Tag: Hundiyal Kanikkai

  • Thirupathy Hundiyal Kanikkai

    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஊரடங்கு தளர்வுக்கு பிறகு ஒரே நாளில் 2 கோடியே 34 லட்சம் ரூபாய் உண்டியல் காணிக்கை.

    திருப்பதி ஏழுமலையான் கோவில் இம்மாதம்  19 தேதி முதல் 27 ஆம் தேதி வரை பிரமோற்சவம் நடைபெற்றது. பிரம்மோற்சவத்தில் வழக்கமாக லட்சக்கணக்கான பக்தர்கள்  தரிசிப்பது வழக்கம். ஆனால் இந்த முறை கொரோனா பரவலை தடுக்கும் விதமாக  குறைந்தபட்ச பக்தர்கள் மட்டுமே  அனுமதிக்கப்பட்டனர்.

    பிரம்மோற்சவம் நடைபெற்ற நாள்களில்  ஏழுமலையானை டிக்கெட் பெற்ற பக்தர்கள் மட்டும் பிரம்மோற்சவம் நடந்த 9 நாட்களில் தரிசித்த பக்தர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 22 ஆயிரத்து 898 பேர் தரிசனம் செய்தனர்.

    38 ஆயிரத்து 190 பக்தர்கள் மொட்டை அடித்து தலைமுடி காணிக்கை செலுத்தினர். உண்டியல் காணிக்கையாக 10 கோடியே 2 லட்சத்து 2 ஆயிரம் ரூபாய் பக்தர்கள் செலுத்தினர். இதில் நேற்று ஒரே நாளில் 2 கோடியே 34 லட்சம் ரூபாய் பக்தர்கள் காணிக்கை செலுத்தினர். ஊரடங்கு தளர்வுக்கு பிறகு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில்  ஒரே நாளில்  அதிகபட்ச உண்டியல் காணிக்கையாக  நேற்று ஒரே நாளில் ரூ 2.34 கோடி வந்தது குறிப்பிடத்தக்கது.

  • Thirupathy Hundiyal Kanikkai

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 2019ஆம் ஆண்டு 2 கோடியே 78 லட்சத்து 90 ஆயிரத்து 179 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து உண்டியலில் 1161.74 கோடி ரூபாய் காணிக்கை செலுத்தியுள்ளனர். 

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 2019ஆம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் மாதம் வரை 2 கோடியே 78 லட்சத்து 90 ஆயிரத்து 179 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். இது கடந்த ஆண்டு 2018 காட்டிலும் இந்த ஆண்டு ஒரு லட்சத்து 88 ஆயிரத்து 132 பக்தர்கள் கூடுதலாக சுவாமி தரிசனம் செய்துள்ளனர். 

    சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள் உண்டியலில் காணிக்கையாக 1161. 74 கோடி ரூபாய் உண்டியலில் காணிக்கை செலுத்தியுள்ளனர். கடந்த ஆண்டு கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 95. 25 கோடி ரூபாய் கூடுதலாக உண்டியலில் காணிக்கை செலுத்தப்பட்டுள்ளது. 

    மேலும் சுவாமி தரிசனம் செய்த பக்தர்களுக்கு 12 கோடியே 49 லட்சத்து 80 ஆயிரத்து 815 லட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. 1 கோடியே 16 லட்சத்து 61 ஆயிரத்து 625 பக்தர்கள் மொட்டை அடித்து தலை முடி காணிக்கை செலுத்தியுள்ளனர். 

    பக்தர்களுக்கு அறைகள் வாடகை விட்டதன் மூலம் 83.71 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது என தேவஸ்தான செயல் அலுவலர் அணில்குமார் சிங்கால் தெரிவித்துள்ளார்.