Blog

  • Danvanthri Peedam Yagam

    வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளுடன் உலக மக்கள் நலன் கருதி அமாவாசையை முன்னிட்டு வருகிற 28.09.2019 சனிக்கிழமை காலை 10.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை நிகும்பலா யாகத்துடன் சொர்ண கால பைரவர் யாகம் நடைபெற உள்ளது.

    அமாவாசையில் நிகும்பலா யாகம் என்பது பிரத்யங்கிரா தேவிக்கு செய்யப்படும் யாகம் ஆகும். இந்த யாகத்தில் மிளகாய் ஆகுதியாக கொடுக்கப்படுகிறது. யாகத்தீயில் இடப்படும் மிளாகாய் காட்டம் ஏற்படுத்துவதில்லை என்பது தனி சிறப்பு.

    இந்த யாகத்தில் கலந்து கொண்டால், இழந்த பதவி மீண்டும் கிடைக்கும், எதிரிகள் தொல்லை நீங்கும், உத்தியோக உயர்வு கிடைக்கும், புதிய வேலை வாய்ப்பு உண்டாகும், திருமணம், வியாபாரம் நடக்கும் என்பது நம்பிக்கையாகும்.

    ஹோமத் தீயினால் உருவாகும் புகையானது மனித உடலின் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. உலக நலன் கருதி ஒவ்வொரு அமாவாசையிலும் சூலினி ப்ரத்யங்கிராதேவியை வணங்கும் வகையில் 'நிகும்பலா யாகம்' என்று சொல்லப்படும் மிளகாய் வற்றல் யாகம் ஸ்ரீதன்வந்திரி பீடத்தில் நடைபெறுகிறது.

    மேலும் இதில் சென்னை திருவான்மியூர் குழுவினர் வழங்கும் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம், ஸ்ரீ தேவி மஹாத்மியம், ஸ்ரீ நாராயணீயம் பாராயணங்கள் நடைபெற உள்ளது. பக்தர்கள் அனைவரும் இதில் பங்கேற்று இறையருளுடன் குருவருள் பெற அன்புடன் அழைக்கின்றோம்.

    இந்த யாகத்திற்கு  புஷ்பங்கள், பழங்கள், மிளகாய் வற்றல், புசணிக்காய், குங்குமம், மஞ்சள், எளுமிச்சம் பழம், உப்பு, மிளகு, மூலிகை திரவியங்கள், பூஜை பொருட்கள், மளிகை பொருட்கள், அன்னதான பொருட்கள், பூர்ணாஹூதி வஸ்திரங்கள், சிவாச்சரியர் வஸ்திரங்கள், நெய், தேன் போன்ற பல்வேறு பொருட்கள் வழங்கி குடும்பத்தினருடன் கலந்து கொண்டு இறைபணியில் ஈடுபட அன்புடன் அழைக்கின்றோம். இந்த தகவலை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

  • Temple to go before Exam

    ப்ளஸ் டூ தேர்வு நெருங்குகிறது. அதற்கு முன்பாக பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு. மாணவ, மாணவிகள் படித்துக்கொண்டிருக்கிறார்கள் என்றால், பெற்றோரின் மனம் வேண்டுவது தங்கள் குழந்தைகள் நல்ல மதிப்பெண் எடுக்க வேண்டும் என்பதுதான்.

    மனதில் வேண்டுவதோடு நின்றுவிடாமல் அவர்கள் தேர்வுக்கு முன்பாக தரிசிக்க விரும்புவது ஹயக்ரீவரைத்தான்.

    கல்விக்கு கடவுளாம் சரஸ்வதி தேவி குருவாக வழிபடுவது ஹயக்ரீவரைத்தான் எனும்போது, கல்வியும், ஞானமும் அறிவும், ஆற்றலும் சித்திக்க அவரை சாமான்யர்களான நாமும் வழிபடுவதுதானே சிறந்தது.

    சென்னைக்கு பக்கத்தில் எங்கே ஹயக்ரீவர் ஆலயம் இருக்கிறதென்று தேடுகிறீர்களா? சென்னைக்கு மிக அருகில் என்று விளம்பரங்களில் கேட்டிருப்பீர்கள்.. அப்படி மிக அருகில் மகேந்திரா சிட்டி அருகே குடி கொண்டிருக்கிறார் ஹயக்ரீவர்.

    மிகச்சரியாக மகேந்திர சிட்டிக்கு எதிரே இருக்கும் சாலையில் சென்றால் 3 கிலோமீட்டர் தூரம் வரை மட்டுமே நகரத்திற்கான சாயல் இருக்கும். அதன் பின்னர் சிறு குன்றுகளும், வயலும், குளமுமான பாதை. கொஞ்சம் தொலைவு பயணப்பட்டதும் செட்டிப்புண்ணியம் ஸ்ரீயோக ஹயக்ரீவர் ஆலயம் வந்துவிடும்.

    வழக்கமாக கோயில்களுக்கு முன்பாக தேங்காய், பூ, பழங்கள் அதிகம் விற்கப்படும். இங்கோஅந்த கடைகளை விட அத்தனை விதமான நோட்டுப்புத்தகங்களும், பேனாக்களுமாக விற்கும் சிறு கடைகளை அதிகம் பார்க்கலாம். அப்படியே ஒரு நோட்டு பேனா, கொஞ்சம் துளசியை வாங்கிக்கொண்டு உள்ளே போனால் ஹயக்ரீவரை தரிசித்துவிடலாம்.

    யோக நிலையில் அமர்ந்த கோலத்துடன் நான்கு கரங்களுடன் சங்கு சக்கர தாரியாக இருக்கும் இறைவனின் முகத்தில் அத்தனை கரிசனமும் அன்பும் தென்படுவது, தவிப்போடு கோயிலுக்குள் காலடி எடுத்து வைப்பவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம்.

    அவர் முன்பாக நோட்டு பேனாவையோ, புதிய வகுப்பு பாடப் புத்தகங்களையோ தேர்வு நேரத்தில் ஹால் டிக்கெட்டுகளோ வைத்து வணங்கி பெற்றோரும் பிள்ளைகளும் ஆசி பெற்று செல்வார்கள். வகுப்பின் தொடக்கத்தில் செட்டிப்புண்ணியம் கோயிலுக்கு செல்வது பலருக்கும் அந்தக் கடவுளே தங்கள் பிள்ளைகளுக்கு துணையாக இருப்பது போன்ற தைரியத்தை தந்துவிடும்.

    பொதுத்தேர்வு நெருக்கத்தில் கோயிலுக்கு செல்பவர்கள் அங்கு திரண்டுள்ள கூட்டத்தை பார்த்தாலே மிரண்டு போய்விடுவார்கள். சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு வரிசை நிற்கும்.

    ஹயக்ரீவர் கல்விக் கடவுளாம் சரஸ்வதிக்கே மகா குருவானவர். அரக்கர்களால் ஒளித்து வைக்கப்பட்ட வேதங்களை மீட்டுக் கொடுத்தவர். மங்கிய அறிவையும், ஞானத்தையும் அவரே மீட்டுத் தருவார் என்று நம்பி இங்கு வந்து யோக ஹயக்ரீவரை தரிசித்து செல்கிறார்கள்.

    ஆமாம் இங்கு ஹயக்ரீவர் எப்போது வந்தார்?

    1848ஆம் ஆண்டு ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் கோயில் சிலைகள் கொள்ளை போவதை தடுக்க பல பிரயத்தனங்களை எடுக்க வேண்டி இருந்தது. அப்படி கடலூர் மாவட்டம் திருவந்திபுரத்தில் இருந்து தேவநாதபெருமாளும், யோக ஹயக்ரீவரும், அப்போது அடர்ந்த காடாக இருந்த செட்டிபுண்ணியம் கிராமத்திற்கு கொண்டு வரப்பட்டனர். அப்போதிருந்து இங்கேயே பிரத்யட்சமாக காட்சி அளித்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    மூலவராக வரதராஜ பெருமாளும் ஹேமாப்ஜவல்லி தாயாரும் சேவை சாதிக்க, உற்சவராக தேவநாத சுவாமி அருள்பாலிக்கிறார். கோயிலுக்கு உள்ளே நுழைந்ததும் வலப்பக்கத்தில் ராமர் சன்னதி தென்படும். நேராக சென்றால், கருடாழ்வாரின் பார்வையில் நேர் எதிரே கருவறையில் மூலவரும், தாயாரும் உற்சவரும் காட்சியளிக்க, அவர்களை தரிசித்து திரும்பினால், ஆண்டாள் தனி சன்னதியில் காட்சியளிப்பார். அவரை வணங்கி கடந்தால், ராமானுஜர், விஷ்வக்சேனர் தரிசனம். பின்னர் வெளியே வந்தால், அழகிய நந்தவனத்துடன் காட்சியளிக்கும் கோயிலை வலம் வரலாம். கோயிலில் தென்படும் அழிஞ்சல்மரத்தில் படிக்கவும், திருமண தடைகள் நீங்கவும், வீடு கட்டவுமாக வேண்டுதல் வைத்து ஆடையின் ஈரிழைகளை கட்டி வைத்திருப்பதை காணலாம்.

    இந்த ஆலயத்தில் நோட்டு புத்தகம் வைத்து அர்ச்சனை செய்து வாங்கிச்செல்லும் பக்தர்கள்,, ஆர்வமிகுதியில் தங்கள் தேர்வு எண் பள்ளி பெயர், என சுவர்களில் கிறுக்கி தள்ளியிருப்பதுதான் பார்க்க சங்கடம் தருகிறது. கோயிலை பாழ்படுத்தாமல் நம் நம்பிக்கையை இறைவன் மீது மனமார வைக்கலாமே. இந்த எண்களை எழுதி வைத்தால்தான் அவருக்கு தெரியுமா? இறைக்கு தெரியாத பக்தனா என்ன?

    1869ஆம் ஆண்டு தஞ்சையில் இருந்து கொண்டுவரப்பட்ட ராமபிரானும் சீதா, லட்சுமண சமேதராக இங்கு தனி சன்னதியில் எழுந்தருளியுள்ளார்.

    ஹயக்ரீவருக்கு பிடித்தமான ஏலக்காய் மாலையை அணிவித்து வழிபடுவதும், அவருக்கு உகந்த புதன்கிழமை வணங்குவதுமாக அவரது அருளை பெறலாம்.

    யோக ஹயக்ரீவரை வழிபட்டால், கல்வியும் ஞானமும் சித்திக்கும். கல்வித்தடைகள் அகலும், பேச்சில் சிரமம் உள்ளவர்கள் தேன்நிவேதனம் செய்து சாப்பிட்டுவர பேச்சுப் பிரச்னைகள் அகலும் என்பது நம்பிக்கை

    “ஞானானந்த மயம் தேவம் நிர்மல
    ஸ்படிகாக்ருதிம் ஆதாரம் ஸர்வ
    வித்யானாம் ஹயக்ரீவம் உபாஸ்மஹே”

     –       எழுத்தாளர் பாமா
     

  • Kongana Siddhar

    – 'மாரி மைந்தன்' சிவராமன்

    சித்தர்களில் சிறந்தவர் கொங்கணர்.

    அகத்தியர்

    திருமூலர்

    போகர்

    கௌதம மகரிஷி

    திருமழிசை ஆழ்வார்

    திருமாளிகைத்தேவர்

    என மூத்த சித்தர்களின் குருவருள் பெற்றவர்.

      ஈடுஇணையற்ற திருமாளிகைத் தேவரிடம்

     தீட்சை பெற்று நிறைவடைந்தவர்.

     கொங்கணருக்கு அப்பெயர் வந்த வரலாறு சுவாரசியமானது. தெய்வீகமானது.

     அடிப்படையில் அம்மன் பக்தர். அம்மன் வழிபாடே அவருக்கு அனைத்துமாய் திகழ்ந்தது.

    பொதுவாக 'சக்தியே'  தாயே அன்னையே என சித்தர் பாடல்களில் அம்மன் வழிபாடு அதிகமாக இருக்கும்.

     கொங்கணர்

    மாரி அம்மனின் பக்தர்.

    மாரி மைந்தன்.

     இரும்பை உருக்கி கலங்கள் தயாரித்து

    சிவன் கோயிலில் விற்பது கொங்கணரின்

    பெற்றோர் மேற்கொண்டிருந்த குலத்தொழில்.

     அழகிய சிறுவனாய் கொங்கணர்

    சிரித்து மகிழ்ந்து விளையாடிய போதும்

    அவர் சிந்தையில் எப்போதும் அம்பிகை இருந்தாள்.

     இளைஞராய்

    வாலிபராய்

    வலம் வந்த போதும் அம்மனே அவர்

    கனவிலும் நினைவிலும் அன்னையாய் கலந்திருந்தாள்.

     முக்தி என்பாளுடன் திருமணம் நடந்தது.

    மனைவியுடன் மகிழ்ந்து இருந்தபோதும் கூட

    மாரி அம்மனே மனதில் நிறைந்து இருந்தாள்.

     இந்நிலையில்

    அடிக்கடி அவர் பாதை வேறு என

    ஓர் எண்ணம் எழுந்து உள்ளத்தை உசுப்பியது.

     வாய்த்த மனைவி பேராசைக்காரி.

    பணம் பணம் என்பதே அவளது நிரந்தர பல்லவி.

     செல்வமே சக்தி என்பது மனையாள் முக்தியின் வேதம்.

    சம்பாதிப்பவரே சிறந்த மனிதன் மற்றவரெல்லாம்

    பேடி என பரிகசிப்பாள் அவள்.

     கொங்கணர் அவள் நச்சரிப்பால் தொழிலில் கவனம் அதிகம் கொண்டார்.

    நல்ல வருமானம் நாளும் பெருகியது.

     ஆனால் அவர் மனதின் ஓரத்தில் ஏதோ உறுத்தியது.

    அவர் மனம் ஆன்மீகம் தேடியது.

     மனைவி பெயரில் தான் முக்தி.

    கொங்கணர் நாடிய முக்தியை சக்தியை அவள் தரவில்லை.

    விரக்தியே மிச்சமாய் விஞ்சி நின்றது.

     வேதியரை ஞானியரை சாதுக்களைக் கண்டால் போதும்

    ஓடி ஓடி அவரடி தொழுவது கொங்கணரின் வழக்கம்.

     அவர்களுக்குப் பசும்பால் தந்து உபசரிப்பார்.

    வந்தவர் பதிலுக்கு ஞானப்பாலை அவருக்கு அளிப்பர்.

    இருப்பினும்

    'இன்னும் சம்பாதிக்க வேண்டும் சொத்து சுகம் பெருக்க வேண்டும்' என்ற தலையணை மந்திரம் பெரிதாய் கொங்கணரிடம் வேலை செய்தது.

     நிறைய சக்திகள் பெற வேண்டும்.

    உயர் சித்திகள் கற்று உயர்நிலை அடைய வேண்டும் .

     இரும்பை தங்கமாக்கி

    புகழ் பொருள்

    பெற வேண்டும்.

     இம்சை அரசி

    இல்லாளிடம்

    நற்பெயர் பெற வேண்டும்.'

     அதற்கு தவசி, முனிவர், யோகி சித்தர் என யாரிடமாவது கற்றுணர வேண்டும்.'

    என்றெல்லாம் அடிக்கடி அசை போட்டார்.

    ஆசை அதற்கோர் நாள் பார்த்தது.

     எளிமைக்கு இலக்கணமாய் சித்தர்கள் திகழ்வர்.

    இதற்கு முற்றிலும் மாறுபட்டவராய் கொங்கணர் இருந்தார்.

     ஆசை, செல்வம், பயம், படோபடம், கோபம், அலட்சியம், வேகம், மனைவி சொல்லே வேதம் என பலப்பல பன்முக குணாதிசயங்கள் அவரிடம் அதிகம் இருந்தன.

    அத்தனைக்கும் பின்னால் அவரை மணந்தவள் இருந்தாள்.

     மணவாட்டி ஆட்டியபடி வாழ்க்கை மணி ஆடியது.

    சத்தமும் எழுந்தது. ஆனால் அது புறத்தில்.

     அகத்தே அவர் நிலை தேடல்களால் நிரம்பி இருந்தது.

     இரண்டு நிலைகளால் இருண்ட குழப்பமே

    நிதமும் தொடர்ந்தது.

     காடு, மலை, குகை சென்று தேடினால் குருவைக் காணலாம்.

    அவர் சொல்வழி நடந்தால் அம்பிகையை அடையலாம்,'

    என மனக்குரல் தினம்தினம் சொல்லச் சொல்ல,

    அவர் யாரிடமும் சொல்லாமல் – குறிப்பாய்

    வாய்த்த குணவதியிடம் சொல்லாமல்

    கானகம் செல்ல விருப்பப்பட்டார்.

    அதற்கென திட்டமிட்டார்.

     அதுசமயம் – 

    ஒரு சித்தர் திருவாடுதுறை வந்திருப்பதாக காற்று வாக்கில் சேதி வந்தது.

     காற்றை விட வேகமாக ஆடுதுறைக்கு புயல்போல் ஓடினார்.

    அவரைத் தேடி அலைந்தார். திரிந்தார்.

     ஒருநாள் அவருக்கு திருநாளாய் அமைந்தது.

     அடர்ந்த மரத்தடியில்

    ஓர் ஒளி சிந்தும் சித்தரைத் தரிசித்தார்.

    அவர் போகர்.

    ஆச்சரியத்தோடு, "அடைக்கலம்", என்றபடி அவர் பாதங்களைப் பற்றி  கண்களால் ஒற்றினார். நெற்றியால் வருடினார்.

    ஸ்பரிசம் பட்டதும் தவத்தில் இருந்த போகர் சட்டென விழித்தெழுந்தார்.

     பார்த்த மாத்திரத்தில் அவரைப் பிடித்துப் போயிற்று போகருக்கு.

     அவர் சிங்கமென சிலிர்த்து  தங்கமென ஒளிரப்போவது

    அப்போதே போகருக்குத் தெரிந்து போயிற்று.

    "யாரப்பா நீ…?"

    "அடியேன்

    அம்பாள் பக்தன்.

    அவளடி வாழ்பவன். அவளை அடைய வழி தேடி வந்தேன்.

    நீங்கள் வழிகாட்ட வேண்டும்.

    அடியேனுக்கு அனைத்தையும் போதிக்க வேண்டும்."

    ஒரே மூச்சில் சொல்லி முடித்தார் .

    "உன் பெயர் ?"

    பதில் இல்லை.

    "எங்கிருந்து வருகிறாய் ?"

    " கொங்கண தேசத்தில் இருந்து"

    தன் முன்கதைச் சுருக்கம் தந்தார்.

      "ஓ… கொங்கண நாட்டுக்காரனா….?

    …. உன்னை

     'கொங்கணர்'

    என்றே இனி அழைக்கிறேன்.

    நீ நீடு புகழ் பெறுவாய். உலகம் உனைத் தொழும்

     கொங்கணா… உன் விருப்பம் நிறைவேறும்"

     அந்த திருநாமமே நிலைத்துப் போனது.

     போகர் சூட்டிய பெயர்

    கார் உள்ளளவும்,

    கடல் உள்ளளவும் நிலைத்து நிற்கும் அன்றோ?

    நின்றது.

    நிற்கிறது.

     கொங்கண சித்தர்

    கொங்கண முனிவர்

    கொங்கண நாதர்

    கொங்கண நாயகர்

    என அப்பெயரே விரிந்தும் சிறந்தும் ஒளிர்ந்தும் வியாபித்துள்ளது.
     

  • September 25 Rasi Palan

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – நன்மை 
    ரிஷபம் – பயம் 
    மிதுனம் – துன்பம்  
    கடனம் – ஆதரவு
    சிம்மம் – மகிழ்ச்சி 
    கன்னி –  தோல்வி 
    துலாம் –  லாபம் 
    விருச்சிகம் – செலவு
    தனுசு –     சுகம் 
    மகரம் –   கவலை
    கும்பம் – வெற்றி
    மீனம் – சிக்கல்
    சந்திராஷ்டமம்    – திருவோணம்
     

  • September 25 Indraya nalla Neram

    செப்டம்பர் 25 – இன்றைய நல்ல நேரம்
    விகாரி வருடம் – புரட்டாசி 8
    25-செப்-2019 புதன்  
    நல்ல நேரம்    :    9.00 – 10.30    
    ராகு    :    12.00 – 1.30    
    குளிகை    :    10.30 – 12.00
    எமகண்டம்    :    7.30 – 9.00                          
    திதி    :    துவாதசி          
    திதி நேரம்    :    ஏகாதசி    கா    10.05
    நட்சத்திரம்    :    ஆயில்யம்    அ.கா    4.16
    யோகம்    :    சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    திருவோணம்
    சூலம்    :    வடக்கு
    பரிகாரம்    :    பால்
     

  • Mana sanjalam Theera

    ஜாதகத்தில் சந்திரன் பலம் குறைந்து அல்லது பகை கிரகத்துடன் இருந்தால், மனக்குழப்பம் அதிகம் இருக்கும். அவ்வாறு அமைந்தவர்கள், பௌர்ணமி அன்று சந்திரனை தரிசித்து வணங்கி, ‘ஓம் சந்திராய நமஹ’ என்று ஒன்பது முறை சொல்வது உகந்தது.

    மேலும், சந்திரனுக்குரிய பச்சரிசியில் சாதம் வடித்து, தானும் சாப்பிட்டு, தன்னைச் சார்ந்தவர்களும், தான் வளர்க்கும் விலங்குகளுக்கும் அளித்து சாப்பிட வைப்பது மிகவும் நல்லது. மேலும் இதனைத் திங்கட்கிழமை தோறும் செய்து வந்தால் மேன்மையை பெறலாம்.

    கடக ராசியில் பிறந்தவர்கள், இரண்டாம் எண்ணில் பிறந்தவர்கள், திங்கட்கிழமை பிறந்தவர்கள் ஆகியோர் முத்து மாலை, மற்றும் முத்து மோதிரம் அணியலாம். இதனால், சந்திர பகவான் முழு அருளும், ஆசியும் கிடைக்கப்பெற்று மனசாந்தி கிடைக்கப்பெறும்!
     

  • Thirupathy Alvar Thirumanjanam

    திருப்பதி கோவிலில் இன்று கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படுகின்ற தூய்மைப்பணி நடந்தது. அதையொட்டி காலை 6 மணியில் இருந்து நண்பகல் 12 மணிவரை 6 மணிநேரம் தரிசனம் ரத்து செய்யப்பட்டது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுத்தம் செய்யும் பணி ஆண்டுக்கு நான்கு முறை நடத்தப்படுகிறது. அதன்படி யுகாதி பண்டிகை, ஆனிவார ஆஸ்தானம், வருடாந்திர பிரம்மோற்சவம், வைகுண்ட ஏகாதசி ஆகிய விழாக்களுக்கு முன்னதாக வரும் செவ்வாய்க்கிழமையில் கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் நடப்பது வழக்கம். 

    அதன்படி இன்று அதிகாலை சுப்ரபாத சேவை, தோமால சேவை, அர்ச்சனை சேவை, கொலு ஆகிய பூஜைகள் முடிந்ததும், கோவிலின் பிரதான நுழைவு வாயில் சாத்தப்பட்டது. மூலவர் ஏழுமலையானின் விக்ரகத்தில் மாசு படியாமல் இருப்பதற்காக பட்டு துணியால் மூடப்பட்டு, காலை 6 மணிக்கு கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் தொடங்கியது. அப்போது கோவில் கருவறை, துவார பாலகர், ஆனந்த நிலையம், வரதராஜசாமி சன்னதி, லட்சுமி நரசிம்மசுவாமி சன்னதி, விஸ்வசேனர் சன்னதி, பாஷிங்கார்ல சன்னதி, தங்க கொடி மரம், பலி பீடம், வெள்ளி கதவுகள், சம்பங்கி மண்டபம், மகா துவாரம், பேடி ஆஞ்சநேயர் கோவில், வராகசாமி கோவில் என அனைத்து இடங்களும் பச்சை கற்புரம், மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட 18 வகையான சுகந்த மூலிகைப் பொருட்களை கொண்டு தண்ணீரால் சுத்தம் செய்யப்பட்டது.

    இதில் திருமலை-திருப்பதி தேவஸ்தான செயல் அலுவலர் அணில்குமார் சிங்கால், சிறப்பு அதிகாரி தர்மா ரெட்டி, துணை செயல் அலுவலர் ஹரிந்திரநாத், தலைமை அர்ச்சகர் வேணுகோபால் தீட்ஷித்தலு தேவஸ்தான  ஊழியர்கள் தூய்மைப்பணியில் ஈடுபட்டனர். நண்பகல் 11 மணியளவில் தூய்மைப்பணி முடிந்ததும், ஏழுமலையான் மீது போர்த்தப்பட்ட பட்டு துணியை அகற்றி விட்டு, மூலவருக்கு நைவேத்தியம் செய்யப்பட்டது. 

    நண்பகல் 12 மணிக்கு மேல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். கோவில் ஆழ்வார் திருமஞ்சனத்தையொட்டி கோவிலில் 6 மணிநேர தரிசனம் ரத்து செய்யப்பட்டது. மேலும் வாரத்தில் செவ்வாய்க்கிழமை அன்று நடக்கும் அஷ்டதல பாத பத்மாராதனை சேவையும் இன்று ரத்து செய்யப்பட்டது.

  • Thirupathyil Donation VIP Dharshan

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் எந்தவித சிபாரிசு கடிதங்களும் இல்லாமல் ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்கும் பக்தர்களுக்கு விஐபி தரிசனத்தில் அனுமதிக்க தேவஸ்தான அறங்காவலர் குழு கூட்டத்தில் முடிவு செய்துள்ளது.

    திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் தேவஸ்தானம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட ஐம்பதாவது அறங்காவலர் குழு கூட்டம் தலைவர் சுப்பா ரெட்டி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பிறகு .திருப்பதியில் உள்ள தேவஸ்தான நிர்வாக அலுவலகத்தில் செயல் அலுவலர் அணில்குமார் சிங்கால் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். 

    அதில் பேசிய அவர்  தேவஸ்தானத்தில் பணிபுரியும் ஊழியர்களின் பொழுதுபோக்கு அம்சங்களுக்காக 10 கோடி ரூபாயில் ஸ்போர்ட்ஸ் காம்ப்ளக்ஸ் கட்ட நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தேவஸ்தான கல்வி நிறுவனங்களில் படிக்க கூடிய மாணவ , மாணவிகளுக்காக 100 கோடி ரூபாயில் விடுதி கட்ட நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. திருப்பதி தேவஸ்தானத்தின்  தண்ணீர் தேவைக்காக திருப்பதியில் பாலாஜி அணை கட்டுவதற்கு எவ்வளவு நிதி தேவை என்பது குறித்து ஆய்வு செய்வதற்கு  பொறியாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளாஙா. 

     தேர்தல் போது தேர்தல் அதிகாரிகள் மூலமாக பறிமுதல் செய்யப்பட்டு மீண்டும் தேவஸ்தானத்திடம் ஒப்படைக்கப்பட்ட 1371 கிலோ தங்கத்தை மீண்டும் ஓராண்டுக்கு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் முதலீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். 

    வெங்கடேஸ்வர சுவாமி கோவில் கட்டுவதற்காக தொடங்கப்பட்ட ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்கும் பக்தர்களுக்கு எந்த வித சிபாரிசு கடிதங்களும் இல்லாமல் விஐபி தரிசனத்தில் அனுமதிக்க அறங்காவலர் குழு முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக எவ்வளவு நன்கொடை வழங்கினால், எத்தனை பேரை அனுமதிப்பது, ஆன்லைனில் நன்கொடை பெறுவதா, அல்லது நேரடியாக வந்து நன்கொடை வழங்கும் பக்தர்களுக்கு வழங்குவதா என்பது  குறித்து இன்னும் ஒரு வாரத்திற்குள் முடிவெடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

  • September 24 Indraya naal Eppadi

    செப்டம்பர் 24 – ராசி பலன்
    விகாரி வருடம் – புரட்டாசி 7
    24-செப்-2019 செவ்வாய்  
    நல்ல நேரம்    :    7.30 – 9.00    
    ராகு    :    3.00 – 4.30    
    குளிகை    :    12.00 – 1.30
    எமகண்டம்    :    9.00 – 10.30                          
    திதி    :    ஏகாதசி          
    திதி நேரம்    :    தசமி    ம    12.05
    நட்சத்திரம்    :    புனர்பூசம்    கா    6.53
    யோகம்    :    சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    உத்திராடம்
    சூலம்    :    வடக்கு
    பரிகாரம்    :    பால்
     

  • September 24 Rasi palan

    செப்டம்பர் 24… இன்று இந்த ராசிக்கு வரவு 
    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – அமைதி
    ரிஷபம் – லாபம் 
    மிதுனம் – வரவு 
    கடனம் – செலவு
    சிம்மம் – கவலை
    கன்னி –  துயரம்   
    துலாம் –  பயம் 
    விருச்சிகம் – ஆதாயம் 
    தனுசு –     தனம் 
    மகரம் –   குரோதம் 
    கும்பம் – அன்பு
    மீனம் – சகம் 
    சந்திராஷ்டமம்    – உத்திராடம்