Tag: Booking

  • Sabarimalai online booking

    பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு திருவிழாக்களில் நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் வருவார்கள். சபரிமலையில் இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை டிசம்பர் மாதம் 27-ந் தேதி நடக்கிறது. இதற்காக கோவில் நடை நவம்பர் மாதம் 16-ந்தேதி திறக்கப்படுகிறது. 17-ந்தேதி முதல் பக்தர்கள் கோவிலுக்கு அனுமதிக்கப்படுவார்கள்.

    இதுபோல மகர விளக்கு பூஜை ஜனவரி மாதம் 14-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த இரு விழாக்களிலும் பக்தர்கள் பங்கேற்பதற்கான ஆன்லைன் முன்பதிவு இன்று தொடங்கியது. இதற்கு முன்பு கேரள போலீசாரின் இணைய தளம் மூலம் இந்த முன்பதிவு நடந்து வந்தது.

    தற்போது இந்த முன்பதிவை சபரிமலை கோவிலை நிர்வகிக்கும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு நடத்துகிறது. இன்று முதல் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு விழாக்களுக்கும், ஐப்பசி மாத பூஜைக்கான விழாவிலும் பங்கேற்க பக்தர்கள் இன்று முதல் திருவிதாங்கூர் தேவசம் போர்டு https://sabarimalaonline.org என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இதுவரை போலீஸ் இணையதளத்தில் இருந்த இந்த முன்பதிவு கேரள ஐகோர்ட் உத்தரவின் படி தற்போது தேவசம்போர்டு கட்டுப்பாட்டில் செயல்பட தொடங்கியது. மண்டல காலத்தில் தினமும் ஆறு 'சிலாட்'களில் தலா 20 ஆயிரம் பக்தர்கள் வீதம் ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேர் அனுமதிக்கப்படுகின்றனர்.

    இவர்களுடன் நிலக்கல், எருமேலி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள ஸ்பாட் புக்கிங் மூலமும் பக்தர்கள் சன்னிதானம் வரலாம். இதனால் மண்டல காலத்தில் தினமும் ஒன்றரை லட்சம் பேர் வருவார்கள் என்று எதிர் பார்க்கப்படுகிறது

     

  • Thirupathy vip break dharshan ticket booking

    நாளை 28ஆம் தேதி மாலை 3 மணிக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் ஸ்ரீவாணி அறக்கட்டளை தொடர்பான  தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியீடு.

     அடுத்த ஆண்டு ஜனவரி, பிப்ரவரி ஆகிய மாதங்களுக்கான திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் ஸ்ரீவாணி அறக்கட்டளை தொடர்பான விஐபி பிரேக் தரிசனம் டிக்கட்டுகளை தேவஸ்தானம் நாளை 28ஆம் தேதி மாலை 3 மணிக்கு ஆன்லைனில் வெளியிட உள்ளது.

     திருமலை திருப்பதி தேவஸ்தானம் புதிதாக துவங்கிய ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் நன்கொடை செலுத்தும் பக்தர்களுக்கு 500 ரூபாய் கட்டணத்தில் விஐபி பிரேக் தரிசன டிக்கட்டுகள் வழங்கப்படுகிறது.

     ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு பக்தர்கள் வழங்கும் நன்கொடையை பயன்படுத்தி தேவஸ்தான நிர்வாகம் நாடு முழுவதும் ஏழுமலையான் கோவில்களை கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளது. 

    இந்த நிலையில்
     ஜனவரி முதல் தேதி அன்று ஏழுமலையானை தரிசிக்கும் வகையில் 1000 ஸ்ரீவாணி அறக்கட்டளை தொடர்பான விஐபி தரிசன டிக்கெட்டுகளை தேவஸ்தானம் நாளை மாலை 3 மணிக்கு ஆன்லைனில் வெளியிடுகிறது. 

    டிக்கெட்டுகள் தேவையான பக்தர்கள் ஆன்லைன் மூலம் ஒவ்வொரு டிக்கெடிற்க்கும் தலா 10,000 ரூபாய் நன்கொடையும்,டிக்கட் கட்டணமாக தலா 500 ரூபாயும் செலுத்தி  முன்பதிவு செய்யலாம்.

    வைகுண்ட ஏகாதசி தினமான 13ஆம் அடுத்த மாதம் தேதி அன்று பக்தர்கள் ஏழுமலையானை வழிபடும் வகையில் 300 ரூபாய் டிக்கெட்டுகளை ஆயிரம் எண்ணிக்கையில் நாளை மாலை ஆன்-லைனில் வெளியிடப்பட உள்ளது.

    வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு அடுத்த மாதம் 13ம் தேதி முதல் 22-ம் தேதி வரை 10 நாட்கள் ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட வாசல் திறந்திருக்கும்.

     எனவே பக்தர்கள் வைகுண்ட வாசல் பிரவேசம் செய்வதற்கு வசதியாக 14ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை ஒன்பது நாட்கள் நாள் ஒன்றுக்கு 2000 என்ற எண்ணிக்கையில் ஸ்ரீவாணி அறக்கட்டளை மூலம் விஐபி பிரேக் தரிசனம் டிக்கெட்டுகள் ஆன்லைனில் வழங்கப்படும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

     டிக்கெட்டுகள் தேவையான பக்தர்கள் ஸ்ரீ வாணி அறக்கட்டளைக்கு தலா பத்தாயிரம் ரூபாய் நன்கொடை மற்றும் டிக்கெட் கட்டணம் 500 ஆகியவற்றை ஆன்லைனில் செலுத்தி டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்.

     அதேபோல் ஜனவரி, பிப்ரவரி ஆகிய மாதங்களில் ஸ்ரீவாணி அறக்கட்டளை திட்டத்தின்கீழ் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் 200 விஐபி பிரேக் தரிசன டிக்கெட்டுகளையும்,சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் 300 விஐபி பிரேக் தரிசன டிக்கெட் களையும் தேவஸ்தானம் நாளை மாலை ஆன்-லைனில் வெளியிட உள்ளது அவற்றையும் பக்தர்கள் ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு நன்கொடையாக 10,000 ரூபாயும் டிக்கெட் கட்டணம் 500 ரூபாயும் செலுத்தி ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம்.

  • Sabari malai Online booking

    சபரிமலை  ஐயப்பன் கோயிலில் ஆடி மாத பூஜைக்காக வருகிற 16-ந் தேதி நடை திறக்கப்படுகிறது. ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்யும் 5 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்படும் என்று தேவசம்போர்டு தெரிவித்துள்ளது. 

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆடி மாத பூஜைக்காக வருகிற 16-ந் தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராஜ் போற்றி நடையை திறந்து வைக்கிறார். தொடர்ந்து 21 -ந் தேதி வரை பூஜைகள் நடைபெறும்.

    இந்த நாட்களில் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், உஷபூஜை, உச்ச பூஜைக்கு பின்னர் மதியம் 1 மணிக்கு நடை அடைக்கப்படும். மாலை 5 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்பட்டு தீபாராதனை, அபிஷேகமும், இரவு 8.30 மணிக்கு அரிவராசனம் பாடி நடை அடைக்கப்படும்.

    கொரோனா கட்டுப்பாடு தளர்வு காரணமாக சபரிமலையில் தினசரி 5 ஆயிரம் பக்தர்கள் ஆன்லைன் முன் பதிவு அடிப்படையில் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும், இணையதள முகவரி sabarimalaonline.org என்றும் அறிவிக்கப்பட்டது. இதையொட்டி, தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு நேற்று மாலை 5 மணிக்கு தொடங்கியது. முன்பதிவு செய்த பக்தர்கள் 17-ந் தேதி முதல் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள்.

    சபரிமலைக்கு வரும் பக்தர்கள் 48 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர் நெகட்டிவ் சான்றிதழ் அல்லது கொரோனா தடுப்பூசி 2 டோஸ் போட்டதற்கான சான்றிதழை கண்டிப்பாக கொண்டு வர வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

  • Sabari malai Online booking

    புகழ்பெற்ற  சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் தரிசனம் செய்ய  ஆன்லைன் முன்பதிவு நாளை முதல் தொடங்குகிறது. சபரிமலை: மண்டல, மகரவிளக்கு பூஜைகளுக்காக, இந்த ஆண்டிற்கான ஆன்லைன் முன் பதிவு ( Virtual Q Booking Tickete ) நவம்பர்  1 (1/11/2020) முதல் தொடங்குகிறது !

    டிக்கெட்டுகள் நவம்பர் 1, 2020 முதல் ஜனவரி 14 / 2021 வரை மட்டுமே முன்பதிவு செய்யக் கிடைக்கும். பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவினை தனிநபராகவோ  அல்லது குழுவாகவோ பதிவு செய்து கொள்ளலாம்.

    தற்போதுள்ள நிலையில் நாள் ஒன்றுக்கு 1000 பக்தர்களும், வார இறுதி நாட்களில் 2500 பக்தர்கள் அனுமதிக்க முடிவு செய்துள்ளது. குறிப்பு: (1000 பக்தர்கள் அனுமதிப்பது தொடர்பான நிலைபாடு மாற்றம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது)

    முன் பதிவு செய்ய போட்டோஉடன் கூடிய அரசு ஆவணங்கள் தேவை என அறிவுருத்தப்பட்டுள்ளது. இதற்கு Aadhar Card, Pan card, voter ID, Driving licence இதில் ஒன்றை தேர்ந்தெடுத்து கொள்ள முடியும் விண்ணுயிர் செய்யமுடியும் 
    முன்பதிவுசெய்ய 
    www.sabarimalaonline.org  எண்ற இணையத்தில் மட்டும் முன்பதிவு செய்ய வேண்டும் !

    மண்டல பூஜை டிசம்பர் 26 ம் தேதியும், 41 நாள் மண்டலபூஜை நிறைவடைந்த பிறகு (யாத்திரை காலத்திற்குப் பிறகு ) டிசம்பர் 27 ஆம் தேதி கோயில் திருகோயில் நடை அடைக்கப்படும்.
    இது மகரவிளக்கு புனித யாத்திரைக்காக டிசம்பர் 30 ஆம் தேதி மீண்டும் திறக்கப்படும். மகரவிளக்கு 2021 ஜனவரி 14 ஆம் தேதி முடிவடைந்த பிறகு , கோயில் திருநடை ஜனவரி 20 ஆம் தேதி மூடப்படும். சபரிமலை நடை நவம்பர் 15 மாலை திறக்கப்படும்  பக்தர்கள் நவம்பர் 16 முதல் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Thirupathy Online Ticket Booking

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆகஸ்ட் மாதம் நடைபெறக்கூடிய ஆர்ஜித சேவைகளுக்கான ஆன்லைன் முன்பதிவு கோட்டா வெளியிடப்பட்டுள்ளது. ஆகஸ்ட்  மாதத்திற்கான  கட்டண  சேவைகளுக்கான முன்பதிவு செய்வதற்கான 69,254 டிக்கெட் கோட்டா வெளியிடப்பட்டுள்ளது. 

    டிக்கெட் விபரம்…
    ஆன்லைன் குலுக்கல் முறையில் 10,904 டிக்கெட்
    சுப்ரபாதம்  – 7549
    தோமாளை – 120
    அர்ச்சனை – 120
    அஷ்டதள பாதபத்ம ஆராதனை – 240
    நிஜபாத தரிசனம் – 2875
    பொது கோட்டா  ( GENERAL CATEGORY ) 58,350  நேரடியாக முன்பதிவு செய்யும் விதமாக வைக்கப்பட்டுள்ளது.
    கல்யாண உற்சவம் – 13,300
    ஊஞ்சல் சேவை – 4,200
    விசேஷ பூஜை – 1,500
    ஆர்ஜித பிரம்மோற்சவம் –  7,700
    வசந்த உற்சவம் -14,850
    சகஸ்கர தீப அலங்கார சேவை – 16,800

    இதில் பொது கோட்டா டிக்கெட் டிக்கெட் இன்று காலை 10 மணி முதல் www.ttdsevaonline.com என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம். முதல் முறையில் வெளியிடப்பட்டுள்ள 10 ஆயிரத்து 904 டிக்கெட்டுகள் பெறுவதற்கு  5 ஆம் தேதி காலை 10 மணி வரை பக்தர்கள் ஆன்லைன் மூலமாக பதிவு செய்து கொள்ளலாம். 

    பதிவு செய்யப்பட்ட பக்தர்கள் 5 ஆம் தேதி காலை 10 மணி முதல் 12மணி கிடையே குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். தேர்ந்தெடுக்கப்பட்ட பக்தர்கள் 8 ம் தேதி மதியம் 12 மணிக்குள் ஆன்லைன் மூலமாக  பணம் செலுத்தி டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம் என தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.