Tag: Murugan

  • World biggest Murugan Statue

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே புத்திர கவுண்டம்பாளையத்தில் உலகிலேயே மிக உயரமான முருகன் சுவாமி திருவுருவ சிலை அமைக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.  இரண்டரை வருடமாக இந்த முருகன் திருவுருவ சிலை அமைக்கும் பணி நடைபெற்று வரும் நிலையில் அடுத்த ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

    மலேசிய தலைநகர் கோலாலம்பூர் அருகே பத்துமலைக் குகை கோயிலின் நுழைவாயிலில் உலகிலேயே மிக உயரமான முருகன் சுவாமியின் திருவுருவ சிலை அமைக்கப்பட்டது. அதன் உயரம் 108அடி ஆகும். ஆனால் இந்த முருகன் திருவுருவச்சிலை 126 அடி உயரம் கொண்டது. 

    மலேசியா பத்துமலை முருகன் தரிசிக்க பல நாடுகளில் இருந்து பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். அதைப்போலவே தமிழ்நாட்டில் உள்ள சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே புத்திர கவுண்டன் பாளையத்தில்  அமையும் முருகன் திருவுருவ சிலைக்கு பக்தர்கள் அயல் நாடுகளில் இருந்தும் வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

    மலேசியாவில் முருகன் சிலையை வடிவமைத்த தமிழகத்தை சேர்ந்த திருவாரூர் தியாகராஜன் அவர்களின் குழுவினர் இந்த திருவுருவ சிலையை தற்போது முழுவீச்சில் வடிவமே வடிவமைத்து வருகின்றனர்.

     தரை தளத்தில் இருந்து 146 அடியாகவும் முருகன் சிலை மட்டும் 126 அடி உயரமும் கொண்டதாகவும் அமைக்கப்பட்டு வருகிறது.அடுத்த ஆண்டு பங்குனி உத்தரத்தில் இந்த திருஉருவச்சிலை முழுமையாக நிறைவு பெற்று கும்பாபிஷேகம் நடை பெறுவதற்கு கோயில் நிர்வாகிகள் ஏற்பாடு செய்து வருகின்றனர். 

  • murugan abisegam palangal

    முருகனுக்கு செய்யும் பலவிதமான அபிஷேகங்கள் பல்வேறு நன்மைகளை அளிக்கும். இப்போது முருகனுக்கு செய்யும் எந்த அபிஷேகம் என்ன பலனை அளிக்கும் என்பதை பார்க்கலாம்.

    மஞ்சள் தூள் – நல்நட்பு வாய்ப்பிக்கும் அரசுவசியம்
    திருமஞ்சனத்தூள் – நோய் தீர்க்கும்
    நெய்சுகவாழ்வு, – மோட்சம்
    சர்க்கரை – எதிரியை ஜெயிக்கும்
    இளநீர்நல் – சந்ததியளிக்கும்
    கருப்பஞ்சாறு – ஆரோக்கியமளிக்கும்
    நார்த்தம்பழம் – சந்ததி வாய்க்கும்
    நன்னீர் – நினைத்தது நடக்கும்
    நல்லெண்ணை – நலம் தரும்

    பச்சரிசிமாவு – கடன் தீரும் பாபநாசம்
    பஞ்சகவ்யம்தீதழிக்கும் – ஆன்மசுத்தி
    பசும்பால்நீண்ட – ஆயுள் தரும்
    பசுந்தயிர் – மகப்பேறு வாய்க்கும்
    சந்தனம் – அகம், சுவர்க்க போகம் தரும்
    பன்னீர் – சருமம் காக்கும்
    கும்பஜலம் – பிறவிப்பயன் அளிக்கும்
     சந்தாபிஷேகம் – நலம் எல்லாம் அளிக்கும்

    சொர்ணம், ரத்னாபிஷேகம் – சகல சவுபாக்கியமும் கிட்டும். 
    பஞ்சாமிருதம் – தீர்க்காயுள், வெற்றி தரும்
    தேன்சுகம், – சங்கீத விருத்தி
    சாத்துக்குடி – துயர் துடைக்கும்
    எலுமிச்சை – யமபய நாசம், நட்புடை சுற்றம்
    திராட்சை – திட சரீரம் அளிக்கும்
    வாழைப்பழம் – பயிர் செழிக்கும்
    மாம்பழம் – செல்வம், வெற்றி தரும்

    பலாப்பழம் – மங்களம் தரும் யோக சித்தி
    மாதுளை – பகை நீக்கும், கோபம் தவிர்க்கும்
    தேங்காய் துருவல் – அரசுரிமை
    திருநீறு – சகல நன்மையும் தரும்
    அன்னம்விளை நிலங்கள் – நன்மை தரும்

  • Murugan Gayathri Mandiram

    முருகனுக்கு உகந்த இம்மந்திரத்தை துதிப்பதின் மூலம் முருகனின் அருள் கூடுவது மட்டுமில்லாமல் ஸ்ரீ குரு பகவானின் அருளும் சேர்ந்து உங்கள் வாழ்வை வளமாக்கும்.

    வாழ்வை வளமாக்கும் முருகன் காயத்ரி மந்திரம்

    ஓம் தத் புருசாய வித்மஹே 
    மகேஷ்வர புத்ராய தீமஹி
    தந்நோ சுப்ரமண்ய ப்ரசோதயாத்.

     
    இம்மந்திரத்தை துதிப்பதின் மூலம் முருகனின் அருள் கூடுவது மட்டுமில்லாமல் ஸ்ரீ குரு பகவானின் அருளும் சேர்ந்து உங்கள் வாழ்க்கை மென்மேலும் சிறந்து விளங்கும். ஏனென்றால் புராண காலத்தில் முருகன் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர்தான் குரு பகவானின் பரிகாரத்தலமாக இருந்துள்ளது.  
     

  • Mayilam Murugan therottam

    திண்டிவனம் அடுத்த மயிலத்தில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற மயிலம் முருகன் கோவிலில் பங்குனி உத்திர பெருவிழாவினை முன்னிட்டு திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

    இதில் இலட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து அரோகரா முழக்கத்துடன் பக்தி பரவசத்துடன் திருத்தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

  • Murugan Viradhangal

    வெள்ளிக்கிழமை, கார்த்திகை, வெள்ளிக்கிழமை விரதம், சஷ்டி ஆகியவை முருகனுக்கு உரிய முக்கிய விரதங்கள் ஆகும். கார்த்திகை விரதத்தின் சிறப்பைச் சிவபெருமான் கார்த்திகைப் பெண்களுக்கு அருளினார். கார்த்திகைப் பெண்கள் குமரக்கடவுளை வளர்த்த காரணத்தால், அவர்களுடைய நாளான கிருத்திகை நட்சத்திரத்தில் விரதம் இருந்து, குமரப்பெருமானை வழிபடுவோர் கல்வி, செல்வம், ஆயுள், தர்மபத்தினி, நன்மக்கள், நிலபுலம் யாவும் பெற்று வாழ்வார்கள் என்று சிவபெருமான் அருள்புரிந்தார்.
    கார்த்திகை மாதம் பரணி நாளில் விரதம் தொடங்கி, வழிபாடு செய்து, அடுத்த நாள் கார்த்திகையில் விரதம் இருந்து முறைப்படி வழிபாடு செய்து, அடுத்த நாள் ரோகிணி காலையில் நீராடி, நித்திய வழிபாடு செய்து அடியார்களோடு கூடி உண்ண வேண்டும். பின்னர் மாதந்தோறும் கார்த்திகையில் விரதம் இருந்து வழிபாடு செய்ய வேண்டும்.

    நாரதர், சப்தரிஷிகளிலும் மேன்மையுற விரும்பி, அதற்கான விரதத்தை அருளுமாறு விநாயக்கடவுளை வேண்டிக் கொண்டார். அவர் அருளியவாறு, பன்னிரண்டு ஆண்டுகள் கார்த்திகை விரதம் இருந்து மேன்மை அடைந்தார்.

    வெள்ளிக்கிழமை விரதம்:
    வெள்ளிக்கிழமை விரதம், ஐப்பசி மாதம் முதல் சுக்கிர வாரத்தில் தொடங்கி, முறைப்படி விரதம் அனுஷ்டித்து, பின்னர் வெள்ளிக்கிழமை தோறும் விரதம் இருக்க வேண்டும். வெள்ளிக்கிழமை விரதத்தின் சிறப்பை வசிஷ்ட முனிவர், முசுகுந்தச் சக்கரவர்த்திக்கு எடுத்துக் கூறினார். அவர் அனுஷ்டித்து மேன்மையுற்றார்.
    பகீரதன் என்னும் மன்னன் வெள்ளிக்கிழமை விரதம் மேற்கொண்டு, கோரன் என்னும் அரக்கனை வென்று இழந்த தன்னுடைய அரசு உரிமையை மீண்டும் பெற்றுப் புகழ் பெற்றான்.

    கந்த சஷ்டி விரதம் :
    கந்தசஷ்டி என்ற பிரபலமான விரதம் ஐப்பசி மாதம் சுக்கில் பட்சத்தில் வரும். பிரதமை நாளில் தொடங்கி, சஷ்டி வரை ஆறு நாட்கள் முறைப்படி விரதம் இருக்க வேண்டும். அந்த நாட்களில் காலையில் நீராடி, வழிபாடு வீட்டிலும் கோயிலிலும் செய்து, முருகன் சரிதத்தைக் கேட்டு அல்லது படித்து, முருகன் நாமத்தை ஜெபித்து, ஏழாம் நாள் காலையில் வழக்கப்படி வழிபாடு செய்து, விரதத்தை நிறைவேற்ற வேண்டும். அதன் பின்னர் மாதந்தோறும் வளர்பிறை சஷ்டி விரதம் இருக்கலாம். சஷ்டி விரதம் இருப்பவர்களின் வினைகள் அகலும், எண்ணிய காரியங்கள் நிறைவேறி, புண்ணியமும் கிடைக்கும்.
    கந்த சஷ்டி விரதத்தை முறைப்படி அனுஷ்டித்த முசுகுந்தச் சக்கரவர்த்தி எல்லா நலன்களும் பெற்றுச் சிறப்புடையவரானார்.

    குமார சஷ்டி விரதம் :
    ஆனி மாதம் வளர்பிறையில் வரும் சஷ்டியும், கார்த்திகை மாதம் வளர்பிறையில் வரும் சஷ்டியும் குமார சஷ்டி விரதம் எனப்படும். கார்த்திகை மாத வளர்பிறைக்கு குமார சஷ்டியைச் ‘சுப்பிரமணிய சஷ்டி’ என்றும், ‘அனந்த சுப்பிரமணிய பூஜை’ என்றும் கூறுவர்.

    அனந்த சுப்பிரமணிய பூஜை:
    ‘சுப்புராயன்’ என்ற பெயர் முருகனையும், நாகப்பாம்பையும் ஒருங்கே குறிப்பிடுகிற பெயராம். திருமணமாகி நீண்ட காலம் மகப்பேறில்லாதவர்கள் அனந்த (நாக) சுப்பிரமணிய பூஜையை நிறைவேற்றினால் மகப்பேறு நிச்சயம் கிடைக்கும். முருகனைப் பாம்பு வடிவத்தில் வழிபடலாம். அல்லது, இணைந்த இரு பாம்புகளுக்கிடையில் அமைந்த முருகனையோ, பாம்பின் முடிமீது அமைந்த முருகனையோ வழிபட்டால் நாக தோஷங்களும், பிற தோஷங்களும் விலகும். இதற்கு நிகராக இரு தேவியருக்கு இடையில் எழுந்தருளிய முருகனை வழிபடலாம். பக்தர்கள் மகப்பேற்றை வேண்டினால் முந்தி வந்து அருள் புரிபவன் முருகன். அவனே குழந்தையாக வடிவெடுத்து வருவான் என்றும் நம்புகின்றனர்.
     

  • Thiruthani Murugan koil Ther Video

    திருத்தணி முருகன் கோயிலில்  மாசி பிரம்மோற்சவம். மூன்று ஆண்டுகளுக்கு பிறகு மரத்தேரோட்டம். மேள தாளங்கள் முழங்க, முருகன் பஜனை குழுவினர்  பக்தி பாடல்கள் இசையுடன், முருகப்பெருமான் மலைக் கோயில் மாட வீதிகளில் உலா. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு.

    முருகனின் ஐந்தாம் படை வீடாக போற்றப்படும் திருத்தணி முருகன் கோயிலில் மாசிமாத பிரம்மோற்சவம் 10ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகின்றது. உற்சவ விழாவில் தினம் தோறும் உற்சவர்  சிறப்பு அலங்காரத்தில் வாகன சேவைகளில் எழுந்தருளி  மலைக் கோயில் மாட வீதிகளில் உலா நடைபெற்று வருகின்றது. 

    உற்சவ விழாவில் 7ஆம் நாளில் மாலை சிறப்பு பெற்ற மரத்தேரோட்டம் நடைபெற்றது. கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கோயில் தேர்  பழுதடைந்ததை தொடர்ந்து நிறுத்தப்பட்ட தேர் புதுபிக்க வேண்டும் என்று  முருக பக்தர்கள் கோரிக்கை  இந்து அறநிலைத்துறை  கண்டுக்கொள்ளாத நிலையில் திருத்தணி  முருகன்  திருவடி திருச்சபை சார்பில்  ரூ.50 லட்சம்  மதிப்பீட்டில்  33 அடி உயரமுள்ள மரத்தேர் புதியதாக உருவாக்கப்பட்டு திருத்தணி முருகன் கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. 

    இதனை அடுத்து இன்று  மாலை நடைபெற்ற தேர் திருவிழாவை யொட்டி  மரத்தேர்   மலர்களால் அலங்கரிக்கப்பட்டது. வள்ளி தெய்வானை சமேத உற்சவர் சுப்பிரமணியர்  சிறப்பு  அலங்காரத்தில் மரத்தேரில்  அமர்ந்தனர். கோயில் அர்ச்சர்கள் சிறப்பு பூஜைகள் தீபாராதனை தொடர்ந்து  ஆயிரக்கணக்கான பக்தர்கள் மத்தியில் தேர் பவனி நடைபெற்றது. மலைக் கோயில் சுற்றி  தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து அரோரக என்று பயபக்தியுடன் வழிபட்டனர். 

    தேர் மாட வீதிகளில்  உலா சென்ற போது முருகன் பக்தி குழுக்கள் திருமுருகன் பாடல்கள் இசைத்தவாறும், கெண்டை மேளம், நாதஸ்வரம், பஜனைகள்  மலைக்கோயிலில்  கோலாகலத்தை ஏற்ப்படுத்தியது. தேரோட்டத்தில் திருத்தணி கோ.அரி எம்.பி உட்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துக்கொண்டனர்.

  • Muruganukku Ugandha Kizhamai

    வருவாய் அதிகரிக்க வேண்டுமானால் செவ்வாய்க்கிழமை விரதம் இருக்க வேண்டும் என்று முன்னோர்கள் சொல்வார்கள். வாரத்தின் ஏழு நாட்களில் மூன்றாவது நாளாக இடம் பிடிப்பது செவ்வாய்க் கிழமை. 

    பொருளாதார நிறைவையும் வழங்குவது அங்காரகன்தான். அந்த அங்காரகனுக்குரிய தெய்வமாக விளங்குவது முருகப்பெருமான் மற்றும் சக்தி தேவி. முருகப் பெருமான், சக்தி தேவி, அம்பிகைக்கு உகந்த நாளான செவ்வாய் கிழமை இந்த தெய்வங் களை வணங்கினால் கவலைகள் அகலும். 

    செந்நிற ஆடை அணிந்து வழிபாட்டில் பங்கேற்பது; நைவேத்தியமாக அன்றை தினம் அங்காரகனுக்கு முக்கியத்துவம் உகந்த நாளாகும். தங்குதடை இல்லாத வாழக்கையும், தன்னிகரில்லாத அளவு புகழும், மங்கல வாய்ப்பு களையும், மாபெரும் சக்தியையும் பொங்கி வரும் உள்ளத்தில் தன்னம்பிக்கையையும், செந்நிற கனிவைத்து தீபாராதனை செய்ய வேண்டும்.
     

  • Palani Murugan koil Hundiyal vasool

    பழனி முருகன் கோயிலில் நடைபெற்ற தைப்பூச விழாவின்போது பக்தர்கள் ரூ. 2 கோடியே 71 லட்சத்து, 48 ஆயிரத்து 680 ரொக்கமாக காணிக்கை செலுத்தி இருக்கின்றனர். 627 கிராம் தங்கம், 26,190 கிராம் வெள்ளி ஆகியவற்றை உண்டியலில் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.

    பழனி முருகன் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது வேண்டுதலை மலைக் கோயிலில் உள்ள உண்டியலில் ரொக்கம், தங்கம் மற்றும் வெள்ளிப் பொருள்களைக் காணிக்கையாக செலுத்துகின்றனர்.

    அந்த வகையில், கடந்த 15 நாள்களில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை எண்ணப்பட்டது. இதில்  ரூ. 2 கோடியே 71 லட்சத்து, 48 ஆயிரத்து 680 ரொக்கமாக காணிக்கை செலுத்தி இருக்கின்றனர். 627 கிராம் தங்கம், 26,190 கிராம் வெள்ளி மற்றும் 371 வெளிநாட்டு கரன்சிகள் ஆகியவை இருந்தன என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
     

  • Thiruthani Murugan Thai Poosam

    திருத்தணி முருகன் கோயிலில் நடைபெற்ற தைப்பூச விழாவில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் முருகப்பெருமானை வழிபட்டனர்.

    ஆறுபடை வீடுகளில் 5 ஆம் படைவீடாக திகழும் திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி முருகன் கோயில் ஆண்டுதோறும் தைப்பூச விழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. விழாவை முன்னிட்டு காலை 5 மணிக்கும் மூலவருக்கு பால், பன்னீர், விபூதி, தேன் மற்றும் அபிஷேக பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மூலவருக்கு தங்கவேல், தங்க கிரீடம், மாணிக்க கல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

    காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, ஆந்திர, கர்நாடக மாநிலங்களில் இருந்து பல ஆயிரக்கணக்கான மேற்பட்ட பக்தர்கள் விழாவில் கலந்துகொண்டு முருகப்பெருமானை வழிபட்டனர்.

     விழாவை முன்னிட்டு வெளியூர்கள் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து பஸ், கார்கள் மலைக்கோயிலில் வந்து குவிந்து போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பின்னர் தைப்பூச விழாவையொட்டி 50 ரூபாய், 100 ரூபாய் சிறப்பு கவுன்டர்களிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    அதுபோல் பொதுவழியிலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் 4 மணி நேரம் காத்திருந்து முருகப்பெருமானை வழிபட்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் மற்றும் கோயில் அலுவலர்கள் செய்திருந்தனர்.

  • Thai poosathin vilakkam

    தை மாதத்தில் பூசம் நட்சத்திரம் வருகின்ற தினம் மிகவும் சிறப்பு வாய்ந்த தினமாகும்.

    வள்ளல் பெருமான் தை பூச நாளை ஞானத்தின் வெளிப்புற நாளாக காட்டினார். காரணம் தை மாதத்தில் பூசம் நட்சத்திரம் வருகின்ற தினம் மிகவும் சிறப்பு வாய்ந்த தினமாகும். தை மாதத்தை மகர மாதம் என்று அழைப்பார்கள். மகரம் என்பது முடிந்த நிலையினை குறிப்பதாகும். 

    அகரம்+உகரம்+மகரம்=ஓம் தை மாதத்தில் பூசம் நட்சத்திரம் வருகின்ற நாள் சூரியன் உதிக்கின்ற நேரத்தில் சந்திரனும் வானத்தில் இருக்கும். அப்போது ஞானசபையில் இருந்து அக்னியான ஜோதி காண்பிக்கப்படும். அதாவது சூரிய சந்திர ஜோதியுள் ஜோதி 

     
    * சந்திரன் என்பது மனஅறிவு. 
    * சூரியன் என்பது ஜீவ அறிவு. 
    * அக்னி என்பது ஆன்மா அறிவு. 

    சந்திரன் சூரியனில் அடங்கி, சூரியன் அக்னியில் அடங்கி அக்னி ஆகாயத்தில் அடங்கும் என்பதே தைபூசம். மனம் ஜீவனில் அடங்கி, ஜீவன் ஆன்மாவில் அடங்கி, ஆன்மா சிவத்துடன் கலந்து விடும் என்பதை காட்டவே தைபூசம் நமது வள்ளல் பெருமானால் அளிக்கப்பட்டது.