Blog

  • Depavali Recipies

    தீபாவளி என்றாலே பட்டாசும் பக்ஷணங்கள் தான் நினைவுக்கு வரும். இங்கு சில எளிய இனிப்பு வகை பலகாரங்களை பார்க்கலாம். தீபாவளிக்கு நமது கையால் ஒரு பலகாரமாவது செய்து சாப்பிட்டால் அதன் திருப்தியே தனிதான்.

    அதிரசம்

    தேவையான பொருட்கள்….
    2 கப் பச்சரிசி, 2 கப் வெல்லம், பொடித்த ஏலக்காயம் ஒரு கால் டீஸ்பூன், ஒரு டேபிள்ஸ்பூன் நெய், தேவையான அளவு எண்ணெய் பொறிப்பதற்கு.

    செய்முறை ….

    அரிசியை எடுத்து ஒரு அரை மணி நேரம் ஊற வையுங்கள். பின்னர் தண்ணீரை வடிகட்டி எடுத்து விட்டு அரிசியை உலர்த்தி பின்னர் மாவாக அரைத்துக் கொள்ளுங்கள்.

    அடுத்து, நைசாக அரைத்த பின்னர் பாத்திரம் ஒன்றை எடுத்து அதில் வெல்லத்தைப் பொட்டு கொஞ்சம் போல தண்ணீரை ஊற்றி காய்ச்சுங்கள். வெல்லம் நன்றாக கரைந்ததும், மண் இல்லாமல் அதை வடி கட்டி எடுக்கவும். பிறகு வெல்லத்தை மீண்டும் காய்ச்சி பாகு எடுக்க வேண்டும்.

    சரி பாகு சரியாக வந்திருக்கிறதா என்பதை எப்படி அறியலாம். வெரி சிம்பிள். ஒரு சின்னக் கிண்ணத்தில் தண்ணீரை விட்டு,அதில் சிறிது பாகு வெல்லத்தை விடுங்கள். அது கரையாமல், அப்படியே உருண்டு வந்தால் சரியான பதம் என்று அர்த்தம்.

    சரி, பாகு வந்ததும், இறக்கி விடுங்கள். பிறகு அதில், அரிசி மாவையும், ஏலக்காயையும் போட்டு கிளறி பின்னர் அதில் நெய்யை விடவும்.
    அடுத்து கிளைமேக்ஸ். சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, பதமாக தட்டி அதை எண்ணெயில் போட்டு பொறிக்கவும். அதிரசம் ரெடி.

    மொறு மொறு கை முறுக்கு

    முறுக்கு வகைகளில், கை முறுக்கின் சுவை அலாதியானது. கைமுறுக்கு செய்ய தேவையான பொருட்கள்

    அரிசி மாவு – 3 கப், உளுத்தம் மாவு – கால் கப், டால்டா – ஒன்றரை டேபிள் ஸ்பூன், உப்பு – தேவையான அளவு, சீரகம் – 100 கிராம், வெண்ணெய் – அரை கப், எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு

    முறுக்கு செய்முறை

    அகலமான பாத்திரத்தில் அரிசி மாவுடன் உளுத்தம் மாவு, உப்பு, போட்டு டால்டா, வெண்ணைய்யை லேசான சூட்டில் சற்று உருக்கி எடுத்து ஊற்றவும். இதோடு சீரகம் சேர்த்து போட்டு நன்றாக பிசையவும். பின்னர் மாவின் மேல் 2 கப் தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி பிசைந்துக் கொள்ளவும். மிகவும் தோய்வாக இல்லாமல் பிசையவும்.
    ஒரு உருண்டை மாவை எடுத்துக் கொண்டு, கட்டை விரல், ஆள்காட்டி விரல் மற்றும் நடுவிரல் ஆகிய மூன்று விரல்களைக் கொண்டு முறுக்கினை சுற்றவும். கட்டை விரலாலும், ஆட்காட்டி விரலாலும் மாவினை சிறிது அழுத்திவிட்டு, பிறகு அதனைத் திருகி திருகி, வட்ட வடிவில் சுற்றவும்.

    முதலில் ஒரு பேப்பரில் சுற்றிக் கொள்ளவும். முறுக்கு பெரிதாக இருந்தால், பேப்பரை அப்படியே ஒரு தட்டில் கவிழ்த்து, தட்டில் முறுக்கை மட்டும் எடுத்துக் கொள்ளவும். இந்த வகை முறுக்கினை மிகவும் மெல்லியதாக சுற்றக்கூடாது. முறுக்கு சுற்றின பிறகு சிறிது நேரம் உலர வைக்கவும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் முறுக்கு வைத்துள்ள தட்டை எண்ணெய்க்கு அருகில் கொண்டு சென்று, சற்று கவனமுடன் எண்ணெய்யில் போடவும். எண்ணெய் நுரைத்து வருவது குறைந்தவுடன், இரண்டு புறமும் பொன்னிறமாக வெந்ததும், ஒரு கம்பி கொண்டு முறுக்கினை எடுத்து எண்ணெய் வடியவிடவும்.
    சுவையான கை முறுக்கு ரெடி.

    பாசிப்பருப்பு நெய் உருண்டை….

    தேவையான பொருட்கள்….

    பாசிப் பருப்பு – 2 கப், சர்க்கரை – 2 கப், நெய் 200 கிராம், ஏலக்காய் – 6, முந்திரி உடைத்தது 50 கிராம்

    நெய் உருண்டை செய்முறை

    பாசிப் பருப்பை வாணலியில் சூடாகும் வரை வறுக்கவேண்டும். வாசனை வரும் வரை வறுத்தால் போதுமானது. வறுத்த பருப்பை மிக்சியில் அரைக்கவும். அதனை சலித்து எடுத்து நைசான மாவை லட்டுக்கு வைத்துக் கொள்ளவும்.

    அதேபோல் சர்க்கரையையும் மிக்சியில் அரைத்து கலக்கவும். இதோடு மூன்று ஏலக்காய் சேர்க்கவும். ஏலக்காயை லேசாக நெய்யில் வறுத்து, தோலோடு சேர்த்து மிக்சியில் பொடி செய்து கொள்ளவும்.முந்திரிப் பருப்பை சிறிது நெய்யில் வறுத்து வைத்துக் கொள்ளவும். எல்லாவற்றையும் கலந்து ஒரு பேசினில் போட்டு வைக்கவும்.

    வாணலியில் 200 கிராம் நெய் ஊற்றி உருக்கவும். நெய் கருகாமல் சூடான உடன் அதை மாவின் மேல் ஊற்றவும். அதை மாவை கலந்து வெது வெதுப்பான சூட்டிலேயே கையால் லட்டு பிடிக்கவும். ஒரு தட்டில் இட்டு ஆற வைக்கலாம். பின்னர் டப்பாவில் போட்டு மூடிவைத்து சாப்பிடும் போது எடுத்துக்கொள்ளலாம். 10 நாட்கள் வரை கெடாமல் இருக்கும். சுவையான சத்தான இனிப்பு இது.
     

  • Dewali Special Mysorepa

    தீபாவளி ஸ்பெஷல் நெய் மைசூர் பாகு எளிமையான முறையில் செய்வது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்…

    நெய் மைசூர் பாகு செய்ய தேவையான பொருட்கள்
    கடலை மாவு – 1 கப்,
    சர்க்கரை – 2 கப்,
    நெய் – 3 கப்,
    தண்ணீர் – 1 கப்.

    நெய் மைசூர் பாகு செய்யும் வழிமுறைகள்….. 
    கடலை மாவை லேசாக நெய் ஊற்றி வாசனை போக வறுத்துக் கொள்ளவும். அடிகனமான பாத்திரத்தில் சர்க்கரை, தண்ணீர் சேர்த்துப் பாகு காய்ச்சவும். ஒற்றைக் கம்பிப் பதத்துக்கு வந்ததும் (ஒரு நூல் கம்பி பதம்) கடலை மாவை கொஞ்சம் கொஞ்சமாகக் கொட்டிக் கிளறவும்.

    அதே நேரத்தில், இன்னொரு அடுப்பில் நெய்யைச் சூடாக்கி, கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றிக் கிளறவும். மாவும் பாகும் நுரைத்துப் பொங்கி வரும்போது நெய் தடவிய தட்டில் கொட்டவும். தட்டை ஆட்டக்கூடாது. அப்படியே செட்டாக விட வேண்டும்.

    அப்போதுதான் சூடான ட்ரெடிஷனல் மைசூர் பாகாக வரும். சிறிது சூடாக இருக்கும்போதே கத்தியால் துண்டுகள் போடவும்.
     

  • October 23 Rasi Palan

    இன்றைய ராசி பலன்
    மேஷம் – அலைச்சல்
    ரிஷபம் – அசதி
    மிதுனம் – ஆர்வம் 
    கடனம் – கோபம் 
    சிம்மம் – பரிவு
    கன்னி –  பக்தி
    துலாம் –  நன்மை  
    விருச்சிகம் – வெற்றி
    தனுசு –     தடங்கல்
    மகரம் –  பகை
    கும்பம் – பரிசு
    மீனம் –     பிரீதி
    சந்திராஷ்டமம்    – திருவோணம், அவிட்டம்
     

  • October 23 Indraya Nalla Neram

    அக்டோபர் 23 – இன்றைய நல்ல நேரம்
    விகாரி வருடம் – ஐப்பசி 6
    23-அக்-2019 புதன்  
    கரிநாள்
    நல்ல நேரம்    :    9.00 – 10.30    
    ராகு    :    12.00 – 1.30    
    குளிகை    :    10.30 – 12.00
    எமகண்டம்    :    7.30 – 9.00                          
    திதி    :    தசமி          
    திதி நேரம்    :    தசமி    இ    9.24
    நட்சத்திரம்    :    ஆயில்யம்    ம    12.13
    யோகம்    :    சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    திருவோணம்,அவிட்டம்
    சூலம்    :    வடக்கு
    பரிகாரம்    :    பால்

  • Guru Bagavan Slogam

    தேவாணாஞ்ச ரிஷிணாஞ்ச குரும் காஞ்சன ஸந்நிபம்
    புத்தி பூதம் திரிலோகேஸம் தம் நமமி பிருகஸ்பதிம்

    பிரகஸ்பதியான குரு பகவானுக்குரிய ஸ்லோகம் இது. இந்த ஸ்லோகத்தை தினமும் காலையில் குளித்து முடித்ததும் 9 முறை அல்லது 27 முறை துதிப்பது நல்லது. வியாழக்கிழமைகள் தோறும் கோவிலில் குரு பகவான் சன்னிதிக்குச் சென்று, குரு கிரக விக்ரகத்திற்கு 27 மஞ்சள் கொண்டைகடலைகள் சமர்ப்பித்து, நெய் தீபமேற்றி, தூபங்கள் கொளுத்தி, இந்த மந்திரத்தை 108 முறை துதித்து வந்தால் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பேறு கிடைக்கும்.

    திருமணத் தடை நீங்கி விரைவில் திருமணம் நடக்கும். வேலை வாய்ப்புகள் மற்றும் அரசியல் வாழ்வில் இருப்பவர்களுக்கு உயர் பதவிகள் கிட்டும். குடும்பத்தில் வீண் விரயங்கள் நீங்கி பொருளாதார நிலை மேம்படும். 
     

  • Thirupathyil VIP Dharisanam

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் எந்தவித சிபாரி கடிதமும் இல்லாமல் ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு பத்தாயிரம் ரூபாய் நன்கொடை வழங்கினால் வி.ஐ.பி. தரிசனத்தில் பக்தர்கள் அனுமதி கூடுதல் செயல் அலுவலர் தர்மா ரெட்டி அறிவித்துள்ளார். 

    நாடு முழுவதும் வெங்கடேஸ்வர ஸ்வாமி கோவில் கட்டுவதற்கும், கோவிலை பாதுகாக்கவும் , புனரமைக்க , தூப தீப நைவேத்தியம் செய்வதற்கு, அர்ச்சகர்களின் நிதி உதவி வழங்குவதற்கும், இந்து தர்ம பிரச்சாரத்திற்காக ஸ்ரீ வாணி அறக்கட்டளை தொடங்கப்பட்டு உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 

    இந்த அறக்கட்டளைக்கு ஒரு ரூபாய் முதல் எவ்வளவு வேண்டுமென்றாலும் பக்தர்கள் நன்கொடை வழங்கலாம். இந்த அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்கும் பக்தர்களை ஊக்குவிக்கும் விதமாக ரூபாய் 10,000 முதல் நன்கொடை வழங்கும் பக்தர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் விதமாக பத்தாயிரம் ரூபாய் நன்கொடை வழங்கும் பக்தர்களுக்கு ஒரு விஐபி தரிசன டிக்கெட் வழங்கப்பட உள்ளதாக அவர் கூறியுள்ளார்.

    பத்தாயிரம் ரூபாய் நன்கொடை வழங்கி விஐபி தரிசனத்திற்கான 500 ரூபாய் டிக்கெட் கொடுத்து பக்தர்கள் பெற்று தினந்தோறும் காலையில் நடைபெறக்கூடிய விஐபி தரிசனத்தில் சுவாமி தரிசனம் செய்யலாம். 

    இது போன்று ஒரு பக்தர்கள் 10,000 முதல் 99 ஆயிரம்  ரூபாய் வரை நன்கொடை வழங்கி ஒன்பது டிக்கெட்டுகள்  வரை பெறலாம் ஒரு லட்சத்திற்கு மேல் 5 லட்சம் வரை, 5 லட்சம் முதல் 10 லட்சம் வரை 10 லட்சத்திற்கும் மேல் நன்கொடை வழங்கும் பக்தர்களுக்கு ஏற்கனவே உள்ள அறக்கட்டளைக்கு  நன்கொடை வழங்கும் பக்தர்களுக்கு உள்ள முன்னுரிமை தரிசனம் செய்து வைக்கப்படும் என்றும் செயல் அலுவலர் தர்மா ரெட்டி கூறியுள்ளார்.

    ஒரு லட்ச ரூபாய்க்கு உட்பட்டு நன்கொடை வழங்கும் பக்தர்களுக்கு எந்தவித முன்னுரிமையும் இல்லாத நிலையில் தற்போது இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. எனவே பக்தர்கள் நேரடியாக திருமலையில் வந்து பத்தாயிரம்  ரூபாய் நன்கொடை டெபிட் கார்டு மூலமாகவும், பணமாகவும் செலுத்தி விஐபி தரிசன டிக்கெட்டுகளை பெற்றுக்கொள்ளலாம். விரைவில் ஆன்லைன் மூலமாகவும் ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு நன்கொடை செலுத்தி வி.ஐ.பி. டிக்கெட் பெறும் விதமாக செய்யப்பட உள்ளது என அவர் தெரிவித்தார்.

  • Graga peyarchi badippai thadukka

    கிரக பெயர்ச்சிகளால் நமக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல் இருப்பதற்காக இங்கே கொடுக்கப்பட்டு இருக்கும் மந்திரங்களை தினமும் பாராயணம் செய்யலாம்.

    அஹ: ஸூதே ஸவ்யம் தவ நயனமர்காத்மகதயா
    த்ரியாமாம் வாமம் தே ஸ்ருஜதி ரஜனி நாயகதயா
    த்ருதீயா தே த்ருஷ்டிர் – தரதலித ஹேமாம்புஜ – ருசி:
    ஸமாதத்தே ஸந்த்யாம் திவஸ நிசயோ – ரந்தரசரீம்

    'தேவீ, உன்னுடைய வலக் கண் சூரியனைப் போன்று திகழ்ந்து பகலை ஏற்படுத்துகிறது; உன்னுடைய இடக் கண் சந்திரனைப் போன்று திகழ்ந்து இரவை உண்டாக்குகிறது; இரண்டுக்கும் மத்தியில் அமைந்திருக்கும் மூன்றாவது கண்ணோ, அப்போதுதான் சிறிதே மலர்ந்த பொற்றாமரை மலரைப் போல் திகழ்ந்து, இரவுக்கும் பகலுக்கும் இடைப்பட்ட சந்தியா காலத்தை உணர்த்துகிறது.

    இரவும், பகலும், இரண்டுக்கு இடைப்பட்ட சந்தியா காலமும் உன்னுடைய கண்களில் இருந்துதான் உண்டாகிறது. எனவே தேவீ, நீயே காலங்களைப் படைப்பவளாக இருப்பதுடன், காலங்களுக்கு அப்பாற்பட்டவர்களாகவும் இருக்கிறாய் என்பதுதான் இந்த ஸ்தோத்திரத்தின் சாரம்.

    சௌந்தர்யலஹரியின் இந்த ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்ய இயலாதவர்கள், சீர்காழி தலத்தில் அவதரித்து, அம்பிகையினால் ஞானப் பால் புகட்டப்பெற்ற திருஞானசம்பந்தர் அருளிய கோளறு பதிகம் முழுவதையுமோ அல்லது இங்கே கொடுக்கப்பட்டு இருக்கும் ஒரு பாடலை மட்டுமோ பாராயணம் செய்யலாம்.
     

  • Solai Malai Murugan Koil Kandha sasti vizha

    அழகர்மலை உச்சியில் முருகபெருமானின் ஆறாவது படை வீடான சோலைமலை முருகன் கோயிலில் கந்தசஷ்டி விழா வரும் 28ம் தேதி துவங்குகிறது. இந்த கோயிலில் ஆண்டு தோறும் ஐப்பசி மாதம் நடைபெறும் கந்தசஷ்டி திருவிழாவின் போது நாவல்பழம் பழுக்கும் ஸ்தலவிருட்சமான நாவல் மரம் முன்பாக சூரசம்ஹாரம் நடைபெற்று வருகிறது. 

    வரும் 28 ஆம் தேதி தொடங்கும் கந்த சஷ்டி விழாவை தொடர்ந்து பக்தர்களுக்கு காப்பு கட்டுதல், யாகசாலை பூஜை, உற்சவருக்கு அபிஷேகம், தீபாராதனை நடைபெறுகிறது. 

    29ம் தேதி வழக்கமான பூஜை, காமதேனு வாகனத்தில் சுவாமி புறப்பாடு, 

    30ம் தேதி காலை யானை வாகனத்திலும், 

    31ம் தேதி ஆட்டு கிடாய் வாகனத்திலும்,  

    நவ.1ம் தேதி சப்பர வாகனத்திலும் சுவாமி புறப்பாடு நடைபெறுகிறது. 

    2ம் தேதி சூரசம்ஹாரம் நடக்கிறது. மாலை 4.30 மணிக்கு வெள்ளிமயில் வாகனத்தில் சுப்பிரமணியர் புறப்பாடாகி வேல் வாங்குதல் நடைபெறும். 5.30 மணிக்கு முருகபெருமான் கஜமுகசூரனையும், சிங்கமுக சூரனையும் சம்ஹாரம் செய்து, ஸ்தலவிருட்சமான நாவல் மரத்தடியில் பத்மாசூரனை சம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது.

    தொடர்ந்து சஷ்டிமண்டபத்தில் சாந்த அபிஷேகம் நடைபெறுகிறது. 3ம் தேதி காலை 10 மணிக்கு மேல் 11.20 மணிக்குள் திருக்கல்யாண உற்சவம் நடைபெறும். அன்று மாலை 4.30 மணிக்கு ஊஞ்சல் சேவையும், மஞ்சள் நீர் உற்சவத்துடனும் திருவிழா நிறைவுபெறுகிறது. 
     

  • October 22 Rasi Palan

    இன்றைய ராசி பலன்
    மேஷம் – மறதி
    ரிஷபம் – உதவி
    மிதுனம் – நிறைவு
    கடனம் – தடங்கல்
    சிம்மம் – தாமதம் 
    கன்னி –  பிரதமை
    துலாம் –  தடை 
    விருச்சிகம் – நன்மை 
    தனுசு –     தேர்ச்சி
    மகரம் –  சலனம்  
    கும்பம் – ஓய்வு
    மீனம் –     நம்பிக்கை
    சந்திராஷ்டமம்    – உத்திராடம், திருவோணம்
     

  • October 22 Indraya Naal Eppadi

    அக்டோபர் 22 – இன்றைய நாள் எப்படி?
    விகாரி வருடம் – ஐப்பசி 5
    22-அக்-2019 செவ்வாய்  
    நல்ல நேரம்    :    7.30 – 9.00    
    ராகு    :    3.00 – 4.30    
    குளிகை    :    12.00 – 1.30
    எமகண்டம்    :    9.00 – 10.30                          
    திதி    :    நவமி          
    திதி நேரம்    :    நவமி    இ    11.36
    நட்சத்திரம்    :    பூசம்    ம    1.36
    யோகம்    :    சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    உத்திராடம்,திருவோணம்
    சூலம்    :    வடக்கு
    பரிகாரம்    :    பால்