Tag: Free Laddu

  • Thirupathy Free Laddu

    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்யும் அனைத்து பக்தர்களுக்கும் ஒரு லட்டு இலவசமாக வழங்கப்பட உள்ளது.

    உலக அளவில் பிரசித்திப் பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வழங்கப்படும் லட்டு அனைவரது விருப்பப்பட்டியலில் இருக்கும். இந்தநிலையில், திருப்பதி கோயிலில் இலவச தரிசனம், சர்வ தரிசனம், திவ்ய தரிசனம் ஆகிய பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 4 லட்டுகள் 70 ரூபாய்க்கு வழங்கும் நடை முறையை தேவஸ்தானம் நாளை முதல் நிறுத்த உள்ளது.

    அதற்கு பதிலாக ஒரு இலவச லட்டு வழங்கப்படுகிறது. கூடுதலாக தலா 50 ரூபாய் வீதம் எத்தனை லட்டுகள் வேண்டுமானாலும் வாங்கிக்கொள்ளலாம் எனவும், இதற்காக கோயிலுக்கு வெளியே கூடுதலாக 12 கவுண்டர்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தேவஸ்தானம் கூறியுள்ளது.  

    நாள் ஒன்றுக்கு 3 லட்சத்திலிருந்து 4 லட்சம் லட்டுகள் தயாரிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  அதிகாலை சுப்ரபாத சேவையில் துவங்கி இரவு வரை ஏழுமலையானை வழிபடும் அனைத்து பக்தர்களுக்கும் இந்த நடைமுறை பொருந்தும்.

  • Thirupathy free Laddu

    ஜனவரி 20 ஆம் தேதி முதல் சலுகை விலையில் வழங்கப்பட்டு வந்த லட்டுகள் ரத்து செய்து அனைத்து பக்தர்களுக்கும் ஒரு லட்டு இலவசமாக வழங்க திருப்பதி திருமலை தேவஸ்தானம் முடிவு செய்து இருக்கிறது. 

    இதுவரை அலிபிரி மற்றும் ஸ்ரீவாரிமெட்டு மலைப்பாதையில் பாத யாத்திரையாக திருமலைக்கு நடந்து வரக்கூடிய பக்தர்களுக்கு ஒரு லட்டு இலவசமாக வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய கூடிய அனைத்து பக்தர்களுக்கும் ஒரு லட்டு இலவசமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

    ஏற்கனவே இலவச தரிசனத்தில், சர்வ தரிசனத்தில், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்கள்,  ஒரு வயது குழந்தையுடன் பெற்றோர்கள் செல்லும் தரிசனத்தில்  சலுகை விலையில் 4 லட்டுகள் 70 ரூபாய்க்கு வழங்கப்பட்டு வந்தது. 

    இனி சலுகை விலையில் வழங்கப்பட்டு வந்த லட்டுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு ஒரு லட்டு மட்டும் இலவசமாக வழங்கி பக்தர்கள் தேவைக்கேற்ப ஒரு லட்டு ரூபாய் 50 க்கு கோவிலுக்கு வெளியே அமைக்கப்பட்டுள்ள லட்டு கவுன்டரில் பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

  • Thirupathy Free Laddu

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்யும் ஒவ்வொரு  பக்தர்களுக்கு இலவசமாக  1 லட்டு பிரசாதம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 

    அதேவேலையில் சர்வ, திவ்ய தரிசனத்தில் செல்லும் பக்தர்களுக்கு இனி சலுகை விலையில் லட்டு வழங்குவது நிருத்தப்பட்டு ஒரு லட்டு 50 ரூபாய்க்கு விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. 

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வருகின்றனர்.  அவ்வாறு வரக்கூடிய பக்தர்களில் இலவச தரிசனத்தில் வரும் பக்தர்களுக்கும் , ஆதார் அட்டை மூலமாக சர்வ தரிசனம் டிக்கெட் பெற்ற பக்தர்களுக்கும், அலிபிரி மற்றும் ஸ்ரீவாரிமெட்டு மலைப்பாதையில் பாதயாத்திரையாக வரக்கூடிய திவ்ய தரிசனம் டிக்கெட் பெற்றவர்களுக்கு தரிசனத்திற்கு செல்லக்கூடிய வைகுண்டம் காத்திருப்பு அறைக்கு செல்லும் நுழைவாயிலில் சலுகை விலையில் 4 லட்டுகள் பெறுவதற்கு 70 ரூபாய் கட்டணம் பெறப்பட்டு டிக்கெட் வழங்கப்படுகிறது. 

    ஒரு லட்டு தயார் செய்வதற்கு 40 ரூபாய் செலவு செய்யப்பட்டு வரும் நிலையில்  பக்தர்களுக்கு சலுகை விலையில் லட்டு வழங்குவதால் தேவஸ்தானத்திற்கு குமார் ஆண்டுக்கு 200 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

    இதனால் கடந்த ஆண்டு கூடுதல்களை லட்டுகளை தேவஸ்தானம் சார்பில் கோவிலுக்கு வெளியே ஒரு லட்டின் விலை ரூபாய் 25 ல் இருந்து  ஐம்பது ரூபாயாக விலை உயர்த்தி விற்பனை  செய்து வருகிறது.  

    இந்நிலையில் சலுகை விலையில் பக்தர்களுக்கு வழங்கக்கூடிய லட்டுகளை முற்றிலுமாக ரத்து செய்து சாமி தரிசனத்திற்கு செல்லக்கூடிய பக்தர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு லட்டு இலவசமாக வழங்கி மீதமுள்ள லட்டுகளை ரூபாய் 50 க்கு விற்பனை செய்து பக்தர்கள் தேவைக்கு ஏற்ப எத்தனை லட்டுகள் வேண்டுமென்றாலும் வழங்க  தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

    விரைவில்  விலை உயர்வு நடைமுறைக்கு கொண்டுவரப்படும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

  • Meenatchi Amman Koil Free Laddu

    உலக புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் தரிசனம் மேற்கொள்ள வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக இலவச லட்டு வழங்கும் திட்டதினை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி  காணொளி காட்சி மூலம் துவங்கி வைத்தார்.

    மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் தரிசனத்திற்காக  நாள்தோறும் சராசரியாக 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் பேர் வரை  வருகை தருகின்றனர். அம்மன் சன்னதியில் தரிசனம் முடித்து வரும் வழியில் உள்ள கூடல் குமரன் சன்னதி பிரகாரத்தில் வைத்து லட்டு வழங்கப்படுகிறது. .

    தீபாவளி முதல்  லட்டு வழங்கப்படும் என கோவில் நிர்வாகம் கடந்த செப்டம்பர் 12ம் தேதி  அறிவித்த நிலையில் லட்டு தயாரிப்பிற்கான சோதனை ஓட்டமும் உட்கட்டமைப்பு பணிகளும் நடைபெறுவதால் தீபாவளிக்கு பின்னர் ஒரு தேதியில் லட்டு வழங்கும் திட்டம் துவங்கும் என பின்னர் அறிவித்தது.
      
    லட்டு தயாரிக்கும் பணி அம்மன் சன்னதிக்கு வலதுபுறம் உள்ள மடப்பள்ளி வளாகத்தில் வைத்து நடைபெறுகிறது.   லட்டு தயாரிப்பு பணியில் 15 ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். லட்டு தயாரிப்பிற்காக ஒரு பிரத்தியோகமான லட்டு உருட்டு இயந்திரம் பயன்படுத்தப்பட்டுள்ளது. 

    நேர்த்தியான சுவையுடன் 30 கிராம் எடை கொண்ட லட்டு பக்தர்களுக்கு வழங்கப்பட உள்ளது.நாள்தோறும் 20ஆயிரம் லட்டு தயாரிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    மீனாட்சியம்மன் கோவில்  நிதியிலிருந்து லட்டு வழங்கும் திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் பக்தர்களின் வருகை அதிகரிப்பிற்கு ஏற்ப கூடுதலாகள லட்டு தயாரிப்பதற்காண பணிகள் மேற்கொள்ளப்படும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.