Kulasekara pattinam Dasara

உலகப்பிரசித்தி பெற்ற  குலசேகரன்பட்டிணம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா செப்டம்பர் -29 ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. முக்கிய நிகழ்ச்சியான மகிஷாசூர சம்ஹாரம் வரும் அக்டோபர் 8 அன்று நடைபெறவுள்ளது.

திருச்செந்தூர் அருகிலுள்ள  குலசேகரன்பட்டிணம் ஞானமூர்த்தீசுவரர் சமேத முத்தாரம்மன் கோவிலில்  உலகப்புகழ் பெற்ற தசரா திருவிழா ஆண்டுதோறும்  கோலாகலாமாக  கொண்டாடப்பட்டு வருகிறது. தசரா திருவிழாவிற்கு புகழ்பெற்றழ்பெற்ற கர்நாடக மாநிலம் மைசூருக்கு அடுத்தபடியாக குலசேகரன்பட்டிணம் முத்தாரம்மன் கோவிலில்  கோலாகமாக கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரி தினத்தை முன்னிட்டு கொண்டாடப்படும்  தசரா திருவிழா வரும் செப்டம்பர் -29 ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. முக்கிய நிகழ்ச்சியான மகிஷாசூர சம்ஹாரம் வரும் அக்டோபர் 8 அன்று நடைபெறவுள்ளது.

இதனை முன்னிட்டு பாதுகாப்பு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் திருச்செந்தூர் அடுத்துள்ள குலசேகரன்பட்டினத்தில் வைத்து திருச்செந்தூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பக்தர்கள் , தசரா குழு நிர்வாகிகள் கோவில் செயல் அலுவலர் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

அதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த திருச்செந்தூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் பரத் கூறியதாவது, தசரா திருவிழாவில் சுமார் 15 லட்சம் பக்தர்கள் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திருவிழாவிற்கு வரும் பக்தர்களின் குழந்தைகளுக்கு அவர்களின் பெயர் மற்றும் முகவரி கொண்ட அடையாள அட்டை காவல்துறை சார்பில் வழங்கப்படும்.இதன்மூலம் காணமல் போன குழந்தைகளை அடையாளம் காண்பது எளிதாகும் என்றார்.

 வாகனங்கள் வந்து செல்ல ஒருவழிபாதை ஏற்படுத்தப்பட உள்ளதாகவும், முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு கேமரா மூலம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் 3 புறக்காவல் நிலையம் அமைக்கபடுவதோடு காவல் உதவி மையம் மக்கள் கூடும் இடங்களில் அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

மேலும் வேடம் அணியும் பக்தர்கள் இரும்பு போன்ற உலோகங்களினாலான ஆயுதங்கள் எடுத்து வர அனுமதியில்லை மற்றும் சாதி மற்றும் கட்சி கொடிகள் கொண்டு வரவும் தடை விதிக்கப்படுவதாக தெரிவித்தார்.
 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *