Thirupathy Free Laddu

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்யும் ஒவ்வொரு  பக்தர்களுக்கு இலவசமாக  1 லட்டு பிரசாதம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 

அதேவேலையில் சர்வ, திவ்ய தரிசனத்தில் செல்லும் பக்தர்களுக்கு இனி சலுகை விலையில் லட்டு வழங்குவது நிருத்தப்பட்டு ஒரு லட்டு 50 ரூபாய்க்கு விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. 

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வருகின்றனர்.  அவ்வாறு வரக்கூடிய பக்தர்களில் இலவச தரிசனத்தில் வரும் பக்தர்களுக்கும் , ஆதார் அட்டை மூலமாக சர்வ தரிசனம் டிக்கெட் பெற்ற பக்தர்களுக்கும், அலிபிரி மற்றும் ஸ்ரீவாரிமெட்டு மலைப்பாதையில் பாதயாத்திரையாக வரக்கூடிய திவ்ய தரிசனம் டிக்கெட் பெற்றவர்களுக்கு தரிசனத்திற்கு செல்லக்கூடிய வைகுண்டம் காத்திருப்பு அறைக்கு செல்லும் நுழைவாயிலில் சலுகை விலையில் 4 லட்டுகள் பெறுவதற்கு 70 ரூபாய் கட்டணம் பெறப்பட்டு டிக்கெட் வழங்கப்படுகிறது. 

ஒரு லட்டு தயார் செய்வதற்கு 40 ரூபாய் செலவு செய்யப்பட்டு வரும் நிலையில்  பக்தர்களுக்கு சலுகை விலையில் லட்டு வழங்குவதால் தேவஸ்தானத்திற்கு குமார் ஆண்டுக்கு 200 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இதனால் கடந்த ஆண்டு கூடுதல்களை லட்டுகளை தேவஸ்தானம் சார்பில் கோவிலுக்கு வெளியே ஒரு லட்டின் விலை ரூபாய் 25 ல் இருந்து  ஐம்பது ரூபாயாக விலை உயர்த்தி விற்பனை  செய்து வருகிறது.  

இந்நிலையில் சலுகை விலையில் பக்தர்களுக்கு வழங்கக்கூடிய லட்டுகளை முற்றிலுமாக ரத்து செய்து சாமி தரிசனத்திற்கு செல்லக்கூடிய பக்தர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு லட்டு இலவசமாக வழங்கி மீதமுள்ள லட்டுகளை ரூபாய் 50 க்கு விற்பனை செய்து பக்தர்கள் தேவைக்கு ஏற்ப எத்தனை லட்டுகள் வேண்டுமென்றாலும் வழங்க  தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

விரைவில்  விலை உயர்வு நடைமுறைக்கு கொண்டுவரப்படும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *