Sabarimalai online booking

பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு திருவிழாக்களில் நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் வருவார்கள். சபரிமலையில் இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை டிசம்பர் மாதம் 27-ந் தேதி நடக்கிறது. இதற்காக கோவில் நடை நவம்பர் மாதம் 16-ந்தேதி திறக்கப்படுகிறது. 17-ந்தேதி முதல் பக்தர்கள் கோவிலுக்கு அனுமதிக்கப்படுவார்கள்.

இதுபோல மகர விளக்கு பூஜை ஜனவரி மாதம் 14-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த இரு விழாக்களிலும் பக்தர்கள் பங்கேற்பதற்கான ஆன்லைன் முன்பதிவு இன்று தொடங்கியது. இதற்கு முன்பு கேரள போலீசாரின் இணைய தளம் மூலம் இந்த முன்பதிவு நடந்து வந்தது.

தற்போது இந்த முன்பதிவை சபரிமலை கோவிலை நிர்வகிக்கும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு நடத்துகிறது. இன்று முதல் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு விழாக்களுக்கும், ஐப்பசி மாத பூஜைக்கான விழாவிலும் பங்கேற்க பக்தர்கள் இன்று முதல் திருவிதாங்கூர் தேவசம் போர்டு https://sabarimalaonline.org என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதுவரை போலீஸ் இணையதளத்தில் இருந்த இந்த முன்பதிவு கேரள ஐகோர்ட் உத்தரவின் படி தற்போது தேவசம்போர்டு கட்டுப்பாட்டில் செயல்பட தொடங்கியது. மண்டல காலத்தில் தினமும் ஆறு 'சிலாட்'களில் தலா 20 ஆயிரம் பக்தர்கள் வீதம் ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேர் அனுமதிக்கப்படுகின்றனர்.

இவர்களுடன் நிலக்கல், எருமேலி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள ஸ்பாட் புக்கிங் மூலமும் பக்தர்கள் சன்னிதானம் வரலாம். இதனால் மண்டல காலத்தில் தினமும் ஒன்றரை லட்சம் பேர் வருவார்கள் என்று எதிர் பார்க்கப்படுகிறது

 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *