Blog

  • நிலையான வித்தையை அருளும் சரஸ்வதி பூஜை

     

    நவராத்திரியின் ஏழாம் நாளன்று நான்முகன் நாயகி  கலைவாணி ,நாதஸ்வரூபமாக எழுந்தருளி  நமக்கு ஞானத்தை தந்தருளுகிறாள். நவராத்திரியின் ஏழாவது நாளில் மூல நட்சத்திரம் உச்சமாக இருக்கும்போது,சரஸ்வதி தேவியை முறையாக  ஆவாகனம் செய்ய வேண்டும். கல்வியின் தெய்வமான சரஸ்வதி ஒரு  ஞான சக்தி.

    அதற்கு அடுத்து வரும் எட்டாவது நாளில் வாழ்க்கையில் எட்டாத பல செயல்களையும் செய்யும் திறனை நமக்கு அருளி, நமக்கு ஏற்றத்தை அளிக்கிறாள். பண்டிகையின் ஒன்பதாவது நாளில் அழியாத கல்வி செல்வத்தை அருளுகிறாள். கற்ற வித்தை என்றும் நிலையானது என்பதை நமக்கு உணர்த்துகிறாள் தேவி சரஸ்வதி.

    நவராத்திரியின் பத்தாவது நாள் விஜயதசமி. விஜயம் என்றாலே வெற்றி.தீமைகளில் இருந்து  நன்மையை காப்பாற்றி அருளும், விஜயதசமி  அன்று தொடங்கும் எந்த ஒரு  காரியமும்  வெற்றி பெறும் என்பதே விஜயதசமி கொண்டாடப்படுவதற்கான நோக்கம். நவராத்திரியின்போது துர்க்கா, லட்சுமி, சரஸ்வதி என்ற இம்மூவரையும் பூஜிப்பவர்களுக்கு எதிலும் வெற்றி கிடைக்கும் என்பது நம்பிக்கை.

    கல்வி, தொழில் செழிக்கவும், குழந்தைகளின் கல்வி சிறந்து விளங்கவும்  சரஸ்வதி தேவியை வணங்க வேண்டும். சர‌ஸ்வ‌தி பூஜைய‌ன்று வீடுக‌ளிலு‌ம், அலுவலக‌ங்க‌ளிலு‌ம் பூஜைக‌ள் செ‌ய்து வ‌ழிபடுவது வழ‌க்க‌ம். அவ்வாறு வ‌ழிபாடு செ‌ய்வத‌ற்கு மு‌ன்பு, வ‌ழிபாடு செ‌ய்ய‌விரு‌க்கு‌ம் இட‌த்தை தூ‌ய்மை‌ப்படு‌த்த வே‌ண்டு‌ம். மூலப் பரம்பொருளான விநாயகரை மனதில் நினைத்து, மஞ்சளில் பிள்ளையார் பிடித்து அதனை சரஸ்வதி பூஜையில் வைப்பதுடன், விநாயகரை வணங்கிய பின்னரே, சரஸ்வதிக்கான பூஜையை தொடங்க வேண்டும். சரஸ்வதி பூஜையின் போது ‘துர்கா லட்சுமி சரஸ் வதீப்யோ நம’ என்று கூறி பூஜையை தொடங்க அனைத்தும் நன்மையில் முடியும்.

    கல்விக்கு அதிபதியான சரஸ்வதி அன்னையின் முன்பு, புத்தகங்களை  வைத்து சந்தான பொட்டிட வேண்டும். வாழை இலை விரித்து அதில் சுண்டல், சர்க்கரை பொங்கல், புளியோதரை, எலுமிச்சை சாதம் போன்றவற்றை சரஸ்வதி தேவிக்கு நிவேதனமாக படைக்கலாம். கூடவே அவல், பொரி, கடலை மற்றும் பழங்களும் வைக்க வேண்டும். கலைமகளுக்கு உகந்த  செம்பருத்தி, ரோஜா, வெண் தாமரை போன்ற மலர்களை அன்னைக்கு அணிவிக்கலாம்.  நவராத்திரி ஒன்பது நாட்களும் விரதமிருந்து பூஜை செய்ய இயலாதவர்கள், சரஸ்வதி பூஜை அன்று மட்டும் அம்மனை பூஜித்து வணங்கினாலே மூன்று தேவியரின் அருளைப் பெற முடியும்.  அன்று நாம் செய்யும் ஆயுத பூஜை வழிபாடும் வாழ்வில் நம் உயர்வுக்கு பெரிதும்  உதவும். ஆயுத பூஜையன்று சிறிய ஆணி முதல் பெரிய இயந்திரங்கள் வரை, இறைபொருளாகப் பாவித்து ,கழுவி சுத்தமாகத் துடைத்து,பொட்டிட்டு, பூ வைத்து,பூஜைகள் செய்வது சிறப்பம்சமாகும்.

     

     

  • சபரிமலை நடை செப்டம்பர் 16 திறப்பு…

    புரட்டாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை செப்டம்மபர் 16-ம் தேதி திறக்கப்படுகிறது. 21 வரை நடை திறந்திருக்கும். 16-ம் தேதி மாலை ஐந்து மணிக்கு மேல்சாந்தி உண்ணிகிருஷ்ணன் நம்பூதிரி நடை திறந்து விளக்கு ஏற்றுவார். தொடர்ந்து ஐயப்பன் விக்ரகத்தில் அபிஷேகம் செய்யப்பட்ட திருநீறு பிரசாதமாக வழங்கப்படும். இரவு 10.00 மணிக்கு நடை அடைக்கப்படும். 17-ம் தேதி அதிகாலை 5.00 மணிக்கு நடை திறந்ததும் வழக்கமான பூஜைகள் நடைபெறும். எல்லா நாட்களிலும் காலை 5.30 முதல் 11.30 வரை நெய்யபிஷேகம் நடைபெறும். உஷபூஜை, உச்சபூஜை, தீபாராதனை, புஷ்பாபிஷேகம், அத்தாழபூஜை போன்ற பூஜைகளுடன் களபாபிஷேகம், சகஸ்ரகலசம் போன்ற பூஜைகளும் நடைபெறும். 17 முதல் 21-ம் தேதி வரை எல்லா நாட்களிலும் இரவு 7.00 மணிக்கு படிபூஜை நடைபெறும். 21-ம் தேதி இரவு 10.00 மணிக்கு நடை அடைக்கப்படும்.

  • குமரி பகவதியம்மன் நவராத்திரி விழா…

    பிரசித்திப்பெற்ற கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் முக்கிய விழாக்களில் ஒன்றான நவராத்திரி செப்டம்பர் 21ஆம் தேதி தொடங்கி 30ஆம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது. முதல் நாள் திருவிழா 21-ஆம் தேதி அம்பாள் கொலுமண்டபத்தில் எழுந்தருளலுடன் தொடங்குகிறது. விழா நாள்களில் சிறப்பு அபிஷேகம், அன்னதானம், ஆன்மிக உரை, கலை நிகழ்ச்சிகள், அம்பாள் வீதியுலா வருதல் ஆகியன நடைபெறும். 10-ஆம் நாள் திருவிழாவான செப். 30ஆம் தேதி அதிகாலை 4.30 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற உள்ளது. அன்று தேவி வெள்ளிக் குதிரை வாகனத்தில் சிறப்பு அலங்காரத்துடன் பரிவேட்டைக்கு புறப்படுகிறார். அப்போது துப்பாக்கி ஏந்திய போலீஸார் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்படும். பரிவேட்டை ஊர்வலத்தின் முன் குமரி பகவதியம்மன் பக்தர்கள் சங்கம் சார்பில் யானை, குதிரை அணிவகுக்க தப்பாட்டம், தையம் ஆட்டம், செண்டைமேளம், தேவராட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், முத்துக்குடை ஊர்வலம் ஆகிய கலை நிகழ்வுகள் நடைபெறும். வழிநெடுகிலும் திரளான பக்தர்கள் அம்மனுக்கு சுருள் வைத்து வணங்குகின்றனர். இந்த ஊர்வலம் விவேகானந்தபுரம், சுவாமிநாதபுரம், பழத்தோட்டம், பரமார்த்தலிங்கபுரம் வழியாக மாலை 6.30 மணிக்கு மகாதானபுரம் காரியக்கார மடத்தை சென்றடையும். அங்கு அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடைபெறும். இதைத் தொடர்ந்து இரவு 7 மணிக்கு அம்மன் பாணாசூரன் என்ற அரக்கனை வதம் செய்யும் பரிவேட்டை நடைபெறும். இதில் தென் மாவட்டங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள். பின்னர் அங்கிருந்து பல்லக்கு வாகனத்தில் பஞ்சலிங்கபுரம், விவேகானந்தபுரம் வழியாக செல்லும் அம்மனுக்கு முக்கடல் சங்கமத்தில் ஆறாட்டு நடைபெறும். தொடர்ந்து அம்பாள் கிழக்கு வாசல் வழியாக கோயிலுக்குள் பிரவேசிப்பார்.

  • ஏழுமலையான் ரகசியங்கள்…

    திருப்பதி ஏழுமலையான் சிலையில் பல சுவாரசியங்களும், ரகசியங்களும் அடங்கி உள்ளன. திருப்பதி ஏழுமலையான் சிலை 250 கோடி வருடம் வயதான “சிலாதோரணம்” என்ற அபூர்வ பாறையால் உருவானதாகும். 3,000 அடி உயரத்தில் உள்ள திருமலையில் அதிகாலை 4.30 மணிக்கு குளிர்ந்த நீர், பால் மற்றும் திரவியங்களால் அபிஷேகம் செகிறார்கள் ஆனால், அபிஷேகம் முடிந்தவுடன் ஏழுமலையானுக்கு வியர்க்குமாம். அபிஷேகத்தின் போது ஏழுமலையான் தனது மூன்றாவது கண்ணை திறக்கிறார் என்ற ஐதீகம் உள்ளது. பொதுவாக பச்சைக்கற்பூரத்தை கருங்கல்லிலோ அதனால் ஆன சிலகளிலோ பூசினால் உடனே வெடித்துவெடும் ஆனால் ஏழுமலையான் திருவுருவச்சிலைக்கு நாள் முழுவதும் பச்சை கற்பூரம் சாத்தினாலும் ஒன்றும் ஆவதில்லை. எந்தக் கருங்கல் சிலையானாலும் எங்காவது ஒர் இடத்தில் சிற்பியின் உளி பட்டிருக்கும் இடம் தெரியும். உலோகச் சிலையானாலும் உலோகத்தை உருக்கி வார்த்த இடம் தெரியும். ஆனால் ஏழுமலையான் திருவுருவச் சிலையில் அப்படி எதுவும் அடையாளம் தெரியவில்லை. எந்த கருங்கல் சிலையை எடுத்துக்கொண்டாலும் சுரசுரப்பாக இருக்கும். ஆனால், ஏழுமலையான் திருமேனியில் நுணுக்க வேலைப்பாடுகள் எல்லாம் மெருகு போடப்பட்டது போல் இருக்கின்றன.

  • ஏழுமலையான் ரகசியங்கள்…

    திருப்பதி ஏழுமலையான் சிலையில் பல சுவாரசியங்களும், ரகசியங்களும் அடங்கி உள்ளன. திருப்பதி ஏழுமலையான் சிலை 250 கோடி வருடம் வயதான “சிலாதோரணம்” என்ற அபூர்வ பாறையால் உருவானதாகும். 3,000 அடி உயரத்தில் உள்ள திருமலையில் அதிகாலை 4.30 மணிக்கு குளிர்ந்த நீர், பால் மற்றும் திரவியங்களால் அபிஷேகம் செகிறார்கள் ஆனால், அபிஷேகம் முடிந்தவுடன் ஏழுமலையானுக்கு வியர்க்குமாம். அபிஷேகத்தின் போது ஏழுமலையான் தனது மூன்றாவது கண்ணை திறக்கிறார் என்ற ஐதீகம் உள்ளது. பொதுவாக பச்சைக்கற்பூரத்தை கருங்கல்லிலோ அதனால் ஆன சிலகளிலோ பூசினால் உடனே வெடித்துவெடும் ஆனால் ஏழுமலையான் திருவுருவச்சிலைக்கு நாள் முழுவதும் பச்சை கற்பூரம் சாத்தினாலும் ஒன்றும் ஆவதில்லை. எந்தக் கருங்கல் சிலையானாலும் எங்காவது ஒர் இடத்தில் சிற்பியின் உளி பட்டிருக்கும் இடம் தெரியும். உலோகச் சிலையானாலும் உலோகத்தை உருக்கி வார்த்த இடம் தெரியும். ஆனால் ஏழுமலையான் திருவுருவச் சிலையில் அப்படி எதுவும் அடையாளம் தெரியவில்லை. எந்த கருங்கல் சிலையை எடுத்துக்கொண்டாலும் சுரசுரப்பாக இருக்கும். ஆனால், ஏழுமலையான் திருமேனியில் நுணுக்க வேலைப்பாடுகள் எல்லாம் மெருகு போடப்பட்டது போல் இருக்கின்றன.

  • கல்விக் கடவுளைப் போற்றும் கூத்தனூர்

     

    நவராத்திரி நாளில்,கல்வி செல்வம் ,வீரம் என மூன்று செல்வங்களை அருளும் நாயகிகளை வணங்கி வருகிறோம். கடைசி மூன்று நாட்களின் கல்வியின் நாயகியான கலைமகளைக் கொண்டாடுகிறோம். அறிவு தரும் அன்னையான கூத்தனூர் மஹா சரஸ்வதி ஆலயத்தைப் பற்றி தெரிந்துக் கொள்வோம்.

    மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் செல்லும் சாலையில் பூந்தோட்டம் என்னும் ஊருக்கு அருகில் உள்ள கூத்தனூரில் அமைந்துள்ளது இத்திருக்கோவில்.

    ஒரு முறை படைப்பு தொழிலுக்கு நாயகனான நான்முகனுக்கும், கல்வி,கேள்விகளுக்கு நாயகியான நாமகளுக்கும் இடையே ஒரு வாதம் எழுந்தது. பிரம்ம லோகத்துக்கே தங்களால் தான் பெருமை என்று இருவருக்குள்ளும் வாதம் எழ,ஒருவரை ஒருவர் சபித்துக் கொண்டனர். இதனால் பூலோகத்தில் சோழ நாட்டில்  புண்ணியகீர்த்தி, சோபனை என்ற தம்பதியினருக்கு பகுகாந்தன் என்ற மகனாகவும், சிரத்தை என்ற  மகளாகவும் அவதரித்தனர். அவர்களுக்கு திருமணவயது வந்த போது பெற்றோர் வரன் தேட  ஆரம்பித்தனர்.  அப்போது இவர்கள் இருவருக்கும் தாங்கள் யார் என்பது நினைவுக்கு வந்தது. இருவரும் சிவனை வழிபட்டனர். சிவபெருமான் அவர்கள்  முன் தோன்றி, இப்பிறவியில் சகோதரர்களாக அவதரித்த நீங்கள், திருமணம் செய்வது என்பது இயலாத காரியம்.   எனவே, நீ மட்டும் இங்கே தனியாக கோயில் கொண்டிரு.  இங்கு வரும் பக்தர்களுக்கு  கல்விச்  செல்வத்தை வழங்கு” என்று சரஸ்வதி தேவிக்கு  அருள்பாலித்தார். அதன்படி கன்னி சரஸ்வதியாக கூத்தனூர்  ஆலயத்தில் அருள்பாலிக்கிறாள் என்கிறது தல வரலாறு.

     

                                                                                              

    திருத்தலத்தின்  சிறப்பு

    தமிழ்நாட்டிலேயே ஸ்ரீசரஸ்வதிதேவிக்கு இத்திருக்கோவில் ஒன்று மட்டுமே உள்ளது.கங்கை, யமுனை, சரஸ்வதி கலக்கும் இத்தலம் தட்சிணதிரிவேணிசங்கம் எனப்  பெயர் பெற்றது. இத்திருக்கோயிலில் குடிகொண்டுள்ள சரஸ்வதி தேவி வெண் தாமரைப் பூவில் வெண்பட்டு உடுத்தி அமர்ந்திருக்கிறார். வலது கரத்தில் சின்முத்திரையுடனும், இடது கரத்தில் புத்தகத்துடனும், வலது மேல் கையில் அட்சர மாலையுடனும், இடது மேல் கையில் அமுத கலசத்துடனும், ஜடாமுடியுடனும் காட்சி தருகிறார் சரஸ்வதி தேவி. கையில் வீணையுடன் கிழக்கு திசையில் காட்சி தருகிறார். இக்கோயிலில் துர்க்கையும், மகாலட்சுமியும், பெருமாளும் வீற்றிருந்தாலும், சரஸ்வதி தேவிக்கேன்றே உள்ள தனிக் கோயிலாகவே அறியப்படுகிறது.

     

    குலோத்துங்க சோழ மன்னனின் அவைப் புலவராக இருந்த ஒட்டக்கூத்தரின் . கவிபாடும் ஆற்றலைக் கண்ட குலோத்துங்க சோழன், ஒரு ஊரையே பரிசாகக் கொடுத்தார். அப்படி பரிசாக வழங்கப்பட்ட ஊர்தான், இன்று கூத்தனூர் என அழைக்கப்படுகிறது.  ஒட்டகூத்தர் பரணி நூல் பாட சரஸ்வதி தேவி உதவி புரிந்ததாக கூறப்படுகிறது.

     திருத்தலத்தின் விஷேசங்கள்:

    இத்திருக்கோயிலில் வசந்த நவராத்திரியும், புரட்டாசி மாதத்தில் வரும்  சாரதா நவராத்திரியும் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. புரட்டாசி நவராத்திரி 9 நாட்களும்  ஊஞ்சல் உற்சவம் நடைபெறுகிறது.குறிப்பாக சரஸ்வதி பூஜை அன்று பாத தரிசனமும், விஜயதசமியன்று புருஷோத்தம பாரதிக்கு அன்னையின் அருள் கிடைத்ததால் பிள்ளைகளை அன்றைய தினம் சரஸ்வதியை தரிசித்து பள்ளியில் சேர்ப்பதும் இத்தலத்தில் மிகவும் விஷேசம்.

     ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி தினத்தன்று மாலை அன்னைக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. அன்னையின் மூல நட்சத்திர நாளிலும், கும்பாபிஷேக தினமான ஆனி மாதம் மக நட்சத்திர நாளிலும் ஸம்வத்ஸரா அபிஷேகம் நடைபெறுகிறது. மேலும் சரஸ்வதிக்குரிய தினமான புதன் கிழமைகளிலும், பௌர்ணமி தினங்களிலும் தேனும் பாலும் அபிஷேகம் செய்வித்தால் ஆயக் கலைகளை அன்னையின் அருளால் பெற முடியும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.

      இத்தலத்தில் அருள்பாலித்து  வரும் அன்னை சரஸ்வதி தேவியை வழிப்பட்டு கல்வி அறிவு பெற்று மேன்மை அடைவோம்.

     

  • கருட சேவையின் சிறப்பு

    மகாவிஷ்ணுவின் முதல் பக்தனாக இருப்பவர் கருட பகவான் என்று புராணங்கள் தெரிவிக்கின்றன. மகாவிஷ்ணு கருடனை தனது வாகனமாக தேர்ந்தெடுத்ததால், பிரம்மோற்சவத்தின் போது மற்ற வாகனங்களைவிட கருட வாகனத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. கருடசேவையின் போது தமிழ்நாட்டின் ஸ்ரீ வில்லிபுத்தூரில் இருந்து வரும் துளசி மாலை மூலவருக்கு அணிவிக்கப்படும். இந்த மாலையுடன் மூல விக்ரக மூர்த்தி அணிந்து இருக்கும் தங்கச்சங்கலி, மகரகண்டி, லட்சுமிஹரம் போன்ற நகைகளை கருடசேவையின் போது மட்டும் உற்சவமூர்த்தியான மலையப்பசாமிக்கு அணிவித்து அலங்கரிப்பார்கள். இந்த நகைகள் அணிந்து வரும் மலையப்பசாமியை தரிசனம் செய்வது கண்கொள்ளாக் காட்சியாகும். ஏழுமலையானையும், கருடனையும் ஒரு சேர வணங்குவதாக நினைத்து, கருடச்சேவையை காண லட்சக்கணக்கிலான பக்தர்கள் திருமலையில் கூடுவார்கள்.

  • புரட்டாசி சனிக்கிழமை விரதம்

    புரட்டாசி சனிக்கிழமை விரதம் இருப்பவர்கள் முதலில் வீட்டில் பூஜை அறையை சுத்தம் செய்து கோலமிட வேண்டும். பின்னர் அலமேலுமங்கையுடன் கூடிய வேங்கடேசப் பெருமாள் படத்தை அலங்கரிக்க வேண்டும். இரு பக்கங்களிலும் ஐந்து முக குத்து விளக்கை ஏற்றி வைக்க வேண்டும். பூஜைக்குரியனவற்றை சேகரித்து வைத்து, ராகு காலம், எமகண்டம் நேரம் இல்லாமல் நல்ல நேரத்தில் மாவிளக்கேற்றி பூஜிக்க வேண்டும். சர்க்கரைப்பொங்கல், வடை, எள் சாதத்தை நிவேதனமாக படைக்கலாம்.
    ஒவ்வொரு வருடமும் புரட்டாசி மாதம் சனிக்கிழமையன்று மாவிளக்கு ஏற்றி, பூஜைகள் செய்ய வேண்டும். அரிசிமாவு, வெல்லம் ஆகியவற்றை கலந்து மாவில் ஒரு பகுதியை இளநீர் விட்டு பிசைந்து தீபம் போல் செய்து, மீதி மாவை குவித்து அதன்மேல் பஞ்சினால் பூவத்திபோல் செய்து அதை தீபத்தில் வைத்து சுத்தமான நெய் ஊற்றி விளக்கேற்ற வேண்டும். அதன் பிறகு பூஜைகள் செய்து ஆரத்தி காட்ட வேண்டும். பூஜை முடிந்ததும் தேங்காயை துருவி, மாவுடன் அதனை கலந்து அனை வருக்கும் பிரசாதமாக கொடுக்கலாம். துளசி தண்ணீர், புளி சாதம் மற்றும் எலுமிச்சை சாதம் வைத்து வேங்கடவனை வழிபடுவதும், துளசி, தாமரை மற்றும் குங்குமத்தால் அர்ச்சிப்பதும் விசேஷம்.
    இந்த புரட்டாசி சனிக்கிழமை விரதத்தை மேற்கொண்டால் குலதெய்வத்தின் அருள் கிடைக்கும். செல்வம் செழிக்கும். துன்பங்கள் விலகும். எந்த விரதமானாலும் பகலில் தூங்கக் கூடாது. வெற்றிலை, பாக்கு போடக்கூடாது. மது, மாமிசத்தை விலக்கி பாவம் செய்வதை தவிர்க்க வேண்டும். அனைத்து உயிர்களிடத்தும் கருணை உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

  • திருவேங்கடவன் கதை…

    ஒரு முறை முனிவர்கள் எல்லோரும் கூடி கங்கை நதி கரையில் யாகம் ஒன்றை நடத்த திட்டமிட்டனர். அப்போது அங்கே நாரதர் தோன்றி, ‘மும்மூர்த்திகளில் யார் பெரியவர்?, யாருக்கு ‘அவிர்பாகம்’ கொடுப்பீர்கள்?’ என்று கேட்டார். இது முனிவர்களை குழப்பத்தில் ஆழ்த்தியது. அவர்கள் பிருகு முனிவரிடம் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும்படி கேட்டுக் கொண்டனர். பிருகு முனிவர் மும்மூர்த்திகளை தேடிச் சென்றார். முதலில் பிரம்மனிடம் சென்றார். அங்கு பிரம்மா வேதத்தை ஓதி கொண்டிருந்தார். இன்னொரு வாயினால் நாராயண நாமத்தை உச்சரித்துக் கொண்டு இருந்தார். பிருகு முனிவரை கவனிக்கவில்லை. அடுத்ததாக கயிலாயத்துக்கு சிவனை காணச் சென்றார், பிருகு முனிவர். அங்கு சிவன் தியானத்தில் இருந்தார். பிருகு முனிவரை கவனிக்க முடியாமல் போய்விட்டது. ஆகவே முனிவர் வைகுண்டத்தை நோக்கி சென்றார். அங்கு மகாவிஷ்ணு திருமகளுடன் இருந்தார். பிருகு முனிவரை வரவேற்கவில்லை. அதனால் ஆத்திரம் அடைந்த பிருகு முனிவர், விஷ்ணுவின் மார்பு மீது தன் காலால் உதைத்து விட்டார். விஷ்ணு கோபப்படவில்லை. மாறாக வாஞ்சையுடன் பிருகு முனிவரின் காலை வருடினார். பிருகு முனிவரின் செயலால் ஆத்திரமடைந்த திருமகள், திருமாலின் செய்கையால் மேலும் ஆவேசமடைந்து அவரை பிரிந்து வைகுண்டத்தை விட்டு பூலோகம் வந்து விட்டாள். அங்கு கொல்வறாழர் என்னும் ஊரில் தங்கினாள். திருமகளை விட்டு பிரிந்து இருக்க முடியாத மகா விஷ்ணுவும், வைகுண்டத்தை விட்டு கீழே இறங்கி சேஷசலத்தை தன் இருப்பிடமாக தேர்ந்தெடுத்துக் கொண்டார். இது விஷ்யோத்தர மஹாதமியத்தில் உள்ள கதையாகும்.

  • நவராத்திரி தெரிந்ததும்… தெரியாததும்…..

     

    துர்க்கை, லட்சுமி, சரஸ்வதிஎன்ற முப்பெரும் சக்தி  ஒன்றிணைந்து மகிஷாசுரமர்த்தினியாக  உருவெடுத்து மகிஷனை அழித்ததே சாரதா நவராத்திரி.

    நவராத்திரி 9 நாட்களும் அன்னையை பூஜிக்க முடியாதவர்கள் சப்தமி, அஷ்டமி, நவமி அதாவது 7, 8,9வது  நாட்களில் வழிபடலாம். அதுவும் முடியாதவர்கள் 8-வது நாளான  அஷ்டமி அன்றாவது  நிச்சயம் தேவியை ஆராதிக்க வேண்டும்.

     நவராத்திரி நாட்களில் வீட்டுக்கு வரும் பெண்களை அம்பிகையாகவே நினைத்து கவுரவிக்க வேண்டும். அவர்களுக்கு தாம்பூலம், மஞ்சள், கண்ணாடி, சீப்பு, குங்குமச் சிமிழ், தேங்காய், பழம், புத்தகங்கள், ரவிக்கைத் துணி கொடுத்து மரியாதை செய்யலாம்.

    நவராத்திரி 9 நாட்களும் 9 கன்னியரை சக்தியாக பூஜிப்பதும் ,தினமும் 9 பெண்களுக்கு நலங்கு வைத்து மஞ்சளிட்டு அன்னதானம் கொடுப்பதும் தேவியை மகிழ்விக்கும்.

    நவராத்திரி முதல் நாளன்று ஒருவர், 2-வது நாள் ரெண்டு பேர் என்று அதிகரித்து 9-வது நாள் 9 பேரை பூஜிப்பது நல்லது.

    மைசூரில் நவராத்திரியுடன் சேர்த்து  10-வது நாளான விஜயதசமியையும் சேர்த்து கொண்டாடுகிறார்கள். 10-வது நாள் தசமி என்பதால் அன்றைய தினம் தசராத்திரி என்கிறார்கள். அதுவே சுருக்கமாக தசரா என்று அழைக்கப்படுகிறது.

     மேற்கு வங்கத்தில் நவராத்திரியை துர்க்கா பூஜை, காளி பூஜை என்றும்ம,மிகப்பெரிய விழாவாகக் கொண்டாடுகிறார்கள்.

     உத்தரபிரதேசம், டெல்லி, பஞ்சாப், அரியானா மாநிலங்களில் விஜயதசமி தினத்தன்று ராவணனை ராமபிரான் அழித்ததை நினைவு கூறும் வகையில், “ராம்லீலா” கொண்டாடுகிறார்கள்.

     நவராத்திரி நாட்களில் தேவி மகாத்மியம் தேவி பாகவதம் படிப்பதும், கேட்பதும் நமது பாவங்களை விரட்டும்.

     

                                                                               

    நவராத்திரி கடைசி நாளன்று துர்க்கை இமயமலைக்கு திரும்பிச் செல்வதாக ஐதீகம்.அதனால், வட மாநிலங்களில் துர்க்கை சிலைகளை கங்கையில் போடும் வழக்கம் உள்ளது.

    ஒரு காலத்தில் ,நவராத்திரி பூஜையின் போது எருமை மாடுகளைப் பலி கொடுக்கும் வழக்கம் மேற்கு வங்கத்தில் இருந்தது.

     சங்கீதப் பிரியையான அம்பிகையை மகிழ்விக்க ,நவராத்திரி நாட்களில் தினமும் ஏதாவது ஒரு பாடலாவது பாடினால் நலம்.

    இந்தியாவில் சரஸ்வதி தேவிக்கு இரண்டே இரண்டு இடங்களில் தான் கோவில் உள்ளது. ஒன்று தமிழ்நாட்டில் உள்ள கூத்தனூர், மற்றொன்று ஆந்திராவில் பாசர் என்னும் கிராமத்தில் உள்ளது.

    தமிழ்நாட்டில் நவராத்திரி கொலு வைக்கப்படுவது போல ஜப்பானிலும் பொம்மை கொலுவில், நம்மூர் சரஸ்வதி போல பெண்-டென் என்ற தேவதையை வணங்குகிறார்கள். அந்த தேவதையும் சரஸ்வதி வைத்திருப்பது போல கையில் புத்தகம் வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

     “ஓம் ஸ்ரீமகா சரஸ்வதி சரணம்” என்ற நாமத்தை மாணவ-மாணவிகள் தினமும் 9 தடவையும், வேலையில் இருப்பவர்கள் 18 தடவையும் முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்கள் 108 தடவையும் சொல்லி வந்தால் பொன்,பொருள் சேர்க்கையுடன் புத்திக் கூர்மை உண்டாகும்.

    சந்திரகுப்தர் ஆட்சிக் காலத்தில் நவராத்திரி விழா ஒரு வீர விழாவாகக் கொண்டாடப்பட்டதாக அறிகிறோம்.மேலும் அக்பர் காலத்தில் தான்  தசரா திருவிழா கோலாகல நிலைக்கு மாறியது.

    காளி வழிபாடு  மேற்கு வங்க மக்கள் மத்தியில் மிகவும் முக்கியம் அம்மாநில மக்கள் சக்தி உபாசகர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.

    குஜராத்தில் நவராத்திரியின்  9 நாட்களும் பெண்கள் கும்மியடித்து ஆடும் கார்பா நடனம் சிறப்பு வாய்ந்தது.

    நவராத்திரி கோலத்தை செம்மண் கலந்து போட்டால், அம்பாள் மனமகிழ்ந்து நம் இல்லம் தேடி வருவாள்.