Blog

  • Navarathirikku Purappata Silaigal

    திருவனந்தபுரத்தில் நடக்க இருக்கும் நவராத்திரி திருவிழாவுக்காக குமரி மாவட்டத்தில் பத்மநாப அரண்மனையில் இருந்து சாமி விக்ரகங்கள் பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டது.

    கேரளா தொல்லியியல் துறை அமைச்சர்  கடனப்பள்ளி ராமசந்திரன், தேவசம்போர்டு மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரன், கேரளா தொல்லியியல் துறை இயக்குனர் சோனா, கோவளம் எம்எல்ஏ வின்சென்ட், தேவசம் போர்டு தலைவர் பத்மகுமார், திருவனந்தபுரம் எஸ்பி அசோகன், பத்மனாபபுரம் சப்-கலெக்டர் சரண்யா அரி, குமரி எஸ்பி ஸ்ரீநாத் உட்பட பொதுமக்கள் என ஆயிரகணக்கானோர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக முக்கிய நிகழ்வாக தினம்தோறும் பூஜைகள் நடந்தப்படும் மன்னர் உடைவாழ் மாற்றும் நிகழ்ச்சி நடந்தது. இதில் பூஜையில் இருந்த வாளை கேரளா தொல்லியியல் துறை இயக்குனர் சோனா குமரி மாவட்ட அறநிலையத்துறை இணை ஆணையர் அன்புமணியிடம் ஒப்படைத்தார். 

    இதை தொடர்ந்து பூஜைகள் நடத்தப்பட்டு சாமி விக்ரகங்கள் பல்லாக்கில் ஊர்வலமாக திருவனந்தபுரம் நோக்கி சென்றது. அப்போது வழி நெடுகிலும் பொது மக்கள் மலர் தூவி ஆரத்தி எடுத்து வரவேற்பு கொடுத்தனர்.

    சாமி விக்ரகங்கள் ஊர்வலத்தில் கேரளா மற்றும் குமரி போலீசார் 500- க்கும் மேற்பட்டோர் இணைந்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த சாமி விக்ரகங்கள் 28-ம் தேதி திருவனந்தபுரம் சென்றடைகிறது. இதில் சரஸ்வதி தேவி திருவனந்தபுரம் கோட்டைக்கம், நவராத்திரி மண்டபத்திலும், வேளிமலை முருகன் ஆரியசாலை கோவிலிலும், சுசிந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் செந்திட்டை பகவதி கோவிலிலும் பூஜையில் வைக்கப்படுகிறது.

    பின்னர் சாமி விக்ரகங்கள் நவராத்திரி பூஜையில் 10 நாட்கள் பங்கேற்று பூஜைகள் முடிந்த பிறகு ஒரு நாள் நல்லிருப்பை அடுத்து 10-ம் தேதி புறப்பட்டு 12-ம் தேதி பத்மனாபபுரம் வந்தடைகிறது.
     

  • Kalahasti Koil Hundiyal kanikai Video

    ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் கோயில் 25 நாட்களில் 92 லட்சத்து 58 ஆயிரம் பக்தர்கள் உண்டியலில் காணிக்கை செலுத்தியுள்ளனர். 

    ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் ஸ்ரீ காளஹஸ்தியில் உள்ள வாயு லிங்கமான ஞான பிரசுன்னாம்பிகை ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் கோவில் ஆகஸ்ட் மாதம் 3 தேதி முதல் நேற்று 25ஆம் தேதி வரை சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கை எண்ணப்பட்டது. 

    இந்த உண்டியல் காணிக்கை மூலமாக 92 லட்சத்து 58 ஆயிரத்து 75 ரூபாய் பக்தர்கள் உண்டியலில் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். இதுதவிர 98 கிராம் தங்கம்,  383 கிலோ 400 கிராம் வெள்ளி பக்தர்கள் செலுத்தியுள்ளனர். 

    மேலும் அமெரிக்க  17,  மலேசியா  44 , யுஏஇ 10,  சிங்கப்பூர் 2,  மற்ற நாடுகள் 8 என மொத்தம் 81 வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் என பக்தர்கள் 25 நாட்களில் சுவாமி தரிசனம் செய்து காணிக்கையாக உண்டியலில் செலுத்தி இருந்ததாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

  • September 26 Pradhosham

    செப்டம்பர் 26 பிரதோஷம்
    விகாரி வருடம் – புரட்டாசி 9
     பிரதோஷம்
    26-செப்-2019 வியாழன்  
    நல்ல நேரம்    :    10.30 – 12.00    
    ராகு    :    1.30 – 3.00    
    குளிகை    :    9.00 – 10.30
    எமகண்டம்    :    6.00 – 7.30                          
    திதி    :    திரையோதசி          
    திதி நேரம்    :    துவாதசி    கா    7.50
    நட்சத்திரம்    :    மகம்    இ    2.41
    யோகம்    :    அமிர்த-சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    அவிட்டம்
    சூலம்    :    தெற்கு
    பரிகாரம்    :    தைலம்

  • September 26 Rasi Palan

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – ஆதாயம் 
    ரிஷபம் – சுகம் 
    மிதுனம் – நோய்
    கடனம் – கவலை
    சிம்மம் – தாமதம்  
    கன்னி –  லாபம்  
    துலாம் –  அச்சம்  
    விருச்சிகம் – பகை 
    தனுசு –     வரவு 
    மகரம் –   பயம் 
    கும்பம் – நன்மை 
    மீனம் – செலவு
    சந்திராஷ்டமம்    – அவிட்டம்
     

  • This week Suba Hora

    இங்கு கொடுக்கப்பட்டுள்ள சுபஹோரை.. நல்ல நேரம் சென்னையில் வசிக்கும் அன்பர்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும்.சரியான ராகு காலம் ,எமகண்டம் (பகல் காலத்தில், இரவு காலத்தில் )போன்ற நேரங்கள் சென்னைக்கு கணித்துக் கொடுக்கப்பட்டுள்ளது.

    ஞாயிற்றுக்கிழமை உள்ள சுப ஓரையில் மருந்து உண்ண , பெரியோரை பேட்டி காண ,பிரயாணம் செய்ய ஆகிய சுப செயல்களுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் . திங்கட்கிழமை அன்று உள்ள சுப ஹோரையில் புது நகை வாங்கவும் புதிய ஆடை உடுத்தவும், புதிய கடை திறக்கவும் பயன்படுத்திக்கொள்ளலாம் .

    செவ்வாய்க்கிழமை அன்று உள்ள சுப ஓரையில் ஆப்பரேஷன் சிகிச்சை செய்ய ,ஆயுதம் செய்ய ,இயந்திரம் தயாரிக்க பயன்படுத்திக் கொள்ளலாம்.

     புதன் கிழமையில் வரும் சுப ஓரையில் கலை பயில, கணித ஆரம்பம் செய்ய ,பொன் உருக்க ,,வித்தியாரம்பம் செய்ய, நாம் பயன்படுத்திக் கொள்ளலாம்.

     வியாழக்கிழமை வரும் சுப ஓரையில் பெரியோரை காண்பதற்கும், வாங்கிய கடன் தீர்ப்பதற்கும் ,புதிய வஸ்திரம் வாங்குவதற்கும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

     வெள்ளிக்கிழமையில் வரும்    சுப ஓரையில் புதிய தொழில் செய்வதற்கும், சுபமான செயல்களை பேசுவதற்கும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

     சனிக்கிழமை வரும்  சுப ஓரையில்ஆயுதம் பழகுவதற்கும், யாத்திரை செல்வதற்கும் பயன்படுத்திக் கொள்ளலாம்.


    தொகுத்தவர் :  ஜோதிடர் பிரேம்குமார் . M.G.online astrologer. 

    போன் 8754 76 3832

  • Kuzhandai varam kidaikka

    ஒருவர் எத்தனைதான் விதவிதமான செல்வங்களைப் பெற்றிருந்தாலும், குழந்தைச் செல்வம் இல்லையென்றால் பிறவிப் பயன் கிட்டுவதில்லை. மாட மாளிகையில் வசித்தாலும் அந்த வீட்டில் மழலை குரல் கேட்பதே பெரிய செல்வமாக இருக்கும். ஆனால் அந்த குழந்தைச் செல்வம் கிட்டாமல் வேதனைப்படுபவர்கள் எத்தனை ஆயிரம் பேர்.

    திருமணமான ஒவ்வொரு தம்பதியும் திருமணம் ஆன நாளில் இருந்து தங்களுக்கு ஒரு வாரிசை எதிர்பார்த்துக் கனவு காண்பது இயற்கையே! அந்தக் கனவு நனவாகி பிள்ளைக் கனியமுது பிறக்கும்போது தாய், தந்தையர் அடையும் மகிழ்ச்சி இமயத்தின் உச்சியை அடைந்ததற்கு சமம் போல் தோன்றும்.

    வேத சாஸ்திரங்களும்,  புத்திர பாக்கியத்தின் பெருமையை எடுத்துச் சொல்கின்றன. மனிதன் தன்னுடைய கர்மவினைகளின் காரணமாகவே பிறக்கிறான். கர்மா தீர ஒரு பிள்ளை வேண்டும் என்று திருமணம் செய்துகொள்கிறான். சாஸ்திரங்களில், ‘பும் நாம நரகாது த்ராயதே இதி புத்ர:’ தன் தகப்பனின் ஆத்மாவை புத் என்ற நரகத்தில் இருந்து காப்பாற்றுகிறான் என்பதால், புத்திரன் என்று கூறுகிறார்கள். 

    ஜாதகத்தில் புத்திரபாவம் என்பது புத்திரன் – ஆண்பிள்ளை என்று குறிப்பிட்டாலும், பிருஹத் ஜாதகம் போன்ற நூல்களில் ஆண், பெண் இரண்டும் வேண்டும் என்கிறது. ஒரு ஜாதகத்தில் 5-ம் பாவமானது பூர்வ புண்ணியம் மற்றும் பிள்ளைச் செல்வம் போன்றவற்றைக் காட்டும் பாவமாகிறது. பூர்வ புண்ணியத்தையும் புத்திரபாக்கியத்தையும் ஒரே இடத்தில் வைத்த மகரிஷிகளின் மகிமை உயர்ந்தது. இத்தகைய சிறப்பு மிகுந்த மழலைச்செல்வம் இல்லாமல் வேதனையடைபவர்கள் குறைகள் முழுமையாக தீர்க்க சித்தர்கள் அருளாசியை பெற்று பலவித யாகங்கள் செய்துள்ளவர்தான் வாசியோகி ஓம் பரமானந்த பாபா.

    இதில் மிக முக்கியமானது சந்தான கோபால ஹோமம். அதாவது கிருஷ்ண பகவானின் குழந்தை வடிவமான சந்தான கோபாலனை திருப்திபடுத்தும் வகையில் நடத்தப்படுகிறது. இந்த ஹோமமானது குழந்தை செல்வத்தை வழங்கி உங்களை ஆசீர்வதிப்பதற்கும், எதிர்பாராத கருச்சிதைவுகளுக்கு ஆளாகதவாறு தாய்மார்களைப் பாதுகாப்பதற்கும், குழந்தையைப் பாதுகாப்பான முறையில் பெற்றெடுப்பதற்கும் நன்மை அளிக்கும் மாபெரும் ஹோமம் ஆகும்.

    இந்த ஹோமத்தை  கோயம்புத்தூரில் C21 / புது எண் 42, 43 சர்க்கரை செட்டியார் நகர், இஎஸ்ஐ (எதிரில்), உப்பிலிபாளையம் (போ) உள்ளது ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி சித்தர் பீடத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் மத்தியில் பிரமாண்டமாக நடத்தி குழந்தையின்மையால் வேதனைப்பட்டு வந்தவர்களின் குறைகள் தீர்க்க உதவியுள்ளார். இந்த ஹோம வழிபாட்டில், ரட்சை என்று அழைக்கப்படும் ஹோம பஸ்மம் மற்றும் குங்குமம் பிரசாதமாக வழங்கப்படும். இதனை பூஜை அறையில் வைத்து தினமும் உங்கள் நெற்றியில் பூசி இறைவனின் அருளைப் பெறலாம். குழந்தை பாக்கியம் வேண்டுபவர்களுக்காக இந்த யாகம் நடத்தப்படுகிறது.

    அதேபோல் தன்னலம் கருதாது பலரது பசியை போக்கும் வகையில் தினமும் இங்கு அன்னதானம் நடக்கிறது. கோடி புண்ணியம் செய்த பலன் அன்னதானத்திற்கு உண்டு என்பதால் அதை தினமும் செய்து வருகிறார் வாசியோகி பரமானந்த பாபா. திருமணத் தடை, வேலை வாய்ப்பில் தடை, தொழில் முன்னேற்றம் இல்லாத நிலை, பொருளாதாரம் முன்னேற்றம் இல்லாத நிலை, குழந்தையின்மை பிரச்னை, குடும்பத்தில் ஏற்படும் அனைத்து பிரச்னைகளும் நீங்கி வாழ்வில் உயர்வு கிடைக்கிறது.

    யாகங்களின் பலன்கள் முழுமையாக மக்களுக்கு கிடைக்கிறது. அனைத்து செல்வங்களும் கிடைக்கிறது. இங்கு மக்கள் நலன் வேண்டியும், சித்தர்கள் அருள் பரிபூரணமாக மக்களுக்கு கிடைக்க வேண்டியும் பிரதி அமாவாசை மேரு பூஜை, பௌர்ணமி அன்று ராஜராஜேஸ்வரி பூஜை நடக்கிறது. மேலும் ஆண்கள், பெண்களுக்கு வாசி யோக பயிற்சிகள், ஆழ்நிலை தியானங்கள் கற்றுத்தரப்படுகிறது. ஓம் பரமானந்த பாபாஜி சுவாமிகள். சித்தர்கள் வாக்கின் பிரகாரம் பரிகாரங்கள் செய்து வைக்கிறார். 

    சுவாமிகளை சந்திக்க விரும்புபவர்கள் முன்பதிவு செய்து கொள்ள வேண்டியது மிக அவசியம். மேலும் அன்னதானத்திற்கு உதவ நினைப்பவர்களும் தொடர்பு கொள்ளலாம்.

    தொடர்புக்கு: 63747 72550, 74490 12379.

  • Danvanthri Peedam Yagam

    வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளுடன் உலக மக்கள் நலன் கருதி அமாவாசையை முன்னிட்டு வருகிற 28.09.2019 சனிக்கிழமை காலை 10.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை நிகும்பலா யாகத்துடன் சொர்ண கால பைரவர் யாகம் நடைபெற உள்ளது.

    அமாவாசையில் நிகும்பலா யாகம் என்பது பிரத்யங்கிரா தேவிக்கு செய்யப்படும் யாகம் ஆகும். இந்த யாகத்தில் மிளகாய் ஆகுதியாக கொடுக்கப்படுகிறது. யாகத்தீயில் இடப்படும் மிளாகாய் காட்டம் ஏற்படுத்துவதில்லை என்பது தனி சிறப்பு.

    இந்த யாகத்தில் கலந்து கொண்டால், இழந்த பதவி மீண்டும் கிடைக்கும், எதிரிகள் தொல்லை நீங்கும், உத்தியோக உயர்வு கிடைக்கும், புதிய வேலை வாய்ப்பு உண்டாகும், திருமணம், வியாபாரம் நடக்கும் என்பது நம்பிக்கையாகும்.

    ஹோமத் தீயினால் உருவாகும் புகையானது மனித உடலின் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. உலக நலன் கருதி ஒவ்வொரு அமாவாசையிலும் சூலினி ப்ரத்யங்கிராதேவியை வணங்கும் வகையில் 'நிகும்பலா யாகம்' என்று சொல்லப்படும் மிளகாய் வற்றல் யாகம் ஸ்ரீதன்வந்திரி பீடத்தில் நடைபெறுகிறது.

    மேலும் இதில் சென்னை திருவான்மியூர் குழுவினர் வழங்கும் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம், ஸ்ரீ தேவி மஹாத்மியம், ஸ்ரீ நாராயணீயம் பாராயணங்கள் நடைபெற உள்ளது. பக்தர்கள் அனைவரும் இதில் பங்கேற்று இறையருளுடன் குருவருள் பெற அன்புடன் அழைக்கின்றோம்.

    இந்த யாகத்திற்கு  புஷ்பங்கள், பழங்கள், மிளகாய் வற்றல், புசணிக்காய், குங்குமம், மஞ்சள், எளுமிச்சம் பழம், உப்பு, மிளகு, மூலிகை திரவியங்கள், பூஜை பொருட்கள், மளிகை பொருட்கள், அன்னதான பொருட்கள், பூர்ணாஹூதி வஸ்திரங்கள், சிவாச்சரியர் வஸ்திரங்கள், நெய், தேன் போன்ற பல்வேறு பொருட்கள் வழங்கி குடும்பத்தினருடன் கலந்து கொண்டு இறைபணியில் ஈடுபட அன்புடன் அழைக்கின்றோம். இந்த தகவலை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

  • Temple to go before Exam

    ப்ளஸ் டூ தேர்வு நெருங்குகிறது. அதற்கு முன்பாக பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு. மாணவ, மாணவிகள் படித்துக்கொண்டிருக்கிறார்கள் என்றால், பெற்றோரின் மனம் வேண்டுவது தங்கள் குழந்தைகள் நல்ல மதிப்பெண் எடுக்க வேண்டும் என்பதுதான்.

    மனதில் வேண்டுவதோடு நின்றுவிடாமல் அவர்கள் தேர்வுக்கு முன்பாக தரிசிக்க விரும்புவது ஹயக்ரீவரைத்தான்.

    கல்விக்கு கடவுளாம் சரஸ்வதி தேவி குருவாக வழிபடுவது ஹயக்ரீவரைத்தான் எனும்போது, கல்வியும், ஞானமும் அறிவும், ஆற்றலும் சித்திக்க அவரை சாமான்யர்களான நாமும் வழிபடுவதுதானே சிறந்தது.

    சென்னைக்கு பக்கத்தில் எங்கே ஹயக்ரீவர் ஆலயம் இருக்கிறதென்று தேடுகிறீர்களா? சென்னைக்கு மிக அருகில் என்று விளம்பரங்களில் கேட்டிருப்பீர்கள்.. அப்படி மிக அருகில் மகேந்திரா சிட்டி அருகே குடி கொண்டிருக்கிறார் ஹயக்ரீவர்.

    மிகச்சரியாக மகேந்திர சிட்டிக்கு எதிரே இருக்கும் சாலையில் சென்றால் 3 கிலோமீட்டர் தூரம் வரை மட்டுமே நகரத்திற்கான சாயல் இருக்கும். அதன் பின்னர் சிறு குன்றுகளும், வயலும், குளமுமான பாதை. கொஞ்சம் தொலைவு பயணப்பட்டதும் செட்டிப்புண்ணியம் ஸ்ரீயோக ஹயக்ரீவர் ஆலயம் வந்துவிடும்.

    வழக்கமாக கோயில்களுக்கு முன்பாக தேங்காய், பூ, பழங்கள் அதிகம் விற்கப்படும். இங்கோஅந்த கடைகளை விட அத்தனை விதமான நோட்டுப்புத்தகங்களும், பேனாக்களுமாக விற்கும் சிறு கடைகளை அதிகம் பார்க்கலாம். அப்படியே ஒரு நோட்டு பேனா, கொஞ்சம் துளசியை வாங்கிக்கொண்டு உள்ளே போனால் ஹயக்ரீவரை தரிசித்துவிடலாம்.

    யோக நிலையில் அமர்ந்த கோலத்துடன் நான்கு கரங்களுடன் சங்கு சக்கர தாரியாக இருக்கும் இறைவனின் முகத்தில் அத்தனை கரிசனமும் அன்பும் தென்படுவது, தவிப்போடு கோயிலுக்குள் காலடி எடுத்து வைப்பவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம்.

    அவர் முன்பாக நோட்டு பேனாவையோ, புதிய வகுப்பு பாடப் புத்தகங்களையோ தேர்வு நேரத்தில் ஹால் டிக்கெட்டுகளோ வைத்து வணங்கி பெற்றோரும் பிள்ளைகளும் ஆசி பெற்று செல்வார்கள். வகுப்பின் தொடக்கத்தில் செட்டிப்புண்ணியம் கோயிலுக்கு செல்வது பலருக்கும் அந்தக் கடவுளே தங்கள் பிள்ளைகளுக்கு துணையாக இருப்பது போன்ற தைரியத்தை தந்துவிடும்.

    பொதுத்தேர்வு நெருக்கத்தில் கோயிலுக்கு செல்பவர்கள் அங்கு திரண்டுள்ள கூட்டத்தை பார்த்தாலே மிரண்டு போய்விடுவார்கள். சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு வரிசை நிற்கும்.

    ஹயக்ரீவர் கல்விக் கடவுளாம் சரஸ்வதிக்கே மகா குருவானவர். அரக்கர்களால் ஒளித்து வைக்கப்பட்ட வேதங்களை மீட்டுக் கொடுத்தவர். மங்கிய அறிவையும், ஞானத்தையும் அவரே மீட்டுத் தருவார் என்று நம்பி இங்கு வந்து யோக ஹயக்ரீவரை தரிசித்து செல்கிறார்கள்.

    ஆமாம் இங்கு ஹயக்ரீவர் எப்போது வந்தார்?

    1848ஆம் ஆண்டு ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் கோயில் சிலைகள் கொள்ளை போவதை தடுக்க பல பிரயத்தனங்களை எடுக்க வேண்டி இருந்தது. அப்படி கடலூர் மாவட்டம் திருவந்திபுரத்தில் இருந்து தேவநாதபெருமாளும், யோக ஹயக்ரீவரும், அப்போது அடர்ந்த காடாக இருந்த செட்டிபுண்ணியம் கிராமத்திற்கு கொண்டு வரப்பட்டனர். அப்போதிருந்து இங்கேயே பிரத்யட்சமாக காட்சி அளித்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    மூலவராக வரதராஜ பெருமாளும் ஹேமாப்ஜவல்லி தாயாரும் சேவை சாதிக்க, உற்சவராக தேவநாத சுவாமி அருள்பாலிக்கிறார். கோயிலுக்கு உள்ளே நுழைந்ததும் வலப்பக்கத்தில் ராமர் சன்னதி தென்படும். நேராக சென்றால், கருடாழ்வாரின் பார்வையில் நேர் எதிரே கருவறையில் மூலவரும், தாயாரும் உற்சவரும் காட்சியளிக்க, அவர்களை தரிசித்து திரும்பினால், ஆண்டாள் தனி சன்னதியில் காட்சியளிப்பார். அவரை வணங்கி கடந்தால், ராமானுஜர், விஷ்வக்சேனர் தரிசனம். பின்னர் வெளியே வந்தால், அழகிய நந்தவனத்துடன் காட்சியளிக்கும் கோயிலை வலம் வரலாம். கோயிலில் தென்படும் அழிஞ்சல்மரத்தில் படிக்கவும், திருமண தடைகள் நீங்கவும், வீடு கட்டவுமாக வேண்டுதல் வைத்து ஆடையின் ஈரிழைகளை கட்டி வைத்திருப்பதை காணலாம்.

    இந்த ஆலயத்தில் நோட்டு புத்தகம் வைத்து அர்ச்சனை செய்து வாங்கிச்செல்லும் பக்தர்கள்,, ஆர்வமிகுதியில் தங்கள் தேர்வு எண் பள்ளி பெயர், என சுவர்களில் கிறுக்கி தள்ளியிருப்பதுதான் பார்க்க சங்கடம் தருகிறது. கோயிலை பாழ்படுத்தாமல் நம் நம்பிக்கையை இறைவன் மீது மனமார வைக்கலாமே. இந்த எண்களை எழுதி வைத்தால்தான் அவருக்கு தெரியுமா? இறைக்கு தெரியாத பக்தனா என்ன?

    1869ஆம் ஆண்டு தஞ்சையில் இருந்து கொண்டுவரப்பட்ட ராமபிரானும் சீதா, லட்சுமண சமேதராக இங்கு தனி சன்னதியில் எழுந்தருளியுள்ளார்.

    ஹயக்ரீவருக்கு பிடித்தமான ஏலக்காய் மாலையை அணிவித்து வழிபடுவதும், அவருக்கு உகந்த புதன்கிழமை வணங்குவதுமாக அவரது அருளை பெறலாம்.

    யோக ஹயக்ரீவரை வழிபட்டால், கல்வியும் ஞானமும் சித்திக்கும். கல்வித்தடைகள் அகலும், பேச்சில் சிரமம் உள்ளவர்கள் தேன்நிவேதனம் செய்து சாப்பிட்டுவர பேச்சுப் பிரச்னைகள் அகலும் என்பது நம்பிக்கை

    “ஞானானந்த மயம் தேவம் நிர்மல
    ஸ்படிகாக்ருதிம் ஆதாரம் ஸர்வ
    வித்யானாம் ஹயக்ரீவம் உபாஸ்மஹே”

     –       எழுத்தாளர் பாமா
     

  • Kongana Siddhar

    – 'மாரி மைந்தன்' சிவராமன்

    சித்தர்களில் சிறந்தவர் கொங்கணர்.

    அகத்தியர்

    திருமூலர்

    போகர்

    கௌதம மகரிஷி

    திருமழிசை ஆழ்வார்

    திருமாளிகைத்தேவர்

    என மூத்த சித்தர்களின் குருவருள் பெற்றவர்.

      ஈடுஇணையற்ற திருமாளிகைத் தேவரிடம்

     தீட்சை பெற்று நிறைவடைந்தவர்.

     கொங்கணருக்கு அப்பெயர் வந்த வரலாறு சுவாரசியமானது. தெய்வீகமானது.

     அடிப்படையில் அம்மன் பக்தர். அம்மன் வழிபாடே அவருக்கு அனைத்துமாய் திகழ்ந்தது.

    பொதுவாக 'சக்தியே'  தாயே அன்னையே என சித்தர் பாடல்களில் அம்மன் வழிபாடு அதிகமாக இருக்கும்.

     கொங்கணர்

    மாரி அம்மனின் பக்தர்.

    மாரி மைந்தன்.

     இரும்பை உருக்கி கலங்கள் தயாரித்து

    சிவன் கோயிலில் விற்பது கொங்கணரின்

    பெற்றோர் மேற்கொண்டிருந்த குலத்தொழில்.

     அழகிய சிறுவனாய் கொங்கணர்

    சிரித்து மகிழ்ந்து விளையாடிய போதும்

    அவர் சிந்தையில் எப்போதும் அம்பிகை இருந்தாள்.

     இளைஞராய்

    வாலிபராய்

    வலம் வந்த போதும் அம்மனே அவர்

    கனவிலும் நினைவிலும் அன்னையாய் கலந்திருந்தாள்.

     முக்தி என்பாளுடன் திருமணம் நடந்தது.

    மனைவியுடன் மகிழ்ந்து இருந்தபோதும் கூட

    மாரி அம்மனே மனதில் நிறைந்து இருந்தாள்.

     இந்நிலையில்

    அடிக்கடி அவர் பாதை வேறு என

    ஓர் எண்ணம் எழுந்து உள்ளத்தை உசுப்பியது.

     வாய்த்த மனைவி பேராசைக்காரி.

    பணம் பணம் என்பதே அவளது நிரந்தர பல்லவி.

     செல்வமே சக்தி என்பது மனையாள் முக்தியின் வேதம்.

    சம்பாதிப்பவரே சிறந்த மனிதன் மற்றவரெல்லாம்

    பேடி என பரிகசிப்பாள் அவள்.

     கொங்கணர் அவள் நச்சரிப்பால் தொழிலில் கவனம் அதிகம் கொண்டார்.

    நல்ல வருமானம் நாளும் பெருகியது.

     ஆனால் அவர் மனதின் ஓரத்தில் ஏதோ உறுத்தியது.

    அவர் மனம் ஆன்மீகம் தேடியது.

     மனைவி பெயரில் தான் முக்தி.

    கொங்கணர் நாடிய முக்தியை சக்தியை அவள் தரவில்லை.

    விரக்தியே மிச்சமாய் விஞ்சி நின்றது.

     வேதியரை ஞானியரை சாதுக்களைக் கண்டால் போதும்

    ஓடி ஓடி அவரடி தொழுவது கொங்கணரின் வழக்கம்.

     அவர்களுக்குப் பசும்பால் தந்து உபசரிப்பார்.

    வந்தவர் பதிலுக்கு ஞானப்பாலை அவருக்கு அளிப்பர்.

    இருப்பினும்

    'இன்னும் சம்பாதிக்க வேண்டும் சொத்து சுகம் பெருக்க வேண்டும்' என்ற தலையணை மந்திரம் பெரிதாய் கொங்கணரிடம் வேலை செய்தது.

     நிறைய சக்திகள் பெற வேண்டும்.

    உயர் சித்திகள் கற்று உயர்நிலை அடைய வேண்டும் .

     இரும்பை தங்கமாக்கி

    புகழ் பொருள்

    பெற வேண்டும்.

     இம்சை அரசி

    இல்லாளிடம்

    நற்பெயர் பெற வேண்டும்.'

     அதற்கு தவசி, முனிவர், யோகி சித்தர் என யாரிடமாவது கற்றுணர வேண்டும்.'

    என்றெல்லாம் அடிக்கடி அசை போட்டார்.

    ஆசை அதற்கோர் நாள் பார்த்தது.

     எளிமைக்கு இலக்கணமாய் சித்தர்கள் திகழ்வர்.

    இதற்கு முற்றிலும் மாறுபட்டவராய் கொங்கணர் இருந்தார்.

     ஆசை, செல்வம், பயம், படோபடம், கோபம், அலட்சியம், வேகம், மனைவி சொல்லே வேதம் என பலப்பல பன்முக குணாதிசயங்கள் அவரிடம் அதிகம் இருந்தன.

    அத்தனைக்கும் பின்னால் அவரை மணந்தவள் இருந்தாள்.

     மணவாட்டி ஆட்டியபடி வாழ்க்கை மணி ஆடியது.

    சத்தமும் எழுந்தது. ஆனால் அது புறத்தில்.

     அகத்தே அவர் நிலை தேடல்களால் நிரம்பி இருந்தது.

     இரண்டு நிலைகளால் இருண்ட குழப்பமே

    நிதமும் தொடர்ந்தது.

     காடு, மலை, குகை சென்று தேடினால் குருவைக் காணலாம்.

    அவர் சொல்வழி நடந்தால் அம்பிகையை அடையலாம்,'

    என மனக்குரல் தினம்தினம் சொல்லச் சொல்ல,

    அவர் யாரிடமும் சொல்லாமல் – குறிப்பாய்

    வாய்த்த குணவதியிடம் சொல்லாமல்

    கானகம் செல்ல விருப்பப்பட்டார்.

    அதற்கென திட்டமிட்டார்.

     அதுசமயம் – 

    ஒரு சித்தர் திருவாடுதுறை வந்திருப்பதாக காற்று வாக்கில் சேதி வந்தது.

     காற்றை விட வேகமாக ஆடுதுறைக்கு புயல்போல் ஓடினார்.

    அவரைத் தேடி அலைந்தார். திரிந்தார்.

     ஒருநாள் அவருக்கு திருநாளாய் அமைந்தது.

     அடர்ந்த மரத்தடியில்

    ஓர் ஒளி சிந்தும் சித்தரைத் தரிசித்தார்.

    அவர் போகர்.

    ஆச்சரியத்தோடு, "அடைக்கலம்", என்றபடி அவர் பாதங்களைப் பற்றி  கண்களால் ஒற்றினார். நெற்றியால் வருடினார்.

    ஸ்பரிசம் பட்டதும் தவத்தில் இருந்த போகர் சட்டென விழித்தெழுந்தார்.

     பார்த்த மாத்திரத்தில் அவரைப் பிடித்துப் போயிற்று போகருக்கு.

     அவர் சிங்கமென சிலிர்த்து  தங்கமென ஒளிரப்போவது

    அப்போதே போகருக்குத் தெரிந்து போயிற்று.

    "யாரப்பா நீ…?"

    "அடியேன்

    அம்பாள் பக்தன்.

    அவளடி வாழ்பவன். அவளை அடைய வழி தேடி வந்தேன்.

    நீங்கள் வழிகாட்ட வேண்டும்.

    அடியேனுக்கு அனைத்தையும் போதிக்க வேண்டும்."

    ஒரே மூச்சில் சொல்லி முடித்தார் .

    "உன் பெயர் ?"

    பதில் இல்லை.

    "எங்கிருந்து வருகிறாய் ?"

    " கொங்கண தேசத்தில் இருந்து"

    தன் முன்கதைச் சுருக்கம் தந்தார்.

      "ஓ… கொங்கண நாட்டுக்காரனா….?

    …. உன்னை

     'கொங்கணர்'

    என்றே இனி அழைக்கிறேன்.

    நீ நீடு புகழ் பெறுவாய். உலகம் உனைத் தொழும்

     கொங்கணா… உன் விருப்பம் நிறைவேறும்"

     அந்த திருநாமமே நிலைத்துப் போனது.

     போகர் சூட்டிய பெயர்

    கார் உள்ளளவும்,

    கடல் உள்ளளவும் நிலைத்து நிற்கும் அன்றோ?

    நின்றது.

    நிற்கிறது.

     கொங்கண சித்தர்

    கொங்கண முனிவர்

    கொங்கண நாதர்

    கொங்கண நாயகர்

    என அப்பெயரே விரிந்தும் சிறந்தும் ஒளிர்ந்தும் வியாபித்துள்ளது.
     

  • September 25 Rasi Palan

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – நன்மை 
    ரிஷபம் – பயம் 
    மிதுனம் – துன்பம்  
    கடனம் – ஆதரவு
    சிம்மம் – மகிழ்ச்சி 
    கன்னி –  தோல்வி 
    துலாம் –  லாபம் 
    விருச்சிகம் – செலவு
    தனுசு –     சுகம் 
    மகரம் –   கவலை
    கும்பம் – வெற்றி
    மீனம் – சிக்கல்
    சந்திராஷ்டமம்    – திருவோணம்