Palani Murugan Koil Navarathiri Vizha

 பழனி முருகன் கோவிலில் ஆண்டுதோறும் நவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டுக்கான நவராத்திரி விழா செப்டம்பர் 29-ந்தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்குகிறது.

பழனி முருகன் கோயிலில் நவராத்திரி விழா செப்டம்பர் 29 ஆம் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்குகிறது. கோயில் சுத்தம் செய்யப்பட்டு முருகப்பெருமான், வள்ளி, தெய்வானை மற்றும் துவார பாலகர்களுக்கு காப்புக்கட்டு நடைபெறும். 

10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் தினமும் பெரியநாயகி அம்மனுக்கு காலை 6 மணிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்படுகிறது. அதேபோல் மாலை 7 மணிக்கு சிறப்பு அலங்காரம் நடைபெறும். 

நவராத்திரி விழாவின் 10-நாளான அக்டோபர் மாதம் 8-ஆம் தேதி விஜயதசமி அன்று பழனி முருகன் கோவிலில் பகல் 12 மணிக்கு உச்சிக்கால பூஜை, 1.30 மணிக்கு சாயரட்சை பூஜை நடைபெறுகிறது.

பின்னர் மாலையில் 3 மணி அளவில் மலைக்கோவிலில் இருந்து பராசக்திவேல் புறப்பட்டு பெரியநாயகி அம்மன் கோவிலுக்கு செல்லும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதையடுத்து அங்கிருந்து முத்துக்குமார சுவாமி தங்கக்குதிரை வாகனத்தில் கோதைமங்கலம் செல்லும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. தொடர்ந்து அங்கு மாலை 6 மணிக்கு மேல் வில்அம்பு போடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

நவராத்திரி விழாவை ஒட்டி கோயில் வளாகத்தில் பல்வேறு பொம்மைகளை கொண்டு கொலு வைக்கப்படுகிறது. அதோடு விழாவையொட்டி தினமும் பக்தி கச்சேரி, சொற்பொழிவு, பரதநாட்டியம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது. 
 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *