Blog

  • Nellaiappar national flag

    குடியரசு தினத்தை முன்னிட்டு நெல்லை நெல்லையப்பர் திருக்கோவிலில் சிறப்பு பூஜைகளுடன் தேசியக்கொடி ஏற்றப்பட்டது கோவில் யானை காந்திமதி மற்றும் கோவில் ஊழியர்கள் வணக்கம் செலுத்தி தேசியக்கொடிக்கு மரியாதை செய்தனர்.

     தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை நெல்லையப்பர் கோவிலில் குடியரசு தின விழாவை முன்னிட்டு கோவில் முன்பு அமைந்துள்ள விக்டோரியா மகாராணி அவர்களால் வழங்கப்பட்ட தூண் முன்பு தேசியக்கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது கோவிலில் தேசியக்கொடி வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட பின்னர் யானை காந்திமதி முன் செல்ல ஊர்வலமாக கோவில் ஊழியர்களால் தேசிய கொடி எடுத்து வரப்பட்டது.

     தொடர்ந்து கொடிகம்பம் முன்பு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தேசிய கொடியை கோவில் செயல் அதிகாரி ஏற்றி மரியாதை செய்தார் அப்போது கோவில் யானை காந்திமதி மூன்று முறை பிளிறி தேசியக் கொடிக்கு வணக்கம் செலுத்தி மரியாதை செய்ததது.அதே வேளையில் கோவில் ஊழியர்களும் தேசிய கொடிக்கு வணக்கம் செலுத்தி மரியாதை செய்தனர் தொடர்ந்து தேசியக்கொடிக்கு மகா தீபாராதனை நடைபெற்று குடியரசு தின விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

  • January 26 2024 Republic day

    ஜனவரி 26 – குடியரசு தினம்
    சோபகிருது வருடம் – தை 12
    26-ஜன-2024 வெள்ளி
    குடியரசு தினம்,
    சுசீந்சீ திரம் தாணுமாலையன் தேர்
    வாஸ்து நாள்(காலை 10.41 – 11.17)
    நல்ல நேரம் : 9.00 – 10.30
    ராகு : 10.30 – 12.00
    குளிகை : 7.30 -9.00
    எமகண்டம் : 3.00 – 4.30
    திதி : பிரதமை
    திதி நேரம் : பவுர்ணமி முழுவதும்0.00
    நட்சத்திரம் : பூசம் கா 11.07
    யோகம் : மரணயோகம்
    சந்திராஷ்டமம் : கேட்டை,மூலம்
    சூலம் : மேற்கு
    பரிகாரம் : வெல்லம்

     

  • Tanjore Peruvudayar Temple Special Abhishekam to Lord Maha Nandyam

    தஞ்சை பெருவுடையார் கோயில் மஹா நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்

    தை மாதம் வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு தஞ்சை பெருவுடையார் கோயில் மஹாநந்தியம் பெருமானுக்கு பால், சந்தனம், திரவியப்பொடி உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேகப் பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைப்பெற்றது.

  • Thiruvarur Subramanya Swamy Temple Thaybhusa Festival!

    திருவாரூர் சுப்ரமணிய சுவாமி ஆலயத்தில் தைபூச திருவிழா!


     

  • Maha Kumbabishek ceremony at Sri Venkatesa Perumal Temple!

    ஸ்ரீ வெங்கடேச பெருமாள் ஆலயத்தில் அதிர்ஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா!

    திருவண்ணாமலை மாவட்டம் மாதலம்பாடி மதுரா கணேசபுரம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வெங்கடேச பெருமாள் ஆலய அதிர்ஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் விழா மிக விமர்சையாக நடைபெற்றது.

  • Mahalinga Swamy Temple Kumbakonam

    மகாலிங்க சுவாமி கோவில் தைப்பூச பெருவிழாவையொட்டி பஞ்சரத தேரோட்டம்!

    தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூரில் உள்ள மகாலிங்க சுவாமி கோவில் தைப்பூச பெருவிழாவையொட்டி பஞ்சரத தேரோட்டம் நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேர் வடம் பிடித்து இழுத்தனர்.

  • January 25 2024 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம்         – சாந்தம்
    ரிஷபம்         –  முயற்சி
    மிதுனம்     –   நலம்
    கடகம்         –  நன்மை  
    சிம்மம்         –   சினம்
    கன்னி         –    பாராட்டு
    துலாம்         –     அலைச்சல்
    விருச்சிகம்     –  கவனம்
    தனுசு         –     ஆக்கம்
    மகரம்         –    ஆர்வம்
    கும்பம்         –      சிரமம்
    மீனம்         –      மேன்மை
    சந்திராஷ்டமம்    –      கேட்டை

     

  • January 25 2024 thaipoosam

    ஜனவரி 25 – தைப்பூசம்
    சோபகிருது வருடம் – தை 11
    பவுர்ணமி
    25-ஜன-2024 வியாழன்
    தைப்பூசம்,
    கோவை, மருதமலை, பழநி முருகன்,
    நாகர்கோவில் நாகராஜா தேர்
    கரிநாள்
    நல்ல நேரம் : 10.30 – 12.00
    ராகு : 1.30 – 3.00
    குளிகை : 9.00 – 10.30
    எமகண்டம் : 6.00 – 7.30
    திதி : பவுர்ணமி
    திதி நேரம் : பவுர்ணமி இ 11.56
    நட்சத்திரம் : புனர்பூசம் கா 9.13
    யோகம் : அமிர்த யோகம்
    சந்திராஷ்டமம் : கேட்டை
    சூலம் : தெற்கு
    பரிகாரம் : தைலம்

     

  • murugan thaipoosam

    சந்திரன் கடகத்தில் தனது சொந்த வீட்டில் ஆட்சி பலத்துடன் பூச நட்சத்திரத்தில் இருந்து மகர ராசியில் இருக்கும் சூரியனை பார்க்கும் நாளே தைப்பூசம். சக்தியின் வெளிப்பாடும், தெய்வாம்சமும் பொருந்திய காலம் தை மாதம். தைப்பூச நாள் சிவன், அம்பாள், முருகனுக்கு உகந்த நாளாகும்.

    தினசரி கோயிலுக்கு சென்றாலும், செல்லாவிட்டாலும் வீட்டில் காலை, மாலை இரு வேளையும் காமாட்சியம்மன் விளக்கு அல்லது குத்துவிளக்கு ஏற்றி வைத்து அந்த ஜோதியை வணங்குவது பல காலமாக உள்ள சாஸ்திர சம்பிரதாய வழக்கம். ஆலயத்தில் இறைவனை தரிசித்த பின்னர் கற்பூர ஜோதியை வணங்கி கண்களில் ஒற்றிக் கொள்வது ஆலய வழிபாடுகளின் முக்கிய அம்சம்.

    தைப்பூசத்தின் சிறப்புகள் மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் சிவபெருமான் தனியாக நடனம் புரிவார்.நடன நிலையில் உள்ள சிவனை, நடராஜர் என வணங்குகிறோம். தைப்பூசத்தன்று உமாதேவியுடன் இணைந்து நடனம் ஆடுகிறார். இந்த நிலையை உமா மகேஸ்வரர் என்றழைக்கிறோம். ஆகவே இந்த தைப்பூச திருநாள் சிவசக்திக்கு உகந்த நாளாகும்.

    தேவ குருவான பிரகஸ்பதிக்கு பூசம் நட்சத்திரம் என்பதால் அன்றைய தினம் குரு வழிபாடு செய்வதும் சிறப்பு. பூச நட்சத்திர நாள் காவடி பிரியன் கந்தனுக்கு மிகவும் விசேஷமான நாள். இந்நாளில்தான் முருகப் பெருமான் வள்ளியை மணமுடித்தார். தாரகாசுரனை வதம் செய்ய தாய் பார்வதியிடம் வேல் வாங்கிய நாள். இந்நாளில் அனைத்து முருகன் ஸ்தலங்களிலும் விசேஷ பூஜைகள் நடைபெறும்.

    தைப்பூச நாளை காணிக்கை செலுத்தும் நாளாக முருக பக்தர்கள் கொண்டாடுகிறார்கள். பழங்கள், நெல், காய்கறிகள் எது விளைந்தாலும் அதை இறைவனுக்கு அர்ப்பணிக்க வேண்டும் என்பதற்காகவே காவடிகளில் அவற்றை வைத்து எடுத்து செல்வார்கள்.இந்த நாளில் உடலை வருத்தி நடைபயணம் மேற்கொண்டு முருகப் பெருமானை தரிசிப்பார்கள். தமிழகத்தில் உள்ள அறுபடை வீடுகளிலும், மருதமலை, சிக்கல், வயலூர், குன்றக்குடி, வல்லக்கோட்டை, திருப்போரூர், குன்றத்தூர், வடபழனி என அனைத்து முருகன் கோயில்களிலும் அபிஷேக ஆராதனைகள் விமரிசையாக நடைபெறும்.

  • Mangadu theppam thiruvizha

    தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பிரசித்தி பெற்ற மாங்காடு காமாட்சி அம்மன் கோவிலில் தெப்ப திருவிழா தொடங்கியது. முதல் நாளான நேற்று காலை 6 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு காமாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது.

    அதனை தொடர்ந்து கோ பூஜையுடன் நிகழ்ச்சி ஆரம்பமானது. தெப்பத் திருவிழாவின் முதல் நாளான நேற்று அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தெப்பத்தில் முதலில் வெள்ளீஸ்வரர் மூன்று சுற்றுகளும் அதனை தொடர்ந்து காமாட்சி அம்மன் எழுந்தருளி தெப்பத்தில் ஏழு சுற்றுகளும் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

     

    பின்னர் இரவு காமாட்சி அம்மன் யானை வாகனத்தில் திருவீதி உலா நடைபெற்றது. தெப்பத்தில் சென்றுவர குறிப்பிட்ட பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர் தெப்ப திருவிழாவை காண ஏராளமான பக்தர்கள் கோவில் ஜப்பம் அருகே குவிந்து இருந்தனர் அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்க மாங்காடு போலீசாரம் தீயணைப்பு வீரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

    நேற்று தொடங்கிய தெப்ப திருவிழாவானது வரும் 26 ஆம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. விழாவிற்கான ஏற்பாடுகள் அனைத்தும் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கோவில் செயல் அலுவலர் கவெனிதா மற்றும் பரம்பரை தர்மகர்த்தா மணலி. சீனிவாசன் ஆகியோர் செய்திருந்தனர்.