Category: அவசியம் படிக்க

அவசியம் படிக்க

  • Thiruvannamalai pradhosham

    பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாக விளங்கக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில் உள்ள ஆயிரங்கால் மண்டபம் அருகே பெரிய நந்திக்கு புரட்டாசி மாத பிரதோஷம் வெகு விமர்சையாக நடைபெற்றது. பொளர்ணமி மற்றும் அமாவாசை வரும் இரண்டு தினங்களுக்கு முன்பு மகா நந்திக்கு பிரேதோஷம் நடைபெறுவது வழக்கம்.

    புரட்டாசி மாத பிரதோஷ தினமான இன்று அண்ணாமலையார் கோவிலில் உள்ள பெரிய நந்திக்கு அரிசி மாவு, மஞ்சள் தூள், அபிஷேகத்தூள், பஞ்சாமிர்தம், தயிர், தேன், பன்னீர், இளநீர், சந்தனம், விபூதி மற்றும்  பால் ஆகியவற்றைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

    இதனை தொடர்ந்து பெரிய நந்தி பகவானுக்கு அருகம்புல், வில்வ இலை, சாமந்திப்பூ, மல்லி, கனகாம்பரம் ஆகிய வண்ண வண்ண மலர்களால் மாலை அணிவித்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பஞ்சமுக தீபாராதனையும் நடைபெற்றது.

    பிரதோஷ தினத்தின் பொழுது நந்திவர்மனை வழிபட்டால் நினைத்த அனைத்து காரியங்களும் நிறைவேறும், திருமணம் ஆகாதவர்களுக்கு திருமண பாக்கியம் கிடைக்கும், குழந்தைப்பேறு இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது ஐதீகம்.  புரட்டாசி மாத பிரதேஷத்தினை ஏராளமான பக்தர்கள் நேரில் கண்டு அண்ணாமலையாருக்கு அரோகரா கோஷம் எழுப்பி சாமி தரிசனம் செய்தனர்.

  • Thirupathy chakrathazhavar theerthavari

    அனந்த பத்மநாப விரதத்தையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோயில் தெப்பக்குளத்தில் நடந்த சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி.

    சுக்லபட்ச சதுர்தசியில் நிகழும் விரதங்களில் மிக முக்கிய சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுவது அனந்த சதுர்தசி விரதமாகும். பாத்ரபத புரட்டாசி மாதம் வளர்பிறை சதுர்தசி திதியில் வரும் இதை அனந்த பத்மநாப சுவாமி விரதம் எனவும்   அழைக்கப்படுகிறது.  அளவிட முடியாத செல்வச் செழிப்புக்களை அளிக்கக் கூடியது இவ்விரதம். ஸ்ரீமந் நாராயணன் ஆதிசேஷன் மீது, அனந்த பத்மநாபனாக சயனித்தவாறு இந்நாளில் தோன்றியதாக ஐதீகம்.

    அனைத்து உயிரினங்களின் மீதும் அளவிலாக் கருணையுடன், அவற்றின் வளமான வாழ்வில் பற்று கொண்டவராக கூப்பிட்ட குரலுக்கு அந்த நொடியிலேயே காத்தருள ஓடி வருபவராகத் துயிலுற்ற நிலையிலும், விழிப்புற்றவராகச் சயனித்திருக்கிறார் மகா விஷ்ணு.  எனவே மகா விஷ்ணு அவதாரமாக கலியுகத்தில் சீனிவாச பெருமாளாக பக்தர்கள் கேட்கும் கோரிக்கைகளை நிறைவேற்றும் தெய்வமாக விளங்கி வருகிறார் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் உள்ள சீனிவாச பெருமாள். இதையொட்டி திருமலையில் அனந்த பத்மநாப ஸ்வாமி விரதத்தையொட்டி சக்கரத்தாழ்வாருக்கு  தீர்த்தவாரி இன்று நடைபெற்றது.

    ஏழமலையான் கோயிலில் இருந்து சக்கரத்தாழ்வார் ஊர்வலமாக நான்கு மாட வீதியில் வலம் வந்து தெப்பகுளத்தில் பால், தயிர், தேன் கொண்டு சிறப்பு திருமஞ்சனம் செய்யப்பட்டு  சக்கரத்தாழ்வாருக்கு  தீர்த்தவாரி  நடைபெற்றது. இதில் தேவஸ்தான துணை செயல் அதிகாரி ஹரிந்திரநாத், அர்ச்சகர்கள் மற்றும் பக்தர்கள் பங்கேற்றனர்.

    அனந்த பத்மநாப சுவாமி விரதம் 108 வைணவ திவ்ய தேசங்களிலும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் நிறைவு நாள், வைகுண்ட ஏகாதசி, ரத சப்தமி, அனந்த பத்மநாப சுவாமி விரத தினங்களில் மட்டுமே சக்கரத்தாழ்வாருக்கு தெப்பகுளத்தில் தீர்த்தவாரி நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

  • September 28 2023 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம் –  வரவு
    ரிஷபம் –    தாமதம்  
    மிதுனம் –   செலவு
    கடகம் – ஆதரவு
    சிம்மம் –    அசதி
    கன்னி –    வெற்றி  
    துலாம் –     வருத்தம்
    விருச்சிகம் – நன்மை
    தனுசு –     ஆர்வம்
    மகரம் –    போட்டி
    கும்பம் –     அமைதி  
    மீனம் –      உயர்வு
    சந்திராஷ்டமம்    – ஆயில்யம்

  • September 28 2023 Indraya nallaneram

    செப்டம்பர் 28 – இன்றைய நல்ல நேரம்
    சோபகிருது வருடம் – புரட்டாசி 11
    28-செப்-2023 வியாழன்
    மிலாடி நபி
    நல்ல நேரம் : 10.30 – 12.00
    ராகு : 1.30 – 3.00
    குளிகை : 9.00 – 10.30
    எமகண்டம் : 6.00 – 7.30
    திதி : சதுர்த்தசி
    திதி நேரம் : சதுர்த்தசி மா 6.46
    நட்சத்திரம் : பூரட்டாதி ந.இ 2.50
    யோகம் : சித்த யோகம்
    சந்திராஷ்டமம் : ஆயில்யம்
    சூலம் : தெற்கு
    பரிகாரம் : தைலம்

     

  • September 27 2023 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம் –  ஆதாயம்
    ரிஷபம் –    சுகம்
    மிதுனம் –   அசதி
    கடகம் – கவலை
    சிம்மம் –    தாமதம்
    கன்னி –    லாபம்
    துலாம் –     புகழ்
    விருச்சிகம் – ஆக்கம்
    தனுசு –     நன்மை
    மகரம் –    செலவு
    கும்பம் –     சிந்தனை
    மீனம் –      பரிசு
    சந்திராஷ்டமம்    – பூசம்

     

  • September 27 2023 Pradhosham

    செப்டம்பர் 27 – பிரதோஷம்
    சோபகிருது வருடம் – புரட்டாசி 10
    பிரதோஷம்
    27-செப்-2023 புதன்
    மதுரை தல்லாகுளம் பெருமாள் தெப்பம்
    நல்ல நேரம் : 9.00 – 10.30
    ராகு : 12.00 – 1.30
    குளிகை : 10.30 – 12.00
    எமகண்டம் : 7.30 – 9.00
    திதி : திரையோதசி
    திதி நேரம் : திரையோதசி இ 9.6
    நட்சத்திரம் : சதயம் அ.கா 4.23
    யோகம் : சித்த-அமிர்த யோகம்
    சந்திராஷ்டமம் : பூசம்
    சூலம் : வடக்கு
    பரிகாரம் : பால்

     

  • Thirupathy bramorchavam theerthavari

    தீர்த்த வாரியுடன் நிறைவு பெற்ற திருமலை பிரம்மோற்சவம். ஸ்ரீவாரி புஷ்கரணி திருக்குளத்தில் நீராடிய பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்.

    திருமலை ஏழுமலையான் ஆலயத்தில் ஆந்திர பிரமோற்சவம் கடந்த பதினெட்டாம் தேதி ஏற்றத்துடன் துவங்கி சிறப்பாக நடைபெற்றது. நாள்தோறும் காலை மாலை இரண்டு வேளைகளிலும் உற்சவம் மூர்த்தியான மலையைப்ப சுவாமி பல்வேறு வாகனங்களில் ஆலய மாட வீதிகளில்  வலம் வந்தார். பிரம்மோற்சவத்தின் நிறைவு நிகழ்ச்சியாக தீர்த்தவாரி வெகு சிறப்பாக நடைபெற்றது முன்னதாக  உற்சவ மூர்த்திகளான உபய தேவர்களுடன் கூடிய மலையப்பர் மற்றும் ஆயுதங்களில் ஒன்றான சுதர்சன சக்கரம் மாட வீதிகளில் வலமாக  எடுத்து வந்து  வராக சுவாமி ஆலய முன்பு உள்ள மண்டபத்தில் எழுந்தருள செய்தனர்.

    தொடர்ந்து ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமிக்கு பால் தயிர் தேன் சந்தனம் போன்ற பல்வேறு நறுமண திரவியங்களுடன் ஆன ஸனபன  திருமஞ்சனம் நடைபெற்றது. தொடர்ந்து சுதர்சன சக்கரத்தாழ்வார் உற்சவ மூர்த்தியை ஆலய  திருக்குளத்தில் எடுத்துச் சென்று பூஜைகள் நடத்தி மூன்று முறை மூழ்கச் செய்து தீர்த்தவாரி எனப்படும் சக்கர ஸ்நானம் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து திருக்குளத்தின் நான்கு புறமும் படித்துறையில் காத்திருந்த பக்தர்கள் கோவிந்த நாமத்தை சொல்லியபடி திருக்குளத்தில் மூழ்கி நீராடினர் . அந்த நிகழ்வுடன் திருமலை ஆலய சால கட்ல பிரம்மோற்சவம் இனிதே நிறைவு பெற்றது.

  • Pallavarayanpettai theer thiruvizha

    பல்லவராயன் பேட்டை ஸ்ரீனிவாச பெருமாள் ஆலய திருத்தேர் விழா திரளான பக்தர்கள் பங்கேற்பு.

    மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த பல்லவராயன் பேட்டையில் புகழ்பெற்ற ஸ்ரீனிவாச பெருமாள் ஆலயம் அமைந்துள்ளது. ஆலயத்தின் ஆண்டு பிரம்மோற்சவம் கடந்த 19 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது.

    பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்ச்சி ஆன திருக்கல்யாண வைபவம் நேற்று முன்தினம் நடைபெற்றது இதன் தொடர்ச்சியாக விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேர் பவனி இன்று காலை துவங்கியது. ஸ்ரீனிவாச பெருமாள் ராஜ அலங்காரத்தில் தாயாருடன் திருத்தேருக்கு எழுந்தருளினார் அங்கு மகாதீபாரதனை செய்யப்பட்டது தொடர்ந்து. தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கோவிந்தா கோவிந்தா என்ற பக்தி கோஷத்துடன் திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    பல்லவராயன் பேட்டையில் துவங்கிய தேர் வீதி உலா திருஇந்தளூர் பரிமள ரங்கநாதர் ஆலயத்தில் நான்கு ரத வீதிகள் வழியே நடைபெற்றது. வீடுகள் மட்டும் வணிக நிறுவனங்களில் வாசலில் பக்தர்கள் பெருமாளுக்கு அர்ச்சனை செய்து வழிபாடு நடத்தினர் ஏராளமான பக்தர்கள் திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

  • Karur ther thiruvizha

    கரூர், தான்தோன்றிமலையில் தென்திருப்பதி என்று அழைக்கப்படும் அருள்மிகு வெங்கட்ரமண சுவாமி கோயில் அமைந்துள்ளது. அங்கு ஆண்டுதோறும் புரட்டாசி திருவிழா விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.

    இவ்வாண்டு திருவிழாவானது கடந்த  15-ஆம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. புரட்டாசி பெருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில், பெருமாள் துணைவியாருடன் எழுந்தருளினார்.

    மக்கள் கோவிந்தா… கோவிந்தா… என பக்த முழக்கத்துடன் திருத்தேரை வடம் பிடித்து இழுந்தனர். திருத்தேர் 4 மாட வீதிகளிலும் வலம் வந்து நிலையை அடைந்தது. அங்கு வீற்றிருந்தவாறு தொடர்ந்து பக்தர்களுக்கு பெருமாள் சேவை சாதித்தார்.

    ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். புரட்டாசி தேரோட்டத்தில் கலந்து கொண்ட மக்களுக்கு மலை வீதியை சுற்றியுள்ள திருமண மண்டபங்களில் அன்னதானம் வழங்கப்பட்டது.

     

  • Thirupathy kalki avadharam

    திருப்பதி ஏழுமலையான் பிரம்மோற்சவத்தின் 8-ம்  நாளான இன்று இரவு   குதிரை வாகனத்தில் கல்கி அலங்காரத்தில் பக்தர்களின் கோவிந்தா ஆரவாரத்துடன் மலயப்பன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    திருப்பதி ஏழுமலையான் கோவில் சாலகட்ல பிரம்மோற்சவம் சிறப்பாக துவங்கி நடைபெற்று வருகிறது. பிரம்மோற்சவத்தை ஒட்டி தினந்தோறும்   பல்வேறு வாகன சேவைகள் நடைபெற்று வருகிறது

    பிரம்மோற்சவத்தின் எட்டாவது நாளான இன்று இரவு தங்கக் குதிரை வாகனத்தில்  கல்கி அலங்காரத்தில் வாளேந்திய கோலத்தில்  மலையப்பன்  நான்கு மாடவீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாக விளங்குபவர் ஏழுமலையான் என்பதை குறிக்கும் வகையில்  மலயப்பர் கல்கி ரூபத்தில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் வழங்கினார். வீதிஉலாவில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.