Blog

  • 24 garuda sevai

    தஞ்சாவூரில்  வேறு எங்கும் காண முடியாத வகையில்  24 கருட சேவை நடைபெற்றுள்ளது.   வயதானவர்கள்,  உடல் நலம் இல்லாதவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு பக்தர்களும்  அனைத்து கோயில்களுக்கும் செல்ல முடியாத பக்தர்களும் தரிசனம் செய்திட   24 பெருமாள் கோயில்களில் இருநதும்  24 பெருமாள்கள்  கருட வாகனத்தில்   தஞ்சையில்  சங்கமித்தன. 

    தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்தின் சார்பில் 85 வது ஆண்டு  24 கருட சேவை இன்று கும்மியாட்டம்   பஜனை  பாடல் என  கோலாகலமாக நடைபெற்றது.  தஞ்சையில் உள்ள  நீலமேகப் பெருமாள் கோயில்,  ஸ்ரீ நரசிம்ம பெருமாள், கல்யாண வெங்கடேஷபெருமாள் கோயில் உள்ளிட்ட 24 பெருமாள் கோயில்களில் இருநதும் 24 பெருமாள் களும் கருட வாகனத்தில் இன்று பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். 

    தஞ்சை கீழவீதி, தெற்கு வீதி, மேலவீதிகளில் திரண்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் 24 பெருமாள் களையும் தரிசனம் செய்தனர்
     

  • Vedha Narayanaa Perumal Vaigasi Therottam

    முசிறி அருகே திருநாராயணபுரத்தில் வேதநாராயண பெருமாள் திருக்கோயிலில் வைகாசி பெருந்திருவிழாவை முன்னிட்டு திருத்தேரோட்டம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர். 

  • Lakshmi Narasimhar Car Festival

    திண்டிவனத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற கனகவல்லி நாயிகா சமேத அருள்மிகு ஸ்ரீ இலட்சுமி நரசிம்மசுவாமி திருக்கோவில் பிரம்மமோற்வ பெருவிழா கடந்த 17 ஆம் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.

    அதனை தொடர்ந்து சுவாமிக்கு திருக்கல்யாண வைபவம்,சூர்ணாபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேக ஆராதனைகள் கடந்த ஒருவாரமாக  தினம்தோறும்  நடைபெற்றுவந்தது.  

    இந்நிலையில் இன்று அதிகாலை  கனகவல்லி நாயிகா சமேத ஸ்ரீலட்சுமி நரசிம்மசுவாமிக்கு பல்வேறு பூஜைகள் செய்யப்பட்ட பிறகு  திருத்தேரோட்டம் நடைபெற்றது.  ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்து சுவாமி அருளை பெற்றார்கள்.
     

  • Rasi Palangal

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – புகழ்
    ரிஷபம் – சுகம் 
    மிதுனம் – பயம் 
    கடனம் – நன்மை   
    சிம்மம் – ஆதரவு
    கன்னி – செலவு
    துலாம் –  கோபம் 
    விருச்சிகம் – பெருமை 
    தனுசு – வெற்றி 
    மகரம் –   போட்டி  
    கும்பம் – நிறைவு
    மீனம் – நற்செய்தி
    சந்திராஷ்டமம்    – புனர்பூசம், பூசம்
     

  • May 25 Indraya Nalla Neram

    மே 25 . இன்றைய நல்ல நேரம்
    விகாரி வருடம் – வைகாசி 11
    25-மே-2019 சனி  
    நல்ல நேரம்    :    7.30 – 9.00    
    ராகு    :    9.00 – 10.30    
    குளிகை    :    6.00 – 7.30
    எமகண்டம்    :    1.30 – 3.00                          
    திதி    :    சப்தமி          
    திதி நேரம்    :    சஷ்டி    கா    7.20
    நட்சத்திரம்    :    திருவோணம்    கா    11.07
    யோகம்    :    சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    புனர்பூசம்,பூசம்
    சூலம்    :    கிழக்கு
    பரிகாரம்    :    தயிர்
     

  • Prachanaigal Theera Slogam

    உங்கள் பிரச்சினைகள் தீர  ஆஞ்சநேயரை மனம் உருகி வேண்டிக் கொண்டு தினமும் இந்த ஸ்லோகத்தை சொல்லி வர வேண்டும். அப்படி சொல்லி வர அனைத்து பிரச்சினைகளும் படிப்படியாக மறைந்து மன நிம்மதியை ஏற்படுத்தும். 

    ஸ்ரீ ராம ஆஞ்சநேயர் ஸ்லோகம்
    உத்ய தாதித்ய ஸங்காசம் உதார புஜ விக்ரமம் 
    க்ந்த்தர்ப கோடி லாவண்யம் ஸர்வ வித்யா விசாரதம் 
    ஸ்ரீராம ஹ்ருதயா/நந்தம் பக்த கல்ப மஹிருஹம் 
     அபயம் வரதம் தோர்ப்யாம் கலயே மாருதாத்மஜம் 

    ஸ்ரீ ராம ஆஞ்சநேயர் கிருபை உண்டாக இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வந்தால் நல்ல பலன் கிடைக்கும். நாம் ஆஞ்சநேயரை மனம் உருகி வேண்டிக் கொண்டால் நம் பிரச்சினைகள் அனைத்தும் படிப்படியாக மறைந்து விடும்.

  • murugan abisegam palangal

    முருகனுக்கு செய்யும் பலவிதமான அபிஷேகங்கள் பல்வேறு நன்மைகளை அளிக்கும். இப்போது முருகனுக்கு செய்யும் எந்த அபிஷேகம் என்ன பலனை அளிக்கும் என்பதை பார்க்கலாம்.

    மஞ்சள் தூள் – நல்நட்பு வாய்ப்பிக்கும் அரசுவசியம்
    திருமஞ்சனத்தூள் – நோய் தீர்க்கும்
    நெய்சுகவாழ்வு, – மோட்சம்
    சர்க்கரை – எதிரியை ஜெயிக்கும்
    இளநீர்நல் – சந்ததியளிக்கும்
    கருப்பஞ்சாறு – ஆரோக்கியமளிக்கும்
    நார்த்தம்பழம் – சந்ததி வாய்க்கும்
    நன்னீர் – நினைத்தது நடக்கும்
    நல்லெண்ணை – நலம் தரும்

    பச்சரிசிமாவு – கடன் தீரும் பாபநாசம்
    பஞ்சகவ்யம்தீதழிக்கும் – ஆன்மசுத்தி
    பசும்பால்நீண்ட – ஆயுள் தரும்
    பசுந்தயிர் – மகப்பேறு வாய்க்கும்
    சந்தனம் – அகம், சுவர்க்க போகம் தரும்
    பன்னீர் – சருமம் காக்கும்
    கும்பஜலம் – பிறவிப்பயன் அளிக்கும்
     சந்தாபிஷேகம் – நலம் எல்லாம் அளிக்கும்

    சொர்ணம், ரத்னாபிஷேகம் – சகல சவுபாக்கியமும் கிட்டும். 
    பஞ்சாமிருதம் – தீர்க்காயுள், வெற்றி தரும்
    தேன்சுகம், – சங்கீத விருத்தி
    சாத்துக்குடி – துயர் துடைக்கும்
    எலுமிச்சை – யமபய நாசம், நட்புடை சுற்றம்
    திராட்சை – திட சரீரம் அளிக்கும்
    வாழைப்பழம் – பயிர் செழிக்கும்
    மாம்பழம் – செல்வம், வெற்றி தரும்

    பலாப்பழம் – மங்களம் தரும் யோக சித்தி
    மாதுளை – பகை நீக்கும், கோபம் தவிர்க்கும்
    தேங்காய் துருவல் – அரசுரிமை
    திருநீறு – சகல நன்மையும் தரும்
    அன்னம்விளை நிலங்கள் – நன்மை தரும்

  • Rasi Palangal

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – பெருமை 
    ரிஷபம் – போட்டி 
    மிதுனம் – செலவு
    கடனம் – நன்மை  
    சிம்மம் – சுகம் 
    கன்னி – நிறைவு
    துலாம் –  வெற்றி 
    விருச்சிகம் – ஆதரவு
    தனுசு – புகழ்
    மகரம் –   அமைதி 
    கும்பம் – பயம் 
    மீனம் – நிறைவு
    சந்திராஷ்டமம்    – புனர்பூசம்
     

  • May 24 Indraya Naal Eppadi

    மே 24 – இன்றைய நாள் எப்படி 
    விகாரி வருடம் – வைகாசி 10
    24-மே-2019 வெள்ளி  
    நல்ல நேரம்    :    9.00 – 10.30    
    ராகு    :    10.30 – 12.00    
    குளிகை    :    7.30 -9.00
    எமகண்டம்    :    3.00 – 4.30                          
    திதி    :    சஷ்டி          
    திதி நேரம்    :    சஷ்டி    முழுவதும்    0.00
    நட்சத்திரம்    :    உத்திராடம்    கா    8.47
    யோகம்    :    சித்த-மரண யோகம்
    சந்திராஷ்டமம்    :    புனர்பூசம்
    சூலம்    :    மேற்கு
    பரிகாரம்    :    வெல்லம்
     

  • Budhan Gayathri Manthiram

    புதன் காயத்ரி மந்திரத்தை தொடர்ந்து ஒவ்வொரு புதன் கிழமைகளிலும் செய்து வர நரம்பு கோளாறுகள் நீங்கும். அதோடு கல்வியும் அறிவும் மேம்படும்.

    நவகிரகங்களில் நரம்புகளில் ஆதிக்கம் செலுத்தும் புத பகவானை வழிபடுவதன் மூலம் நரம்பு சம்மந்தமான கோளாறுகள் நீங்கும். அதோடு கல்வியிலும் அறிவிலும் சிறந்து விளங்கும் ஆற்றலும் கிடைக்கும்.

    புதன் காயத்ரி மந்திரம்: 

    “ஓம் கஜத்வஜாய வித்மஹே 
    சுக ஹஸ்தாய தீமஹி 
    தந்நோ புத ப்ரசோதயாத்”

    இம்மந்திரத்தை புதன் கிழமைகளில் கோவில்களிலுள்ள புதன் பகவான் சந்நிதியிலோ அல்லது நம் வீட்டிலோ நல்லெண்ணெய் தீபம், ஏற்றி சிறிது பச்சைப்பயிர்களை நிவேதனம் வைத்து இம்மந்திரத்தை 108 முறை மந்திர உரு ஜெபிக்க வேண்டும். இதைத் தொடர்ந்து ஒவ்வொரு புதன் கிழமைகளிலும் செய்து வர நரம்பு கோளாறுகள் நீங்கும். அதோடு கல்வியும் அறிவும் மேம்படும்.