Thirupathy Newyear Dharshan

திருப்பதி ஏழுமலையான் கோவிலில்  புத்தாண்டு  31-ஆம் தேதி முதல் 1ம் தேதி வரை சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் வசதிக்காக அனைத்து ஆர்ஜித சேவைகள் ரத்து செய்யப்பட்டு உள்ளது. 

மேலும் ஒரு வயது குழந்தையுடன் பெற்றோர்கள் செல்லும் தரிசனம், மாற்றுத் திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கான சிறப்பு தரிசனம், நன்கொடையாளர்களுக்கான முன்னுரிமை தரிசனம்,  ஆதார் அட்டை மூலம் வழங்கப்படும் சர்வ தரிசனம், மலைப்பாதையில் நடந்து வரும் பக்தர்களுக்கான திவ்யதரிசனம், அங்கபிரதட்சனை சேவையும்  என அனைத்து சேவைகள் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

 இதேபோன்று வைகுண்ட ஏகாதசி மற்றும் துவாதசி ஒட்டி 5-ஆம் தேதி முதல் 7ம் தேதி வரை அனைத்து முன்னுரிமை தரிசனங்களும், ( ஆர்ஜித சேவை ) கட்டண சேவைகள் ,சர்வ தரிசனம்,  திவ்யதரிசனம் , அங்கபிரதட்சணம் ஆகியவை ரத்து செய்யப்படுகிறது. 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *