Ulaga Nanmai vendi 1008 vilakku poojai

சிவகங்கை அருகே உள்ள சிரமம் கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஶ்ரீகொங்கோஷ்வரர் சுவாமி திருக்கோவிலில் உலக நன்மைக்காகவும் மழை வேண்டியும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் நலம் வேண்டியும் 1008திருவிளக்கு பூஜை வழிபாடு  விமரிசையாக நடைபெற்றது.

 ஏழுமுக காளியம்மனுக்கு சிறப்பு திருமஞ்சனத்துடன் துவங்கியது  தொடர்ந்து திருவிளக்கு பூஜை வழிபாடு சிவாச்சாரியார்கள் தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் வரிசையாக அமர்ந்து கணபதி பூஜையுடன் விளக்கு பூஜையை நடத்தினர்.

 பூஜையில் 1008 சகசரநாம அர்ச்சனை 108 மகாலட்சுமி மற்றும் காயத்திரி மந்திரங்கள் ஜெபித்து குங்குமம் மற்றும் உதிரி பூக்களால் விளக்குக்கு அர்ச்சனை செய்தனர். இதில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டனர். 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *