Thiruverkadu amman koil

சென்னையில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்று திருவேற்காடு தேவி கருமாரி அம்மன் இந்த கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் பவுர்ணமி தினத்தில் நிறை மணி காட்சி நடைபெறும் இந்த ஆண்டும் கோவில் மூலஸ்தானம் மற்றும் முன் பகுதியில் பழங்கள், காய்கறிகள், தானியங்கள், எண்ணெய், இனிப்பு வகைகள் என அனைத்தும் பையில் கட்டி தொங்க விடப்பட்டது. 

தேவலோகத்தில் இருப்பது போல் இருக்க வேண்டும் என்பதற்காக பழங்கள், காய்கறிகள் கட்டி தொங்க விடப்பட்டன. பார்ப்பதற்கு கண்ணுக்கு குளிர்ச்சி அளிப்பது போல் காட்சி அளித்தது. மேலும் நாம் வேண்டியது நமக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் உலகில் உள்ள ஜீவ ராசிகள் பசி, பட்டினி இல்லாமல் வாழ வேண்டும் என்றும் மழை, இயற்கை வளங்கள் பெருக வேண்டும், விவசாயம் தழைக்க வேண்டும் என்பதற்காக இதனை செய்வதாகவும் தெரிவித்தனர். 

மேலும் 3 நாட்கள் நடக்கும் இந்த நிகழ்ச்சியில் கடைசி நாளில் இங்கு தொங்கவிடப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் ஒன்று சேர்த்து கூட்டாஞ்சோறு செய்து அம்மனுக்கு படைக்கப்பட்டு பின்னர் பக்தர்களுக்கு அன்னதானமாக வழங்கப்படும் இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் பக்தர்கள் அந்த பழங்கள், காய்கறிகளை புகைப்படம் எடுத்து சென்றனர்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *