Tag: Mandiram

  • Hanuman Gayathri Mandiram

    ஸ்ரீ ஆஞ்சநேயர் காயத்ரி மந்திரம்: அனுமன் நம் உடல் வலிமையோடு, மன வலிமையை அதிகரித்து, நம் இன்னல்களிலிருந்து நாமே வெளிவர நல்வழி காட்டுவார். அவருக்குரிய காயத்திரி மந்திரத்தை கூறி வர சகல நன்மைகள் உண்டாகும்.

    ராம பக்தனான அனுமனுக்கு வாயு புத்திரன், அஞ்சனை மைந்தன், கேசரி மைந்தன், ஆஞ்சநேயர், மாருதி, சுந்தரன், சொல்லின் செல்வன் என பல்வேறு பெயர்கள் உள்ளன. அவை அனைத்தும் அவரின் பெருமைகளை உணர்த்தும் விதமாக உள்ளது.

    வாலியிடமிருந்து சுக்கிரவனை காத்தவர். ராமனுக்காக கடலைக் கடந்து சீதா தேவியை தேடி கண்டுபிடித்தவர். சீதா தேவியை ராமனுடன் சேர்த்து வைப்பதில் மிக முக்கிய பங்கு வகித்தவர். ஸ்ரீ ராமா என்று சொன்னாலே ஓடோடி வந்து நமக்கு வேண்டிய உதவிகள் செய்பவர். பிரச்சினைகளைத் தீர்ப்பவர்.

    இப்படிப்பட்ட ராம பக்த அனுமனுக்கு உரிய காயத்ரி மந்திரத்தை தினமும் 108 முறை நாம் உள்ளம் உருக கூறி வர நம் விருப்பங்கள் நிறைவேறுவதோடு, நம் இன்னல்கள் நீக்கி அருள்வார்.

    ஸ்ரீ ஆஞ்சனேயர் காயத்ரி மந்திரம்*

     *ஓம் ஆஞ்சனேயாய வித்மஹே*
    *வாயு புத்ராய தீமஹி*
    *தந்நோ ஹனுமத் ப்ரசோதயத்*
     

  • Iswaryam tharum mahalakshmi mandiram

    மஹாலக்ஷ்மி அன்னையை மனதில் நினைத்து அனைத்து வெள்ளிகிழமை மற்றும் பௌர்ணமி நாட்களில் கற்பூரம் ஏலக்காய் கலந்த காய்ச்சிய பால் மற்றும் வெற்றிலைபாக்கு, பாயசம், கற்கண்டு, பழங்கள் போன்றவற்றை அன்னைக்கு படைத்து

    “ஸ்ரீ சுக்ல மகாசுக்லே நவாங்கே ஸ்ரீ மஹாலக்ஷ்மி நமோ நமஹ”

    என்னும் மந்திரத்தை உச்சரித்தால் தொழில் முன்னேற்றம் அடைந்து வளம் பெருகும்.

    இந்த மந்திரத்தின் பொருளானது, "ஓம் ஸ்ரீம் மஹாலக்ஷ்மித் தாயே உன் முழு உருவோடும் சர்வ ஆபரணங்கள் பூண்ட கோலத்தோடும் இத்தீபத்தில் எழுந்தருளி எனக்கு வறுமை கடன் அற்ற வளமான வாழ்வு தந்தருள உம்மை வேண்டுகிறேன்" என்பதாகும்.

    இவ்வாறு விளக்கேற்றி தீபத்தை வணங்கி பூஜித்து தலை மற்றும் கண்களில் ஒற்றிக்கொண்டு. தீபம் அணைந்ததும் தீபத்திரியில் உள்ள கருக்கை  நெற்றியில் இட்டுக் கொண்டால் சிறந்த பலன்களைத் தரும். மற்ற சாதாரண நாட்களில் தம்மால் முடிந்ததை நைவேத்யம் செய்து வழிபட்டு வந்தால் தொழில் முன்னேற்றமடைந்து ஐஸ்வர்யம் பெருகும்

  • Saibaba Mandiram

    சாய்பாபாவின் வழிபாட்டிற்கு உகந்த சிறப்பு வாய்ந்த மந்திரங்களை காண்போம். இந்த மந்திரங்களை தினமும் அல்லது வியாழக்கிழமைகளில் சொல்லி வந்தால் அனைத்து வித நன்மைகளும் நடக்கும்.

    ஷீரடி சாய்பாபாவின் காயத்ரி :

    ஓம் ஷீரடி ஸாயி நிவாஸாய வித்மஹே
    ஸர்வ தேவாய தீமஹி
    தந்தோ ஸர்வப்ரசோதயாத்

    ஓம் ஷிர்டி வாசாய வித்மஹே
    சச்சிதானந்தாய  தீமஹி
    தந்நோ சாய்  ப்ரசோதயாத்

    ஷீரடி சாய்பாபாவின் தியான ஸ்லோகம் :

    பத்ரி க்ராம ஸமத் புதம்
    த்வாரகா மாயீ வாசினம்
    பக்தா பீஷ்டம் இதம் தேவம்
    ஸாயி நாதம் நமாமி :

    ஷீரடி சாயிபாபாவின் மூல மந்திரம் :

    "ஓம் ஸாயி ஸ்ரீ ஸாயி ஜெய ஜெய ஸாயி"
     
    சாயிநாதர் திருவடி :

    ஸாயி நாதர் திருவடியே
    ஸம்பத் தளிக்கும் திருவடியே
    நேயம் மிகுந்த திருவடியே
    நினைத்த தளிக்கும் திருவடியே
    தெய்வ பாபா திருவடியே
    தீரம் அளிக்கும் திருவடியே
    உயர்வை யளிக்கும் திருவடியே

    ஓம் சாய் ராம் 

  • Varahi Mandiram

    வராஹ முகத்தோடு இருக்கும் இந்த அன்னை, பராசக்தியின் முக்கிய மந்திரியாக திகழ்பவள். இவள் விஷ்ணுவின் வராஹ அம்சமாக தோன்றியவள். இவளுக்கு ஈசனைப் போல மூன்று கண்கள் உண்டு. தவிர அம்பாளிடம் இருந்து உருவானவள். எனவே இந்த வராஹி தேவி, சிவபெருமான், திருமால், பராசக்தி ஆகிய மூவரின் அம்சமாகவும் பார்க்கப்படுகிறாள். சப்த கன்னியர்களில் மிகவும் வேறுபட்டவள். மிருக பலமும், தேவ குணமும் கொண்ட இந்த அன்னை, தன்னை வழிபடுபவர்களின் துன்பங்களை அகற்றும் ஆற்றல் நிறைந்தவள்.

    ‘ஓம் ச்யாமளாயை வித்மஹே
    ஹல ஹஸ்தாயை தீமஹி
    தன்னோ வாராஹி ப்ரசோதயாத்’

    என்ற காயத்ரி மந்திரத்தை தினமும் 108 முறை உச்சரித்து வந்தால், ஒருவரது வாழ்வில் விடாது துரத்தும் துன்பங்கள் கூட விலகி ஓடும்.
     

  • Navarthiri Lakashmi Mandiram

    மலரின் மேவு திருவே– உன் மேல்
    மையல் பொங்கி நின்றேன்;
    நிலவுசெய்யும் முகமும் -காண்பார்
    நினைவழிக்கும் விழியும்
    கலக லென்ற மொழியும்-தெய்வக்
    களிதுலங்கு நகையும்
    இலகு செல்வவடிவும்- கண்டுன்
    இன்பம் வேண்டுகின்றேன்

    திருமகளை சரண் புகுதல்

    பொன்னிலும் மணிகளிலும்- நறும்
    பூவிலும் சாந்திலும் விளக்கினிலும்
    கன்னியர் நகைப்பினிலும் -செழுங்
    காட்டிலும் பொழிலிலும் கழனியிலும்,
    முன்னிய துணிவினிலும் -மன்னர்
    முகத்திலும் வாழ்ந்திடும் திருமகளைப்
    பன்னிநற் புகழ்பாடி- அவள்
    பதமலர் வாழ்த்திநற் பதம்பெறுவோம்.
     

  • Anjaneyar Gayathri Mandiram

    ஆஞ்சநேயருக்கு மிகவும் பிடித்தது ராம நாமம்.  `ராம ராம ராம' நாமம் சொல்வது விசேஷம். 

    `ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே,  
    வாயுபுத்ராய தீமஹி, தந்தோ
    ஹனுமன் ப்ரசோதயாத்' 

    என்பது அனுமனுக்கான காயத்ரி மந்திரமாகும். இதையும் சொல்லி வழிபடலாம். அனுமன் ஜெயந்தியன்று ஆஞ்சநேயருக்கு துளசி மாலை அணிவித்து, துளசி அர்ச்சனை செய்யலாம். வெற்றிலை அல்லது வடை மாலை சாத்தலாம். வெண்ணெய் சாத்தி வழிபட்டு பக்தர்களுக்கு அன்னதானம் செய்யலாம். 

    ஆன்ம பலம், மனபலம், உடல் பலம், பிராண பலம், சம்பத் பலம் எனப்படும் செல்வச் செழிப்பு என்ற 6 பலங்களையும் அருள்பவர் அனுமன். அவரை பக்தியுடன் வழிபட்டால் மனதில் இருக்கும் தீய எண்ணங்கள் அழியும். சிறந்த அறிவுத்திறன், புத்திக்கூர்மை, வீரம், விவேகம் உண்டாகும். 

  • Vetri Tharum Vinayakar Gayathri Mandiram

    விநாயகர் சகஸ்ரநாமம்:
     
    சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம்
    ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்நோப சாந்தயே

    விநாயகர் காயத்ரி மந்திரம்:
     
    வக்ரதுண்டாய ஹீம் 
    ஓம் நமோ ஹேரம்ப மதமோதித 
    மம சர்வ சங்கடம் நிவாரயே ஸ்வாஹா 
    ஓம் கம் க்ஷிப்ரப்ரசாதனாய நமஹ.
     
     விநாயகர் ஸ்லோகங்கள்….

    1)  கஜானனம் பூத கணாதி ஸேவிதம்
    கபித்த ஜம்பூ பலஸார பக்ஷதம்
    உமாஸுதம் சோக வினாச காரணம்
    நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்
     
    2) ஓம் தத்புருஷாய வித்மஹே 
    வக்ரதுண்டாய தீமஹி 
    தன்னோ தந்தி ப்ரசோதயாத்.
     
    3) ஐந்து கரத்தனை யானை முகத்தனை 
    இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை 
    நந்தி மகன்தனை ஞானக் கொழுத்தினைப் 
    புந்தியில் வைத்து அடி போற்றுகின்றேனே.
     
    4) மூஷிக வாகன மோதக ஹஸ்த 
    சாமர கர்ண விளம்பித சூத்ர 
    வாமன ரூப மஹேஸ்வர புத்ர 
    விக்ன விநாயக பாத நமஸ்தே.
     
    5) அல்லல்போம் வல்வினைபோம் அன்னைவயிற்றில் பிறந்த 
    தொல்லைபோம் போகாத் துயரம்போம் நல்ல 
    குணமதிக மாம் அருணைக் கோபுரத்தில் மேவும் 
    கணபதியைக் கைதொழுதக் கால்.
     
    விநாயகர் மந்திரத்தை தினமும் படித்து அருகம்புல்லால் விநாயகரை வழிபட்டு வந்தால் விநாயகரின் அருள் நமக்குக் கிடைக்கும். பிள்ளையாரை வணங்கி நெற்றியில் குட்டிக் கொண்டு எந்த ஒரு காரியத்தையும் ஆரம்பிக்க வேண்டும்.
     

  • Vishnu Gayathri mandiram

    ஆபத்துகளில் இருந்து விடுபட விஷ்ணு காயத்ரி மந்திரம்…. 

    விஷ்ணு காயத்ரி மந்திரம் :

    ஓம் நாராயணாய வித்மஹே

    வாசுதேவாய தீமஹி

    தன்னோ விஷ்ணு ப்ரசோதயாத்

    ஆபத்துகளில் இருந்து விடுபட தினமும் விஷ்ணு காயத்ரி மந்திரத்தை சொல்லி வர வேண்டும். ஆபத்துகள் மட்டும் அல்ல பாவங்களும் உங்களை விட்டு அகலும். அதுமட்டுமல்ல நல்ல குணமும், அழகும் கொண்ட சந்ததிகள் உருவாகுவார்கள். 
     

  • Sri sudharsana mandiram

    செய்யும் தொழிலில் மேம்பட மற்றும் இடர்கள் தீர ஸ்ரீ சுதர்சனர் ஸ்லோகத்தை கூறி வந்தால் பலன் கிடைக்கும்

     ஓம் ஐம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் கிருஷ்ணாய

    கோவிந்தாய, கோபி ஜன வல்லபாய,

    பராய, பரம ப்ருஷாய, பரமாத்மனே,

    பரகர்ம மந்த்ர யந்த்ர தந்த்ர ஔஷத

    அஸ்த்ர, சஸ்த்ராணி, ஸம்ஹர, ஸம்ஹர,

    ம்ருத்யோர் மோசய, மோசய,

    ஓம் நமோ பகவதே மஹா ஸுதர்சனாய,

    ஓம் ப்ரோம் ரீம் ரம் தீப்த்ரே, ஜ்வாலா

    பரீதாய, ஸர்வதிக் ஷோபன ஹராய,

    ஹும்பட், பரப்ரஹ்மணே,

    பரம்ஜ்யோதிஷே, ஸ்வாஹா

    என்ற சுதர்ஸன மூலமந்திரத்தை ஜெபித்துவிட்டு..

    ஓம் சுதர்ஸனாய நமக..

    ஓம் மஹாவிஷ்னுவே நமக..

    ஓம் மஹாலட்சுமியை நமக..

    ஓம் மஹாலட்சுமியை நமக..

    என்று தினம் தினம் சங்கிற்கும், சுதர்ஸன சக்கரத்திற்கும் குங்கும அர்ச்சனை செய்ய வேண்டும். தொடர்ந்து தினமும் பூஜை செய்துவர பல உன்னதமான பலன்களை கொடுக்கும். பூஜை செய்த சங்கையும், சுதர்ஸன சக்கரத்தையும் எடுத்து தொழில் ஸ்தாபனங்களில் வைக்கலாம் அல்லது நம் வீட்டுப் பூஜை அறையில் வைக்கலாம். இவ்வாறு செய்துவர தொழிலில் வெற்றிவாகை சூடலாம்.
     

  • Pradhosha Mandiram

    பிரதோஷம் தினத்தன்று மாலை 4.30 மணியிலிருந்து 6 மணி வரையில் பிரதோஷ காலம் என்று பூஜைகளைச் செய்கிறோம். அப்படியான பிரதோஷ காலத்தில் உச்சரிக்க வேண்டிய பஞ்சாக்ஷர மந்திரத்தை டாப் தமிழ் நியூஸ் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

    இந்த பஞ்சாக்ஷர மந்திரத்தை பிரதோஷ வேளையில் உச்சரித்து நந்தி தேவரையும், சிவனையும் வழிபட்டு வந்தால், வாழ்வில் எல்லா நலன்களும் கிடைக்கப்பெறும். 

    பிரதோஷ காலத்தில் கீழ் காணும் ஸ்லோகத்தை 18 முறை சொல்லவேண்டும்.

    ஸித்தயோகீ மஹர்ஷிச்ச

    ஸித்தார்த்தஹ் ஸித்த ஸாதக|

    பிக்ஷூச்ச பிக்ஷூரூபச்ச

    விபனோம்ருது ரவ்யய:

    இன்மையிலும் நன்மை தருவார் பிரதோஷ மூர்த்தி !