Thirupathy kalki avadharam

திருப்பதி ஏழுமலையான் பிரம்மோற்சவத்தின் 8-ம்  நாளான இன்று இரவு   குதிரை வாகனத்தில் கல்கி அலங்காரத்தில் பக்தர்களின் கோவிந்தா ஆரவாரத்துடன் மலயப்பன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

திருப்பதி ஏழுமலையான் கோவில் சாலகட்ல பிரம்மோற்சவம் சிறப்பாக துவங்கி நடைபெற்று வருகிறது. பிரம்மோற்சவத்தை ஒட்டி தினந்தோறும்   பல்வேறு வாகன சேவைகள் நடைபெற்று வருகிறது

பிரம்மோற்சவத்தின் எட்டாவது நாளான இன்று இரவு தங்கக் குதிரை வாகனத்தில்  கல்கி அலங்காரத்தில் வாளேந்திய கோலத்தில்  மலையப்பன்  நான்கு மாடவீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாக விளங்குபவர் ஏழுமலையான் என்பதை குறிக்கும் வகையில்  மலயப்பர் கல்கி ரூபத்தில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் வழங்கினார். வீதிஉலாவில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *