Thirupathy Dharshan Ticket

திருப்பதியில் திருமலையில் ஆர்ஜித சேவையில் ஏழுமலையானை தரிக்க மார்ச் மாதத்துக்கு குலுக்கல் முறையில் நிலுவையில்  டிக்கெட்டுகளின் பட்டியலை திருப்பதி திருமலை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.

திருப்பதி தேவஸ்தானம் மாதந்தோறும் முதல் வெள்ளிக்கிழமைகளில் இணையதள மூலம் ஆர்ஜித சேவா டிக்கெட்டுகளை வெளியிட்டு வருகிறது. அந்த
ஏழுமலையானை தரிசிக்க ஆர்ஜித சேவை டிக்கெட்டுகளை முன்பதிவு செய்த பக்தர்கள் சில தவிர்க்க முடியாத காரணங்களால் டிக்கெட்டுகளை ரத்து செய்து விடுகின்றனர். அவ்வாறு ரத்து செய்யப்பட்ட டிக்கெட்டுகளை தேவஸ்தானம் குலுக்கல் முறையில் பக்தர்களுக்கு அளிக்கிறது.  

இந்த டிக்கெட்டுகளை பெற விரும்பும் பக்தர்கள் சேவை நாளின் முன்தினம் திருமலை மத்திய விசாரணை அலுவலகத்தில் உள்ள விஜயா வங்கியில் தங்கள் பெயர், ஆதார் எண், பெருவிரல் ரேகை, கைபேசி எண் உள்ளிட்டவற்றை அளித்து சேவா டிக்கெட்டுகளை பெற விண்ணப்பிக்க வேண்டும்.

கிடைக்கப் பெற்ற விண்ணப்பங்களை மாலை 5 மணிக்கு குலுக்கல் நடத்தி அதில்  தேர்ந்தெடுக்கப்பட்ட பக்தர்களின் செல்லிடப்பேசி எண்ணுக்கு அதிகாரிகள் குறுந்தகவல் அனுப்புவர். தகவல் பெற்ற பக்தர்கள் மத்திய விசாரணை அலுவலகத்தில் தங்கள் டிக்கெட்டுகளை பெற்று மறுநாள் அதில் குறிப்பிட்டுள்ள நேரத்திற்கு சென்று ஏழுமலையானை ஆர்ஜித சேவையில் தரிசிக்கலாம். 

அதன்படி மார்ச் மாதம் நிலுவையில் உள்ள ஆர்ஜித சேவா டிக்கெட்டுகளின் பட்டியலை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.
 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *