Tag: Mandiram

  • murugan mandiram

    ஓம் முருகா, குரு முருகா,

    அருள் முருகா, ஆனந்த முருகா

    சிவசக்தி பாலகனே

    ஷண்முகனே சடாக்ஷ்ரனே

    என் வாக்கிலும் நினைவிலும்

    நின்று காக்க

    ஓம் ஐம் ஹ்ரீம் வேல் காக்க சுவஹா

    முருகனின் ஆறெழுத்து  மந்திரப் பிரயோகம்….

    சகல ஜன வசீகரமாம் சஹாரத்தாலே

    தன முதல் அழைத்து வரும் ரஹாரத்தாலே

    பகை பிணி நோய் தீர்த்து வைக்கும் ஹகாரத்தாலே

    பகைத்தவரைக் கொல்ல வைக்கும் ணகாரத்தாலே

    சகலமுமே மோஹிக்கும் பகாரத்தாலே

    சகலரையும் ஸ்தம்பிக்கும் வகாரத்தாலே

    அகங்குளிர ஓதிய ஆறெழுத்தின் பெருமை

    ஆரறிவார் மகிதலத்தில் சொன்னேன் கேளே.

     

    மேற்கண்ட  மந்திரம் அகஸ்தியர்  அருளியது  

    எந்த காரியத்திற்காக கிளம்பும் முன் இதை ஜெபித்து

    திருநீறு  அணிந்து செல்ல கரிய வெற்றி உண்டாகும்.

  • Theeya shakthi vilaga Gayathri Mandiram

    தீய சக்திகளிலிருந்து காக்க அற்புத காயத்திரி மந்திரம்….

    ஸ்ரீதேவி
     
    ஓம் தேவீமனௌஜ ச வித்மஹே
    மஹாசக்த்யை தீமஹி
    தன்னோ தேவீஹ் ப்ரசோதயாத்
     
    தேவி பிராஹ்மணி
     
    ஓம் தேவீ பிராஹ்மணி வித்மஹே
    மஹாசக்த்யை ச தீமஹி
    தன்னோ தேவீ ப்ரசோதயாத்
     
    சூலினிதேவி
     (தீய சக்திகளிலிருந்து காக்க)
     
    ஓம் ஜ்வாலாமாலினி வித்மஹே
    மஹாசூலினி தீமஹி
    தன்னோ துர்கா ப்ரசோதயாத்
     
    ஓம் ஜ்வாலாமாலினி வித்மஹே
    மஹாசூலினி தீமஹி
    தன்னோ துர்கஹ் ப்ரசோதயாத்
     
    சப்தமாத்ருகா தேவி
     
    ஓம் ஹம்சத்வஜாய வித்மஹே
    கூர்ச்ச ஹஸ்தாய தீமஹி
    தன்னோ பிராஹ்மீ ப்ரசோதயாத்

     

  • Amman Gayathri Mandiram

    துர்கை:

    (ராகுதோஷ நிவர்த்திக்காக)
     
    ஓம் காத்யாயனாய வித்மஹே
    கன்யகுமரி தீமஹி
    தன்னோ துர்கிஹ் ப்ரசோதயாத்
     
    ஓம் சிம்மத் வஜாய வித்மஹே
    சூல ஹஸ்தாய தீமஹி
    தன்னோ மாரி ப்ரசோதயாத்
     
    அன்னபூரணி தேவி:

    (நித்தியான்ன பிராப்திக்காக)
     
    ஓம் பக்வத்யைஹ் வித்மஹே
    மஹேஸ்வர்யைஹ் தீமஹி
    தன்னோ அன்னபூர்ண ப்ரசோதயாத்
     
    சிவதூதி:
     
    ஓம் சிவதூத்யை ச வித்மஹே
    சிவங்கர்யைச தீமஹி
    தன்னோ நித்யஹ் ப்ரசோதயாத்
     
    பாலா:
     
    ஓம் திருபுரசுந்தரீ வித்மஹே
    காமேஸ்வரீ ச தீமஹி
    தன்னோ பாலா ப்ரசோதயாத்
     
    அம்ருதேஸ்வரி தேவி:

    (ஆயுள் ஆரோக்கியம் பெற)
     
    ஓம் சௌஹ் த்ரிபுரதேவி ச வித்மஹே
    சக்தீஸ்வரீ ச தீமஹி
    தன்னோ அம்ருத ப்ரசோதயாத்
     
    வாக்பலா:

    (பேச்சுபிழை சரியாக)
     
    ஓம் ஐம் திரிபிராதேவீ வித்மஹே
    வாக்பவேஸ்வரீ தீமஹி
    தன்னோ முக்திஹ் ப்ரசோதயாத்
     
    சர்வமங்கள:

    (நல் பயணத்திற்கு)
     
    ஓம் சர்வமங்களை வித்மஹே
    மஹாச் சந்த்ரத்மிகயை தீமஹி
    தன்னோ நித்ய ப்ரசோதயாத்
     
    கன்னிகா பரமேஸ்வரி:

     (மாங்கல்ய பிராப்தம் கிடைக்க)
     
    ஓம் பாலாரூபிணி வித்மஹே
    பரமேஸ்வரி தீமஹி
    தன்னோ கந்யா ப்ரசோதயாத்
     
    ஓம் த்ரிபுராதேவீ வித்மஹே
    கந்யாரூபிணீ தீமஹி
    தன்னோ கந்யா ப்ரசோதயாத்
     
    காமேச்வரி:

    (மங்களம் உண்டாக)
     
    ஓம் க்லீம் த்ரிபுரதேவீ வித்மஹே
    காமேச்வர்யை தீமஹி
    தன்னோ க்லிண்ணே ப்ரசோதயாத்
     
    ஓம் காமேஸ்வர்யை வித்மஹே
    நித்யக்லிந்நாய தீமஹி
    தன்னோ நித்யஹ் ப்ரசோதயாத்
     
    காமதேனு:

    (கேட்டது கிடைக்க)
     
    ஓம் சுபகாமாயை வித்மஹே
    காமதாத்ரை ச தீமஹி
    தன்னோ தேனுஹ் ப்ரசோதயாத்
     
    காளிகா தேவி:

    (கேட்ட வரம் கிடைக்க)
     
    ஓம் காளிகாயை ச வித்மஹே
    ஸ்மசான வாசின்யை தீமஹி
    தன்னோ கோரா ப்ரசோதயாத்
     
    வாராஹி:

    (நினைத்தது நிறைவேற)
     
    ஓம் வராஹமுகி வித்மஹே
    ஆந்த்ராஸனீ தீமஹி
    தன்னோ யமுனா ப்ரசோதயாத்
     
    குலசுந்தரி:

    (சொத்து, கவுரவம் அடைய)
     
    ஓம் குலசுந்தர்யை வித்மஹே
    காமேஸ்வர்யை தீமஹி
    தன்னோ நித்யஹ் ப்ரசோதயாத்
     
    சந்தோஷி மாதா:

    (திருமண தடை நீங்க)
     
    ஓம் ருபாதேவீ ச வித்மஹே
    சக்திரூபிணி தீமஹி
    தன்னோ சந்தோஷி ப்ரசோதயாத்
     
    கவுமாரி தேவி:

    (சக்தி பெற)
     
    ஓம் சிகித்வஜாயை வித்மஹே
    வஜ்ர (சக்தி) ஹஸ்தாயை தீமஹி
    தன்னோ கௌமாரீ ப்ரசோதயாத்
     
    கவுரிதேவி:

    (தியானம் சித்தி அடைய)
     
    ஓம் சுவபாகாயை வித்மஹே
    காம மாளினை தீமஹி
    தன்னோ கௌரீஹ் ப்ரசோதயாத்
     
    ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே
    ருத்ரபத்ன்யை ச தீமஹி
    தன்னோ கௌரீஹ் ப்ரசோதயாத்
     
    ஓம் கணாம்பிகாய வித்மஹே
    மஹாதபாய தீமஹி
    தன்னோ கௌரீஹ் ப்ரசோதயாத்
     
    ஓம் சௌபாக்யதாயை வித்மஹே
    காம மாலாய தீமஹி
    தன்னோ கௌரீஹ் ப்ரசோதயாத்
     
    ஓம் ஸோஹம்ச வித்மஹே
    பரமஹம்ஸாய தீமஹி
    தன்னோ கௌரீஹ் ப்ரசோதயாத்

  • gayathri mandiram

    காயத்ரி மந்திரம் எல்லா மந்திரங்களிலும் மிகச் சிறந்த மந்திரம் மற்றும்  பெரியது ஆகும்.  இது அனைத்து வேத மந்திரங்களின் சக்தி மற்றும் ஆற்றலைத் தன்னுள்  கொண்டுள்ளது. இது மற்ற எல்லா மந்திரங்களுக்கும் சக்தியை அளிக்கிறது.

    அன்னை காயத்ரி

    காயத்ரியை வேதங்களின் தாய் என்றும் அனைத்து பாவங்களையும் அழிப்பவர் என்றும் வேதங்கள் அறிவிக்கின்றன. அவள் அன்னபூரணியாக விளங்குபவள். தெய்வீகத் தாயாகப் போற்றப்படுபவள். அனைத்து உயிர்களுக்கும் உயிரூட்டும் தாயாக அன்னை காயத்ரி விளங்குகிறாள். பூமியை தூய்மை படுத்துவதில் காயத்ரி மந்திரத்தைப் போல சுத்திகரிப்பு எதுவுமில்லை. காயத்ரி மந்திரத்தை விட பெரிய செல்வம் எதுவும் இல்லை. ஒரு மனிதன் தான் விரும்பியதை அடைய காயத்ரி மந்திரம் பெரிதும் உதவுகின்றது.

    காயத்ரி மந்திரம் என்றால் என்ன?

    மந்திரத்திலேயே காயத்ரி மந்திரம் சக்தி வாய்ந்த தலையாய மந்த்ரம். காயத்ரி மந்திரம் என்பது 24 எழுத்துக்களைக் கொண்ட ஒரு பிரபஞ்ச  தாளமாகும். அவை ஒவ்வொன்றும் எட்டு எழுத்துக்களின் மும்மடங்காக அமைக்கப்பட்டுள்ளன. பிரம்ம வடிவான காயத்ரி மந்திரம்  அனைத்து மந்திரங்களிலும்  மிகப்பெரியது.

    இது அனைத்து தீமைகளிலிருந்தும் ஜீவன்களை  பாதுகாக்கும் ஆன்மீக கவசமாக செயல்படுகிறது. இது மிக உயர்ந்த ஆன்மீக வெளிச்சத்தின் பிரகாசமான ஒளியாக இருந்து மனிதர்களுக்கு ஆசிகளை வழங்குகின்றது.

    உடலுக்கு தூய்மை எப்படி தேவையோ அது போல உள்ளத்துக்கு தூய்மை தேவை. அந்த உள்ளத் தூய்மையை  வழங்குவதி இந்த காயத்ரி மந்திரம் ஆகும்.

    காயத்ரி ஜெபம்:

    காயத்ரி ஜெபம் என்பது அனைத்து மாயைகளையும் அழிக்கும், பிராணனை உற்சாகப்படுத்தும், நீண்ட ஆயுள், ஆரோக்கியம், புத்திசாலித்தனம் மற்றும் ஞானத்தை அளிக்கும் தியானத்தின் மிக உயர்ந்த வடிவமாகும்.

    இது ஞானம், செழிப்பு, தூய்மை மற்றும் வீடுபேற்றை  வழங்கும்  ஒளியைப் பற்றிய ஒரு தியானமாகும்.காயத்ரி மந்திரத்தை 108 முறை உச்சரிப்பவர்கள் மந்திரத்தின் மாய சக்தி மூலம் வாழ்வில் பிரகாசத்தை அடைவார்கள். இது எல்லா அச்சங்களையும் நீக்குகிறது மற்றும் அனைத்து நோய்களுக்கும் சிறந்த நிவாரணியாக விளங்குகின்றது.

    காயத்ரி மந்திர ஜெபத்தின் பலன்:
    காயத்ரி மந்திரம் வாழ்வில் ஏற்படும் அனைத்து தடைகளையும் சமாளிக்க வலிமையை அளிக்கின்றது. வாழ்வில் வளமை மற்றும் செழுமை அளிக்கின்றது. இந்த மந்திரம் அனைத்து ஆபத்துகளிலிருந்தும் பாதுகாக்கிறது மற்றும் எட்டு வகையான செல்வங்களை அல்லது அஷ்ட ஐஸ்வர்யத்தை வழங்குகிறது.
    காயத்ரி மந்திரம்

    "ஓம் பூர் புவஸ்ஸுவஹ தத் ஸவிதுர் வரேண்யம்
    பர்க்கோ தேவஸ்ய தீமஹி தியோயோன ப்ரசோதயாத்."

    காயத்திரி மந்திரத்தின் விளக்கம்: பூர்லோகம், புவர்லோகம், ஸ்வர லோகம் ஆகிய மூன்று உலகங்களையும் படைக்க காரணமான ஒளி பொருந்திய, வணக்கத்திற்குரியவரை நாங்கள் தியானிக்கிறோம். நாங்கள் மேலான உண்மையை உணர அந்தப்பரம்பொருள் எங்களது அறிவை ஊக்குவிக்கட்டும். ஒவ்வொரு கடவுளரை தியானிக்க தனித்தனி காயத்திரி மந்திரங்கள் உள்ளது.காயத்ரி மந்திரம் பற்றி மேலும் அறிய .

  • Saraswathi Devi Gayathri Mandiram

    வேத ஸ்வரூபியான பகவான் ஸ்ரீ ஹயக்ரீவருடைய சிஷ்யையே ஸ்ரீ சரஸ்வதி தேவி.எனவே ஸ்ரீ ஹயக்ரீவரை வழிபடுபவர்களுக்குச்  சரஸ்வதி தேவியின் அருள் தானாகவே கிட்டும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

    குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்கவும், எந்தக் கடினமான விஷயத்தையும் எளிதில் விளங்கிக்கொள்ளவும் ,விளக்கிச்சொல்லவும் வல்லவர்களாக விளங்கச் செய்யும்  ஸ்ரீ சரஸ்வதி ,ஸ்ரீ ஹயக்ரீவர் மந்திரங்களை  நாள்தோறும் சொல்லலாம்.

    சரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காமரூபிணி
    வித்யாரம்பம் கரிஷ்யாமி சித்திர்பவது மே சதா
    தேவி சரஸ்வதி! உனக்கு நமஸ்காரங்கள்.
    வரம் தருபவளே!வேண்டியவற்றைத் தருபவளே!
    கல்வித் தொடக்கத்தை செய்கிறேன்.
    அனைத்தும் அடியேனுக்குச் சித்தி ஆகட்டும்!

    இதனை தினமும் ஜெபித்து வர நல்ல நினைவாற்றல் ,கஷ்டமான விஷயங்களையும் விளங்கிக்கொள்ளும் ,விளக்கிச்சொல்லும் திறன் உண்டாகும்.

    சரஸ்வதி காயத்திரி மந்திரம் :

    ‘ஓம் பிரம்ம சக்தியை வித்மஹே
    பீதவர்ணாயை தீமஹி தன்னோ
    பிராம்ஹீ ப்ரசோதயாத்’

    பொருள்: பிரம்ம சக்தியை அறிவோம்.  சரஸ்வதி தேவியை தியானம் செய்வோம். அவள் நமக்கு ஊக்கம் தந்து அருள்புரிவாளாக. சரஸ்வதி காயத்திரி மந்திரத்தையும் 108 முறை சொல்லி வந்தால் சிறப்பான  பலன்களை அன்னை நமக்கு தந்தருள்வாள்.

  • muruga peruman gayathri mandiram

    ஒருவரின் அறிவையும் ஆற்றலையும் ஒளிரச்செய்யும் முருகன் காயத்ரி மந்திரம் இது. இந்த மந்திரத்தை தினமும் 108 முறை என தொடர்ந்து ஒரு மண்டலம் (48 நாட்கள்) ஜெபிப்பதன் பலனாக முருகப்பெருமானின் அருள் பறி பூரணமாக கிடைக்கும். அதோடு குரு பகவானின் அருளும் கிடைக்கும். இந்த மந்திரத்தை தினமும் ஜபிக்க முடியாதவர்கள் செவ்வாய் கிழமைகளில் ஜெபிக்கலாம். இந்த மந்திரத்தை தினமும் 108 முறை என தொடர்ந்து ஒரு மண்டலம் (48 நாட்கள்) ஜெபிப்பதன் பலனாக முருகப்பெருமானின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.

    முருகப்பெருமான் காயத்ரி மந்திரம்

    ஓம் தத்புருஷாய வித்மஹே
    மஹாஸேனாய தீமஹி
    தன்னோ ஷண்முக ப்ரசோதயாத்

    பொது பொருள்: தேவர்களுக்கெல்லாம் சேனாதிபதியாக விளங்கும் மகா சேனாதிபதியாகிய முருகப்பெருமானே உங்களை வணங்குகிறேன். அடியேனை ஆட்கொண்டு என்னையும் வழி நடத்த உங்களை வேண்டுகிறேன்.

  • Sri Varahi mandiram

    துடியான தெய்வமே வராகி அன்னையே திருவடிகள் சரணம்

    திருப்படை வந்தனம் (அம்ருதானந்த யோகம்)

    பொருப்புக்கு மாறுசெய் ஆழியும் தோடும் பொருப்பைவென்ற

    மருப்புக்கு நேர்சொலும் கொங்கையும் மேனியும் வாழ்த்தும் என(து)

    இருப்புக் கடிய மனதிற் குடிகொண்டு எதிர்த்தவரை

    நெருப்புக் குவால்எனக் கொல்வாய் வாராஹிஎன் நிர்க்குணியே.

    பதமலர் வந்தனம் (கைவல்யானந்த யோகம்)

    தேறிட்ட நின்மலர்ப் பாதார விந்தத்தைச் சிந்தை செய்து

    நீறிட் டவர்க்கு வினைவரு மோ? நின் அடியவர்பால்

    மாறிட் டவர்தமை வாள்ஆயுதம் கொண்டு வாட்டிஇரு

    கூறிட் டெறிய வருவாய் வாராஹி குலதெய்வமே.

    சித்தி வந்தனம் (ஆனந்த யோகம்)

    நரிபரி ஆக்கிய சம்புவின் பாகத்தை நண்ணியமான்

    அரிஅயன் போற்றும் அபிராமி தன்அடி யார்க்கு முன்னே

    ஸரியாக நின்று தருக்கம்செய் மூடர்தலையைவெட்டி

    எரியாய் எரித்து விடுவாள் வாராஹி எனும்தெய்வமே.

    நவகோண வந்தனம் (நித்யானந்த யோகம்)

    வீற்றிருப்பாள்நவ கோணத்திலேநம்மை வேண்டும் என்று

    காத்திருப்பாள்கலி வந்தணுகாமல்என் கண்கலக்கம்

    பார்த்திருப்பாள் அல்லள் எங்கேஎன்றங்குச பாசம் கையில்

    கோத்திருப்பாள் இவளேஎன்னை ஆளும் குலதெய்வமே.

    நிறைமங்கலம் (சிவஞான யோகம்)

    சிவஞான போதகி செங்கைக் கபாலி திகம்பரிநல்

    தவம்ஆரும் மெய்யன்பர்க் கேஇடர் சூழும் தரியலரை

    அவமானம் செய்யக் கணங்களை ஏவும்அகோரி இங்கு

    நலமாக வந்தெனைக் காக்கும் திரிபுர நாயகியே

    கருணாசாகரி ஓம் ஸ்ரீ மகா வாராஹி பத்மபாதம் நமோஸ்துதே||

    துடியான தெய்வமே வராகி அன்னையே திருவடிகள் சரணம்
     

  • Sri Saibaba Gayathri Mandiram

    மதங்களை கடந்து அணைவராலும் வணங்கப்படுபவர் சாய் பாபா. கடவுள் தத்தாத்திரேயரின் அவதாரமாகக் கருதப்படும் சாய் பாபாவை எவர் ஒருவர் வணங்கினாலும், சாய் பாபா ஓடோடி வந்து அவர்களின் துன்பத்தை துடைப்பார் என்பது நம்பிக்கை. அந்த வகையில் சாய் பாபாவை வணங்கும் சமயத்தில் அவருக்குரிய காயத்ரி மந்திரம் உச்சரிப்பது மேலும் சிறப்பானதாக அமையப்பெறும்

    ஸ்ரீ ஷீரடி சாய் பாபா காயத்ரி மந்திரம்

    ஓம் ஷிர்டி வாசாய வித்மஹே..

    சச்சிதானந்தாய தீமஹி..

    தன்னோ சாய் ப்ரசோதயாத்.

    இந்த மந்திரத்தை தினசரி 11 முறை அல்லது 33 முறை அல்லது 108 முறை செபிப்பது உகந்தது. தினசரி ஜெபிக்க இயலாதவர்கள் வியாழக்கிழமைகளில் இந்த மந்திரத்தை ஜபிக்கலாம். இதை ஜெபிப்பவர்களுக்கு சாய் பாபாவின் அருளும் ஆசியும் கிடைக்கப்பெற்று வளமுடன் வாழ்வர்.

  • Sri Ragavendrar mandiram

    உலகில் இறைவனின் பிரதிநிதியாக தோன்றியவர்கள் தான் மகான்களும், ஞானிகளும். இவர்களை நாம் எல்லோரும் தூய்மையான இதயத்துடன் சரணடையும் போது நமக்கு எல்லா வகையிலும் உதவுகின்றனர். 

    அப்படி வாழ்ந்த ஒரு மகான் “ஸ்ரீ ராகவேந்திரர்” அவரை வழிபடும் மந்திரம் இது. 

    ஸ்ரீ ராகவேந்திரர் மந்திரம்…. 

    ஓம் வெங்கட நாதாய வித்மஹே 
    ஸச் சித்தானந்தாய தீமஹி 
    தந்நோ ராகவேந்திரா ப்ரசோதயாத் 

    ஸ்ரீ ராகவேந்திரருக்குரிய இந்த மந்திரத்தை மகான்கள் மற்றும் சித்தர்களை வழிபடுவதற்குரிய வியாழக்கிழமைகளில் வழிபடுவது சிறப்பு என்றாலும் வாரத்தின் மற்ற எல்லா நாட்களிலும் கூறி வழிபடலாம். 

    காலையில் எழுந்து, குளித்து முடித்து விட்டு பூஜையறையில் ராகவேந்திரர் ஸ்வாமியின் படமிருந்தால் அதற்கு முன்பு மஞ்சள் நிற பூக்களை வைத்து, தூபங்கள் கொளுத்தி, வடதிசையை பார்த்தவாறு அமர்ந்து, கண்களை மூடிக்கொண்டு தியான நிலையில், ஸ்ரீ ராகவேந்திரரை மனதில் நினைத்து இம்மந்திரத்தை 108 முறை 48 நாட்கள் தொடர்ந்து செய்து வர நீங்கள் விரும்பியவற்றை நிறைவேற்றுவார் ஸ்ரீ ராகவேந்திரர். 

    ஆன்மீக பூமியான தமிழ் நாட்டில் 17 ஆம் நூற்றாண்டில் அவதரித்தவர் தான் ஸ்ரீ ராகவேந்திரர். இவர் இப்பிறவியில் மகாவிஷ்ணுவின் அவதாரமான ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியின் வழிபாட்டை மக்கள் அனைவரிடமும் பரப்பும் புண்ணிய பணியை மேற்கொண்டார். மகானாகிய ஸ்ரீ ராகவேந்திரர் தன்னை சோதிக்க நினைத்தவர்களுக்கு அவர்களின் அகங்காரத்தை அடக்கி ஞானத்தை அருளினார். தன்னை உள்ளன்போடு வணங்கியவர்களுக்கு பல அற்புதங்களை நிகழ்த்தினார். அப்படிப்பட்ட மகானுக்குரிய இம்மந்திரத்தை உண்மையான பக்தியுடன் உரு ஜெபித்து அவரை வழிபடுபவர்களுக்கு அனைத்து நன்மைகளும் உண்டாகும். 
     

  • vettri tharum hanuman mandiram

    வாரந்தோறும் சனிக்கிழமைகளில் அனுமனை ஆராதித்து வழிபட்டு இந்த மந்திரங்களை கூறி வந்தால் அச்சம் விலகி எடுத்த காரியம் வெற்றிப்பெறும்.

     அச்சம் விலக:-

     ஸர்வ கல்யாண தாதாரம்

    ஸர்வ வாபத்கந வாரகம்

    அபார கருணா மூர்த்திம்

    ஆஞ்ச நேயம் நமாம் யஹம்

     தினமும் 21 முறை ‘ஸ்ரீராம் ஜெயராம் ஜெய ஜெய ராம்’ என்ற மந்திரத்தையும் கூறலாம்.

     அனைத்து காரியங்களிலும் வெற்றி பெற தினமும் சொல்ல வேண்டிய மந்திரம்:-

     ஸ்ரீராம தூத மஹாதீர

    ருத்ர வீர்ய ஸமத் பவ

    ஆஞ்சநேய கர்ப்ப ஸம்பூத

    வாயு புத்திர நமோஸ்துதே.