Category: old…

old…

  • கவிஞர் வாலி ஸ்ரீ மஹா பெரியவா மீது பாடிய கவிதை…

    ஆயிரத்து இருநூறு

    ஆண்டுகள் முன்னம்
    ஆரியாம்பாள் ஈன்றனள் — ஓர்
    அழகு மதலை; அவள் –
    அவ்வாறு ஈன்றெடுத்தது — அவ்
    ஆதிமுதலை; அதைத்தான்
    ஆதிசங்கரர் ஆக்கியது — ஓர் ஆற்று முதலை!

    காலடி பிறந்தவன்
    காலடி பதிந்திடாத
    நாலடி — இந்த
    நாட்டினில் இல்லை; திரு –
    மாலடி போற்றி — அவன்

    மொழிந்த பஜகோவிந்தம் போல்
    நூலடியொன்று — பிற
    நூலோர் ஏட்டினில் இல்லை !

    ‘அவன்தான் –
    இவன்;
    இவன்தான்
    அவன்!’

    எனும்படி — இங்கு
    எழுந்தருளினான்….

    காஞ்சி –
    காமகோடி — ஸ்ரீ
    சந்திர சேகரேந்திர –
    சரஸ்வதி; அந்த
    இமயநதிக்கு இணையான — ஒரு
    சமய நதி!

    துவராடை தரித்த
    திருவாசகத்தை; இரு
    கால்கொண்டு — ஒற்றைக்
    கோல்கொண்டு — இப்
    படிமிசை உலவிய — அத்வைதப்
    பெருவாசகத்தை;

    கயிலைநீங்கி காஞ்சிவந்த — ஞான
    வெயிலை; மன்பதையின் –
    அவத்தைப் போக்க
    பவத்தைப் போக்க –
    தவத்தைப் புரிந்த சிவத்தை;

    அரிசிப் பொறி
    அருந்தி –

    அஞ்சு பொறி
    அவித்த….

    நுழைபுலம் மிக்க — ஒரு
    நூற்றாண்டுக் கிழவனை; நம்
    நெஞ்சை — ஒரு
    நஞ்சை நிலமாக்க — விழி
    நாஞ்சில் கொண்டு
    நாளும் உழுத உழவனை;

    அரசுமுதல் ஆண்டிவரை –
    அறியும் ‘பெரியவாள்’ என்று;
    அழுக்கு மனங்களில்
    அப்பிக் கிடக்கும் –
    அவலப் புதர்களை
    அரியும் பெரிய வாள் என்று!

    – கவிஞர் வாலி

  • உலகின் மிகப்பெரிய ஆலயம் – 6

    அதுவரை அருவியென்றால் எனக்குள் இருந்த அனுபவத்தையும் கற்பனையையும் புரட்டிப் போட்டுக் கொட்டிக் கவிழ்த்ததுபோல் பாய்ந்து கொண்டிருந்தது அருவி. குற்றலாத்திலும் ஹொகனேக்கலிலும் உயரமான அருவிகளைப் பார்த்திருக்கிறேன். ஆனால் இதுபோல் அகலமான அருவியைப் பார்த்ததில்லை. உயரமும் அதிகம்தான். வழியில் மடிந்தெல்லாம் இறங்கவில்லை. நேரே கீழே குபீரென வாளியில் இருந்து கவிழ்த்துவிட்டதுபோல் கொட்டிக் கொண்டிருந்தது அருவி. ஏதோ சாகசப் படத்தில் வரும் நிலக்காட்சியை நேரில் பார்க்கும் அனுபவம்.

    எங்கள் ஊரில் கொஞ்சம் மழை அடித்துப் பெய்தாலே, மேற்குத் தொடர்ச்சி மலையின் பல பகுதிகளில் அருவிகள் புறப்பட்டுவிடும். நீல மலைகளுக்கு நடுவே வெள்ளியை உருக்கி ஊற்றியதுபோல் அருவிகளைக் காணக் கண்கோடி வேண்டும். எல்லாவற்றுக்கும் பிரதமானமாக இருக்கும் அருவியின் பெயர் பல்லிளிச்சான் கணவாய் அருவி. மற்ற அருவிகளெல்லாம் இரண்டு மூன்று நாளில் காணாமற் போய்விடும். இதுமட்டும் நின்று பொழியும்.

    மழையற்ற வறண்ட நாட்களிலும்கூட அந்த அருவியின் தடத்தைத் தெளிவாக எங்கள் பாட்டி வீட்டு மொட்டை மாடியில் இருந்து பார்க்க முடியும். என் பால்யத்திலெல்லாம் மழை அடித்துப் பெய்யும் நாட்கள் குறைவு. முணுமுணுவெனப் பெய்து கொண்டே இருக்கும். குற்றாலத்துச் சாரல் எங்களுக்கும் கொஞ்சம் கிடைக்கும். நல்ல பெருமழை பெய்தால், என் பள்ளிக்கு எதிரிலிருக்கும் சஞ்சீவி மலையிலும் ஓர் அருவி புறப்படும்.

    ஒரே ஒரு முறை எங்களையெல்லாம் அப்பா அழைத்துப் போயிருக்கிறார் அந்த அருவிக்கு. அதற்குக் கழுதைக் கடவு அருவி என்று பெயர். சுற்றிலும் பெரிய பெரிய மரங்களெல்லாம் இருக்க மாட்டா. சப்பாத்திக் கள்ளியும் குட்டை முள் மரங்களும்தான் இருக்கும். சீனிக் கல் மலைதான் சுற்றியிருக்கும். ஆனால் அதற்குள் ஓடிவந்து விழும் அந்தக் குட்டி அருவி. அதில் குளிப்பது ஒரு சுகம்.

    கூட்டம் அதிகம் இருக்காது. பெண்கள் கிட்டத்தட்ட அறவே இருக்க மாட்டார்கள். பெரிய அருவிகளில் குளிக்கப் பெருங்கூட்டம் கூடிவிடும். குற்றாலத்தில் வரிசையில் நின்று குளிக்க எனக்குப் பிடிக்காது. அது எவ்வளவு பெரிய ஒசத்தியான அருவியாக இருந்தாலும் போனோமா குளிச்சோமா வந்தோமா என்று இருக்கணும். இந்த வரிசையில் நிண்ணு குளிக்கறதெல்லாம் நமக்கு ஒத்துவராது சாமியோவ் !

    நல்லவேளை கம்போடிய அருவியில் கூட்டம் அதிகமில்லை. சிறுவயதில் பள்ளிக்கூடம் விட்டு வீடு வரும்போது, நாம் வசிக்கும் தெரு வரையிலும் நடந்து வருவோம். வீடு கண்ணுக்குத் தென்பட்டதும் தெருவுக்குள் ஓடத் தொடங்குவோம். அதுமாதிரி, அருவியைப் பார்த்ததும் எங்களுடைய நடையின் வேகம் கூடியது. ஓட்டமும் நடையுமாய் அருவிக்கு அருகில் செல்லும்போது எங்கள் பேச்சொலியை அருவி அடக்கிவிட்டது. கூச்சல் போட்டுக் கத்தினால்தான் எதிராளிக்குக் கேட்கும். அப்படியொரு பேரோசையில் அருவி கொட்டிக் கொண்டிருந்தது.

     

    கரையில் துண்டு, கேமரா போன்றவற்றை ஓட்டுநர் ராவிடம் ஒப்படைத்துவிட்டு உள்ளே இறங்கினோம். அம்மாடியோவ்! அப்படியொரு குளிர்ச்சி அருவித் தண்ணீர். உடலே ஒரு கணம் நடுங்கி ஓய்ந்தது. நடந்து வந்ததில் உடம்பு வியர்த்துப் போயிருந்தது. அதில் குளிர்நீர் பட்டதும் முதலில் சுரீர் என்று இருந்தாலும் அதன் பிறகு அருவித் தண்ணீரை விட்டு வெளியே வரவே மனமில்லை. ஈராயிரமாம் ஆண்டில் ஹரித்வார் போனபோதும் அப்படித்தான் இருந்தது.

    அதிகாலையில் கங்கையில் குளிக்க வேண்டுமென்று அம்மா, அப்பா, சித்திகளோடு 5 மணிக்கு கங்கைக் கரையை அடைந்து விட்டோம். நாங்கள் தங்கியிருந்த சத்திரத்துக்கு மிக அருகில்தான் கங்கை ஓடிக் கொண்டிருந்தாள். எழுந்திருக்கும்போதே கடுங்குளிர். பல்லெல்லாம் கிட்டித்துப் போய்விடும்போலிருந்தது. ஒருவழியாக எழுந்து நடந்து கங்கைக் கரையை அடைந்தால் கூட்டம் ஜே ஜே என்றிருந்தது அந்த அதிகாலை வேளையில்.

    கங்கை நல்ல வேகத்தில் ஓடிக் கொண்டிருந்தது. கரையிலிருந்து படிக்கட்டு இறங்கிச் சென்றது. சற்றுத் தொலைவில் ஆட்களை நதி அடித்துக் கொண்டு போய்விடக் கூடாது என்பதற்காக கம்பிக் குழாய்களை நீளமாகப் பொருத்தி இருந்தார்கள். கால் நதியில் பட்டதுமே குளிர் எலும்பை ஊடுருவியது. எங்களோடு அந்தத் தீர்த்தயாத்திரையில் வந்திருந்தவர்களில் 90 விழுக்காட்டினர் முதியவர்கள். அத்தனை பேரும் கங்கையைத் தொட்டதும் ஒவ்வொரு விதமாகக் கூச்சல் போட்டனர்.

    பாதம் பட்டதற்கே இப்படிக் குளிருதுண்ணா உள்ள முங்கினா உயிரே போயிரும்போல இருக்கேடா என்றார் என் சித்தி. பரவாயில்லை. உள்ளே இறங்கினா குளிர்விட்டுப் போயிடும் வாங்க சித்தி என்று மெதுவாக அவரை இழுத்துக் கொண்டு இறங்கி ஒரே முங்கு ! அவ்வளவுதான். அதை வார்த்தையில் வருணிப்பது கடினம். செத்தேன் என்றுதான் நினைத்தேன். ஆனால் அப்படியில்லை. சில விநாடிகளுக்குள் உடம்பு அந்தக் குளிரை ஏற்றுக் கொண்டு நதியை அனுபவிக்க ஆரம்பித்து விட்டது.

    என் அப்பா எந்தக் கூச்சலும் போடாமல் சிவனே என்று முங்கி முங்கிக் குளித்துக் கொண்டிருந்தார். அங்க பாரு ஒரு ஆளை.. ஏதாவது ரியாக்‌ஷன் காட்டுதான்னு! என்று கேலி செய்து கொண்டே என் அம்மாவும் கங்கா ஸ்நானத்தை ரசித்தார்.

    அதே தண்மை அதே குளிர் கம்போடிய அருவித் தண்ணீரிலும். காலால் தடவித் தடவி உள்ளே கொஞ்சம் கொஞ்சமாக இறங்கினோம். இடுப்பளவுக்கு மேல் ஆழம் வந்ததும் குபுக்கென்று முங்கினோம். ஆஹா.. ஆஹா. ஆஹஹஹா.. என்னே ஒரு சுகம். சிறுவயதிலிருந்து எல்லாவிதக் குளியலும் எனக்கு வாய்த்திருக்கிறது. கிணற்றுக் குளியல், குழாய்க் குளியல், ஆற்றுக் குளியல், ஏரிக் குளியல், தொட்டிக் குளியல், வாளியில் இருந்து மொண்டு குளிக்கும் சிக்கனக் குளியல் என்று ஒவ்வொன்றும் ஒருரகம்.

    அவற்றுள் இது ஆகச் சிறந்தது. தண்ணீருக்குள் முங்கியதும் அருவித் தண்ணீருக்கே உரிய வாசனையை என்னால் உணர முடிந்தது. அது உயிர்வாயு அதிகம் கலப்பதால் அருவித் தண்ணீருக்கு மட்டுமே வாய்க்கக் கூடிய வாசம் என்று நினைக்கிறேன். கடல், ஆறு தவிர மற்ற நீர்நிலைகளில் தண்ணீர் தேமே என்று அசையாமல் கிடக்கும். ஆனால், அருவித் தண்ணீர் ஓடும், அலையும், உருளும், குபீரெனக் குதிக்கும், கும்மாளமிட்டுத் ததும்பும், பாறைகளை அறையும், குத்திக் குடையும், மூலிகைகளை அலசும். அப்போது அதில் ஏராளமான உயிர்வாயு கலப்பதாகக் கூறுவார்கள்.

    அதனால்தான் வேறெந்தத் தண்ணீருக்கும் இல்லாத ருசி அருவித் தண்ணீரில் இருக்கும். அதற்கெனப் பிரத்யேகமான ஒரு வாசனையும் இருக்கும். அதை அறிந்தவர்கள் இப்போது இதைப் படிக்கும்போதுகூடக் கண்டிப்பாக அதை உணர முடியும்.

    தப்பித் தவறித் தண்ணீருக்குள் மூழ்கிக் கொஞ்சம் தண்ணீரைக் குடித்துவிட்டால் புரையேறித் தண்ணீரை வெளித்தள்ளும்போதும் இலேசாக அந்த வாசனை வரும். அருவி நீருக்குள் விழுந்த கணத்திலிருந்து ஒவ்வொருவரும் சிறுபிள்ளைகளாக மாறிப் போனோம். அடடா.. எத்தனை கோடி இன்பம் வைத்தாய் எங்கள் இறைவா ! இறைவா ! இறைவா ! என்று உரக்கக் கத்த வேண்டும் போலிருந்தது.

    மிதமிஞ்சிய மகிழ்ச்சியில் இருக்கும்போது நம்முடைய உடல்மொழி முற்றிலுமாக மாறிவிடுவதை அன்று உணர்ந்தேன். ராஜூ விதவிதமான யோக நிலைகளில் நடனமாடினார். பாறை பாறையாகத் தாவி ரா-வுக்கு பலவிதமாகப் போஸ் கொடுத்தார். சூரிய நமஸ்காரம் செய்வதுபோல ஒற்றைக் காலைத் தூக்கி உச்சியைப் பார்த்தார்.

    நவீன் கொஞ்சம் இறுக்கமான ஆள். அவருடைய முகமும் அருவிக்குள் சிரித்துக் கொண்டே இருந்தது. மகாதேவனோ உடல் முழுவதும் மகிழ்ச்சியை வாரிச் சூடியிருந்தார். பரணியைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். ஏண்ணா என்னண்ணா இது இப்படி இருக்கு இந்த இடம் ? நாம இருக்கிறது நெசமாவே பூமிதானா இல்ல வேறே ஏதாவது லோகத்துக்கு வந்துட்டோமா ? என்று கேட்டுக் கொண்டிருந்தார்.

    அருவி விழுந்து ஓடும் தடாகத்தில்தான் இன்னமும் நாங்கள் இருந்தோம். சற்றுத் தொலைவில் சடேர் புடேர் எனத் துள்ளி விழுந்து கொண்டிருந்தது அருவி. தடாகத்தில் பெரும்பாலும் பயணிகள்தான். கம்போடிய முகங்கள் சற்றுக் குறைவுதான். ஒரு வெள்ளைக்காரத் தம்பதி கைக்குழந்தையோடு எங்களுக்கு அருகே நீரில் இறங்கியிருந்தது. அந்தக் குழந்தை தளக் புளக் என்று தண்ணீரைத் தப்பளம் கொட்டி மகிழ்ந்து கொண்டிருந்தது பொக்கை வாயைத் திறந்து சிரித்தபடி.

    மிதமிஞ்சிய கூட்டம் இல்லை. அளவான கூட்டம்தான். மெல்ல மெல்ல நானும் ராஜூவும் அருவி விழும் இடத்துக்கு நேர்கீழே செல்லத் தொடங்கினோம். நடுவே பெரிய பள்ளமிருந்தது. கால்களால் துழாவிப் பார்த்தேன். தரை தட்டுப்படவில்லை. ஒரு ஆள் ஆழத்துக்கும் கூடுதலாக இருக்க வேண்டும். மெதுவாக நீந்தி அகலமான அருவியின் நடுப்பகுதிக்கு முன்னேறினோம். ஏற்கனவே அங்கே இளந்தாரிகள் பலர் நின்று அருவியைத் தலையில் தாங்கிக் கொண்டிருந்தனர்.

    அருவிக்கு அருகிலுள்ள எல்லாப் பாறைகளுமே வழுக்கின. எதையும் பற்றி மேலே ஏற முடியவில்லை. ஓரிடத்தில் உறுதியான திண்ணை மாதிரிப் பாறை கிடந்தது. அதில் ஏற அங்கிருந்தவர்கள் கைபற்றித் தூக்கி உதவினர். அவ்வளவுதான். இது வேறு உலகம். கண்ணெதிரே விழும் அருவிக்கும் பின்னாலுள்ள ஈரப் பாறைக்கும் நடுவே நாங்கள். ஓவென ஓசையிட்டுப் பொங்கும் அருவிக்குப் பின்னால் அந்தத் தண்ணீர்த் திரையைப் பார்த்தபடி பாறையோரத்தில் ஒண்டியவாறு நின்று ரசித்தோம்.

    தைரியம் வரும்போது தலையை முன்னால் நீட்டினால் அருவி மடேர் மடேர் என்று தலையில் அறைந்தது. ஏழெட்டுப் பேர்தான் அந்த இடத்திலிருந்தோம். நீச்சல் தெரியாவிட்டால் அந்தப் பகுதிக்கு வர முடியாது. அந்த இடத்திலிருந்து மேல்நோக்கி அருவியைப் பார்க்க விரும்பினேன். ஆனால் கண்களில் தண்ணீர் விழுந்து கண்ணை மறைத்தது. தண்ணீர் நல்ல உயரத்திலிருந்து விழுவதால் எழும் துமி சுற்றியிருந்த இடத்தைப் புகைபோல் மூடியிருந்தது.

    வானம் தெளிவாக இருந்தபோதும்கூட மழை வரப் போவதுபோன்ற ஒரு மயங்கிய வெளிச்சம். அருவிக்குள் நிற்கும்போது சூரிய வெளிச்சம் உறைக்கவில்லை. நல்ல உணக்கையாக இருந்தது.

    சுற்றிவர மழைக்காடுகளுக்கே உரிய பசுமை. தமிழர்களுக்கு அறிமுகமில்லாத மரங்கள். விதவிதமான இலைகள், கொடிகள். அந்தப் பின்னணியோடு அருவி மேலும் அழகாகத் தெரிந்தது. அருவிக்கு நடந்து வரும் வழியிலேயே ஒரு குட்டி அருவியைப் பார்த்தோம். அதுவும் நல்ல அகலமான அருவிதான். அங்குதான் கூட்டம் அதிகமிருந்தது. ஆனால், உயரம் இரண்டு ஆள் அளவுகூட இல்லை. பெண்களும் சிறுவர்களுமே அங்கு அதிகமாகக் குளித்துக் கொண்டிருந்தார்கள்.

    இந்தப் பேரருவியில் இருந்து வெளியே வர எங்களுக்கு மனமே இல்லை. இப்படியே இந்த நாள் உறைந்துவிடாதா என்றுதான் எல்லாருமே ஏங்கினோம். நின்றும் அமர்ந்தும் கிடந்தும் அணுஅணுவாக அருவியை அனுபவித்தோம். ஒருவழியாக மீண்டும் நீந்தி தடாகத்தின் முன்பகுதியை அடைந்து இடுப்பளவுத் தண்ணீரில் நின்று கொண்டு ஒருவர்மீது ஒருவர் தண்ணீரை வாரியிறைத்துப் பிள்ளைகள் போல் விளையாண்டோம். ஆச்சு ஒரு மணி நேரத்துக்கு மேலேயே ஆகியிருக்கும் நாங்கள் உள்ளே இறங்கி.

    ஓட்டுநர் ரா கூப்பிடத் தொடங்கினார். எங்களுக்கும் குளித்ததில் வயிறு காலியாகிப் பசி கிள்ளத் தொடங்கியது. சரி போதுமென்று எழுந்து உடம்பைத் துடைத்து மேலே ஏறத் தொடங்கினோம். பரணி அருவியைத் திரும்பிப் பார்த்தார். சில விநாடிகள் நின்றார். “போயிட்டு இன்னோரு நாள் வரேன்டா செல்லம் !” என்றார்.

    – பொன். மகாலிங்கம்

     

    சிங்கப்பூர் தொலைக்காட்சியில் பணியாற்றும் மூத்த இதழியலாளர். சென்னையின் முன்னணி ஊடகத்தில் முக்கியப் பொறுப்பில் இருந்தவர். சகமனிதர்கள் மீது அளவற்ற அன்பும், பாசமும் கொண்ட பண்பாளர். தமிழ் மீதும், பயணங்களின் மீதும் உள்ள அலாதியான ஆர்வம் காரணமாக அடிக்கடி எங்காவது புராதன இடங்களை தேடிச் சென்று அவற்றை தமது அழகு தமிழால் கட்டுரைகளாக்கி, வரும் தலைமுறைக்கு தகவல் பொக்கிஷங்களை சேர்ப்பதில் நாட்டம் கொண்டவர். அவரை தொடர்புகொள்ள – ponmaha2000@yahoo.com

  • கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா?

    கங்கைக் கரையில் வைக்கிறேன் என்று சொல்லி தமிழகத்தில் இருந்து எடுத்துச் சென்று கடைசியில் பூங்காவில் பாலிதீன் கவர் சுற்றிக் கிடக்கும் நமது திருவள்ளுவருக்கும் சித்தர் ஒருவருக்கும் தொடர்பு இருக்கிறது. அந்த சுவாரஸ்ய தொடர்பு பற்றியதுதான் இந்த பதிவு..

    தமிழகத்தில் அவதரித்த சித்தர்களில் முக்கியமானவர் கொங்கணவர். இவருக்கு கொங்கணர், கொங்கணச் சித்தர், கொங்கண நாயனார், கொங்கணத்தேவர், கொங்கண நாதர் எனப் பல பெயர்களும் உண்டு. இவர்கள் வெவ்வேறானவர்கள் 
    என்று சொல்பவர்களும் உண்டு.

    கொங்கணர் திருவள்ளுவரின் சீடர் என்றும் போகரின் சீடர் என்றும் கூறுகின்றனர். இவர் பெயரால் வைத்திய, இரசவாத, யோக நூல்களும் பாடல்களும் இருக்கின்றன. இவர் கி.பி 7ஆம் நூற்றாண்டில் கொங்கு நாட்டில் வாழ்ந்தவர். அதனால் தான் அவருக்கு இந்த பெயர் வந்தது என்றும் சொல்கிறார்கள்.

    இவர் பெயரில் வழங்கப்படும் பாடல்களில் “வாலைக் கும்மி” என்பது ஒன்று. வாலை என்றால் சக்தி என்றும், கன்னி என்றும் இரு பொருள் உள்ளது. கன்னிப் பெண்ணை முன்நிறுத்தி கும்மி பாடியுள்ளதால் வாலைக்கும்மி என வழங்குகிறது. இது இவர் பெயரால் வழங்கினாலும் இவரால் பாடப்பட்டது அல்ல. இவர் கருத்துக்களை அமைத்து ஆசிரியர் வீரப் பெருமாளின் மாணாக்கர் ஒருவர் பாடியதாகவும், அவர் வலவேந்திரன் துரைவள்ளல் என்ற சிற்றரசன் காலத்தவர் என்றும் அவன் அஞ்செழுத்துணர்ந்த சைவன் என்றும் வாலைக்கும்மி பாடல் கூறுகின்றது.

    சரி, இப்போது கொங்கணர் பற்றிய கதைக்கு வருவோம். கொங்கணர் ஒருமுறை, ஒரு மரத்தின் கீழ் யோகம் செய்து கொண்டிருந்த போது, மரத்தின் மேல் இருந்த கொக்கு அவர்மீது எச்சம் இட்டுவிட்டது. உடனே கொங்கணர் கண்ணை விழித்து அந்த கொக்கை பார்த்தார். உடனே அது எரிந்து சாம்பலாகிவிட்டது. அதன் பிறகு அவர் ஊருக்குள் வந்து திருவள்ளுவர் வீட்டு வாசலில் நின்று பிச்சை கேட்டார். வள்ளுவர் மனைவி வாசுகியார் கணவருக்கு உணவு பரிமாறிக் கொண்டிருந்த நேரம். எனவே அவர் பிச்சை கொண்டுவர கொஞ்சம் தாமதமாகிவிட்டது. நேரங்கடந்து பிச்சை கொண்டுவந்த வாசுகியாரைக் கொங்கணர் சினத்துடன் விழித்து பார்த்தார். உடனை, வாசுகியார் “கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா?” என்று கேட்டாராம். எங்கோ நடந்த விஷயம் வீட்டிற்குள் இருந்த இந்த அம்மாளுக்கு தெரிகிறதென்றால் இவர் எத்தனை பெரிய சித்த ஞானியாக இருப்பார் என்று எண்ணி கொங்கணர் வாசுகியை வணங்கினாராம். பின்னர் திருவள்ளுவர் சீடரானார் என்கிறது அந்த கதை.

  • நலமாக இருக்கிறார் ரஜினி

    ல்மதபமத்பம்உல கம்பதமுஃ தபதம்பஃஉ உதகம்பம் ஃ புமதபுமதமு

    ருமேனி சிலிர்த்து வாடிய மலர்களெல்லாம் மீண்டும் புதுசாய்ப் புஷ்பித்து விட்டது போன்ற எண்ணம் உண்டாகும். எண்ணெய் விளக்கின் ஒளியும் அறுபது வாட்ஸ் குண்டு பல்பின் ஒளியும் அந்தகாரத்தைக் கூட்ட, சந்துருவின் குரல் முன்மண்டபத்தில் அலை அலையாய்ப் பரவும். குறுகலான மண்டபம் குரலை வெகு இனிமையாக்கி எதிரொலிக்கும்.

    வெளியே போன அர்ச்சகர் ஓட்டமும் நடையுமாய் உள்ளே வருவார். வந்து அருகில் நின்று கொள்வார். கைகளை மார்பில் கோத்துக் கொண்டு கண்ணாடி வழியே சிவலிங்கத்தை மட்டுமே பார்த்துக் கொண்டு உடல் அசையாமல் பாடுவார் சந்துரு. அந்நேரம் அது வேற சந்துரு. நானறிந்த சந்துரு அல்ல அது.

    அதிகப் பாடல்கள் இல்லை. ஓரிரு பாடல்கள்தான் பாடுவார் சந்துரு. முதல்முறை கேட்கும்போதே கேட்கும் எவரையும் வசீகரித்துவிடக் கூடிய கீர்த்தனைகள் அவை. அவரைத் தொடர்ந்து நான் என்னுடைய ஆஸ்தானப் பாடலான முத்துத் தாண்டவரின் “ஆடிக் கொண்டார் அந்த வேடிக்கை காணக் கண் ஆயிரம் வேண்டாமோ”” ஆரம்பிப்பேன்.                         

    சீரணி கொன்றை மலர்த்தொடையாட சிதம்பரத்தேர் ஆட என்னும் போதே உணர்ச்சிவசப்பட்டுக் குரல் லேசாகக் கமறி உடையும். பேரணி வேதியர் தில்லை மூவாயிரம் பேர்களும் பூசித்துக் கொண்டு நின்றாட வரும்போது கிட்டத்தட்ட குரல் நின்றுவிடும். சுதாரித்துப் பாடி முடிக்கும்போது மனம் நிறைந்திருக்கும். திருச்சிறம்பலம் என்று சொல்லி முடிக்கும்போது அர்ச்சகர் உள்ளே ஓடிப்போய் விபூதியும் மாலையும் எடுத்துவந்து

  • உலகின் மிகப்பெரிய ஆலயம் – 5

    ஒரு மரத்துக்குக் கீழே நின்று கொண்டு தண்ணீருக்குள் அமிழ்ந்திருக்கும் லிங்கங்களைப் படம் எடுத்துக் கொண்டிருக்கும்போது பரணி கத்தினார். மகா, சிவன் மேல ஒரு பாட்டுப் பாடுங்களேன் என்று. நானே கிட்டத்தட்ட நெகிழ்ந்து போய், அந்த மனநிலையில்தான் இருந்தேன். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ME படிக்கும்போது நானும் நண்பர் சந்துருவும் கோயில் கோயிலாகப் போவோம். கங்கை கொண்ட சோழபுரமும் தாராசுரமும் எங்கள் இருவருக்கும் ஆகப் பிடித்தமான ஆலயங்கள்.

    ஒவ்வொருமுறை போகும்போதும் கருவறைக்கு அருகே நின்று சில பாடல்களைப் பாடுவது எங்கள் இருவருக்குமே மிகவும் பிடிக்கும். அதிலும் சந்துரு “இடது பதம் தூக்கி ஆடும் நடராஜனடி பணிவயே..நெஞ்சே”” என்ற பாடல் என்னை உருக்கிவிடும். சந்துரு புல்லாங்குழல் வாசிப்பதிலும் கெட்டிக்காரர். நாங்கள் போகும் முன்மாலை வேளையில் பெரும்பாலும் ஆளரவம் இருக்காது பழைய கோயில்களில். நேர்த்திக் கடன் செலுத்தும் பழக்கமுள்ள கோயில்களில்லை என்பதால், பக்தர்கள் யாரும் சீந்தாத கோயிலாகத்தான் இருக்கும் நாங்கள் போகும் கோயில்கள்.

    அந்தக் காலத்தில் எங்களிடம் அதிகக் காசு இருக்காது. முதலில் சாமி கும்பிட்டு தீபாராதனை முடித்து 2 ரூபாய் அல்லது 5 ரூபாய் தட்டில் போட்டாலே பெரிசு எங்கள் இருவருக்கும். அதனால், அர்ச்சகரும் எங்களை அவ்வளவாகக் கண்டுகொள்ள மாட்டார். தீபாராதனை முடிந்ததும் ஆச்சு என் கடமை என்று போய் முன்னால் உட்கார்ந்து விடுவார். அதற்கப்புறம், சந்துரு மெல்ல முனகிப் பாட ஆரம்பிப்பார். திடீரென ஊற்றுக்கண் திறந்து கிணற்றில் குளிர்நீர் பீறிடுவது போல சந்துருவின் வெண்கலக் குரல் கர்ப்பக்கிருஹத்தை நோக்கிப் பாயும் அந்தக் கணம்…. ஆஹா.. நான் பேறுபெற்றவன்..

    லிங்கத் திருமேனி சிலிர்த்து வாடிய மலர்களெல்லாம் மீண்டும் புதுசாய்ப் புஷ்பித்து விட்டது போன்ற எண்ணம் உண்டாகும். எண்ணெய் விளக்கின் ஒளியும் அறுபது வாட்ஸ் குண்டு பல்பின் ஒளியும் அந்தகாரத்தைக் கூட்ட, சந்துருவின் குரல் முன்மண்டபத்தில் அலை அலையாய்ப் பரவும். குறுகலான மண்டபம் குரலை வெகு இனிமையாக்கி எதிரொலிக்கும்.

    வெளியே போன அர்ச்சகர் ஓட்டமும் நடையுமாய் உள்ளே வருவார். வந்து அருகில் நின்று கொள்வார். கைகளை மார்பில் கோத்துக் கொண்டு கண்ணாடி வழியே சிவலிங்கத்தை மட்டுமே பார்த்துக் கொண்டு உடல் அசையாமல் பாடுவார் சந்துரு. அந்நேரம் அது வேற சந்துரு. நானறிந்த சந்துரு அல்ல அது.

    அதிகப் பாடல்கள் இல்லை. ஓரிரு பாடல்கள்தான் பாடுவார் சந்துரு. முதல்முறை கேட்கும்போதே கேட்கும் எவரையும் வசீகரித்துவிடக் கூடிய கீர்த்தனைகள் அவை. அவரைத் தொடர்ந்து நான் என்னுடைய ஆஸ்தானப் பாடலான முத்துத் தாண்டவரின் “ஆடிக் கொண்டார் அந்த வேடிக்கை காணக் கண் ஆயிரம் வேண்டாமோ”” ஆரம்பிப்பேன்.                         

    சீரணி கொன்றை மலர்த்தொடையாட சிதம்பரத்தேர் ஆட என்னும் போதே உணர்ச்சிவசப்பட்டுக் குரல் லேசாகக் கமறி உடையும். பேரணி வேதியர் தில்லை மூவாயிரம் பேர்களும் பூசித்துக் கொண்டு நின்றாட வரும்போது கிட்டத்தட்ட குரல் நின்றுவிடும். சுதாரித்துப் பாடி முடிக்கும்போது மனம் நிறைந்திருக்கும். திருச்சிறம்பலம் என்று சொல்லி முடிக்கும்போது அர்ச்சகர் உள்ளே ஓடிப்போய் விபூதியும் மாலையும் எடுத்துவந்து கொடுப்பார்.

    அது ஒரு காலம். அந்தணரான என் சந்துரு இப்போது ஓர் ஆப்பிரிக்கப் பெண்ணை மணந்து கொண்டு எத்தியோப்பியாவில் ஆசிரியராக வேலை செய்கிறார். காலம் எங்களை விசிறி வீசிவிட்டது. எத்தியோப்பியாவில் அவர் பாட்டைக் கேட்டு மயங்க ஈசன் எந்த வடிவில் இருக்கிறானோ? சந்துரு முறைப்படி சங்கீதம் கற்றவர்.

    அவர் மூலமாக யாருமற்ற ஆலயங்களில் பாடும் பழக்கம் எனக்கு வந்தது. அந்தப் பழக்கம் திருப்பதியில் பெருமாளை அதிக நேரம் தரிசிக்கும் வாய்ப்பையும் எனக்குத் தந்திருக்கிறது. என்னோடு படித்த கலைச்செல்வன், துரை அருள்நேயத்துடன் ஒருமுறை திடீரெனத் திருப்பதி கிளம்பிச் சென்றேன். இரண்டு நாட்கள் தங்குவதாகத் திட்டம். முதல்நாள் பகலில் 3 மணி நேரம் காத்திருந்து பெருமாளைத் தரிசித்தோம்.

    என்ன தோன்றியதோ தெரியவில்லை எனக்குப் பெருமாளைப் பார்த்ததும், பிரபந்தம் பாடத் தோன்றியது. பம்பாய் சகோதரிகள் லலிதா, சரோஜா பாடிய பிரபந்தங்கள் அடங்கிய கேசட் ஒன்று தமிழ் சுப்ரபாதத்துடன் T Series-சில் வெளியாகி இருந்தது. அதைக் கேட்டுக் கேட்டு மனப்பாடம் செய்திருந்தேன். காலையில் சுப்ரபாதமும் மாலையில் பிரபந்தமும் கேட்டுப் பழகி மனப்பாடமாகி இருந்தது.

    அந்த நினைவில், “செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே.. நெடியோனே வேங்கடவா “ என்று பாடத் தொடங்கிவிட்டேன். ஜரிகண்டி ஜரிகண்டி என்று கையைப் பிடித்து இழுத்துத் தள்ளாத குறையாய் கூட்டத்தை அனுப்பிக் கொண்டிருந்த ஆலய ஊழியர் என் மற்ற நண்பர்களைத் தள்ளிவிட்டு என்னை மட்டும், கூட்ட வரிசைக்குப் பின்னால் உந்தித் தள்ளினார். கையால் பாடு என்று சைகை காட்டினார். நான், என் நேர் முன்னே நகரும் வரிசை, அதற்கு அப்பால் பெருமாள்..

    அவ்வளவுதான்… எனக்குத் தெரிந்த பெருமாள் பாடல்கள் எல்லாம் சரக்குத் தீரும்வரை பாடினேன். அதில், திருமாலே சீராளும் மணிவண்ணா, கோபியர் கொஞ்சும் ரமணா உள்ளிட்ட திரையிசைப் பாடல்களும் அடக்கம். எனக்கே போதுமென்று தோன்றும்வரை திகட்டத் திகட்டப் பெருமாளைப் பார்த்துவிட்டு நானே வரிசையில் சேர்ந்து வெளியேறி வந்தால் கிட்டத்தட்ட கால்மணி நேரமாய் எனக்காகக் காத்திருந்த நண்பர்களின் முகத்தில் அனலடித்தது. ஏண்டா ஒனக்குப் பாடத் தெரியுங்கிறதைக் காட்றதுக்கு இதுதான் இடமா? என்று காதில் புகைவராத குறை..

    அதுக்கு நான் என்ன சேறது? அன்று அப்படி அமைந்தது. அதெல்லாம் நினைவு வருகிறது கம்போடியப் பயணத்தை எழுதும்போது. சிதம்பரத்தில் 13 ஆண்டுகள் நாட்டியாஞ்சலி பார்த்ததும் ஒருவிதத்தில் எனக்கு நிறையப் பாடல்களை அறிமுகம் செய்தது. தேடித் தேடி தெரிந்து கொண்ட பருவம் அது. பாட்டைப் பொறுத்தவரை, எல்லாம் கேள்வி ஞானம்தான். முறைப்படியெல்லாம் கற்கவில்லை. இருந்தாலும் கேசட்டில் கேட்டதைத் திருப்பி அச்சுப் பிசகாமல் பாடிவிடுவேன். அது பரணிக்குத் தெரியும். அந்த நினைவில், கம்போடியத் தண்ணீர் லிங்கங்களைப் பார்த்ததும் என்னைப் பாடச் சொன்னதும் நான் பாடினேன்.

    அதே ஆடிக் கொண்டார் கீர்த்தனைதான். மகாதேவன் நான் பாடுவதைப் படத்தோடு பதிவு செய்து கொண்டார். நான் பாடியதைக் கேட்டு உள்ளூர்க் குழந்தைகள் வித்தியாசமாகப் பார்த்தன. இவன் என்ன மொழியில் பாடுகிறான்? எங்கிருந்து வந்திருப்பான்? அவர்களிடம் நான் எப்படிச் சொல்வது, நான் தென்பாண்டி நாட்டான் என்று… அதனாலென்ன எந்நாட்டவர்க்கும் உரிய இறைவனைப் பாடிய பாடல் என்று அந்தக் குழந்தைகளின் ஆன்மா உணர்ந்திருக்கக் கூடும்.

    இந்தியாவிலிருந்து பல்லாயிரம் கிலோமீட்டர் தொலைவிலுள்ள ஒரு காட்டுக்குள் வந்து இத்தனை லிங்கங்களைச் செதுக்கிய சிற்பிக்கு எங்களால் முடிந்த நன்றியை மனத்துக்குள் சொல்லிக் கொண்டோம். “எங்கே இருந்து இங்க வந்துருக்கு நம்ம சமயமும் பண்பாடும்” என்று ராஜூ சொல்லிச் சொல்லி மாய்ந்து போனார்.

    உப்புக்கல்லுக்குப் பிரயோஜனமில்லாத கான்கிரீட் குவியலைக் காண்பித்த பாவத்துக்கு ஆயிரம் லிங்கங்கள் மூலம் கழுவாய் தேடிக்கொண்டார் ரா. அடுத்து உங்களை ஒரு பெரிய அருவியில் குளிக்கக் கூட்டிக் கொண்டு போகிறேன் என்றார் ரா. ராஜூ, நவீன் இருவரும் அகண்ட தஞ்சை மாவட்டத்துக்காரர்கள். பரணிக்குத் திருச்சி. சின்ன வயதில் அருவிகளை அதிகம் பார்த்திருக்க வாய்ப்பில்லாத அப்பாவி ஜீவன்கள்.

    ஆனால் நான் அப்படியில்லையாக்கும். இராஜபாளையத்துக்காரன். என் வீட்டு மொட்டை மாடியிலிருந்து பார்த்தாலே ஏழெட்டு அருவிகள், மேற்குத் தொடர்ச்சி மலையில் இருந்து கொட்டுவது தெரியும். ஊரிலிருந்து பத்து கிலோமீட்டர் தொலைவில்தான் அய்யனார் கோயில் அருவி. முப்பழபூசை, காது குத்த, முடியிறக்க என்று அவ்வப்போது போய் அருவியில் ஆட்டம் போடும் கொடுப்பினை உள்ள ஆத்மா. போதாக் குறைக்கு, திருக்குற்றாலத்துக்கு எங்கள் ஊரைத் தாண்டித்தான் போயாக வேண்டும். ஆனால், நான் மூன்று முறைதான் திருக்குற்றாலம் போய் வந்திருக்கிறேன் என்பது வரலாற்றுச் சோகம்.. அதை விடுவோம்.

    அருவி எனக்குத் தண்ணிபட்ட பாடு. ஆகவே, என்னத்த பெரிய அருவி, என்னத்த பெரிய தண்ணீர் என்று எகத்தாளமாக ரா-வுடன் வண்டியில் ஏறினேன். ஏறிக் கொஞ்ச தூரம் போனதும் இறங்குங்கள் என்றார். எல்லாத்தையும் இங்கேயே கழட்டி வைச்சுட்டுக் குளிக்கிற மாதிரி வாங்க அப்பு என்றார். வேனுக்கு வெளியே அம்புட்டையும் உருவிப் போட்டு உள்ளாடைக்கு மேல் துண்டை மட்டும் கட்டிக் கொண்டு அருவியை நோக்கி நடக்கத் தொடங்கினோம்.

    பரணி சரியான நாட்டுக் கட்டை. கடகடவெனக் காட்டுப் பகுதியை நோக்கி நடக்கத் தொடங்கிவிட்டார். எனக்குக் காலில் செருப்பு இல்லாமல் நடக்க முடியவில்லை. அருகிலுள்ள கடைக்குப் போய் சாண்டல்ஸ் இரண்டு இரவல் வாங்கிப் போட்டுக் கொண்டேன். வெறும் துண்டுடன் அங்கிருந்த பெண்களைப் பார்த்துச் செருப்புக் கேட்கக் கூச்சமாகத்தான் இருந்தது. ஆனாலும் கால் நோகுதே ?

    அவர்களும் எதையோ தின்றுகொண்டே முகத்தை மூடிச் சிரித்துக் கொண்டே செருப்பைக் கொடுத்துப் போ போ என்றார்கள். எதிரே கூட்டம் கூட்டமாய்க் குளித்துவிட்டு வந்து கொண்டிருந்தார்கள். ஒரு பெரிய குதூகலத்தில் ஈடுபட்டால் மட்டுமே வரக்கூடிய மனக்கிளர்ச்சி எல்லார் முகத்திலும் தெரிவதைக் கவனித்தேன். அருவிக் குளியல் அனைவருக்கும் பிடித்தமானதுதான்.                                                   

    ஆனாலும் எதிரே வந்தவர்களின் முகங்களில் அதையும் தாண்டி ஓர் ஆனந்தம். இடுப்பில் உட்கார்ந்திருந்த அம்மணமான கைக்குழந்தைகள் கூட எம்பி எம்பிக் குதித்துக் கொண்டிருந்தன. பெண்கள் ஈரக்கூந்தலை விரித்துப் போட்டபடி சத்தமாகச் சிரித்துப் பேசிக் கொண்டு வந்தனர். கொஞ்ச தூரம் நடக்கத் தொடங்கியதும் அருவியின் ஓசை கேட்கத் தொடங்கியது. உயரமான ஓரிடத்திலிருந்து மரங்களின் வேர்களைப் பிடித்தவாறு பாதாளத்தில் இறங்க வேண்டியிருந்தது. படியெல்லாம் இல்லை.

    பரணி வெகு லாகவமாக இறங்கினார். ராஜூ யோகா பயிற்சி செய்யும் பார்ட்டி. சொல்லவே வேண்டாம். வில்லில் இருந்து விடுபட்ட அம்புபோல் எப்போதும் ஒரு விரைவு இருக்கும் அவரிடம். நவீன் ஒப்புநோக்க எங்களை விட இளையவர். நானும் மகாதேவனும் கொஞ்சம் தடுமாறிக் கீழே இறங்கினோம். அருவியில் குளித்தவர்கள் நடந்து நடந்து பாதை ஈரமாகிச் சொத சொதவென்றிருந்தது. பிடிமானமில்லாத செருப்பு வழுக்கத் தொடங்கியது.

    ஒருவரையொருவர் பற்றிக் கொண்டு அருவியை நோக்கி நடந்தோம். ஒரு கட்டத்தில் திரைவிலகியதுபோல் திடீரென எங்கள் முன் தொலைவில் அருவி தோன்றியது. கடவுளே !!!…..

    – பொன். மகாலிங்கம்

     

    சிங்கப்பூர் தொலைக்காட்சியில் பணியாற்றும் மூத்த இதழியலாளர். சென்னையின் முன்னணி ஊடகத்தில் முக்கியப் பொறுப்பில் இருந்தவர். சகமனிதர்கள் மீது அளவற்ற அன்பும், பாசமும் கொண்ட பண்பாளர். தமிழ் மீதும், பயணங்களின் மீதும் உள்ள அலாதியான ஆர்வம் காரணமாக அடிக்கடி எங்காவது புராதன இடங்களை தேடிச் சென்று அவற்றை தமது அழகு தமிழால் கட்டுரைகளாக்கி, வரும் தலைமுறைக்கு தகவல் பொக்கிஷங்களை சேர்ப்பதில் நாட்டம் கொண்டவர். அவரை தொடர்புகொள்ள – ponmaha2000@yahoo.com

  • உலகின் மிகப்பெரிய ஆலயம் – 5

    ஒரு மரத்துக்குக் கீழே நின்று கொண்டு தண்ணீருக்குள் அமிழ்ந்திருக்கும் லிங்கங்களைப் படம் எடுத்துக் கொண்டிருக்கும்போது பரணி கத்தினார். மகா, சிவன் மேல ஒரு பாட்டுப் பாடுங்களேன் என்று. நானே கிட்டத்தட்ட நெகிழ்ந்து போய், அந்த மனநிலையில்தான் இருந்தேன். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ME படிக்கும்போது நானும் நண்பர் சந்துருவும் கோயில் கோயிலாகப் போவோம். கங்கை கொண்ட சோழபுரமும் தாராசுரமும் எங்கள் இருவருக்கும் ஆகப் பிடித்தமான ஆலயங்கள்.

    ஒவ்வொருமுறை போகும்போதும் கருவறைக்கு அருகே நின்று சில பாடல்களைப் பாடுவது எங்கள் இருவருக்குமே மிகவும் பிடிக்கும். அதிலும் சந்துரு “இடது பதம் தூக்கி ஆடும் நடராஜனடி பணிவயே..நெஞ்சே”” என்ற பாடல் என்னை உருக்கிவிடும். சந்துரு புல்லாங்குழல் வாசிப்பதிலும் கெட்டிக்காரர். நாங்கள் போகும் முன்மாலை வேளையில் பெரும்பாலும் ஆளரவம் இருக்காது பழைய கோயில்களில். நேர்த்திக் கடன் செலுத்தும் பழக்கமுள்ள கோயில்களில்லை என்பதால், பக்தர்கள் யாரும் சீந்தாத கோயிலாகத்தான் இருக்கும் நாங்கள் போகும் கோயில்கள்.

    அந்தக் காலத்தில் எங்களிடம் அதிகக் காசு இருக்காது. முதலில் சாமி கும்பிட்டு தீபாராதனை முடித்து 2 ரூபாய் அல்லது 5 ரூபாய் தட்டில் போட்டாலே பெரிசு எங்கள் இருவருக்கும். அதனால், அர்ச்சகரும் எங்களை அவ்வளவாகக் கண்டுகொள்ள மாட்டார். தீபாராதனை முடிந்ததும் ஆச்சு என் கடமை என்று போய் முன்னால் உட்கார்ந்து விடுவார். அதற்கப்புறம், சந்துரு மெல்ல முனகிப் பாட ஆரம்பிப்பார். திடீரென ஊற்றுக்கண் திறந்து கிணற்றில் குளிர்நீர் பீறிடுவது போல சந்துருவின் வெண்கலக் குரல் கர்ப்பக்கிருஹத்தை நோக்கிப் பாயும் அந்தக் கணம்…. ஆஹா.. நான் பேறுபெற்றவன்..

    லிங்கத் திருமேனி சிலிர்த்து வாடிய மலர்களெல்லாம் மீண்டும் புதுசாய்ப் புஷ்பித்து விட்டது போன்ற எண்ணம் உண்டாகும். எண்ணெய் விளக்கின் ஒளியும் அறுபது வாட்ஸ் குண்டு பல்பின் ஒளியும் அந்தகாரத்தைக் கூட்ட, சந்துருவின் குரல் முன்மண்டபத்தில் அலை அலையாய்ப் பரவும். குறுகலான மண்டபம் குரலை வெகு இனிமையாக்கி எதிரொலிக்கும்.

    வெளியே போன அர்ச்சகர் ஓட்டமும் நடையுமாய் உள்ளே வருவார். வந்து அருகில் நின்று கொள்வார். கைகளை மார்பில் கோத்துக் கொண்டு கண்ணாடி வழியே சிவலிங்கத்தை மட்டுமே பார்த்துக் கொண்டு உடல் அசையாமல் பாடுவார் சந்துரு. அந்நேரம் அது வேற சந்துரு. நானறிந்த சந்துரு அல்ல அது.

    அதிகப் பாடல்கள் இல்லை. ஓரிரு பாடல்கள்தான் பாடுவார் சந்துரு. முதல்முறை கேட்கும்போதே கேட்கும் எவரையும் வசீகரித்துவிடக் கூடிய கீர்த்தனைகள் அவை. அவரைத் தொடர்ந்து நான் என்னுடைய ஆஸ்தானப் பாடலான முத்துத் தாண்டவரின் “ஆடிக் கொண்டார் அந்த வேடிக்கை காணக் கண் ஆயிரம் வேண்டாமோ”” ஆரம்பிப்பேன்.                         

    சீரணி கொன்றை மலர்த்தொடையாட சிதம்பரத்தேர் ஆட என்னும் போதே உணர்ச்சிவசப்பட்டுக் குரல் லேசாகக் கமறி உடையும். பேரணி வேதியர் தில்லை மூவாயிரம் பேர்களும் பூசித்துக் கொண்டு நின்றாட வரும்போது கிட்டத்தட்ட குரல் நின்றுவிடும். சுதாரித்துப் பாடி முடிக்கும்போது மனம் நிறைந்திருக்கும். திருச்சிறம்பலம் என்று சொல்லி முடிக்கும்போது அர்ச்சகர் உள்ளே ஓடிப்போய் விபூதியும் மாலையும் எடுத்துவந்து கொடுப்பார்.

    அது ஒரு காலம். அந்தணரான என் சந்துரு இப்போது ஓர் ஆப்பிரிக்கப் பெண்ணை மணந்து கொண்டு எத்தியோப்பியாவில் ஆசிரியராக வேலை செய்கிறார். காலம் எங்களை விசிறி வீசிவிட்டது. எத்தியோப்பியாவில் அவர் பாட்டைக் கேட்டு மயங்க ஈசன் எந்த வடிவில் இருக்கிறானோ? சந்துரு முறைப்படி சங்கீதம் கற்றவர்.

    அவர் மூலமாக யாருமற்ற ஆலயங்களில் பாடும் பழக்கம் எனக்கு வந்தது. அந்தப் பழக்கம் திருப்பதியில் பெருமாளை அதிக நேரம் தரிசிக்கும் வாய்ப்பையும் எனக்குத் தந்திருக்கிறது. என்னோடு படித்த கலைச்செல்வன், துரை அருள்நேயத்துடன் ஒருமுறை திடீரெனத் திருப்பதி கிளம்பிச் சென்றேன். இரண்டு நாட்கள் தங்குவதாகத் திட்டம். முதல்நாள் பகலில் 3 மணி நேரம் காத்திருந்து பெருமாளைத் தரிசித்தோம்.

    என்ன தோன்றியதோ தெரியவில்லை எனக்குப் பெருமாளைப் பார்த்ததும், பிரபந்தம் பாடத் தோன்றியது. பம்பாய் சகோதரிகள் லலிதா, சரோஜா பாடிய பிரபந்தங்கள் அடங்கிய கேசட் ஒன்று தமிழ் சுப்ரபாதத்துடன் T Series-சில் வெளியாகி இருந்தது. அதைக் கேட்டுக் கேட்டு மனப்பாடம் செய்திருந்தேன். காலையில் சுப்ரபாதமும் மாலையில் பிரபந்தமும் கேட்டுப் பழகி மனப்பாடமாகி இருந்தது.

    அந்த நினைவில், “செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே.. நெடியோனே வேங்கடவா “ என்று பாடத் தொடங்கிவிட்டேன். ஜரிகண்டி ஜரிகண்டி என்று கையைப் பிடித்து இழுத்துத் தள்ளாத குறையாய் கூட்டத்தை அனுப்பிக் கொண்டிருந்த ஆலய ஊழியர் என் மற்ற நண்பர்களைத் தள்ளிவிட்டு என்னை மட்டும், கூட்ட வரிசைக்குப் பின்னால் உந்தித் தள்ளினார். கையால் பாடு என்று சைகை காட்டினார். நான், என் நேர் முன்னே நகரும் வரிசை, அதற்கு அப்பால் பெருமாள்..

    அவ்வளவுதான்… எனக்குத் தெரிந்த பெருமாள் பாடல்கள் எல்லாம் சரக்குத் தீரும்வரை பாடினேன். அதில், திருமாலே சீராளும் மணிவண்ணா, கோபியர் கொஞ்சும் ரமணா உள்ளிட்ட திரையிசைப் பாடல்களும் அடக்கம். எனக்கே போதுமென்று தோன்றும்வரை திகட்டத் திகட்டப் பெருமாளைப் பார்த்துவிட்டு நானே வரிசையில் சேர்ந்து வெளியேறி வந்தால் கிட்டத்தட்ட கால்மணி நேரமாய் எனக்காகக் காத்திருந்த நண்பர்களின் முகத்தில் அனலடித்தது. ஏண்டா ஒனக்குப் பாடத் தெரியுங்கிறதைக் காட்றதுக்கு இதுதான் இடமா? என்று காதில் புகைவராத குறை..

    அதுக்கு நான் என்ன சேறது? அன்று அப்படி அமைந்தது. அதெல்லாம் நினைவு வருகிறது கம்போடியப் பயணத்தை எழுதும்போது. சிதம்பரத்தில் 13 ஆண்டுகள் நாட்டியாஞ்சலி பார்த்ததும் ஒருவிதத்தில் எனக்கு நிறையப் பாடல்களை அறிமுகம் செய்தது. தேடித் தேடி தெரிந்து கொண்ட பருவம் அது. பாட்டைப் பொறுத்தவரை, எல்லாம் கேள்வி ஞானம்தான். முறைப்படியெல்லாம் கற்கவில்லை. இருந்தாலும் கேசட்டில் கேட்டதைத் திருப்பி அச்சுப் பிசகாமல் பாடிவிடுவேன். அது பரணிக்குத் தெரியும். அந்த நினைவில், கம்போடியத் தண்ணீர் லிங்கங்களைப் பார்த்ததும் என்னைப் பாடச் சொன்னதும் நான் பாடினேன்.

    அதே ஆடிக் கொண்டார் கீர்த்தனைதான். மகாதேவன் நான் பாடுவதைப் படத்தோடு பதிவு செய்து கொண்டார். நான் பாடியதைக் கேட்டு உள்ளூர்க் குழந்தைகள் வித்தியாசமாகப் பார்த்தன. இவன் என்ன மொழியில் பாடுகிறான்? எங்கிருந்து வந்திருப்பான்? அவர்களிடம் நான் எப்படிச் சொல்வது, நான் தென்பாண்டி நாட்டான் என்று… அதனாலென்ன எந்நாட்டவர்க்கும் உரிய இறைவனைப் பாடிய பாடல் என்று அந்தக் குழந்தைகளின் ஆன்மா உணர்ந்திருக்கக் கூடும்.

    இந்தியாவிலிருந்து பல்லாயிரம் கிலோமீட்டர் தொலைவிலுள்ள ஒரு காட்டுக்குள் வந்து இத்தனை லிங்கங்களைச் செதுக்கிய சிற்பிக்கு எங்களால் முடிந்த நன்றியை மனத்துக்குள் சொல்லிக் கொண்டோம். “எங்கே இருந்து இங்க வந்துருக்கு நம்ம சமயமும் பண்பாடும்” என்று ராஜூ சொல்லிச் சொல்லி மாய்ந்து போனார்.

    உப்புக்கல்லுக்குப் பிரயோஜனமில்லாத கான்கிரீட் குவியலைக் காண்பித்த பாவத்துக்கு ஆயிரம் லிங்கங்கள் மூலம் கழுவாய் தேடிக்கொண்டார் ரா. அடுத்து உங்களை ஒரு பெரிய அருவியில் குளிக்கக் கூட்டிக் கொண்டு போகிறேன் என்றார் ரா. ராஜூ, நவீன் இருவரும் அகண்ட தஞ்சை மாவட்டத்துக்காரர்கள். பரணிக்குத் திருச்சி. சின்ன வயதில் அருவிகளை அதிகம் பார்த்திருக்க வாய்ப்பில்லாத அப்பாவி ஜீவன்கள்.

    ஆனால் நான் அப்படியில்லையாக்கும். இராஜபாளையத்துக்காரன். என் வீட்டு மொட்டை மாடியிலிருந்து பார்த்தாலே ஏழெட்டு அருவிகள், மேற்குத் தொடர்ச்சி மலையில் இருந்து கொட்டுவது தெரியும். ஊரிலிருந்து பத்து கிலோமீட்டர் தொலைவில்தான் அய்யனார் கோயில் அருவி. முப்பழபூசை, காது குத்த, முடியிறக்க என்று அவ்வப்போது போய் அருவியில் ஆட்டம் போடும் கொடுப்பினை உள்ள ஆத்மா. போதாக் குறைக்கு, திருக்குற்றாலத்துக்கு எங்கள் ஊரைத் தாண்டித்தான் போயாக வேண்டும். ஆனால், நான் மூன்று முறைதான் திருக்குற்றாலம் போய் வந்திருக்கிறேன் என்பது வரலாற்றுச் சோகம்.. அதை விடுவோம்.

    அருவி எனக்குத் தண்ணிபட்ட பாடு. ஆகவே, என்னத்த பெரிய அருவி, என்னத்த பெரிய தண்ணீர் என்று எகத்தாளமாக ரா-வுடன் வண்டியில் ஏறினேன். ஏறிக் கொஞ்ச தூரம் போனதும் இறங்குங்கள் என்றார். எல்லாத்தையும் இங்கேயே கழட்டி வைச்சுட்டுக் குளிக்கிற மாதிரி வாங்க அப்பு என்றார். வேனுக்கு வெளியே அம்புட்டையும் உருவிப் போட்டு உள்ளாடைக்கு மேல் துண்டை மட்டும் கட்டிக் கொண்டு அருவியை நோக்கி நடக்கத் தொடங்கினோம்.

    பரணி சரியான நாட்டுக் கட்டை. கடகடவெனக் காட்டுப் பகுதியை நோக்கி நடக்கத் தொடங்கிவிட்டார். எனக்குக் காலில் செருப்பு இல்லாமல் நடக்க முடியவில்லை. அருகிலுள்ள கடைக்குப் போய் சாண்டல்ஸ் இரண்டு இரவல் வாங்கிப் போட்டுக் கொண்டேன். வெறும் துண்டுடன் அங்கிருந்த பெண்களைப் பார்த்துச் செருப்புக் கேட்கக் கூச்சமாகத்தான் இருந்தது. ஆனாலும் கால் நோகுதே ?

    அவர்களும் எதையோ தின்றுகொண்டே முகத்தை மூடிச் சிரித்துக் கொண்டே செருப்பைக் கொடுத்துப் போ போ என்றார்கள். எதிரே கூட்டம் கூட்டமாய்க் குளித்துவிட்டு வந்து கொண்டிருந்தார்கள். ஒரு பெரிய குதூகலத்தில் ஈடுபட்டால் மட்டுமே வரக்கூடிய மனக்கிளர்ச்சி எல்லார் முகத்திலும் தெரிவதைக் கவனித்தேன். அருவிக் குளியல் அனைவருக்கும் பிடித்தமானதுதான்.                                                   

    ஆனாலும் எதிரே வந்தவர்களின் முகங்களில் அதையும் தாண்டி ஓர் ஆனந்தம். இடுப்பில் உட்கார்ந்திருந்த அம்மணமான கைக்குழந்தைகள் கூட எம்பி எம்பிக் குதித்துக் கொண்டிருந்தன. பெண்கள் ஈரக்கூந்தலை விரித்துப் போட்டபடி சத்தமாகச் சிரித்துப் பேசிக் கொண்டு வந்தனர். கொஞ்ச தூரம் நடக்கத் தொடங்கியதும் அருவியின் ஓசை கேட்கத் தொடங்கியது. உயரமான ஓரிடத்திலிருந்து மரங்களின் வேர்களைப் பிடித்தவாறு பாதாளத்தில் இறங்க வேண்டியிருந்தது. படியெல்லாம் இல்லை.

    பரணி வெகு லாகவமாக இறங்கினார். ராஜூ யோகா பயிற்சி செய்யும் பார்ட்டி. சொல்லவே வேண்டாம். வில்லில் இருந்து விடுபட்ட அம்புபோல் எப்போதும் ஒரு விரைவு இருக்கும் அவரிடம். நவீன் ஒப்புநோக்க எங்களை விட இளையவர். நானும் மகாதேவனும் கொஞ்சம் தடுமாறிக் கீழே இறங்கினோம். அருவியில் குளித்தவர்கள் நடந்து நடந்து பாதை ஈரமாகிச் சொத சொதவென்றிருந்தது. பிடிமானமில்லாத செருப்பு வழுக்கத் தொடங்கியது.

    ஒருவரையொருவர் பற்றிக் கொண்டு அருவியை நோக்கி நடந்தோம். ஒரு கட்டத்தில் திரைவிலகியதுபோல் திடீரென எங்கள் முன் தொலைவில் அருவி தோன்றியது. கடவுளே !!!…..

    – பொன். மகாலிங்கம்

     

    சிங்கப்பூர் தொலைக்காட்சியில் பணியாற்றும் மூத்த இதழியலாளர். சென்னையின் முன்னணி ஊடகத்தில் முக்கியப் பொறுப்பில் இருந்தவர். சகமனிதர்கள் மீது அளவற்ற அன்பும், பாசமும் கொண்ட பண்பாளர். தமிழ் மீதும், பயணங்களின் மீதும் உள்ள அலாதியான ஆர்வம் காரணமாக அடிக்கடி எங்காவது புராதன இடங்களை தேடிச் சென்று அவற்றை தமது அழகு தமிழால் கட்டுரைகளாக்கி, வரும் தலைமுறைக்கு தகவல் பொக்கிஷங்களை சேர்ப்பதில் நாட்டம் கொண்டவர். அவரை தொடர்புகொள்ள – ponmaha2000@yahoo.com

  • என் குலதெய்வம் காளி – எம்ஜிஆர்

    பக்தி மற்றும் ஆன்மீகம் மீது ஒருவருக்கு நம்பிக்கை வந்துவிட்டால் மறைக்கவே முடியாது என்பதற்கு மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களே ஒரு உதாரணம்.. 

    ஆரம்பத்தில் கடவுள் நம்பிக்கை கொண்ட அவர், திராவிட கட்சியில் சேர்ந்த பிறகு புராண, இதிகாச படங்களை அறவே தவிர்த்தார். படங்களில் அவர் தத்துவம் பேசும் காட்சிகளின் பின்புலத்தில்கூட கடவுள் படங்களை விட, புத்தர், அண்ணா போன்ற படங்களே இருக்கும். ஆனாலும் இறை நம்பிக்கையை எம்ஜிஆர் மறுக்கவேயில்லை.

    தனிப்பட்ட நம்பிக்கையில் தலையிட அரசியல் கட்சிக்கு எந்த உரிமையும் கிடையாது என்று வெளிப்படையாக சொல்லவே, தனிப்பிறவி படத்தில் முருகன் வேடம் போட்டு ஆச்சர்யத்தை ஏற்படுத்தினார். தனது தாய்தான் தனக்கு கண்கண்ட தெய்வம் என்று உருகிய எம்ஜிஆர், தான் வாழ்ந்த வீட்டிலிலேயே தாய்க்காக கோவில் கட்டி வழிப்பட்டார். மூகாம்பிக்கை அம்மன் தனது தாய் வடிவில் காட்சியளிப்பதாக அவர் கூறியபோது திராவிட தரப்பிலிருந்து எந்த விமர்சனமும் வரவில்லை. உடுப்பி கொல்லூர் மூகாம்பிகையை எம்ஜிஆர் நேரடியாக வழிபடத்தொடங்கியதுடன் பெரும் பொருட்செலவில் கூடிய நீளமான தங்க வாள் ஒன்றையும் கோவிலுக்கு அளித்து. பக்தியின் சரணாகதித்துவத்தை பட்டவர்த்தனமாக காட்டினார்.

    இறைமறுப்பு பிம்பமாக இன்றளவு திகழும் தந்தை பெரியாரை அரசியல் முன்னோடியாக கொண்டாலும், பக்தியை மறைத்து மறைத்து அவர் வழிபட்டதில்லை. பக்தியின் பலமே இதுதான். நம்பிக்கையை மனதில் விதைத்து ஆன்மீக பாதையில் ஒழுக்க நெறிகளோடு சுத்தமான பாதையில் பயணிக்க வைப்பதுதான் அதன் சிறப்பம்சம்.

    இறை நம்பிக்கை உள்ளவர்கள் யாருக்கும் தங்கள் பக்தி, வழிபாட்டு முறைகள் போன்றவற்றை மறைக்கவேண்டிய அவசியமில்லை என்பதற்கு இதோ ஓர் உதாரணம்.

    கடவுள் நம்பிக்கை உண்டா? கோயிலுக்கு போவீர்களா? என்ற கேள்விக்கு எம்ஜிசூர் தன் வாயாலேயே அளித்த பதில்கள்…’’நிச்சயமா கடவுள் நம்பிக்கை உண்டு. கோயில்களுக்கு போவேன். 12, 13 வயதில் திருப்பதிக்கு இரண்டு தடவை போயிருக்கிறேன். அங்கே தாமரை மணி மாலை வாங்கினேன். ரொம்ப காலம் அதை கழுத்தில் அணிந்திருந்தேன். சிலர் நினைப்பது போல அது ருத்ராட்ச மாலை இல்லை. கோயில்களுக்கு போவேனே தவிர, அது வேண்டும் இது வேண்டும் என்று கடவுளிடம் வேண்டிக் கொள்வதெல்லாம் கிடையாது. வேண்டுவதுகூட தப்பில்லை. நமக்கு நேரும் கஷ்டங்களுக்கு கடவுளை குறை சொல்வதுதான் எனக்கு பிடிப்பதில்லை’’ என்கிறார்.

    உங்களுக்கு குல தெய்வம் உண்டா? என்ற இன்னொரு கேள்விக்கு, ‘காளி எங்கள் குல தெய்வம். காளியையும் விஷ்ணுவையும் தவறாமல் வணங்கி வந்தார் என் தாய். திருப்பதி வெங்கடாஜலபதி மேல் அவருக்கு ரொம்ப பக்தி’ என்று தன் குடும்பத்து இஷ்ட தெய்வங்களை தெளிவாகவே பட்டியலிடுகிறார் அவர்.

    அல்லாவின் மேல் ஆணை என்ற வசனத்தை உச்சரிக்க விருப்பமின்றி அம்மாவின் மேல் ஆணை என்று பேசி நாத்திக பாதையை விடமுடியாததால், மாடர்ன் தியேட்டர்ஸ் என்ற மாபெரும் நிறுவனத்தோடு தொழில் உறவையே ஸ்தம்பிக்க செய்தவர் எம்ஜிஆர்.
    அப்படிப்பட்டவர் பின்னாளில் ஆன்மீகவாதியாக மாறி முதலமைச்சர் என்ற வாய்ப்பு கிடைத்தபோது ஸ்ரீரங்கம் உட்பட எண்ணற்ற பிரபலமான கோவில்களின் புணரமைப்பு திருப்பணிகளை செய்தார் என்றால் அதுதான் பக்தி மார்க்கத்தின் அசைக்கமுடியாத சக்தி

    – ஏழுமலை வெங்கடேசன்

    தமிழின் மூத்த ஊடகவியலாளர். சன், ஜீ டிவி ஆகிய தொலைக்காட்சிகளில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். வளர்ந்து வரும் தொலைக்காட்சி நிறுவனங்கள் சிலவற்றிற்கு ஆலோசகராக இருப்பவர். சமூக நிகழ்வுகள் குறித்த தனது ஆழமான பார்வையை சமூக ஊடகங்களில் ஆணித்தரமாக பதிவு செய்யத் தவறாதவர். இதன் மூலம் ஃபேஸ்புக்கில் மிகப்பெரிய வாசகர் வட்டத்தைக் கொண்டிருப்பவர்.

  • தனி ஒருவன் குளிகன்

    நல்லது செய்யாததை நாள் செய்யும், நாள் செய்யாததை நேரம் செய்யும் என்று ஒரு வழக்கு உண்டு.
     
    நம் அனைவருக்கும் சாராசரியாக யமகண்டம், ராகுகாலம் பற்றி தெரிந்துயிருக்கும். காலண்டரில் குளிகை நேரம் என்பதை பார்த்திருப்போம். உண்மையில் குளிகை நேரத்தில் ஒரு வேலையைய் செய்யத்தொடங்கினால், அது தொடர்ந்துக் கொண்டே இருக்கும் என்பார்கள், ஆயினும் குளிகையில் நல்ல விஷயங்கள் தொடங்குவதில்லை அது ஏன்? அதற்கு காரணம் அவரது தந்தை.
    குளிகையும் அவரது தந்தையையும் சந்திக்கலாமா?
     
    மண்டோதரிக்கு பிரசவ நேரம். வலியால் துடித்தபடி இருந்தாள் இலங்கையின் மகாராணி. இராவணன் 9 கோள்களையும் அழைத்தான், பிரம்ம தேவரையும் அழைத்து அதிஅற்புதமான நேரத்திலேயும், உலகின் தலைசிறந்த ஜாதக அமைப்போடும் தன் பிள்ளை பிறக்க‌ வேண்டும் என ஆணையிட்டான். அதன்படி நவகிரஹங்கள் இராவணன் இஷ்டப்படி இதுவரை யாருக்கும் அமையாத ஜாதகமாக நிற்க வைக்கப்பட்டனர். பிரம்மதேவரும் ஒரு குறையும் இல்லாத ஜாதகத்தை வடிவமைத்தார்.
     
    ஆனால் நவகிரஹங்களுக்கும், தேவர்களுக்கும் இது மிகவும் வேதனையாக இருந்தது. இனி இராவணேஸ்வரனை அழிக்க முடியாது
    என துயரமுற்றனர். அந்த அவஸ்தையினால் சனீஸ்வர பகவான் வியர்த்து வழிந்தார். தன் வியர்வையை எடுத்து எறிந்து கொண்டே இருந்தார். அதே வேளையில் மண்டோதரி அழகிய ஆண் குழந்தையை ஈன்றாள்.
     
    தன் பிள்ளையை இனி எவராலும் அழிக்கமுடியாது என்று இராவணன் கர்வமடைந்தான். அனைவரும் சோகத்தில் ஆழ்ந்தனர். ஆனால் பிரம்மதேவரோ மிகுந்த நிம்மதியடைந்தார். நவகிரஹங்களை தனியே அழைத்து, சனீஸ்வரனின் மைந்தன் நம்மை காப்பாற்றியுள்ளான் என்றார். யாருக்கும் எதுவும் விளங்கவில்லை.
     
    பிரம்மனே தொடந்தார், சனி பகவானின் வியர்வை மகனாக அவதரித்துள்ளான். சாதாரணமாக அப்பழுக்கில்லாத ஜாதகத்தை கொண்ட உயிரை நான் படைப்பதில்லை. எனவே நான் மிகுந்த வேதனையில் இருந்தேன். ஆனால், சனி பகவானின் மகன் அக்குறையை நிவர்த்தி செய்து விட்டான், 9 கோள்களும் ஒரு புறம் இருக்க, மறுபுறம் தனி ஒருவனாக‌ நின்று, அனைவரின் நற்பலன்களையும் சிதறடித்துவிட்டான். அவனுக்கு குளிகன் எனப் பெயர் இடுகிறேன், என்றார்.
     
    நவகிரஹங்களில் ஒரு இடத்தை தர இயலாது, அதனால் ஒரு நாளில் சில நாழிகைகள் அவனுக்கு தருகிறேன். குளிகனால் கெடுதல் மிகையாக இல்லையென்றாலும், இராவணனின் மகனுடைய அழிவிற்கு உதவியதாலும் சனி பகவானின் மகனாக இருப்பதாலும், குளிகை நேரத்தில் நல்ல விஷயங்களை தொடங்க முடியாது என்றார் பிரம்மர்.
     
    குளிகை நேரத்தில் ஒரு காரியம் தொடங்கினால் அது, தொடரும் என்பார்கள்ஆ. தலால் பெரும் கடனுடையவர்கள் குளிகை நேரத்தில் கடனை அடைக்க முயலுவார்கள். 
     
    இதை தான் கெட்டதிலும் ஒரு நல்லது என்கிறார்களோ…
     
    – ரம்யா சுரேஷ்

    ரம்யா சுரேஷ் – சிங்கப்பூர் வாழ் பட்டிமன்ற பேச்சாளர், குழந்தைகளுக்கான நிகழ்ச்சி தயாரிப்பாளர். சிறுவர் நூலாசிரியர் மற்றும் பகுதி நேர ஆசிரியர். (கலாச்சாரம்). இவரைத் தொடர்பு கொள்ள – sangemahathi@gmail.com  

  • உலகின் மிகப்பெரிய ஆலயம் – 4

         புத்தர் கோயிலைப் பார்க்கப் படிகளை ஏறிக் கடந்தோம். படியேறும் வழியில் சிறு விற்பனையாளர்கள் சிலரைக் காண முடிந்தது. நம்ம ஊர் என்றால் மலைக் கோயில் வாசல்களில் மலைவாழ் மக்கள் சுத்தமான தேன் என்று கூறி பாட்டில்களில் விற்பார்கள். இங்கு விற்கப்பட்ட பல பொருட்களை எங்களுக்கு அடையாளந் தெரியவில்லை. உள்ளூர்க்காரர்களுக்குத் தெரிந்திருக்கும். சில விலங்குகளின் உடல் பாகங்களை ஒருவர் காதலியோடு விற்றுக் கொண்டிருந்தார்.

         காதலியோடு சரசமாடிக் கொண்டு சற்றுத் தொலைவில் தடுப்புச் சுவரில் உட்கார்ந்திருந்தார். எலும்பு, நகம், தோல் என வகை வகையான உடல் பாகங்கள். ஏதோ ஒருவகைக் குரங்கின் உடல் பாகங்கள்போல் தெரிந்தது. இது சட்டபூர்வமா இல்லையா தெரியவில்லை. அவற்றிலிருந்து ஒருவித வாடை வந்து கொண்டிருந்தது. மாணவர் கூட்டம் ஒன்று பேசிச் சிரித்துக் கொண்டு மேலிருந்து கீழே இறங்கி வந்தது. நவீன் அவர்களோடு படம் எடுத்துக் கொண்டார்.

         ஆண்களும் பெண்களும் பழகுவதில் இங்கு பெரிதாகத் தடை இருப்பதுபோல் தெரியவில்லை. சகஜமாக இருந்தனர். எல்லாருமே பதின்ம வயது மாணவர்கள்தான். அந்த இளமைக்கே உரிய துள்ளலும் குறும்பும். செல்லும் வழியில் சிமெண்ட்டால் செய்யப்பட்ட சில உருவங்கள் இருந்தன. ஒன்றும் மனத்தைக் கவரவில்லை. மேலே பெரிய புத்தர் கிடந்த கோலத்தில் இருந்தார். அவர் ஒருத்தர்தான் கொஞ்சம் பார்க்கும்படி இருந்தார். அதுவும் கல் சிற்பமல்ல. கான்கிரீட் புத்தர்தான்.

         பேங்காக்கில் பார்த்த மிகப் பெரிய புத்தரைப் போன்றதே இதுவும். ஆனால் அதிலாவது ஓரளவு கலைநயம் இருந்தது. இதில் மெச்சும்படி ஏதுமில்லை. கான்கிரீட்டில், சிமெண்ட்டில் செய்யப்பட்ட சிலை என்றாலே எனக்கு ஏதோ ஒவ்வாமை. நம்ம ஊர்க் கோயில் விமானம், கோபுரங்களில் உள்ள சுதை வேலைப்பாடு, கோபுர பொம்மைகள் தனி. அவை சில இடங்களில் கலையழகுடன் மிளிரப் பார்த்திருக்கிறேன்.

         இந்த புத்தருக்கு மஞ்சளாக வர்ணமடித்து மேலே மஞ்சள் துணியில் விதானம் அமைத்திருந்தனர். புத்தரைச் சுற்றிவர இடம் விட்டிருந்தனர். அந்த புத்தருக்கு அருகே வெவ்வேறு சிலைகள். பெரிய புத்தருக்குக் கீழே அவர் உடலைச் சுற்றிவர சின்னச் சின்ன புத்தர் சிலைகள். அருகிலேயே ராஜ அலங்காரத்தில் மரகத புத்தர் சிலை. கண்கள் திறந்த நிலையில் இருந்தது. பேங்காக் அரண்மனை வளாகத்தில் இருக்கும் ராஜ புத்தரின் நகல் வடிவம். அதுவும் காமா சோமாவென்றிருந்தது.

         அந்த வளாகத்துக்குள்ளேயே பௌத்த பிக்குகள் தங்குவதற்கு ஒரு சின்ன மடாலயம். மனத்தில் எதுவுமே ஒட்டவில்லை. நல்ல வெக்கை வேறு. இவ்வளவு உயரம் வந்து இந்த வெக்கை வித்தியாசமாக இருந்தது. வரும் வழியில் கூடக் குளிர் காற்று இருந்தது. நல்லவேளை வெயில் கடுமையாக இல்லை. இலக்கின்றி வெறித்துப் பார்த்துவிட்டு ஏமாற்றத்துடன் கீழே இறங்கினோம்.

    வரும் வழியில் வடிவாக இருந்த ஒரு பெரிய சிவலிங்கம் சின்ன ஆறுதல். மொழு மொழுவெனக் கருங்கல்லில் செய்யப்பட்ட சிவலிங்கம். வெட்டவெளியில் சிவனே என்று உட்கார்ந்திருந்தது. சதுரமான ஆவுடையார். மேலே பாணலிங்கம் மாதிரி லிங்கம். கீழே இறங்கியதும் இடப்பக்கமாக நடத்தி அழைத்துச் சென்றார் ஓட்டுநர் ரா. ஆயிரம் லிங்கங்கள் செதுக்கப்பட்ட ஆற்றைப் பார்க்க..

         இந்த ஆற்றிலிருந்துதான் தண்ணீர் கீழே போகிறது. இதனுடன் மேலும் சில கிளை நதிகள் சேர்ந்து கொண்டுதான் அங்கோர் ஆலயத்தைச் சுற்றியுள்ள வட்டாரத்தை வளப்படுத்துகின்றன என நினைக்கிறேன். கெமர் பேரரசு என்பது ஒன்பதாம் நூற்றாண்டு முதல் பன்னிரண்டாம் நூற்றாண்டு வரை நீடித்த சாம்ராஜ்யம். அதன் ஒரு பகுதியான இந்த லிங்கங்கள் எப்போது வடிக்கப்பட்டன என்பது பற்றித் தெளிவான தகவல் இல்லை.

         ஆற்றுப் படுகையெங்கும் வட்டமாகவும் சதுரமாகவும் ஆவுடையார் விளிம்பு வைத்து உள்ளே வட்ட வட்டக் கல் இட்டலிகள் போல் உள்ளன பெரும்பாலான லிங்கங்கள். சிறுவயதில் நாம் களிமண்ணைப் பிசைந்து கரைத்து ஊற்றி விளையாடிய வட்டங்கள் போலிருந்தன. நாங்கள் போயிருந்த நேரம் தண்ணீர் அதிகம் இல்லை. ஆகவே தெளிவாக லிங்கங்களைக் காண முடிந்தது.

         லிங்கத்தோடு பெரிய விஷ்ணு உருவம் ஒன்றும் நதிப் படுகையில் இருந்தது. உற்றுப் பார்த்தால்தான் தெரியும். விஷ்ணுவையும் லிங்கங்கள் பலவற்றையும் இப்படித் தண்ணீருக்குள் பார்ப்பது ஒரு புது அனுபவம். லிங்க வடிவங்களால் ஆசிர்வதிக்கப்பட்டுப் புனிதமடையும் தண்ணீர் கீழே உள்ள வயல்களில் பாய்ந்து நல்ல விளைச்சலைக் கொடுக்கும் என்பது கம்போடியர்களின் நம்பிக்கை.

         நாங்கள் நின்ற இடத்திலிருந்து மேலே போனால், சின்னச் சின்ன அருவிகளும் அவற்றின் ஓரங்களில் மேலும் பல இந்துக் கடவுளரின் உருவச் செதுக்குகளும் இருப்பதாக ஓட்டுநர் சொன்னார். மேலே போக நேரமில்லை. எங்கள் கண்ணுக்கு எதிரிலேயே உள்ளூர்க் குழந்தைகள் லிங்கத்தின் மீது கால்படாமல் ஆற்றைக் கடந்து எதிர்த்திசைக்குப் போயினர்.      

                சலசலவென ஓடும் நதியும் நிழல்தரு மரங்களும் ஏகாந்த உணர்வைத் தந்தன. நம் பாட்டன் முப்பாட்டன் வந்து நின்ற இடம். இதைச் செதுக்கிய சிற்பி பிறவியிலேயே இந்துவாகப் பிறந்திருப்பானா? இங்கு இந்து சமயம் பரவியது எப்படி? அதற்குமுன் இந்த மக்கள் எந்த சமயத்தைப் பின்பற்றினார்கள்? ஏன் இந்து மதத்திற்கு மாறினார்கள்? இந்துப் புராண இதிகாசங்கள் இவ்வளவு தூரம் இவர்களுக்குள் ஊறியது எப்படி? எனப் பலவிதமாக நினைத்துக் கொண்டேன்.

    – பொன். மகாலிங்கம்

    ———-

     பொன். மகாலிங்கம் – சிங்கப்பூர் தொலைக்காட்சியில் பணியாற்றும் மூத்த இதழியலாளர். சென்னையின் முன்னணி ஊடகத்தில் முக்கியப் பொறுப்பில் இருந்தவர். சகமனிதர்கள் மீது அளவற்ற அன்பும், பாசமும் கொண்ட பண்பாளர். தமிழ் மீதும், பயணங்களின் மீதும் உள்ள அலாதியான ஆர்வம் காரணமாக அடிக்கடி எங்காவது புராதன இடங்களை தேடிச் சென்று அவற்றை தமது அழகு தமிழால் கட்டுரைகளாக்கி, வரும் தலைமுறைக்கு தகவல் பொக்கிஷங்களை சேர்ப்பதில் நாட்டம் கொண்டவர். அவரை தொடர்புகொள்ள – ponmaha2000@yahoo.com

  • சித்தர்கள் யார்?

    ‘சித்தர்கள்’ என்றால் மகாசக்தி படைத்த மனிதர்கள் என்பதுதான் பொதுவான எண்ணம். உண்மையில் யார் சித்தர்கள்? இன்றும் சித்தர்கள் இருக்கிறார்களா? ஆம் என்றால் எங்கு இருக்கிறார்கள்? அவர்களை நாம் பார்க்க முடியுமா? முடியும் என்றால் எப்படி பார்ப்பது? இப்படி அடுக்கடுக்காய் பல கேள்விகள் எழுகின்றன. 

    முதலில் சித்தர்கள் என்ற சொல்லுக்கான பொருளைத் தெரிந்துகொள்வோம். மெய்ஞ்ஞானத்தை உண்மையிலேயே தேடுகிற அனைவரையும் இந்தச் சொல் குறிக்கிறது எனலாம். இருந்தாலும், வைத்தியம், வான சாஸ்திரம், மாந்திரீகம், இரசவாதம், சூத்திர சாஸ்திரம், யோகம் போன்ற நுட்பமான விஷயங்கள் பற்றிய நூல்களை இயற்றியவர்கள் சித்தர்கள் எனப்படுகிறார்கள். சித்தர்கள் என்பவர்கள் தெய்வமரபைச் சார்ந்தவர்கள். அவர்கள் தூய்மையின் சிகரமாகவும் தெய்வீகத்தன்மையும் கொண்டவர்கள்.

    சித்தன் என்பவன் மூன்று விதமான கட்டுப்பாடுகளை தன்னுள் கடைப்பிடித்துக் கொண்டு அதன்படி வாழ்தலில் வெற்றிகண்டு சமத்துவத்தையும் சமநிலையையும் ஏற்படுத்திக் கொள்பவன் ஆவான். மூச்சை அடக்குதல் (பிராணாயாமம்), விந்துவை வெளியிடாது அடக்கிக் காமத்தை வென்று எந்தவித ஆசைகளும் இல்லாத நிலையை அடைதல், இறுதியாக மனதை அடக்குதல் என்பவையே அந்த மூவகைக் கட்டுப்பாடுகள். சித்தர்கள் எங்கிருந்து எதை உண்டாலும் எப்படித் தோற்றமளித்து எதைச் செய்தாலும் உலகியல் கூட்டத்தோடு கூட்டமாகக் கலந்திருந்தாலும் அவர்களுடைய சிந்தனை ‘சிவம்’ ஆகிய பரம்பொருளோடு ஒன்றாயிருக்கும். இல்லற வாழ்வெனும் உலகியலில் இருந்தாலும் ஆசைகள் அவர்களைப் பாதிப்பதில்லை. அவர்கள் புளியம்பழமும் ஓடும் போல் ஒட்டாமல் இருப்பர். எனவே, சித்தர் நிலையைத் தொட்டவர்கள் காட்டிலோ குகையிலோ வாழ வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை. “கடவுளைக்காண முயல்பவர்கள் பக்தர்கள். தெளிந்தவர்கள் சித்தர்கள்.”

    மனிதர்களிடத்தே நிலவும் சாதிவேற்றுமைகளையும் ஏற்றதாழ்வுகளையும் கடுமையாகச் சாடிப் புரட்சி செய்தவர்கள் சித்தர்கள். சித்தத்தில் சிவனைக்காணும் வரை உடலைக் காக்கும் பொருட்டு திட ஆரோக்கியத்துடன் வைத்திருக்கக் காயகல்பம் உண்டவர்கள். மேலும், ஏழைகளின் நோய்களைத் தீர்ப்பதற்கு சித்தர்கள் எளிய மருந்துகளைக் கண்டறிந்து அவர்களின் துன்பம் தீர்த்தனர். சித்தர்களில் பலர் யோகப்பயிற்சியாலும் சிலர் ஞானயோகப் பயிற்சியாலும் சித்த ஒழுக்கம் கண்டு சிவநிலை அடைந்தவர்கள். இவர்கள் மனோ சக்தியால் நினைத்ததை சாதித்தவர்கள். அகண்ட அண்ட சராசர ரகசியங்களையும் அறிந்து அவற்றை வெளி உலகிற்கு அளித்தவர்கள்.

    சித்தர்கள் யோகசாதனத்தால் பெற்ற பயன்களை மக்கள் நன்மைக்காக பயன்படுத்தினார்களே ஒழிய, தங்களுக்காக எதுவும் செய்து கொண்டதாக தெரியவில்லை. பதினெண் சித்தர்களுக்கு முன்னே நவநாத சித்தர்கள் என்ற ஆதி தமிழ்ச்சித்தர்கள் இருந்ததாக வரலாறு கூறுகிறது. சித்தர்கள் தாங்கள் கண்ட அனுபவங்களை மக்கள் பயன்படுத்தும்வகையில் மிக மிக, எளிமையான இலக்கண நடையில் பாமரரும் புரிந்து கொள்ளும் வண்ணம் ஓலைச்சுவடிகளில் நூல்களாக எழுதியுள்ளார்கள்.

    எண்ணற்ற சித்தர்கள் தமிழகத்தில் வாழ்ந்ததாகப் பல வரலாற்று நூல்கள் எடுத்துரைத்துள்ளன. அகத்தியர் என்ற பெயரில் மட்டும் 37 பேர்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது. அவர்களில் நம் தமிழ் மரபைப் சேர்ந்த அகத்தியர் திருக்குற்றால மலையில் சிவபெருமானை எண்ணிக் கடும் தவமிருந்து அங்கு ஆலயம் அமைத்து வழிபட்டவர். இவரது காலம் கி பி. 13 ஆம் நூற்றாண்டாகும். அகத்தியர் தமிழ்மொழி, தமிழ் இலக்கணங்களைப் பரமசிவனிடத்தில் இருந்தும், முருகப் பெருமானிடத்திலிருந்தும் கற்றுத்தமிழ் மொழியைத் தமிழ் நாட்டில் நன்கு வளர்த்தார். இவர் மார்கழி மாதம் ஆயில்ய நட்சத்திரம் 3ம் மாதத்தில் பிறந்ததாகப் போகர் தமது 7000ஆம் நூலில் கூறுகிறார். அகத்தியர், திருமூலர், போகர் என பல சித்தர்கள் இந்த மண்ணில் வாழ்ந்து மக்களுக்கு நல்வழிகாட்டியிருக்கிறார்கள்.

    அடுத்தடுத்த கட்டுரைகளில் இவர்கள் ஒவ்வொருவரைப் பற்றியும், அவர்கள் செய்த அற்புதங்கள் பற்றியும் விரிவாகப் பார்க்கலாம்..

    – தொடரும்