Dhanvanthri 100 chandi yagam

இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டையில் “யக்ஞஸ்ரீ கயிலைஞான குரு” டாக்டர் ஸ்ரீமுரளிதரஸ்வாமிகள் தனது பெற்றோரின் வாக்கினை ஏற்று நோயற்று வாழட்டும் உலகு என்ற தாரகமந்திரத்தை குறிக்கோளாக கொண்டு உலக மக்கள் நலன் கருதி ஸ்ரீதன்வந்திரி ஆரோக்யபீடத்தை அமைத்து 87 பரிவார மூர்த்திகளுடன் மூலவர் தன்வந்திரி பகவானை பிரதிஷ்டை செய்து உள்ளார்.

இங்கு உள்ள மூலவர் மற்றும் உற்சவர் தன்வந்திரி இந்தியாவின் பல இடங்களில் 665 நாட்கள் சுமார் இரண்டு லட்சம் கிலோ மீட்டர் கரிக்கோல பயணம் செய்து 500க்கும் மேற்பட்ட புண்ணிய க்ஷேத்திரம் சென்று 2000க்கும் மேற்பட்ட கிராமங்கள் மற்றும் நகரங்களில் உள்ள பல்வேறு ஆலயங்கள், மடங்கள் சென்று பல மடாதிபதிகளின் வழிபாடுகளை ஏற்றுக் கொண்டு பல்வேறு புனித தீர்த்தங்களில் நீராடி 67க்கும் மேற்பட்ட திவ்ய தேசப்பெருமாளின் அபிமானத்தை பெற்று தேசத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பக்தர்கள் மூலம் 147 தன்வந்திரி ஹோமம் செய்து சுமார் 46 லட்சம் பக்தர்கள் கைப்பட எழுதிய 54 கோடி தன்வந்திரி லிகித ஜப மஹாமந்திரங்களை பெற்று அவற்றை கர்ப்ப கிரஹத்தின் கீழ்மந்திர மேயந்திரமாக வைத்து மூலவர் தன்வந்திரி பகவானை பிரதிஷ்டையாகி உள்ளார் என்பது இந்த ஷேத்திரத்தின் சிறப்பாகும்.

இத்தகைய சிறப்புகள் வாய்ந்த ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் நடைபெறும் தொடர் ஹோமத்திலும் ஆராதனைகளிலும் பங்கேற்பதன் மூலம் உடலின் எதிர்ப்புத்திறன் உயர்ந்து ஆயுள் ஆரோக்கியம் மேம்படும், தீராத நோய்களை தீரும், கர்மவினை விலகி வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும், சகல ஐஸ்வர்யங்களும் பெறலாம் மற்றும் பலநன்மைகளை பெறலாம் என்கிறார் யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்.

அதன்படி ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடித்தில், 100 சண்டி யாகம் நடைபெற இருக்கிறது. டிசம்பர் 19 ஆம் தேதி தொடங்கும் இந்த யாகம் இரண்டு நாட்களுக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. காலை, மாலை என்று இருவேலையும் நடைபெறும் இந்த சண்டி யாகத்தில் பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன் பெற வேண்டும் என்று ஸ்ரீதன்வந்திரி பீடம் கேட்டுக்கொண்டுள்ளது. 
 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *