Gangai amman koil kumbabishegam

சென்னை திருவொற்றியூரில் பழமையான கங்கை அம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

 திருவொற்றியூர் காலடிப்பேட்டை பகுதி அருகே குடியிருப்பு பகுதியில் உள்ள பழமையான கங்கை அம்மன் கோவிலில் புனரமைப்பு பணிகள் நிறைவு பெற்று கோபுர விமானங்களுக்கு கும்பாபிஷேகம்  நடைபெற்றது 

 முன்னதாக 3 நாட்கள் யாகசாலை பூஜைகள் நடைபெற்றது கணபதி ஹோமம் நவக்கிரக ஹோமம் மகா லட்சுமி ஹோமம் வாஸ்து சாந்தி பூஜைகள் நடைபெற்றது இதனையடுத்து  இன்று காலை  யாகசாலை பூஜைகள் நிறைவுபெற்று பூர்ணாஹுதி  முடிந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க மேளதாளங்களுடன் ஊர்வலமாக சென்று விமான கலசங்களுக்கு புனித நீர் ஊற்றினர்

 இதில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான மக்கள் கும்பாபிஷேகத்தில் பங்கேற்று அம்மனை வழிபட்டனர்

 இதனையடுத்து அம்மனுக்கு விசேஷ வாசனை திரவியங்களால் அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார் பழமையான அம்மன் கோவிலில் பல ஆண்டுகள் கழித்து நடைபெறும் கும்பாபிஷேகத்தில் சுற்றுவட்டார மட்டுமல்லாமல்  இப்பகுதியை சேர்ந்த மக்களும்  ஏராளமானோர் பங்கேற்று  அம்மனை வழிபட்டனர்.  இதனையடுத்து அன்னதான பிரசாதங்கள் வழங்கப்பட்டன

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *