Sadha chandi maha yagam

மனிதர்களுக்கு நோய் நொடிகள் அவரவர் கர்மவினைப்படி வந்துதான் தீரும். இதிலிருந்து நம்மை தன்வந்திரி வழிபாடு ஒன்றே காப்பாற்றவல்லது. இவரை வழிபட்டால் நோய் நொடிகள் நீங்குவதோடு ஆரோக்கியமும் உண்டாகும். ஸ்ரீரங்கநாதருக்கு வைத்தியம் பாத்தவர் ஸ்ரீதன்வந்திரிபகவான், அவரே ஸ்ரீமன்நாராயணன். அப்படிப்பட்ட தன்வந்திரி பகவானுக்கு வாலாஜாபேட்டை அனந்தலை ஸ்ரீதன்வந்திரி ஆரோக்யபீடம் அமைந்துள்ளது. இப்பீடத்தில் இங்கு சைவம், வைணவம், ஸ்ரீ சாக்தம், சௌரம், கௌமாரம் மற்றும் காணபத்யம் என 6 மதங்களுக்குறிய தெய்வங்களை கொண்டு 87 பரிவார சந்நதிகளை அமைத்து  அவற்றுடன் 468 சித்தர்கள் சிவலிங்கம் ரூபமாக அமைந்துள்ளது மிகசிறப்பாகும் மேலும் யாகமே யோகம் – ஹோமமே ஷேமம் என்ற வார்த்தைக்கிணங்க தினசரி பல்வேறு வகையான ஹோமங்கள் நடைபெறும் யக்ஞம் பூமியாக திகழ்ந்து வருகிறது ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்.

இங்கு வரும் பக்தர்களுக்கு தன்வந்திரிபகவான் வைத்தியம் செய்யும் விதமாக, கையில் அட்டைப்பூச்சி, அமிர்தகலசம், கத்தி மற்றும் மருத்துவ உபகரணங்களுடன் தரிசனம் தருகின்றார். இவரை வழிபட்டால் தீராதநோயும் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும். ஸ்ரீதன்வந்திரி ஆரோக்யபீடம் எனும் பெயரில் வாலாஜாபேட்டை,  இராணிப்பேட்டை மாவட்டத்தில் அமைந்துள்ளது.

இப்பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதியக் ஞஸ்ரீகயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீமுரளிதரஸ்வாமிகள் அருளாசிகளுடன் வருகின்ற 8.12.2021 புதன்கிழமை பெருமாளுக்கு உகந்த திருவோணம் நட்சத்திரம் முதல் 20.12.2021 ஈஸ்வரனுக்கு உகந்த திருவாதிரை நட்சத்திரம் வரை தினமும்காலை 10.00 மணிமுதல்மாலை 06.00 மணிவரை உலகமக்கள் ஆரோக்யம், ஆனந்தம், ஐஸ்வர்யம் பெற ஸ்ரீஆரோக்ய லக்ஷ்மி சமேத தன்வந்திரி பெருமாள் மற்றும் இதர பரிவார மூர்த்திகளை வேண்டி கொரோனா என்ற கொடிய நோயின் அச்சம் மற்றும் தாக்கம் குறையவும் பாதிக்கப்பட்ட மக்கள் விரைவில் குணமடையவும் 100க்கும் மேற்ப்பட்ட விலை உயர்ந்த மூலிகைகள், பழங்கள், புஷ்பங்கள், கடுக்காய், ஜாதிக்காய், ஏலக்காய் போன்ற பொருள்களுடன் பட்டு வஸ்திரங்கள், நெய், தேன் பட்சணங்கள் கொண்டுமேற்கண்ட நாட்களில் சிறப்பு தொடர் யாகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற உள்ளது.

தொடர்புக்கு :
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
தொலைபேசி : 04172 – 294022,செல்– 9443330203

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *