Jeshtadeviku Ugandha naal

முதல் தேவியாகிய ஞானத்தையும், முக்தியையும் தரவல்ல ஜேஷ்டா தேவிக்கு நாளை மிகவும் உகந்த நாள். இந்த நாளில் லட்சுமி தேவியை வணங்கி நலம் பெறுங்கள். அருகில் உள்ள மகாலட்சுமி கோயில்களுக்கு சென்று வழிபடுங்கள். அல்லது உங்கள் வீட்டிலேயே லட்சுமி தேவியை வணங்கினால் அனைத்து செல்வங்களும் கிடைக்கும் என்று வாசியோகி ஓம் பரமானந்த பாபா தெரிவித்துள்ளார்.

ஜேஷ்டா என்றால் சேட்டை என்று பொருள். தேவர்களுக்காக பார்க்கடல் கடையும் சமயத்தில் முதல் முதலில் வெளிவந்ததால் மூத்ததேவி அல்லது முதல் தேவி என்று அழைக்கப்படுகிறாள். ஆதிகாலத்தில் பக்தர்களால் துதிக்கப்பட்டவர்கள் 2 பேர். ஒன்று கொற்றவை என்று அழைக்கப்படும் கருணையின் வடிவான காளி தேவி. மற்றொருவள் தத்திரத்தை விளக்கவல்ல, வெற்றிகளை வாரி வழங்கவல்ல, ஞானத்தையும் முக்தியையும் தரவல்ல தவ்வை என்று அழைக்கப்பட்ட ஜேஷ்டாதேவி.

கால சக்கரத்தின்மேல் அமர்ந்து மக்களின் கருமவினைகளை தீர்த்து தரவல்ல தசமகா வித்தையில் 7வது தேவியாய் வீற்றிருக்கக்கூடிய புகை வடிவமான அம்பிகையே தூமாவதி. ஒவ்வொரு வீட்டிலும் இறை வழிபாட்டின்போது திருவிளக்கு ஏற்றியபிறகு தூபதீபம் காட்டுவதை வழக்கமாக கொண்டுள்ளோம். அந்த புகை ஒவ்வொரு வீட்டிலுல்ல தத்துரங்களையும் பிரச்சனைகளையும் போக்கித்தருகிறாள். 

அம்பாளின் திருக்கோலம் தேரில் வலது காலை மடக்கி இடது காலை சக்கரத்தின்மேல் வைத்து 4 திருக்கரங்களுடன் காட்சி தருகிறாள். முதல் கரத்தில் துடப்பத்தையும் மற்றொரு கரத்தில் நெருப்பில் இருந்து வெளி வரக்கூடிய புகையையும் மூன்றாவது கரத்தில் அபயம் மற்றும் நான்காம் கரத்தில் அட்சய பாத்திரம் வைத்துக்கொண்டு அருள் பாலிக்கிறாள். நாளை ஜேஷ்டாதேவிக்கு உகந்த நாள். அருகில் உள்ள  அம்மன் கோயில்களில் என்று வழிபடுங்கள். அல்லது உங்கள் வீடுகளில் மகாலட்சுமி படத்தை வைத்து வழிபட்டால் அனைத்து செல்வங்களும் கிட்டும். இன்றும் பழமைவாய்ந்த சிவன் கோயில்களில் அம்மன் சன்னதிக்கு பின்புறம் ஜேஷ்டா தேவி அமர்ந்த நிலையில் அருள்பாலிப்பதை காணலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

லட்சுமியின் அருள் மக்களுக்கு கிடைக்க முப்பெரும் தேவிகளுக்கும் சித்தர்கள் அருளாசியின் படி யாகங்கள் செய்தவர்தான் வாசியோகி ஓம் பரமானந்த பாபா. இந்த யாகங்களின் பலன்கள் மக்களுக்கு கிடைக்க கோயம்புத்தூரில் C21 / புது எண் 42, 43 சர்க்கரை செட்டியார் நகர், இஎஸ்ஐ (எதிரில்), உப்பிலிபாளையம் (போ) உள்ளது ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி சித்தர் பீடத்திலும் இதுபோன்ற வேள்விகளை நடத்தி உள்ளார்.

இங்கு வருபவர்களுக்கு கடன்கள் நீங்குகிறது. திருமணத் தடை, வேலை வாய்ப்பில் தடை, தொழில் முன்னேற்றம் இல்லாத நிலை, பொருளாதாரம் முன்னேற்றம் இல்லாத நிலை என அனைத்தும் நீங்கி வாழ்வில் உயர்வு கிடைக்கிறது. முக்கியமாக குழந்தையின்மை பிரச்னைக்கு தீர்வு கிடைக்கிறது. யாகங்களின் பலன்கள் முழுமையாக மக்களுக்கு கிடைக்கிறது. அனைத்து செல்வங்களும் கிட்டுகிறது. 

இங்கு மக்கள் நலன் வேண்டியும், சித்தர்கள் அருள் பரிபூரணமாக மக்களுக்கு கிடைக்க வேண்டியும் பிரதி அமாவாசை மேரு பூஜை, பௌர்ணமி அன்று ராஜராஜேஸ்வரி பூஜை நடக்கிறது. மேலும் ஆண்கள், பெண்களுக்கு வாசி யோக பயிற்சிகள், ஆழ்நிலை தியானங்கள் கற்றுத்தரப்படுகிறது. ஓம் பரமானந்த பாபாஜி சுவாமிகள். சித்தர்கள் வாக்கின் பிரகாரம் பரிகாரங்கள் செய்து வைக்கிறார். 

சுவாமிகளை சந்திக்க விரும்புபவர்கள் முன்பதிவு செய்து கொள்ள வேண்டியது மிக அவசியம்.

தொடர்புக்கு: 63747 72550, 74490 12379.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *