Temple for men’s

 சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே சிங்கிபுரம் ஊராட்சிக்குட்பட்ட வனப்பகுதி சூழ்ந்த 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆண்கள் மட்டுமே பிரத்யேகமாக வழிபடக்கூடியதும், ஆண்கள்  வைக்கப்படும் பிராத்தனையை உடனே நிறை வேற்றும் சக்தி வாய்ந்தது.

 ஸ்ரீ அஞ்சலாங்குட்டை முனியப்பன், ஸ்ரீ வளர்ந்த சடாமுனி, ஸ்ரீ செம்முனி, ஸ்ரீவாமுனி கோயிலில், சுவாமியே யாக பூஜை நடத்த அருள் கூறியதால்  வாழப்பாடி, சிங்கிபுரம், முத்தம்பட்டி, செல்லப்பநகர், புதுப்பாளையம், பழனியாபுரம், காலணி, சேசன்சாவடி உள்ளிட்ட சுற்று பகுதியிலுள்ள விவசாயிகள், பொதுமக்கள், கிராமமக்கள் 500க்கும் மேற்ப்பட்ட ஆண்கள் திரண்டு மழை வேண்டி வருண சிறப்புயாகபூஜை நடத்தினர்.

சேலத்தை அடுத்த தாரமங்களத்தில் இருந்து உமா சிவாச்சாரியார் என்பவர் தலைமையில் இந்த வருண யாக பூஜை நடைபெற்றது. முதலில் வாஸ்து சாந்தி விக்னேஸ்வரர் பூஜையோட துவங்கி பல மணி நேரம் நடத்தப்பட்டது, இன்று காலை 7 மணி அளவில் துவங்கி  இந்த சிறப்பு வருண யாக  பூஜையில், கணபதி ஹோமம், மிருத்திங்க ஹோமம்,   காயத்ரி ஹோமம், சன்னாதி ஹோமம், நவக்கிரக ஹோமம் செய்து 210 சித்தர்கள் வர கைக்கான தமிழ் முறையில நாம சப வேல்வி என்ற பூஜை செய்து மகா அபிஷேகம் மதியம் 12 மணியளவில் முடிக்கப்பட்டது.
 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *