thirunallaru Sani Peyarchi

திருநள்ளாறு சனீஸ்வரர் சன்னதியில் டிசம்பர் 27-ஆம் தேதி சனிப்பெயர்ச்சி விழா நடைபெறும் என்று கோவில் நிர்வாக அதிகாரி கூறியுள்ளார். சனிப்பெயர்ச்சி வரும் 24 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் டிசம்பர் 27 ஆம் தேதியே பெயர்ச்சி விழா நடைபெறும் என்று கோயில் நிர்வாகம் அறிவித்து இருக்கிறது. 

திருநள்ளாறு தர்பாராண்யேஸ்வரர் கோவிலில் சனீஸ்வரருக்கு தனி சன்னதி உள்ளது. சனிப்பெயர்ச்சியின் போது லட்சக்கணக்கான பக்தர்கள் இங்கு வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.

திருக்கணித பஞ்சாங்கத்தின் படி வருகிற 24-ஆம் தேதி சனிப்பெயர்ச்சி விழா நடைபெறவுள்ளமாக தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள திருநள்ளாறு கோவில் நிர்வாக அதிகாரி சுபாஷ், திருநள்ளாறு கோவிலில் டிசம்பர் 27-ஆம் தேதி தான் சனிப்பெயர்ச்சி விழா கொண்டாடப்பட உள்ளது என்று கூறியுள்ளார். வருகிற டிசம்பர் 27 ஆம் தேதி அன்று அதிகாலை 5.22 மணிக்கு சனிப்பெயர்ச்சி நடைபெற உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *