Tag: Thirupathy

  • Thirupathy Dharshan Ticket

    திருப்பதியில் திருமலையில் ஆர்ஜித சேவையில் ஏழுமலையானை தரிக்க மார்ச் மாதத்துக்கு குலுக்கல் முறையில் நிலுவையில்  டிக்கெட்டுகளின் பட்டியலை திருப்பதி திருமலை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.

    திருப்பதி தேவஸ்தானம் மாதந்தோறும் முதல் வெள்ளிக்கிழமைகளில் இணையதள மூலம் ஆர்ஜித சேவா டிக்கெட்டுகளை வெளியிட்டு வருகிறது. அந்த
    ஏழுமலையானை தரிசிக்க ஆர்ஜித சேவை டிக்கெட்டுகளை முன்பதிவு செய்த பக்தர்கள் சில தவிர்க்க முடியாத காரணங்களால் டிக்கெட்டுகளை ரத்து செய்து விடுகின்றனர். அவ்வாறு ரத்து செய்யப்பட்ட டிக்கெட்டுகளை தேவஸ்தானம் குலுக்கல் முறையில் பக்தர்களுக்கு அளிக்கிறது.  

    இந்த டிக்கெட்டுகளை பெற விரும்பும் பக்தர்கள் சேவை நாளின் முன்தினம் திருமலை மத்திய விசாரணை அலுவலகத்தில் உள்ள விஜயா வங்கியில் தங்கள் பெயர், ஆதார் எண், பெருவிரல் ரேகை, கைபேசி எண் உள்ளிட்டவற்றை அளித்து சேவா டிக்கெட்டுகளை பெற விண்ணப்பிக்க வேண்டும்.

    கிடைக்கப் பெற்ற விண்ணப்பங்களை மாலை 5 மணிக்கு குலுக்கல் நடத்தி அதில்  தேர்ந்தெடுக்கப்பட்ட பக்தர்களின் செல்லிடப்பேசி எண்ணுக்கு அதிகாரிகள் குறுந்தகவல் அனுப்புவர். தகவல் பெற்ற பக்தர்கள் மத்திய விசாரணை அலுவலகத்தில் தங்கள் டிக்கெட்டுகளை பெற்று மறுநாள் அதில் குறிப்பிட்டுள்ள நேரத்திற்கு சென்று ஏழுமலையானை ஆர்ஜித சேவையில் தரிசிக்கலாம். 

    அதன்படி மார்ச் மாதம் நிலுவையில் உள்ள ஆர்ஜித சேவா டிக்கெட்டுகளின் பட்டியலை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.
     

  • Thirupathy Theppa Urchavam

    திருப்பதி திருமலை ஏழுமலையான் கோவிலில் இந்த ஆண்டிற்கான தெப்ப உற்சவம் வருகிற 16-ந்தேதி தொடங்குகிறது. பிப்ரவரி  20-ந்தேதி வரை தொடர்ந்து 5 நாட்கள் தெப்ப உற்சவம் நடைபெறுகிறது. இதனையொட்டி கோவிலில் நடைபெறும் வசந்த உற்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவை ரத்து செய்யப்பட்டு உள்ளதாக திருப்பதி திருமலை தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. 

    நிகழ்ச்சி நிரல்….. 

    பிப்ரவரி 16 – 
    முதல் நாளில் உற்சவர்களான சீதா, ராமர், லட்சுமணர் மற்றும் ஆஞ்சநேயருக்கு தங்க நகைகளால் அலங்காரம் செய்யப்பட்டு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர். அதைத் தொடர்ந்து உற்சவர்களை தெப்ப தேரில் வைத்து தெப்ப குளத்தை 3 முறை சுற்றி வரப்படும்.

    பிப்ரவரி 17 – 
    ருக்மணி சமேத கிருஷ்ணர் தங்க நகைகளால் அலங்கரிக்கப்பட்டு மாடவீதிகளில் வீதி உலா நடக்கிறது. 

    பிப்ரவரி 18 – 
    உற்சவர் மலையப்பசாமி ஸ்ரீதேவி, பூதேவியுடன் சிறப்பு அலங்காரத்தில் மாடவீதிகளில் ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார்.

    பிப்ரவரி 19 – 
    19-ந் தேதி உற்சவரான மலையப்பசாமியை தேரில் வைத்து தெப்ப குளத்தை 5 முறை சுற்றி வரப்படும்.

    பிப்ரவரி 20 –
    உற்சவர் மலையப்பசாமி ஸ்ரீதேவி, பூதேவியுடன் தெப்ப குளத்தை 7 முறை சுற்றி வரப்படும். 
     

  • Thirupathy Perumal arul pera

    திருப்பதி பெருமாளின் முழுமையான அருளை பெற சரியான  வழிமுறை….. 

    திருப்பதி பெருமாளை தரிசிக்கும் பக்தர்கள் நேரே திருமலைக்கு சென்று பெருமாளை மட்டும் வணங்கி திரும்புவது தவறு. 

    வெங்கடாசலபதியின் முழுமையான அருளை நாம் பெற முதலில் பத்மாவதி தாயாரை வழிபட வேண்டும். 

    முதலில் தாயார் வீற்றிருக்கும் திருச்சானூர் கோவிலுக்கு சென்று பத்மாவதி தாயாரை மனதார வேண்டிக்கொள்ள வேண்டும். 

    பக்தர்களின் கோரிக்கைகளை பூர்த்தி செய்யுமாறு தன் பதியாகிய வேங்கடவனிடம் பத்மாவதி தாயார் சிபாரிசு செய்வதாக ஒரு ஐதீகம்.

     தாயாரை தரிசித்த பின்னர் அன்றைய தினமோ அல்லது அதற்கு மறுதினமோ திருமலை மீது வீற்றிருக்கும் ஏழுமலையானை தரிசிக்க வேண்டும்.

    ஏழுமலையானை தரிசிக்க பாதயாத்திரையாக செல்வது சிறந்த பலனைக் கொடுக்கும். 

    நடந்து மலையேற முடியாதவர்கள் வாகனங்கள் மூலமாக மலைக்கு செல்லலாம். 

    திருமலை வந்த பின்பு முதலில் அந்த ஏழுமலையான் இங்கு கோவில் கொள்ள அனுமதித்த, இந்த மலைக்கு சொந்த காரரான ஸ்ரீ ஆதி வராகர் ஸ்வாமியின் கோவிலில் உள்ள புஷ்கரணியில் நீராடி அந்த வராகர் ஸ்வாமியை வழிபட வேண்டும்.

     திருமலையில் கோவில் கொண்டிருக்கும் ஸ்ரீனிவாசனை தரிசிக்க செல்ல வேண்டும். 

    ஏழுமலையானை தரிசிக்கும் போது அவருக்கு உரிய மந்திரம் தெரிந்தால் அதை சில முறை ஜெபித்த பின்பு உங்களின் கோரிக்கையையோ அல்லது விருப்பதையோ அவரிடம் மனமுருகி பிராத்தனை செய்ய வேண்டும். 

    இப்படி செய்வதன் மூலம் பக்தர்களின் அனைத்து குறைகளையும் போக்கி ஏழுமலையான் அருளிபாலிப்பர் என்பது ஐதீகம்.

  • Thirupathy Break Dharisanam

    திருமலையில் வி.ஐ.பி. பிரேக் தரிசனங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. ரதசப்தமி உற்சவத்தை முன்னிட்டு வரும் 11 மற்றும் 12 ஆம் தேதி வி.ஐ.பி. தரிசனம் ரத்து செய்யப்படுவதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் கூறி உள்ளது. 

    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ரதசப்தமி உற்சம் விமரிசையாக நடைபெறும். இந்தாண்டு ரதசப்தமி பிப்ரவரி 12 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அன்று ஒரு நாள் 7 வாகனங்களில் மலையப்ப சுவாமி மாடவீதியில் வலம் வர உள்ளார்.

    மாட வீதியில் மலையப்ப சுவாமி வலம் வரும் அழகான காட்சியைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் திருமலையில் குவிவது வழக்கம். இந்தாண்டு அவ்வாறு எதிர்பார்க்கப்படுகின்றது. எனவே, பிப்ரவரி 11 மற்றும் பிப்ரவரி 12-ம் தேதிகளில் பரிந்துரைக் கடிதங்கள் மூலம் வழங்கும் விஐபி பிரேக் தரிசனத்தை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.

    மேலும் அந்த நாள்களில் விஐபி-க்கள் நேரடியாக வந்தால் மட்டும் தரிசனம் வழங்கப்படும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. 12-ம் தேதி தர்ம தரிசனம், நடைபாதை மார்க்கத்தில் நடந்து செல்லும் பக்தர்களுக்கான திவ்ய தரிசனம் ஆகியவற்றைத் தவிர்த்து மற்ற அனைத்து தரிசனங்களையும் தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.

  • Kumari thirupathy koil

    கன்னியாகுமரியில் கட்டப்பட்டுள்ள திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் வரும் 27 ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்கான  யாகசாலை பூஜைகள் தொடங்கியுள்ளது. யாகசாலை பூஜைகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் 22 கோடியே 50 லட்ச ரூபாய் செலவில் கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தா கேந்திரா கடற்கரையில் 5.5 ஏக்கர் நிலத்தல் ஏழுமலையான் கோவில் கட்டப்பட்டுள்ளது.

    திருப்பதி திருமலையை போன்று கன்னியாகுமரியில் எழுந்தருளி உள்ள இந்த கோவிலிலும் பிரம்மோற்சவம் ,ரத உற்சவம் தீர்த்தவாரி ,சீனிவாச கல்யாணம், ஆர்ஜித சேவை ,சுப்ரபாதம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறும்.

    குமரி வெங்கடாசலபதி கோவிலின் மேல் பகுதியில் வெங்கடாசலபதி சன்னதி உள்ளது மூலஸ்தானத்தில் வீற்றிருக்கும் வெங்கடாஜலபதி பத்மாவதி தாயார் சன்னதியும், இடதுபுறம் அம்பாள் சன்னதியும், வெங்கடாசலபதி எதிரே கருடாழ்வார் சன்னதியும் உள்ளன.

    கோவிலின் கீழ்ப்பகுதியில் இரண்டு ஆயிரம் பேர் அமர்ந்து நிகழ்ச்சியை பார்க்கும் வகையில் சீனிவாச கல்யாண மண்டபம் கட்டப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல அன்னதான கூடம் தியான மண்டபம் போன்றவை கட்டப்பட்டுள்ளன.  இங்கு வருகிற 27ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. 

    இதனையொட்டி நேற்று முன்தினம் 40 அடி உயரமுள்ள கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது கொடிமரத்தில் நேற்று காலையில் செம்புத் தகடுகள் பதிக்கும் பணி நடைபெற்றது.
    கும்பாபிஷேக விழா யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. இதற்காக கோவில் முன்பு 16 யாக குண்டங்களில் திருமலை திருப்பதி தேவஸ்தான தலைமை அர்ச்சகர் சேஷாத்ரி தலைமையில் 60 அர்ச்சகர்கள் யாகசாலை பூஜை நடத்தினர் யாகசாலை பூஜை நடைபெறும் இடம் வாழைத் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டு காட்சி அளிக்கப்பட்டது.

     27ம் தேதி காலை 7.30 மணிக்கு மேல் 9 மணிக்குள் கும்பாபிஷேகம் நடக்கிறது அன்று மாலை 4 மணி முதல் 5 மணிவரை சீனிவாச கல்யாணம் நடைபெறுகிறது கும்பாபிஷேக நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

  • Thirupathyil Radha Sapdhami

    திருப்பதி திருமலையில் பிப்ரவரி 12 அம் தேதி ரதசப்தமி விழா நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. திருப்பதியில் ஆண்டுதோறும் ரதசப்தமி எனப்படும் சூரிய ஜெயந்தி உற்சவம் மிக சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. 

    ரதசப்தமி அன்று ஒரே நாளில்  7 வாகன சேவைகளில் திருப்பதி ஏழுமலையான் மாட வீதிகளில் பவனி வருகிறார்.  ரதசப்தமியை தரிசிக்க திருப்பதிக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். எனவே ரதசப்தமி விழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ரதசப்தமி அன்று நடைபெறவுள்ள வாகன சேவைகளின் பட்டியலை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது. 

    அதன் விவரம் வருமாறு:-

    காலை 5.30 மணி முதல் 8 மணி வரை சூரிய பிரபை வாகனம். காலை 9 மணி முதல் 10 மணி வரை சின்னசே‌ஷ வாகனம். காலை 11 மணி முதல் 12 மணி வரை கருட வாகனம். மதியம் 1 மணி முதல் 2 மணி வரை அனுமந்த வாகனம். மதியம் 2 மணி முதல் 3 மணி வரை தீர்த்தவாரி. மாலை 4 மணி முதல் 5 மணி வரை கல்பவிருட்ச வாகனம். மாலை 6 மணி முதல் 7 மணி வரை சர்வபூபால வாகனம். இரவு 8 மணி முதல் 9 மணி வரை சந்திரபிரபை வாகனம் போன்ற வாகன சேவைகள் நடைபெறுகிறது.
     

  • Thirupathy Thirumalai Alaya Sirappugal

    பெரியாழ்வார், ஆண்டாள், குலசேகர ஆழ்வார், திருமழிசை ஆழ்வார், திருப்பாணாழ்வார், பொய்கையாழ்வார், பேயாழ்வார், பூதத்தாழ்வார், நம்மாழ்வார் மற்றும் திருமங்கைழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பெற்ற பெரும் புண்ணியத்திருத்தலம் திருமலை திருப்பதி ஆகும்.

    மகாவிஷ்ணுவின் கட்டளைப்படி தொண்டைமான் என்னும் மன்னனால் தேவலோக சிற்பியான விஸ்வகர்மாவின் உதவியுடன் திருமலை திருப்பதி ஆலயம் எழுப்பப்பட்டது. பின்னர் சோழர்களாலும், பல்லவர்களாலும், பாண்டிய மன்னர்களாலும், விஜயநகரப் பேரரசாலும் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளது.

    இங்கு வியாழக்கிழமைகளில் அதிகாலைப் பூஜைக்குப்பிறகு வேங்கடவனின் அனைத்து ஆபரணங்களும், கவசங்களும் கழற்றப்பட்டு, அவருக்கு வேஷ்டியும், துண்டும் அணிவித்து அழகு செய்கிறார்கள். இதற்கு ‘நேத்ர தரிசனம்’ என்று பெயர். அதேநாளில் பின்பு பெருமாளுக்கு அலங்கார மாற்றம் செய்விக்கிறார்கள். இதற்கு ‘பூலாங்கி சேவை’ எனப் பெயர். இந்த சேவையில் பெருமாளை தரிசித்தால் தரித்திரம், வறுமை அகன்று வாழ்வில் வளம் சேரும் என்கிறார்கள்.

    திருமலையில் ஆண்டுக்கு நான்கு முறை கருவறையில் மூலவரை கவசத்தால் மூடி, கருவறை சுவர்கள், தரைப்பகுதிகள் மற்றும் அனைத்து சன்னிதிகளையும் சுத்தம் செய்கிறார்கள். இந்த நிகழ்வுக்கு ‘கோவில் ஆழ்வார் திருமஞ்சனம்’ எனப்பெயர். கட்டணம் செலுத்தி இந்த நிகழ்ச்சியில் அடியவர்கள் பங்கு கொள்ளலாம். காலை 8 மணி முதல் மதியம் 12 மணிக்குள் இந்நிகழ்வு நடைபெறுமாம். இந்த சேவையில் கலந்துகொண்டால் நம் பரம்பரை சாப, பாவங்களை நிவர்த்தி செய்யும் என்கிறார்கள்.
     

  • Thirumalai Erum podhu Solla vendiya mandiram

    திருமலை திருப்பதி செல்வோர், மலை ஏறும் போது அந்த வேங்கடவனுக்கு உகந்த இந்த மந்திரத்தை சொல்லிக் கோண்டே  மலையேறினால் நம் தீராத வினையெல்லாம் தீர்த்திடுவான் திருவேங்கடத்தான். 

    ஸ்வர்ணாசல மஹாபுண்ய ஸர்வதேவ நிஷேவித

    ப்ரம்மாதயோபி யம்தேவா: ஸே வந்தே ச்ரத்தயாஸஹ

    தம் பவந்தம் அஹம் பத்ப்யாம் ஆக்ரமேயம் நகோத்தம

    க்ஷமஸ்வ ததகம் மேஸ்த்ய தயயா பாபசேதஸ

    த்வன்மூர்த்தநி க்ருதாவாஸம் மாதவம் தர்சயஸ்வமே

    பொருள் :
    பிரம்மா முதலிய தேவர்களும் கூட எந்த வேங்கடமலையை வணக்கத்துடன் வந்தடைந்து சேவிக்கின்றனரோ, அப்படிப்பட்ட தங்கம் நிறைந்ததும், அளவு கடந்த புண்யமுள்ளதும், எல்லா தேவர்களாலும் வணங்கப்பட்டதுமான ஸ்ரீநிவாஸனுக்கு இருப்பிடமான ஹே மலையே! தங்களை கால் வைத்து ஏறுகிறேன். ஓ சிறந்த பர்வதமே! அதனால் ஏற்படும் எனது பாபத்தைக் கருணையினால் தாங்கள் பொறுத்துக்கொள்ள வேண்டுகிறேன். தங்களுடைய சிகரத்தில் வசிக்கும் லட்சுமிபதியான ஸ்ரீ வெங்கடேசனை தாங்கள் எனக்கு தரிசனம் செய்து வைத்து அருள வேண்டும்.

  • Thirupathy Arjitha Seva Tickets

    ஜனவரி மாதம் குலுக்கல் முறையில் நிலுவையில் உள்ள ஆர்ஜித சேவா டிக்கெட்டுகளின் பட்டியலை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.

    திருமலை திருப்பதி தேவஸ்தானம் மாதந்தோறும் முதல் வெள்ளிக்கிழமைகளில் இணையதளம் மூலம் ஆர்ஜித சேவா டிக்கெட்டுகளை வெளியிட்டு வருகிறது. அந்த டிக்கெட்டுகளை முன்பதிவு செய்த பக்தர்கள், சில தவிர்க்க முடியாத காரணங்களால் ரத்து செய்து விடுகின்றனர்.
    அவ்வாறு ரத்து செய்யப்பட்ட டிக்கெட்டுகளை தேவஸ்தானம் குலுக்கல் முறையில் பக்தர்களுக்கு அளித்து வருகிறது. 

    இந்த டிக்கெட்டுகளைப் பெற விரும்பும் பக்தர்கள் சேவை நாளின் முன்தினம் திருமலை மத்திய விசாரணை அலுவலகத்தில் உள்ள விஜயா வங்கியில் தங்கள் பெயர், ஆதார் எண், பெருவிரல் ரேகை, செல்லிடப்பேசி எண் உள்ளிட்டவற்றை அளித்து, சேவா டிக்கெட்டுகளைப் பெற விண்ணப்பிக்க வேண்டும். 

    விண்ணப்பங்களை மாலை 5 மணிக்கு குலுக்கல் நடத்தி, அதில் தேர்ந்தெடுக்கப்பட்ட பக்தர்களின் செல்லிடப்பேசி எண்ணுக்கு அதிகாரிகள் குறுந்தகவல் அனுப்புவர். 

    தகவல் பெற்ற பக்தர்கள் மத்திய விசாரணை அலுவலகத்துக்குச் சென்று, தங்கள் டிக்கெட்டுகளைப் பெற்றுக் கொண்டு, மறுநாள் அதில் குறிப்பிட்டுள்ள நேரத்துக்குச் சென்று, ஏழுமலையானை ஆர்ஜித சேவையில் தரிசிக்கலாம்.
    அதன்படி, ஜனவரி மாதம் நிலுவையில் உள்ள ஆர்ஜித சேவா டிக்கெட்டுகளின் பட்டியலை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது. இதனை திருப்பதி திருமலை தேவஸ்தான இணையதளத்தில் http://www.tirumala.org காணலாம். 

  • Thirupathy Arjitha Sevai Reservation

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஏப்ரல்  மாதம் நடைபெறக்கூடிய ஆர்ஜித சேவைகளுக்கான ஆன்லைன் முன்பதிவு கோட்டா வெளியீடப்பட்டுள்ளது.

    ஏப்ரல்  மாதத்திற்கான  ஆர்ஜித சேவை முன்பதிவு செய்வதற்கான கோட்டா வெளியிடப்பட்டுள்ளது.  இதில் 10,061 டிக்கெட் குலுக்கல் முறையில் பதிவு செய்யும் விதமாகவும்,  53 ஆயிரத்து 250 டிக்கெட்டுகள் பொதுப்பிரிவில் நேரடியாக ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளும் விதமாக வெளியிடப்பட்டுள்ளது.

    ஆன்லைன் குலுக்கல் முறையில் 10,061 டிக்கெட்

    சுப்ரபாதம்  -7,836
    தோமாளை – 130
    அர்ச்சனை – 130
    அஷ்டதள பாதபத்ம ஆராதனை – 240
    நிஜபாத தரிசனம் – 1,725
    விசேஷ பூஜை – 2,500
    பொது கோட்டா  ( GENERAL CATEGORY ) 53,250
    கல்யாண உற்சவம் – 11,875
    ஊஞ்சல் சேவை – 3,750
    ஆர்ஜித பிரம்மோற்சவம் – 6,875
    வசந்த உற்சவம் – 12,650
    சகஸ்கர தீப அலங்கார சேவை – 15,600

     இந்த டிக்கெட்  www.ttdsevaonline.com என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.