Category: ஆன்மீக செய்திகள்

ஆன்மீக செய்திகள்

  • திருத்தணியில் ஆடிக்கிருத்திகை திருவிழா….

    அறுபடை வீடுகளில் 5-ஆம் படைவீடாக திகழும் திருத்தணி முருகன் கோயில் ஆடிக்கிருத்திகை திருவிழா செவ்வாய்க்கிழமை தொடங்கி, வரும் 30-ஆம் தேதி வரை ஐந்து நாள்கள் நடைபெறுகிறது.

    இக்கோயிலில் முக்கிய விழாவான ஆடிக்கிருத்திகை திருவிழா செவ்வாய்க்கிழமை ஆடி அஸ்வினியுடன் தொடங்குகிறது. 27-ஆம் தேதி ஆடி பரணியும், 28-ஆம் தேதி ஆடிக்கிருத்திகை, முதல் நாள் தெப்பத் திருவிழாவும் நடைபெறுகின்றன.
    அன்று மாலை 6.30 மணிக்கு வள்ளி, தெய்வானையுடன் மலைக்கோயிலில் இருந்து முருகப்பெருமான் மலையடிவாரத்தில் உள்ள சரவணப்பொய்கையில் எழுந்தருளி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிக்கிறார்.
    இரவு 7 மணிக்கு முதல்நாள் தெப்பத் திருவிழா நடை பெறுகிறது. 29-ஆம் தேதியன்று இரண்டாம் நாள் தெப்ப நிகழ்ச்சியில் இரவு 7 மணிக்கு கலைமாமணி புஷ்பவனம் குப்புசாமி, அனிதா குப்புசாமி குழுவினரின் இன்னிசை கச்சேரியும், 30-ஆம் தேதியன்று மூன்றாம் நாள் தெப்ப நிகழ்ச்சியில் இரவு 7 மணிக்கு ஸ்ரீ குருமண்டலம் வீரமணிதாசன் குழுவினரின் பக்தி இன்னிசை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

  • திருத்தணியில் ஆடிக்கிருத்திகை திருவிழா….

    அறுபடை வீடுகளில் 5-ஆம் படைவீடாக திகழும் திருத்தணி முருகன் கோயில் ஆடிக்கிருத்திகை திருவிழா செவ்வாய்க்கிழமை தொடங்கி, வரும் 30-ஆம் தேதி வரை ஐந்து நாள்கள் நடைபெறுகிறது.

    இக்கோயிலில் முக்கிய விழாவான ஆடிக்கிருத்திகை திருவிழா செவ்வாய்க்கிழமை ஆடி அஸ்வினியுடன் தொடங்குகிறது. 27-ஆம் தேதி ஆடி பரணியும், 28-ஆம் தேதி ஆடிக்கிருத்திகை, முதல் நாள் தெப்பத் திருவிழாவும் நடைபெறுகின்றன.
    அன்று மாலை 6.30 மணிக்கு வள்ளி, தெய்வானையுடன் மலைக்கோயிலில் இருந்து முருகப்பெருமான் மலையடிவாரத்தில் உள்ள சரவணப்பொய்கையில் எழுந்தருளி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிக்கிறார்.
    இரவு 7 மணிக்கு முதல்நாள் தெப்பத் திருவிழா நடை பெறுகிறது. 29-ஆம் தேதியன்று இரண்டாம் நாள் தெப்ப நிகழ்ச்சியில் இரவு 7 மணிக்கு கலைமாமணி புஷ்பவனம் குப்புசாமி, அனிதா குப்புசாமி குழுவினரின் இன்னிசை கச்சேரியும், 30-ஆம் தேதியன்று மூன்றாம் நாள் தெப்ப நிகழ்ச்சியில் இரவு 7 மணிக்கு ஸ்ரீ குருமண்டலம் வீரமணிதாசன் குழுவினரின் பக்தி இன்னிசை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

  • ஆடிப்பெருக்கு…. அரசு உத்தரவு

    ஆடிப்பெருக்கு விழாவுக்காக மேட்டூர் அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறக்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

    அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
    ஆடிப் பெருக்கு விழாவினை கொண்டாட, மேட்டூர் அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறந்துவிட விவசாயிகள் கோரிக்கை விடுத்ததாக தெரிவித்துள்ளார் .

    விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று மேட்டூர் அணையிலிருந்து குடிநீர்த் தேவைக்காக விடுவிக்கப்பட்டுவரும் 2000 கனஅடி நீருடன் கூடுதலாக ஆயிரம் கனஅடி நீர் திறந்து விடப்படும் என கூறியுள்ளார்.

    இதன்படி நாளை முதல் நான்கு நாளுக்கு நாளொன்றுக்கு வினாடிக்கு 3,000 கனஅடி வீதமும், அதன்பிறகு 3 நாட்களுக்கு நாளொன்றுக்கு வினாடிக்கு 1000 கனஅடி வீதமும் தண்ணீரை திறந்துவிட உத்தரவிடப்பட்டுள்ளதாக முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

  • திருப்பதி ரயில் நிலையத்தில் இலவச வை-ஃபை வசதி….

    திருப்பதி ரயில் நிலையத்தில் இலவச வை-ஃபை சேவை இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.

    திருப்பதி ரயில் நிலைத்துக்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனால் பல விரிவாக்கப் பணிகளை ரயில்வே நிர்வாகம் செய்து வருகிறது. அதில் ஒரு கட்டமாக திருப்பதி ரயில் நிலையத்துக்கு வரும் பயணிகளுக்கு இலவச வை- ஃபை சேவையை ரயில்வே துறை இன்று முதல் தொடங்கி உள்ளது.
    இதனை, நெல்லூரிலிருந்து காணொலிக் காட்சி மூலம் மத்திய ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு, மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் சித்தூர் எம்.பி. சிவ பிரசாத், திருப்பதி எம்எல்ஏ சுகுணம்மா ஆகியோர் பங்கேற்றனர்.

  • Copy of திருப்பதி ரயில் நிலையத்தில் இலவச வை-ஃபை வசதி….

    திருப்பதி ரயில் நிலையத்தில் இலவச வை-ஃபை சேவை இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.

    திருப்பதி ரயில் நிலைத்துக்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனால் பல விரிவாக்கப் பணிகளை ரயில்வே நிர்வாகம் செய்து வருகிறது. அதில் ஒரு கட்டமாக திருப்பதி ரயில் நிலையத்துக்கு வரும் பயணிகளுக்கு இலவச வை- ஃபை சேவையை ரயில்வே துறை இன்று முதல் தொடங்கி உள்ளது.
    இதனை, நெல்லூரிலிருந்து காணொலிக் காட்சி மூலம் மத்திய ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு, மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் சித்தூர் எம்.பி. சிவ பிரசாத், திருப்பதி எம்எல்ஏ சுகுணம்மா ஆகியோர் பங்கேற்றனர்.

  • 60 ஆண்டுகளுக்கு பின் ஒரு சிறப்பான குருபெயர்ச்சி

    ஒரே நாளில் ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசை, குருபெயர்ச்சி என, மூன்று நிகழ்வுகளும் வருவது மிகச்சிறப்பாக கருதப்படுகிறது. அதுவும் 60 ஆண்டுகளுக்கு பின், வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி இந்த 3 விசேஷ நாட்களும் ஒரு சேர வருகிறது.
    ஆடிப்பெருக்கு மற்றும் ஆடி அமாவாசை நாளில், மேட்டூர் காவிரியாற்றில் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடுவர். ஆடி அமாவாசை நாளில் பக்தர்கள் காவிரி கரையோரம் முன்னோர்களுக்கு திதி கொடுப்பர். வரும் ஆகஸ்டு 2ம் தேதி ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசை, குருபெயர்ச்சி என, மூன்று முக்கிய நிகழ்வுகளும், ஒரே நாளில் வருகிறது.
    இந்த அபூர்வ நாளில் தட்சிணயான புண்யநதியான காவிரியில் நீராடி முன்னோர்களுக்கு திதி கொடுக்க வேண்டும். இதுதவிர குழந்தைகள், பாதிக்கப்பட்டவர்களுக்கு தானம், தர்மம் செய்யலாம். குருபெயர்ச்சி நாளில் காவிரியில் நீராடுவதால் பெரியவர்கள் ஆசிர்வாதமும் கிடைக்கும். இந்த நாளில் காவிரியில் நீராடுவதால், மூன்று புண்ணியங்கள் ஒரே நாளில் கிடைக்கும். மூன்று நிகழ்வுகள் ஒரே நாளில் வருவதால், அன்றைய தினம் காவிரியாற்றில் குடும்பத்துடன் புனித நீராட பக்தர்கள் விரும்புவர்.

  • 60 ஆண்டுகளுக்கு பின் ஒரு சிறப்பான குருபெயர்ச்சி

    ஒரே நாளில் ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசை, குருபெயர்ச்சி என, மூன்று நிகழ்வுகளும் வருவது மிகச்சிறப்பாக கருதப்படுகிறது. அதுவும் 60 ஆண்டுகளுக்கு பின், வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி இந்த 3 விசேஷ நாட்களும் ஒரு சேர வருகிறது.
    ஆடிப்பெருக்கு மற்றும் ஆடி அமாவாசை நாளில், மேட்டூர் காவிரியாற்றில் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடுவர். ஆடி அமாவாசை நாளில் பக்தர்கள் காவிரி கரையோரம் முன்னோர்களுக்கு திதி கொடுப்பர். வரும் ஆகஸ்டு 2ம் தேதி ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசை, குருபெயர்ச்சி என, மூன்று முக்கிய நிகழ்வுகளும், ஒரே நாளில் வருகிறது.
    இந்த அபூர்வ நாளில் தட்சிணயான புண்யநதியான காவிரியில் நீராடி முன்னோர்களுக்கு திதி கொடுக்க வேண்டும். இதுதவிர குழந்தைகள், பாதிக்கப்பட்டவர்களுக்கு தானம், தர்மம் செய்யலாம். குருபெயர்ச்சி நாளில் காவிரியில் நீராடுவதால் பெரியவர்கள் ஆசிர்வாதமும் கிடைக்கும். இந்த நாளில் காவிரியில் நீராடுவதால், மூன்று புண்ணியங்கள் ஒரே நாளில் கிடைக்கும். மூன்று நிகழ்வுகள் ஒரே நாளில் வருவதால், அன்றைய தினம் காவிரியாற்றில் குடும்பத்துடன் புனித நீராட பக்தர்கள் விரும்புவர்.

  • வேதகிரீஸ்வரர் கோயில் லட்சதீப விழா

    திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரர் கோயில் லட்ச தீப சங்குதீர்த்த புஷ்கரமேளா விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 12 ஆண்டு களுக்கு ஒருமுறை திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரர் கோயில் லட்ச தீபம், சங்கு தீர்த்த புஷ்கர மேளா திருவிழா நடைபெறும்.

    வரும் ஆகஸ்ட் 2-ஆம் தேதி இந்த விழா நடைபெறுகிறது. இதற்கான முன்னேற்பாடுப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கோயிலைச் சுற்றி பக்தர்களுக்கு சுகாதாரமான குடிநீர் விநியோகம், தாற்காலிக கழிப்பறை, ஆங்காங்கே குப்பைகளை சேகரிக்க குப்பைத் தொட்டிகள் போன்றவை அமைக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    குளத்தைச் சுற்றி 5 இடங்களில் பெண்களுக்கு உடை மாற்றும் அறை அமைக்கவும், குளம், கோயிலுக்கு செல்லும் பாதை, கிரிவலப் பாதைகளில் ஏற்கெனவே உள்ள தெருவிளக்குகளுடன், எல்இடி பல்புகளை அதிக அளவு அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

  • ஆடியில் சதுரகிரி மலைக்கு செல்ல உகந்த நாட்கள்

    ஆடி அமாவசையை முன்னிட்டு சதுரகிரி மலைக்கு செல்ல வரும் 28 ஆம் தேதி முதல் ஆகஸ்டு மாதம் 4 ஆம் தேதி வரை பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

    சதுரகிரி மலையில் அமாவாசை, பவுர்ணமி, பிரதோஷம், நவராத்திரி, மகாசிவராத்திரி உள்ளிட்ட நாட்களில் விசேஷ பூஜைகளும், ஆராதனைகளும் நடைபெறும். இதில் ஆடி அமாவாசை பிரசித்த பெற்ற திருவிழாவாகும். ஆடி அமாவாசை தினத்தன்று தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கில் பக்தர்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்வர்.

    சதுரகிரி கோவிலில் ஆடி அமாவாசை வருகிற 2-ந்தேதி நடைபெறுகிறது. இதனால் சுவாமி தரிசனம் செய்ய லட்சக்கணக்கில் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அன்றைய தினம் காலை 6 மணிக்கு 18 வகையான சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம், தீபாராதனைகள் நடைபெறும். பகல் 12 மணிக்கு உச்சிகால பூஜை, மாலை 4 மணிக்கு சயாட்சை பூஜை, இரவு 7 மணிக்கு அர்த்தஜாம பூஜை நடைபெறும்.

    இதனை முன்னிட்டு வருகிற 28-ந்தேதி முதல் ஆகஸ்டு 4-ந்தேதி வரை சதுரகிரி மலைக்கு சென்றுவர பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். இதையொட்டி சதுரகிரி அடிவார பகுதியான அடிப்படை வசதிகளை செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பக்தர்கள் பாதுகாப்பு பணியில் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த போலீசாரும், மதுரை மாவட்ட போலீசாரும் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும் வனத்துறை, தீயணைப்புத்துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.

  • திருத்தணி ஆடிக்கிருத்திகை விழா ஏற்பாடுகள் தீவிரம்….

    திருத்தணி முருகன் கோவிலில், ஆடிக்கிருத்திகை மற்றும் தெப்ப திருவிழா, வரும், 26ல் துவங்கி, 30ம் தேதி வரை நடைபெறுகிறது.

    அறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாகத் திகழும் திருத்தணி முருகன் கோயிலில் வரும் 26-ஆம் தேதி முதல் 5 நாள்களுக்கு ஆடிக்கிருத்திகை, தெப்பல் திருவிழா நடைபெற உள்ளது. இதில் தமிழகம், ஆந்திரம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து காவடிகளுடன் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் பல பக்தர்கள், தங்களது வேண்டுதலை நிறைவேற்றும் வகையில் மொட்டை அடித்தல், வேல் குத்துதல் உள்ளிட்ட நேர்த்திக் கடன்களை செய்வர். விழாவையொட்டி, முருகப்பெருமானுக்கு பால், பன்னீர், திருநீறு, சந்தனம், மஞ்சள் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறும். இதனைத்தொடர்ந்து பச்சை மாணிக்க மரகதக் கல், தங்க கீரிடம், தங்க வேல் மற்றும் வைர ஆபரணங்கள் முருகப்பெருமானுக்கு அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெறும். லட்ச கணக்கான பக்தர்கள் கூடும், இத்திருவிழாவில், பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. விழாவுக்கு வரும் பக்தர்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து தரும் வகையில், நகரின் முக்கியப் பகுதிகளிலும், கோயிலைச் சுற்றியும் தாற்காலிக பேருந்து நிலையங்கள், குடிநீர் வசதி, நடமாடும் மருத்துவக் குழுக்கள், தடையில்லா மின்சாரம் வழங்குதல் உள்ளிட்டவை மேற்கொள்ளப்பட உள்ளன. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து 400 அரசுப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. சுகாதாரப் பணிகளை மேற்கொள்ள மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரம் துப்புரவுப் பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
    மேலும், சரவணப்பொய்கை குளத்தில் 3 நாள்கள் நடைபெறும் தெப்பல் விழாவில் அரசியல் பிரமுகர்கள், உள்ளூர் பிரமுகர்கள் அதிக அளவில் அமருவதால் ஏற்படும் இடையூறைக் கட்டுப்படுத்த, இந்த ஆண்டு முதல் இசைக் கலைஞர்கள், கோயில் குருக்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். மற்றவர்கள் யாரும் தெப்பலில் ஏற அனுமதி கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு வரும் 28-ஆம் தேதி மாவட்டத்தில் அரசு அலுவலகங்கள், பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.