Blog

  • Rasi Palangal

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – ஆதரவு 
    ரிஷபம் – ஓய்வு  
    மிதுனம் – வெற்றி
    கடனம் – துன்பம் 
    சிம்மம் – நன்மை 
    கன்னி –  அமைதி 
    துலாம் –  பயம் 
    விருச்சிகம் – பாராட்டு
    தனுசு – தாமதம் 
    மகரம் –   நிம்மதி 
    கும்பம் – நேசம் 
    மீனம் – நிறைவு 
    சந்திராஷ்டமம்    – ரோகிணி
     

  • August 11 Sarva Egadasi

    ஆகஸ்ட் 11 – ஸர்வ ஏகாதசி
    விகாரி வருடம் – ஆடி 26
    11-ஆக-2019 ஞாயிறு  
    நல்ல நேரம்    :    7.30 – 9.00    
    ராகு    :    4.30 – 6.00    
    குளிகை    :    3.00 – 4.30
    எமகண்டம்    :    12.00 – 1.30                          
    திதி    :    துவாதசி          
    திதி நேரம்    :    ஏகாதசி    கா    10.07
    நட்சத்திரம்    :    மூலம்    இ    3.59
    யோகம்    :    அமிர்த-சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    ரோகிணி
    சூலம்    :    மேற்கு
    பரிகாரம்    :    வெல்லம்
     

  • Atthivaradhar Dharshan more 6 days

    காஞ்சீபுரம் வரதராஜப் பெருமாள் கோவிலில் உள்ள அனந்தசரஸ் குளத்தில் நீருக்குள் இருந்த அத்திவரதர் 40 ஆண்டுகளுக்கு பின் திருக்குளத்தில் இருந்து எழுந்தருளி 48 நாட்கள் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். கடந்த 1979-ம் ஆண்டு பக்தர்களுக்கு அருள்பாலித்த அத்திவரதர் சிலை பின்னர் மீண்டும் குளத்தில் வைக்கப்பட்டது. 
     
    தற்போது 40 ஆண்டு களுக்கு பிறகு இந்த ஆண்டு மீண்டும் அத்திவரதர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்த விழா கடந்த ஜூலை மாதம் 1-ந்தேதி தொடங்கியது. ஆகஸ்டு 17-ந்தேதி வரை 48 நாட்கள் அத்திவரதர் வைபவம் நடைபெறுகிறது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வருகின்றனர். 

    அத்திவரதரை தரிசிக்க வருகிற 16-ந்தேதி கடைசி நாளாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இன்றுடன் சேர்த்து இன்னும் 6 நாட்களே உள்ளது. அத்திவரதரை தரிசிக்க குறைவான நாட்களே உள்ளதால் பக்தர்கள் குவிந்து வருகிறார்கள். நாளை மற்றும் நாளை மறுநாள் விடுமுறை நாளாகும். எனவே அத்திவரதரை தரிசித்து விட வேண்டும் என்று பக்தர்கள் காஞ்சிபுரத்துக்கு படையெடுத்து வருகிறார்கள்.
     

  • Atthi Varadhar Rush

    தொடர் விடுமுறை நாட்கள் என்பதால் காஞ்சி அத்திவரதரை தரிசிக்க வழக்கத்தை விட கூட்டம் அலை மோதுகிறது. இன்று ஒரு நாளில் மட்டும் சுமார் 4 லட்சம் பக்தர்கள் அத்தி வரதரை தரிசித்துள்ளனர். 

    காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் அத்திவரதர் விழா தொடங்கி இன்றுடன் 41 நாட்கள் ஆகிறது.  ஜூலை 31 ஆம் தேதி வரை அத்திவரதர் சயனகோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஆகஸ்டு 1-ந்தேதி முதல் நின்ற கோலத்தில் காட்சி அளித்து வருகிறார். அத்திவரதர் வைபவம் தொடங்கிய நாள் முதல் சராசரியாக நாள் ஒன்றுக்கு 3 லட்சம் பேர் வரை அத்தி வரதரை தரித்து வருகின்றனர். 

    அத்திவரதரை தரிசிக்க வெளிமாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். அத்திவரதரை தரிசிக்க 7 மணி நேரத்துக்கும் மேல் ஆகிறது. ஆனாலும் பக்தர்கள் காத்து இருந்து தரிசித்து வருகிறார்கள். 41-வது நாளான இன்று அத்திவரதர் வெள்ளை, ரோஜா நிற பட்டாடை உடுத்தி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 

  • Indraya Rasi Palangal

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – லாபம் 
    ரிஷபம் – அமைதி 
    மிதுனம் – ஆதரவு
    கடனம் – பகை 
    சிம்மம் – தடங்கல்
    கன்னி –  தாமதம் 
    துலாம் –  வெற்றி 
    விருச்சிகம் – அசதி 
    தனுசு – மறதி
    மகரம் –   நன்மை 
    கும்பம் – பெருமை 
    மீனம் – நஷ்டம் 
    சந்திராஷ்டமம்    – கார்த்திகை

  • August 10 Indraya Naal Eppadi?

    ஆகஸ்ட் 10 – சனீஸ்வர பகவான் சிறப்பு ஆராதனை
    விகாரி வருடம் – ஆடி 25
    10-ஆக-2019 சனி  
    நல்ல நேரம்    :    7.30 – 9.00    
    ராகு    :    9.00 – 10.30    
    குளிகை    :    6.00 – 7.30
    எமகண்டம்    :    1.30 – 3.00                          
    திதி    :    திதித்துவயம்          
    திதி நேரம்    :    தசமி    ம    2.17
    நட்சத்திரம்    :    கேட்டை    இ    3.12
    யோகம்    :    சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    கார்த்திகை
    சூலம்    :    கிழக்கு
    பரிகாரம்    :    தயிர்
     

  • Madurai pogamal Meenatchi Dharisanam

    நாகை மாவட்டத்தில் திருவெண்காட்டீஸ்வரர் ஆலயத்தை கேள்விப்பட்டிருப்பீர்கள்.. இங்கே சென்னைக்கு அருகில் திருவெண்காடுறை ஈஸ்வரர் இருக்கிறார்? கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

    மீனாட்சி அம்மனை மதுரை போகாமலேயே தரிசிக்கலாம். எங்கே என்று தெரியுமா? பாதாள சுரங்கம் உள்ள கோயில் எங்குள்ளது என்று தெரியுமா? இந்த கேள்விகளுக்கான பதில், சென்னைக்கு மிக அருகே உள்ள மதுராந்தகம் தான்.

    அந்த காலத்தில் சதுர்வேதி மங்கலம் என்று அழைக்கப்பட்டது இந்த ஊர் அதாவது நான்கு வேதங்களும் சம காலத்தில் ஓதப்பட்ட இடம் மதுராந்தகம்.  இங்கு ரயிலடிக்கு அருகே அமைந்துள்ளது திருவெண்காட்டீஸ்வரர் ஆலயம். ஐந்து நிலைகளைக் கொண்ட இந்த ஆலயம், ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. 

    வெண்கொக்கு மந்தாரைகள் நிறைந்த காட்டில் இருந்ததால் வெண்காட்டீஸ்வரன் என்று இந்த ஈஸ்வரனுக்குப் பெயர் மதுராந்தக சோழன் காலத்தில் கட்டப்பட்டதும், பராந்தக சோழன் ஆட்சிக்குட்பட்டும் பாண்டியன் ஆட்சிக்காலத்தில் பராமரிக்கப்பட்டதுமானது இக்கோயில்.

    வெண்காட்டீஸ்வர், இங்கு மீனாட்சி சமேதராக காட்சி தருகிறார். இங்குள்ள அம்மன், 6 அடி உயரம் கொண்டது. திருக்கழுக்குன்றம் திரிபுரசுந்தரி,மதுராந்தகம் மீனாட்சி அம்மன், அச்சிறுபாக்கம் இளங்கிளி அம்மன் மட்டுமே 6 அடி உயரத்தில் காட்சிதருகிறார்கள்.

    திருவெண்காட்டீஸ்வரர் உளி படாத திருமேனி கொண்டவர். தெற்கு பார்த்த வாக்கில் அம்மன்..இடதுபுறம் சூரியனின் அழகிய சிலை வடிவம். சிலையின் நகக்கண் கூட தெளிவாக தெரியும் வகையிலான அற்புத வடிவம் கொண்ட சூரியன், சூரியனார் கோயிலில் உள்ளதைப்போல உரு கொண்டவர்.

    சன்னதியின் ஒரத்தில் யாரும் கவனிக்காத வகையில் செதுக்கப்பட்டுள்ள ஒரு குறியீடு, இங்கு பாதாள சுரங்கமோ அல்லது நகைகள் வைக்கக்கூடிய அறையோ கர்ப்பகிரகத்திற்கு கீழே இருப்பதாக காட்டுகிறது. ஆனால், இதுவரை யாரும் இதனை ஆராய்ந்தது இல்லை. 

    சன்னதியின் வெளிப்பிரகாரத்தில் சுந்தரர், அப்பர், நாவுக்கரசர், மாணிக்கவாசகர் காட்சியளிக்கின்றனர். மேலும் நான்கு பைரவர்கள் உள்ள கோயில்களில் மதுராந்தகம் கோயிலும் ஒன்று. 

    தோஷங்கள் நிவர்த்திசெய்யும் திருக்கோயில் என்பதால், திருமண தோஷம் முதல், பல்வேறு தோஷ நிவர்த்திக்கு இங்கு பக்தர்கள் வருவது வழக்கம். கடைசியாக 80 ஆண்டுகளுக்கு முன் கும்பாபிஷேகம் நடந்ததாக செவி வழி செய்தி இருந்ததையடுத்து ஊர் மக்களாக கூடி கடந்த 2006 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் செய்தனர். 

    பிரதோஷம் முதற்கொண்டு அனைத்து பூஜைகளும் விமரிசையாக நடக்கும் இந்த கோயிலில் வழிபட்டால், நாகை திருவெண்காட்டீஸ்வரரை தரிசித்தற்கான பலன்களை பெறலாம். 

    அதனால்தான், மண்ணிலே சிறந்த ஊர்..மாலவன் நடந்த ஊர்..மறைகள் நான்கும் வலம் வந்த ஊர்..மனதிற்கு இனிய ஊர் மதுராந்தகம் என்கிறார்கள். 
    ஓம் நமசிவாய!
    – பாமா

  • Somavara Pradhosham

    திங்கள் கிழமை வரும் பிரதோஷம் சோமவார பிரதோஷமாகும். இந்த பிரதோஷத்தின் மகிமை என்னவென்றால் மனிதர்களின் தோஷமான பாவத்தை நீக்குவதால் பிரதோஷம் என்று அழைக்கப்படுகிறது. தன்வந்திரி பீடத்தில் வருகிற 12.08.2019 திங்கட்கிழமை மாலை 5.00 மணிக்கு சோமவார பிரதோஷம் நடைபெறுகிறது.

    பிரதோஷ காலம் :

    உலகை காக்கும் பொருட்டு நன்மையை நமக்கு தந்து தீமையான விஷத்தை தான் ஏற்றுக் கொண்டார் இறைவன். இவ்வாறு உலகை காத்த உத்தமனான இறைவனை மனமுருக வேண்டி வழிபடும் தினமே பிரதோஷம். பிரதோஷம் நித்ய பிரதோஷம் ,மாதப் பிரதோஷம், மஹா பிரதோஷம் என்று மூன்று வகைப்படும்.

    சோமவார பிரதோஷம் :

    பிரதோஷ நாள் அன்று ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் நந்தி பீடத்தில் உள்ள ஸ்ரீ மரகதாம்பிகை சமேத மரகதேஸ்வரருக்கு பாவங்கள் அனைத்தும் விலக வேண்டி பால், சந்தனம், இளநீர், விபூதி கொண்டு ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் உள்ள ஸ்ரீ மரகதாம்பிகை சமேத மரகதேஸ்வரருக்கு வலம்புரி சங்குடன் மஹாபிஷேகம் நடை பெற உள்ளது. அபிஷேகம் செய்து வில்வ மாலை, அருகம்புல், திராட்சை மாலை அணிவித்து வழிபாடு நடைபெற உள்ளது.

    இப்பிரதோஷ பூஜையின் மூலம் திருமண தடை நீங்கும் ஜாதகத்தில் உள்ள சந்திர தோஷம், ராகு கேது போன்ற நவக்கிரக தோஷங்கள் நிவர்த்தியாகும். தொழில் மேன்மை அடையும் ,கடன் பிரச்சனை தீரும், போட்டி தேர்வு எழுதுபவர்களுக்கு எளிதில் வெற்றி கிட்டும். சனி பகவானால் உண்டாகும் சகல துன்பங்களும் விலகிப் போகும். .ஜாதகத்தில் எந்த தோஷம் இருந்தாலும் பிரதோஷத்தில் எல்லா தோஷமும் நீங்கிவிடும்.

    பிரதோஷ பூஜையை தொடர்ந்து சிவலிங்க ருபமாக உள்ள  468 சித்தர்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது தனி சிறப்பாகும். வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்திற்கு பிரதோஷ நாளில் வருகை புரிந்து ஸ்ரீ மரகதாம்பிகை சமேத மரகதேஸ்வரரையும், 468 சித்தர்களையும், குழந்தயானந்த ஸ்வாமிகள், ராமலிங்க அடிகளார், ராமகிருஷ்ண பரமஹம்சர், அகத்தியர், மஹா அவதார பாபா, சீரடி சாயிபாபா, தங்க பாபா, ராகவேந்திரர், ஜகத்குரு காஞ்சி சந்திரசேகர ஸ்வாமிகள், குருதேவ், மஹாவீர், ரமணர், புத்தர், வீரபிரம்மங்காரு, சேஷாத்திரி ஸ்வாமிகள், வேதாந்த தேசிகர் போன்ற பல்வேறு மஹான்களையும் தரிசித்து பிறந்த பலனை அடையலாம்.

    பால் – நோய் தீரும் நீண்ட ஆயுள் கிடைக்கும். தயிர் – பல வளமும் உண்டாகும், தேன் – இனிய சாரீரம் கிடைக்கும். பழங்கள் – விளைச்சல் பெருகும், பஞ்சாமிர்தம் – செல்வம் பெருகும், நெய் – முக்தி பேறு கிட்டும். இளநீர் – நல்ல மக்கட் பேறு கிட்டும். சர்க்கரை – எதிர்ப்புகள் மறையும். எண்ணெய் – சுகவாழ்வு, சந்தனம் – சிறப்பான சக்திகள் பெறலாம், மலர்கள் – தெய்வ தரிசனம் கிட்டும். பிரதோஷ நாளில் சிவனை தரிசித்தால் கடன், வறுமை, நோய்ப்பயம் போன்றவை விலகும் பிரதோஷத்தை முன்னிட்டு சிவனுக்கும் நந்திக்கும் நடைபெறும் அபிஷேகத்திற்கு மேற்கண்ட பலன்களை பெற மேற்கண்ட பொருட்களை அளித்து நன்மை பெறலாம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

    தொடர்புக்கு : ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம், வாலாஜாபேட்டை, தொலைபேசி : 04172 – 230033

  • Thiruchanoor Padmavathi Thayar Koil Festival

    திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் வரலட்சுமி விரதம் வெகு விமர்சையாக நடைபெற்றது. வரலட்சுமி விரதத்தையொட்டி அதிகாலையில் சுப்ரபாதம், சகஸ்ரநாம அர்ச்சனை, நித்திய அர்ச்சனை மூலவருக்கும் உற்சவருக்கும் அபிஷேகம் நடத்தப்பட்டது. இதையடுத்து பத்மாவதி தாயார் உற்சவர் ஆஸ்தான மண்டபத்திற்கு ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு வைக்கப்பட்டது. 

    பின்னர் தாயாருக்கு லட்சுமி சகஸ்கர நாம அர்ச்சனை, அஷ்டோத்திர நாமாவளி படிக்கப்பட்டு ரோஜா, சாமந்தி ,மல்லி, சம்பங்கி, துளசி, மருவும், தாமரை உள்ளிட்ட மலர்களால் புஷ்ப அர்ச்சனை நடைபெற்றது. இதையடுத்து வரலட்சுமி விரததிற்காக சிறப்பாக செய்யப்பட்ட இட்லி, இனிப்பு இட்லி, லட்டு, வடை, அப்பம் போலி போன்ற 12 விதமான நெய்வேத்தியம் சுவாமிக்கு சமர்ப்பிக்கப்பட்டது. இதை அடுத்து மகா மங்கள ஆரத்தி நடைபெற்றது.

    சுவாமி தரிசனம் செய்த பக்தர்களுக்கு 50000 கங்கன கயிறுகள்,  மஞ்சள் கயிறு , மஞ்சள் , குங்குமம்,  2 லட்சம் வளையல்கள் வழங்கப்பட்டது. மேலும் மூலவருக்கு தங்க புடவையால்  அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 

    வரலட்சுமி விரதத்தை ஒட்டி 1.5 டன்   மலர்களால் 85 தோட்டத்துறை ஊழியர்கள் ஆப்பிள், திராட்சை, மாதுளம் , சாத்துக்கொடி,  அன்னாசி பழம் உள்ளிட்ட பல்வேறு பழங்களாலும், மலர்களாலும் ஆஸ்தான  மண்டபத்தை அலங்கரித்தனர். மாலை 6 மணிக்கு தங்க ரதத்தில் பத்மாவதி தாயார் எழுந்தருளி 4 மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வரலட்சுமி விரதத்தை ஒட்டி அபிஷேகத்திற்கு பின்னர் தரிசனம், லக்ஷ்மி பூஜை, கல்யாண உற்சவம்,  ரத்து செய்யப்பட்டது. 

    இந்த நிகழ்ச்சியில் இணை செயல் அலுவலர் பசந்த்குமார், முதன்மை பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு அலுவலர் கோபிநாத், கூடுதல் முதன்மை பாதுகாப்பில் உள்ள சிவக்குமார் ரெட்டி, துணை செயலாளர் ஜான்சிராணி, விஜிலன்ஸ் அதிகாரி அசோக்குமார் மற்றும் ஆலய அர்ச்சகர்கள் அதிகாரிகள் பக்தர்கள் பங்கேற்றனர். 

  • Vara Lakshmi Slogam

    திருமாலின் துணைவியான மகாலட்சுமி, நமக்கு வரங்களை அள்ளித் தருவதால் 'வரலட்சுமி' என பெயர் பெற்றாள். செல்வத்துக்கு அதிபதியான இவளை, நம் வீட்டுக்கு வரவேற்கும் நன்னாள் இன்று.

    பெண்களுக்கு மாங்கல்ய பாக்கியம் தருபவள் அவளே. அவளே சீதையாக, ருக்மணியாக பூமிக்கு வந்து வாழ்ந்து காட்டினாள். சீதையாகப் பிறந்த போது தன் கணவருடன் காட்டிற்குச் சென்றாள். கணவனே கண் கண்ட தெய்வம் என ராமரைப் பிரியாமல் வாழ்ந்தாள். திருப்பதி ஏழுமலையான் மார்பில் தொங்கும் ஆரத்திற்கு லட்சுமி ஆரம் என்பர். லட்சுமி தாயார் அவரது இதயத்தில் குடியிருப்பதாக ஐதீகம்.

    லட்சுமி தாயார் திருமாலின் மார்பை விட்டு பிரியாமல் இருப்பது போல சுமங்கலிகளும் தங்கள் கணவரின் இதயத்தில் இடம் பிடித்து அவர்களோடு ஒற்றுமையாக வாழ வரலட்சுமி நோன்பை மேற்கொள்கின்றனர்.இந்த நல்ல நாளில் அனைவருக்கும் சுமங்கலி பாக்கியம் நிலைக்க லட்சுமி தாயாரை வழிபடுவோம்.

    பாக்யலக்ஷ்மி நமஸ்தேஸ்து ஸௌமாங்
    கல்ய விவர்த்தினி
    பாக்யம் தேஹி ச்ரியம் தேஹி, ஸர்வகா
    மாம்ச்ச தேஹிமே
    வரலக்ஷ்மி நமஸ்தேஸ்து விஷ்ணு
    வக்ஷஸ்தலஸ்த்திதே
    வரம் தேஹி ச்ரியம் தேஹி ஸர்வகாமாம்ச்
    சதேஹிமே