Thirupathy Garuda vaganam

கார்த்திகை பௌர்ணமி தினமான இன்று திருப்பதி மலையில் ஏழுமலையானின் கருட வாகன புறப்பாடு நடைபெற்றது. கருட வாகன புறப்பாட்டை முன்னிட்டு உற்சவர் மலையப்ப சுவாமி கோவிலில் இருந்து புறப்பட்டு வாகன மண்டபத்தை அடைந்த நிலையில் அங்கு அவருக்கு தீப தூப நைவேத்திய சமர்ப்பணம் நடத்தப்பட்டது.

 தொடர்ந்து தங்க கருட வாகனத்தில் எழுந்தருளிய உற்சவர் பக்தர்களின் பக்தி கோஷங்களுக்கு இடையே கோவில் மாட வீதிகளில் ஊர்வலம் கண்டு பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

அப்போது மாட வீதிகளில் காத்திருந்த பக்தர்கள் கற்பூர ஹாரத்தி சமர்ப்பித்து வழிபாடு மேற்கொண்டனர்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *