63 Nayanmaragal veedhi ula

சேலத்தில் 63 நாயன்மார்களின் திருவீதி உலா வெகு விமர்சையாக நடைபெற்றது ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

சேலம் அருள்மிகு சுகவனேஸ்வரர் திருக்கோவிலில் ஆண்டுதோறும் திருவெம்பாவை பெருவிழா கழகம் சார்பில் 63 நாயன்மார்களின் திருவீதி உலா நடைபெறும் அதன் அடிப்படையில் இந்த வருடம்  20வதுஆண்டு 63 நாயன்மார்களின் திருவீதி உலா நடைபெற்றது முன்னதாக  சுகவனேஸ்வரர் திருக்கோவிலில் பல்வேறு சிறப்பு வைபவங்கள் நடைபெற்றன.

அதனை தொடர்ந்து  63 நாயன்மார்களுக்கும் பல்வேறு வாசனை திரவியங்கள் சிறப்பு அபிஷேகமும் பால் அபிஷேகம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து ருத்ர பாராயணம் நடைபெற்றது பின்னர் சிறப்புயாகம் நடைபெற்றதை தொடர்ந்து வலம்புரி விநாயகர் சுகவனேஸ்வரர் சொர்ணாம்பிகை தெய்வங்களுக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

பின்னர் மாலையில் உற்சவமூர்த்தியான சுகவனேஸ்வரர் சொர்ணாம்பிகை தாயாருக்கு பல்வேறு வாசனை மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு நந்தி வாகன பல்லக்கில்  சுகவனேஸ்வரர் சொர்ணாம்பிகை தாயார் எழுந்தருளினர். தொடர்ந்து திருமூலர் புத்தகத்திற்கு பூஜை செய்யப்பட்ட பின்னர் சேக்கிழார் சிறு தொண்டர் நாயனார், திருமூலர், திருஞானசம்பந்தர், காரைக்கால் அம்மையார், ஸ்ரீ சடைய நாயனார், ஸ்ரீ நீலகண்ட யாழ்பாணர், பூசலார் நாயனார், உள்ளிட்ட 63 நாயன்மார்களுக்கு பல்வேறு வாசனை மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தனித்தனி பல்லக்கில் 63 நாயன்மார்களை அமர்த்தப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

வேதங்கள் முழங்க மங்கள வாத்தியம் இசைக்க சிவாச்சாரியார் அர்ச்சனை செய்த பின்னர் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது இதனைத் தொடர்ந்து 63 நாயன்மார்கள் திருவீதி உலா சுகவனேஸ்வரர் கோவிலில் தொடங்கி முதல் அக்ரஹாரம் பட்டை கோவில் சின்ன கடைவீதி கன்னிகா பரமேஸ்வரி கோவில் வழியாக மீண்டும் சுகவனேஸ்வரர் ஆலயத்தை அடைந்தது இந்த திருவீதி உலாவை காண அப்பகுதியில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை புரிந்து தரிசனம் செய்தனர் திருவீதி உலா வைபவத்தின் ஏற்பாட்டினை திருவெம்பாவை பெருவிழா கழகம் நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *