவலர் அணில்குமார் சிங்கால் தெரிவித்துள்ளார்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *