Blog

  • palani murugan kalyanam

    பழனி தைப்பூச திருவிழாவின் முக்கிய நிகழ்வான முத்துகுமாரசுவாமி  ,வள்ளி ,தெய்வானை திருக்கல்யாணம் வைபவம் நடைபெற்றது.  

    அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி அருள்மிகு பெரியநாயகியம்மன் கோயிலில் தைப்பூசப் பெருவிழா கடந்த ஜன.19 ல் திருக்கொடியேற்றத்துடன் துவங்கியது.  10 நாட்கள் நடைபெறும் விழாவை முன்னிட்டு தினமும் வள்ளி, தெய்வானை சமேதர் முத்துக்குமாரசாமி வெள்ளிக் காமதேனு, வெள்ளியானை, வெள்ளி ஆட்டுக்கிடா உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் நான்கு இரதவீதி உலா எழுந்தருளினார். வள்ளி, தெய்வானை சமேதர் முத்துக்குமாரசுவாமிக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.  

    பொற்சுண்ணம் இடித்தல் உள்ளிட்ட பல்வேறு சம்பிரதாய நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து தம்பதி சமேதர் சுவாமிக்கு பால், பன்னீர், இளநீர், விபூதி, பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 16 வகையான பொருட்களால் சோடஷ அபிஷேகமும், தொடர்ந்து சோடஷ உபச்சாரமும் நடைபெற்றது. தொடர்ந்து தம்பதி சமேதர் முத்துக்குமாரசாமி வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பெரிய வெள்ளித்தேரில் ஏற்றம் செய்யப்பட்டு பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுக்க தேர் நான்கு இரத வீதிகளிலும் ஆடி அசைந்து உலா வந்தது.

    நிகழ்ச்சியை ஆயிரக்கணக்கான பக்தர்கள் பார்த்து பரவசமடைந்து அரோகரா கோஷம் எழுப்பினர். நாளை மாலை தேரடியில் 4.30 மணிக்கு தைப்பூசத் திருத்தேரோட்டம் நடைபெறவுள்ளது. நிறைவு நாள் நிகழ்ச்சியாக வரும் ஜன.28 அன்று தெப்பத்தேர் உலா மற்றும் திருக்கொடி இறக்கம் நடைபெறுகிறது. நிகழ்ச்சியில் பழனிக்கோயில் இணை ஆணையர் மாரிமுத்து, அறங்காவலர் குழு தலைவர் சந்திரமோகன், அறங்காவலர்கள்,உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

  • January 24 2024 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம்         – வெற்றி
    ரிஷபம்         –  தனம்
    மிதுனம்     –   ஓய்வு  
    கடகம்         –  மறதி   
    சிம்மம்         –   சினம்
    கன்னி         –    உற்சாகம்
    துலாம்         –     நிறைவு
    விருச்சிகம்     –  செலவு   
    தனுசு         –     பகை
    மகரம்         –    நன்மை
    கும்பம்         –      பெருமை
    மீனம்         –      லாபம்
    சந்திராஷ்டமம்    –      அனுஷம்

  • January 24 2024 subamurthanaal

    ஜனவரி 24 – வளர்பிறை சுபமுகூர்த்த நாள்
    சோபகிருது வருடம் – தை 10
    சுபமுகூர்த்த நாள்
    24-ஜன-2024 புதன்
    குன்றக்குடி,
    திருவிடைமருதூரில் தேர்
    வளர்பிறை சுபமுகூர்த்த நாள்(காலை 9.00 – 10.30)
    நல்ல நேரம் : 9.00 – 10.30
    ராகு : 12.00 – 1.30
    குளிகை : 10.30 – 12.00
    எமகண்டம் : 7.30 – 9.00
    திதி : சதுர்த்தசி
    திதி நேரம் : சதுர்த்தசி இ 10.43
    நட்சத்திரம் : திருவாதிரை கா 7.43
    யோகம் : சித்த யோகம்
    சந்திராஷ்டமம் : அனுஷம்
    சூலம் : வடக்கு
    பரிகாரம் : பால்

     

  • Thai poosam viradham

    முருகப்பெருமானுக்கு உகந்த நாள் தைப்பூச திருநாள்.  தைப்பூச நாளில் வள்ளலார் முக்தியடைந்தார். இறைவன் ஒளிமயமானவர் என்பதை உணர்த்தும் வகையிலேயே தைப்பூச நாளில் ஜோதி தரிசனம் நடைபெறுகிறது.

    சிவபெருமான் உமாதேவியுடன் இருந்து சிதம்பரத்தில் ஆனந்த நடனம் ஆடி, தரிசனம் அளித்த நாள் தைப்பூசம் என்பர். தைப்பூச தினத்தன்று அடியார்கள் காவடி எடுத்தல், கற்பூரச்சட்டி எடுத்தல் போன்ற நேர்த்திக்கடன்களை நிறைவேற்றுவார்கள். இந்த நாளில் ஆறுபடை வீடுகள் உள்ளிட்ட அனைத்து முருகன் கோவில்களிலும், எல்லா சிவன் கோவில்களிலும் திருவிழாக்கள் நடைபெறுகின்றன.

    இயற்கையை வழிபடும் பாரம்பரியத்தின் ஒரு வெளிபாட்டை விளக்கும் தினமாகவும் தைப்பூசம் பெருமை பெறுகின்றது. தேவர்களின் குருவாகக் கொள்ளப்படும் பிரகஷ்பதி (குரு பகவான்) பூச நட்சத்திரத்தின் தேவதையாகக் கொள்ளப்படுகின்றார்.

    இவர் அறிவின் தேவதையாகவும் போற்றப்படுகின்றார். பதஞ்சலி, வியாக்கிரபாதர் ஆகிய முனிவர்கள் இருவருக்கும் சிவபிரானாகிய நடராஜப்பெருமான் சிவதாண்டவமாடிக் காணுப்படி செய்த நாளாகவும் தைப்பூசம் விளங்குகின்றது.

    அத்துடன் வாயுபகவானும், வர்ணபகவானும், அக்னி பகவானும் சிவபிரானின் அதீத சக்தியை உணர்ந்த நாளாகவும் இந்நாள் போற்றப்படுகின்றது. அதாவது இயற்கையை கட்டுப்படுத்தும் சக்தியாக இறைவனே உள்ளமையை உணர்த்தப்பட்ட புண்ணிய நாள்தான் இந்த தைப்பூச நன்னாளாகும்.*

    ஆறுமுகப் பெருமானின் அருளை அடைவதற்கு தைப்பூசம் உகந்த நாள். முருகப்பெருமானின் ஆறுபடை வீடுளிலும் முருகனடியார்கள் பலர் பாதயாத்திரையாக சென்று தைப்பூசத்தன்று முருகனை தரிசித்து விரதத்தை நிறைவு செய்யும் வழக்கத்தைக் கொண்டுள்ளனர்.

    'தைப்பூச திருநாளில் தொட்டதெல்லாம் துலங்கும்" என்பது பழமொழியாக அமைவதால்; ஏடு தொடக்கம், புதிர் எடுத்தல், புதி துண்ணல், பெண் குழந்தைக்கு காது, மூக்கு குத்துதல், திருமணப் பேச்சுக்கள் ஆரம்பித்தல், ஒப்பந்தங்கள் செய்தல் போன்ற நற்செயல்கள் மேற்கொள்கின்றனர்.

    தைப்பூச விரத முறை :

    தைப்பூசத்தன்று அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு திருநீறு, ருத்ராட்சம் அணிந்து சிவபெருமானை வழிபடுவர். பின்பு தேவாரம், திருவாசகம் போன்றவற்றைப் பாராயணம் செய்வர். தைப்பூசத்தன்று உணவு உண்ணாமல் 3 வேளைகளிலும் பால், பழம் சாப்பிடலாம். முருகப்பெருமானுக்கு உகந்த தைப்பூச விரதத்தை கடைபிடித்தால் வறுமை நீங்கி செல்வ செழிப்பு ஏற்படும். துன்பங்கள் நீங்கி இன்பம் பெருகும்.

    சஷ்டி கவசம், சண்முக கவசம், திருப்புகழ் போன்ற பாடல்களை அன்றாடம் பாராயணம் செய்து தைப்பூசத்தன்று பழனி முருகன் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்து விரதத்தை முடிப்பார்கள்.

  • January 23 2024 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம்         – போட்டி
    ரிஷபம்         –  பொறுமை
    மிதுனம்     –   நலம்
    கடகம்         –  லாபம்  
    சிம்மம்         –   இரக்கம்   
    கன்னி         –    சிந்தனை
    துலாம்         –     மறதி
    விருச்சிகம்     –  சோதனை  
    தனுசு         –     நட்பு
    மகரம்         –    வெற்றி
    கும்பம்         –      அசதி  
    மீனம்         –      புகழ்
    சந்திராஷ்டமம்    –      விசாகம்

  • January 23 2024 pradhosham

    ஜனவரி 23 – பிரதோஷம்
    சோபகிருது வருடம் – தை 9
    பிரதோஷம்
    23-ஜன-2024 செவ்வாய்
    காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் தேர்
    நல்ல நேரம் : 7.30 – 9.00
    ராகு : 3.00 – 4.30
    குளிகை : 12.00 – 1.30
    எமகண்டம் : 9.00 – 10.30
    திதி : திரையோதசி
    திதி நேரம் : திரையோதசி இ 9.56
    நட்சத்திரம் : மிருகசீரிசீ டம் கா 6.31
    யோகம் : மரணயோகம்
    சந்திராஷ்டமம் : விசாகம்
    சூலம் : வடக்கு
    பரிகாரம் : பால்

     

  • paranjothi eswarar koil kumbabishegam

    சிவகங்கை மாவட்டம் தஞ்சாகூர் ஸ்ரீ அரூபசக்தி ஞானாம்பிகை சமேத ஸ்ரீ பரஞ்ஜோதி ஈஸ்வரர் திருக்கோவில் ஆலய – அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக  பெருவிழா.

    சிவகங்கை மாவட்டம்  மானாமதுரை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட தஞ்சாகூர்   கிராமத்தில் ஸ்ரீலஸ்ரீ சிவகுமார மௌனகுரு சுவாமிகள் நல்லாசியுடன் ஆதி வில்வ வன ஷேத்திரம் என்னும் ஸ்ரீ அரூபசக்தி ஞானாம்பிகை சமேத ஸ்ரீ பரஞ்ஜோதி ஈஸ்வரர் திருக்கோவில் ஆலய – அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக  பெருவிழா  காலை மங்கள இசை பாராயணம் வேத பாராயணம் நான் மறை போற்றும் நாயகன் பரஞ்ஜோதிஸ்வரருக்கு  நான்காம் கால வேள்விகள் தீபாராதனையுடன்.தொடங்கி பரிவார கலசங்கள் அனைத்து மூல மூர்த்திகளின் விமானங்கள் புறப்பாடாகி  அருள்மிகு பரஞ்ஜோதிஸ்வரர். ஞானாம்பிகை ராஜகோபுரத்திற்கு  மஹா கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து அருள்மிகு ஞானாம்பிகை உடனுறை பரஞ்ஜோதிஸ்வரர் மூலஸ்தான கும்பாபிஷேகம் மஹா அபிஷேகம் கோ பூஜை மஹா தீபாராதனை போன்ற பூஜைகள் நடைபெற்றது.

    இக்கும்பாபிஷகம் விழாவை காண சிவகங்கை மாவட்டம் மற்றும் பல்வேறு மாவட்டங்களில்  இருந்து சுமார்  2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை புரிந்து சாமி தரிசனம் செய்தனர்.

     

  • kodhanda rameswarar koil kumbaishegam

    கோவில்பட்டி அருகேயுள்ள புகழ்பெற்ற அகிலாண்டேஷ்வரி அம்பாள் உடனுறை கோதண்டராமேஸ்வரர் திருக்கோவில் மஹாகும்பாபிஷேக விழா – திரளான பக்தர்கள் பங்கேற்பு

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கயத்தாறில் புகழ்பெற்ற அகிலாண்டேஷ்வரி அம்பாள் உடனுறை கோதண்டராமேஸ்வரர் திருக்கோவில் மஹாகும்பாபிஷேக விழா இன்று வெகுவிமர்சையாக நடைபெற்றது. சுவாமி, அம்பாள் மற்றும் பரிவாரமூர்த்திகள் விமானகோபுரங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு, தீபாரதனையுடன் மஹாகும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கயத்தாறில் புகழ்பெற்ற அகிலாண்டேஷ்வரி அம்பாள் உடனுறை கோதண்டராமேஸ்வரர் திருக்கோவில் உள்ளது.இக்கோவில் மஹாகும்பாபிஷேக திருவிழா கடந்த 20ந்தேதி கணபதி ஹோமம் மற்றும் யாகசாலை பூஜைகளுடன் தொடங்கியது. 4 கால யாகசாலை பூஜைகள் முடிவடிந்த நிலையில் இன்று மஹாகும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. காலையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்ற நிலையில் தொடர்ந்து யாகசாலையில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வைக்கப்பட்டு இருந்த புனித நீர் திருக்குடங்கள் மேள தளம், வேதமந்திரங்கள் முழங்க ஊர்வலமாக கோவில் வளாகத்தினை சுற்றி எடுத்து வரப்பட்டது.

     

    இதையெடுத்து அகிலாண்டேஷ்வரி அம்பாள் உடனுறை கோதண்டராமேஸ்வரர் மற்றும் பரிவார மூர்த்திகள் விமான கோபுரங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு தீபாரதனை நடைபெற்றது. தொடர்ந்து சுவாமி, அம்பாள் மற்றும் பாரிவார மூர்த்திகள் மூலவர்களுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாரதனை நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மேலும் மஹாகும்பாபிஷேகத்தினை முன்னிட்டு பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது

  • January 22 2024 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம்         – பெருமை
    ரிஷபம்         –  அமைதி
    மிதுனம்     –   உழைப்பு  
    கடகம்         –  ஆக்கம்
    சிம்மம்         –   ஆதரவு  
    கன்னி         –    பாராட்டு
    துலாம்         –     பகை
    விருச்சிகம்     –  நஷ்டம்
    தனுசு         –     விருத்தி  
    மகரம்         –    நட்பு
    கும்பம்         –      முயற்சி
    மீனம்         –      இன்பம்
    சந்திராஷ்டமம்    –      சுவாதி

  • January 22 2024 subamuhurthanaal

    ஜனவரி 22 – வளர்பிறை சுபமுகூர்த்த நாள்
    சோபகிருது வருடம் – தை 8
    சுபமுகூர்த்த நாள்
    22-ஜன-2024 திங்கள்
    வளர்பிறை சுபமுகூர்த்த நாள்(காலை 6.00 – 7.30)
    நல்ல நேரம் : 6.00 – 7.30
    ராகு : 7.30 – 9.00
    குளிகை : 1.30 – 3.00
    எமகண்டம் : 10.30 – 12.00
    திதி : துவாதசி
    திதி நேரம் : துவாதசி இ 9.42
    நட்சத்திரம் : ரோகிணி கா 6.03
    யோகம் : அமிர்த-சித்த யோகம்
    சந்திராஷ்டமம் : சுவாதி
    சூலம் : கிழக்கு
    பரிகாரம் : தயிர்